FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: Global Angel on January 26, 2012, 02:44:46 AM

Title: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 02:44:46 AM
ம. கோ. இராமச்சந்திரன் (MGR)

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fmgr.jpg&hash=49ecf35ad4d6cc2109825900e1efc0c94c497e28)



மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
 


பிறப்பு
 
ஜனவரி 17, 1917
 நாவலப்பிட்டி,  இலங்கை
 


இறப்பு
 
டிசம்பர் 24, 1987
 தமிழ்நாடு,  இந்தியா
 


பணி
 
நடிகர், அரசியல்வாதி
 


வாழ்க்கைத் துணை
 
தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி
 


பிள்ளைகள்
 
கிடையாது


எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்

தனிப்பட்ட வாழ்க்கை
 
இளமைப்பருவம்
 
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2]
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
 
இல்லறம்
 
எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். அவர் தங்கமணியை மணந்தார். தங்கமணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த இல்லற வாழ்க்கையால் தங்கமணி கற்பமானார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.

செல்லப் பிராணிகள்
 
எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரை நியமித்திருந்தார்
 
 திரைப்பட வாழ்க்கை
 
முதன்மைக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
 
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
 
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
 
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 02:51:29 AM

அரசியல் வாழ்க்கை

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடை பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும்,தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988 இல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
 
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியிலிருந்த போதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
 
 திட்டங்கள்
 
சத்துணவுத் திட்டம் இலவச வேட்டி சேலை திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[7]
 
 தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு
 
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
 
எம்.ஜி.ஆர் பற்றி பிரபாகரன்
 
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றே எம்.ஜி.ஆர் தன்நிலையை பற்றி பிரபாகரனிடம் கூறியுள்ளார்.
 
 எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்
 
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.
 
நெடுமாறனின் நினைவுகள்
 
பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்
 
எழுத்துகள்
 
 நாடோடி மன்னன் புத்தகம்
 
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.[10] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார்.
 
சுயசரிதைத் தொடர்
 
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.
 
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
 
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
 
விருதுகள்

 1.பாரத் விருது - இந்திய அரசு
 2.அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
 3.பாரத ரத்னா விருது - இந்திய அரசு
 4.பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
 5.சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
 6.வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
 
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்


 1.இதயக்கனி - அறிஞர் அண்ணா
 2.புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
 3.நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
 4.மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
 5.பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
 6.மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
 7.கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
 8.கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
 9.கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
 10.கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
 11.கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
 12.திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
 
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

 1.கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
 2.கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
 3.நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
 4.பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
 5.மக்கள் திலகம் - தமிழ்வாணன்
 6.வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
 7.புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
 8.இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
 9.மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
 10.ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
 
 நினைவிடம்
 
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன



(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F758PX-1.jpg&hash=4eebe2e07a55f8caaafcdb749ae08c32b56e091d)

எம்.ஜி.ஆர் நினைவிடம்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 02:58:17 AM
எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர்.
அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !




**எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).


 **பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
 

**எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
 

**எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !


** விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !


***சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
 
 ***முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
 
 ***‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
 

***நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் 
 

***எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
 

**எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
 

**காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
 

**நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
 

**சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

 
***எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
 
***தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
 ‘

***பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
 
**அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
 

***ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
 

***ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
 

***அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
 

***எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
 
**முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !


 ***அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !


*** ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:05:17 AM
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்.
 
