FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 02, 2016, 08:41:51 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FhAG9tye.png&hash=74413b6fae698db77e4479f87932acad11299f16)
தேவையானவை:
பிஞ்சு கத்தரிக்காய் – 200 கிராம்
மல்லி – 3 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
கிராம்பு – ஆறு
எண்ணெய் – 5 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
லவங்கப்பட்டை – ஒரு துண்டு
மராட்டி மொக்கு – இரண்டு
புளி – எலுமிச்சம் பழ அளவு
செய்முறை:
கத்தரிக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். ஒவ்வொரு துண்டையும் இரண்டு மூன்றாகக் கீறி முனைப்புறம் இணைந்து இருக்கும்படி வெட்டி எண்ணெயில் வதக்கி வைக்க வேண்டும்.
மல்லி, சோம்பு, கடலைப் பருப்பு, தேங்காய்ப்பூ, கசகசா முதலியவற்றைக் கொஞ்சம் லேசாக எண்ணெயில் வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் மீதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பைப் போட வேண்டும்.
வெடித்ததும் மராட்டி மொக்கு போட வேண்டும்.
புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள் உப்புப் போட்டு அரைத்து வைத்த வகைகளைக் கரைத்து ஊற்ற வேண்டும்.
வதக்கிய கத்தரிக்க்காயகளைப் போட்டு வெந்ததும் குழம்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.