1. சதி லீலாவதி -1936
 2. இருசகோதரர்கள் -1936
 3. தட்சயக்ஞம் -1938
 4. வீரஜகதீஷ் -1938
 5. மாயாமச்சேந்திரா -1939
 6. பிரகலாதா-1939
 7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941
 8. அசோக்குமார் -1941
 9. தமிழறிவும் பெருமாள் -1941
 10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943
 11. அரிச்சந்திரா -1944
 12. சாலிவாகணன் -1945
 13. மீரா -1945
 14. ஸ்ரீ முருகன் -1946
 15. ராஜகுமாரி -1947
 16. பைத்தியக்காரன் -1947
 17. அபிமன்யு -1948
 18. மோகினி -1948
 19. ராஜமுக்தி -1948
 20. ரத்னக்குமார் -1949
 21. மருதநாட்டு இளவரசி -1950
 22. மந்திரிகுமாரி -1950
 23. மர்மயோகி -1951
 24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)
 25. சர்வாதிகாரி -1951
 26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)
 27. அந்தமான் கைதி -1952
 28. குமாரி -1952
 29. என் தங்கை -1952
 30. நாம் -1953
 31. ஜெனோவா -1953(மலையாளம்)
 32. ஜெனோவா -1953
 33. பணக்காரி -1953
 34. மலைக்கள்ளன் -1954
 35. கூண்டுக்கிளி -1954
 36. குலோபகாவலி -1955
 37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956
 38. மதுரை வீரன் -1956
 39. தாய்க்குப் பின் தாரம் -1956
 40. சக்கரவர்த்தி திருமகள் -1957
 41. ராஜராஜன் -1957
 42. புதுமைப்பித்தன் -1957
 43. மகாதேவி -1957
 44. நாடோடி மன்னன் -1958
 45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959
 46. பாக்தாத்திருடன் -1960
 47. ராஜா தேசிங்கு -1960
 48. மன்னாதி மன்னன் -1960
 49. அரசிளங்குமரி -1961
 50. திருடாதே -1961
 51. சபாஷ் மாப்ளே -1961
 52. நல்லவன் வாழ்வான் -1961
 53. தாய்சொல்லைத் தட்டாதே -1961
 54. ராணி சம்யுக்தா -1962
 55. மாடப்புறா -1962
 56. தாயைகாத்த தனையன் -1962
 57. குடும்பத்தலைவன் -1962
 58. பாசம் -1962
 59. விக்கிரமாதித்தன் -1962
 60. பணத்தோட்டம் -1963
 61. கொடுத்து வைத்தவன் -1963
 62. தர்மம் தலைகாக்கம் -1963
 63. கலை அரசி -1963
 64. பெரிய இடத்துப் பெண் -1963
 65. ஆனந்த ஜோதி -1963
 66. நீதிக்கு பின் பாசம் -1963
 67. காஞசித் தலைவன் -1963
 68. பரிசு -1963
 69. வேட்டைக்காரன் -1964
 70. என் கடமை -1964
 71. பணக்காரக் குடும்பம் -1964
 72. தெய்வத்தாய் -1964
 73. தொழிலாளி -1964
 74. படகோட்டி -1964
 75. தாயின் மடியில் -1964
 76. எங்க வீட்டுப் பிள்ளை -1965
 77. பணம்படைத்தவன் -1965
 78. ஆயிரத்தில் ஒருவன் -1965
 79. கலங்கரை விளக்கம் -1965
 80. கன்னித்தாய் -1965
 81. தாழம்பூ -1965
 82. ஆசைமுகம் -1965
 83. அன்பே வா -1966
 84. நான் ஆணையிட்டால் -1966
 85. முகராசி -1966
 86. நாடோடி -1966
 87. சந்திரோதயம் -1966
 88. தாலி பாக்கியம் -1966
 89. தனிப்பிறவி -1966
 90. பறக்கும் பாவை -1966
 91. பெற்றால் தான் பிள்ளையா? -1966
 92. தாய்க்கு தலை மகன் -1967
 93. அரச கட்டளை -1967
 94; காவல்காரன் -1967
 95. விவசாயி -1967
 96. ரகசிய போலீஸ்115 -1968
 97. தேர்த்திருவிழா -1968
 98. குடியிருந்த கோயில் -1968
 99. கண்ணன் என் காதலன் -1968
 100. ஒளிவிளக்கு -1968
 101. கணவன் -1968
 102. புதிய பூமி -1968
 103. காதல் வாகனம் -1969
 104. அடிமைப் பெண் -1969
 105. நம்நாடு -1969
 106. மாட்டுக்கார வேலன் -1970
 107. என் அண்ணன் -1970
 108. தலைவன் -1970
 109. தேடிவந்த மாப்பிள்ளை -1970
 110. எங்கள் தங்கம் -1970
 111. குமரிக்கோட்டம் -1971
 112. ரிக் ஷாக்காரன் -1971
 113. நீரும் நெருப்பும் -1971
 114. ஒரு தாய் மக்கள் -1971
 115. சங்கே முழங்கு -1972
 116. நல்ல நேரம் -1972
 117. ராமன் தேடிய சீதை -1972
 118. நான் ஏன் பிறந்தேன் -1972
 119. அன்னமிட்டகை -1972
 120. இதய வீணை -1972
 121. உலகம் சுற்றும் வாலிபன் -1973
 122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973
 123. நேற்று இன்று நாளை -1974
 124. உரிமைக்குரல் -1974
 125. சிரித்து வாழவேண்டும் -1974
 126. நினைத்ததை முடிப்பவன் -1975
 127. நாளை நமதே -1975
 128;. இதயக்கனி -1975
 129. பல்லாண்டு வாழ்க -1975
 130. நீதிக்கு தலைவணங்கு -1976
 131. உழைக்கும் கரங்கள -1976
 132. ஊருக்கு உழைப்பவன் -1976
 133. நவரத்தினம் -1977
 134. இன்று போல் என்றும் வாழ்க -1977
 135. மீனவ நண்பன் -1977
 136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977
 
தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்
 
1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956
 2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956
 3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957
 4.மகாதேவி (மகாதேவி) -1958
 5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.
 6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959
 7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960
 8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961
 9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961
 10.கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961
 11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962
 12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962
 13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962
 14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962
 15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963
 16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963
 17.தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963
 18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964
 19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954
 20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954
 21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964
 22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964
 23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964
 24.வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965
 25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965
 26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965
 27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966
 28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966
 29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967
 30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967
 31.அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967
 32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967
 33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967
 34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967
 35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967
 36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968
 37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968
 38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968
 39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968
 40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968
 41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969
 42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969
 43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969
 44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970
 45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970
 46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971
 47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971
 48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972
 49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972
 50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972
 51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973
 52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975
 53.மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975
 54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975
 55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976
 56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976
 57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976
 58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978
 59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978
 60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978
 
இந்தி மொழி மாற்ற படங்கள்
 
1.குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956
 2.பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961
 3.மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962
 4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963
 5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966
 6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970
 7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974
 8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975
 9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:11:13 AM
1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தகப்பனார் வழி பூர்வீகம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Flordmgr.files.wordpress.com%2F2010%2F05%2Fmgr-1.jpg&hash=c4a365b08db5f37f785c38ee61be97544fd8493b)

மக்கள் திலகம் அவர்களுடைய தந்தை கோபாலன் அவர்களுடைய தந்தை பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்து஡ர் என்ற கிராமம். அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்று சொல்லப்படுகிறது.
 
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவருடைய தாய் தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலன் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. இப்போது என்னுடைய ஆய்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜி.ஆர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்விகம் தமிழ்நாடு இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது. செந்தமிழ்நாடு கும்பகோணம் ஆரம்பம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைதான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
 
இது மக்கள் திலகம் அவர்களுடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் கேராளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் கேரளா வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனு஡ர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம் கோபாலன் அவர்கள் பட்ட படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டு அது ரொம்ப பெரிய விஷயமாக பெரிய தகராறுகள் பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிறீர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும். வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் அவர்கள் மிக ரகசியமாக இந்த விஷயத்தை வைத்து கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
 
MGRகோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி உங்க்ள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் கோபாலன் அவர்களுக்கு உண்டு. அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துகொண்டு இலங்கைக் செல்கிறார். இலங்கை கண்டிக்கு சென்றவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டி என்பது ஒரு பெரிய நகரம் அங்கு 100க்கு 50 சதவிதம் பேர்கள் தமிழர்கள். இதே போல் இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடுதான் ஈழநாடு இலங்கை மறுபெயர் ஈழநாடு என்று சொல்லப்படுகிறது. இது உலகம் அறிந்த விஷயம்.
 
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு பிறக்கிறார். 5வது குழந்தையாக தாய் தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையாக சக்கரபாணிக்கும் எம்.ஜிண.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜிண.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டி பிடித்து கொஞ்சுவாராம்.
 
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட நீதி மன்றம் ஆங்கிலத்தில் முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை அவர்கள் ஆறுதல் சொல்லி செல்கிறார்கள். அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா அவர்கள் தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்க பட்ட சொந்த வீடு சேர்த்து வைத்து இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
 
MGRஏற்கனவே தன் கணவரை பறிக்கொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமா அவர்களுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் MGR தன் தாயின் கழுத்தை கட்டி பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம். ஐந்தாவது குழுந்தையாக நீ பிறந்த பிறகு தான்னடா. பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று MGRரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபானியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளை அவர்களின் உதவியை நாடுகிறார்கள். அது சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது ஆகும். அது சமயம் சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அது சமயம் தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமா அவர்களுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்திய பாமா அவர்கள் தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார். அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பபோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
 
சத்தியபாமா அவர்கள் நாராயணன் அவர்களுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று திரு. நாராயணன் அவர்களிடம் சத்தியபாமா அவர்கள் சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டார்க்ள. மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சனை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா அம்மா அவர்கள் மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். MGRஇந்த நிலையில் MGR அவர்களும், சக்கரபானி அவர்களுக்கும் 3வயதுதான் வித்தியாசம். சக்கரபானி, தம்பியை ராமசந்திரா என்று அழைப்பார். பள்ளிகூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம். நேர்மை, நீதி பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர் நீதிபதியாகவம். பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைகக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன் தாயினுடைய உழைப்பாள் நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. இந்த இருவருடைய பள்ளி வாழ்க்கையின் சில சம்பவங்களை இங்கே கூறுகிறேன்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:13:06 AM
2.பத்து வயதில் கணக்கு கேட்டார்!

எம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை
 
இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் “1925″ 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.
 
அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.
 
அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.
 
நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,
 
இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:14:18 AM
3. அண்ணனிடம் கோபம் கொண்டார்




MGRஇது ஒரு பொதுவான விஷயம். இதே போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்க சென்று இருக்கும் போது அண்ணன் தம்பி இருவருக்கும் வாய் தகராறு வந்து விட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை எல்லாம்துவைத்து காயபோட்டுவிட்டு, ஆற்றில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடும் குளித்துவிட்டு கரை ஏறும் போது அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம் இடுப்பில் இல்லை உடனே சக்கரபாணி தம்பியை பார்த்து ஏய். ராமச்சந்திரா என் கோமணம் தண்ணீர்ல் போயிடுச்சி என்று சொல்லி உன்னுடைய கோமணத்தை கொடுடா என்று தம்பியிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளி குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார்.
 
கோமணம் இல்லாமல் அறிந்த MGR உடன் துவைத்து போட்ட டவுசரே போட்டுகிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணன் வசம் கோமணத்தை கொடுக்க, வேறுவழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவிசரை எடுத்து மாட்டிக் கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அம்மா஡஡விடம் என் கோமணம் தண்ணீரில் போய்விட்டது. தம்பியின் கோமணத்தை கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காயிந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னை பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொல்லுகிறார் இதை கேட்ட அம்மா MGRரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோபப்படுகிறார்.
 
அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே MGR பதில் சொல்கிறார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை எங்களை போல் எவ்வளோ பையன்கள் குளிக்கின்றார்கள் அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிக்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை, அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்ற வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடும்கும்படி கேட்டார். நான் தண்ணீர்லிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமசந்திரா என் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார். நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்து விட்டேன். அம்மனகுண்டியோடு துணி காயிக்கின்ற இடத்திற்கு எப்படி போவேன். அதனாலே நான் காயும் என்னுடைய டவுசரை தண்ணீரில் நிற்கும் அண்ணன்கிட்டே கொடுத்தேன். நான் அதை கட்டிகொண்டு தான் கரைக்கு வந்தார். இது அவரோட தவறு இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம். சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து இந்த நியாத்தை கேட்கும்போது அந்த தாயினுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும்? இப்படி இருக்கும் காலத்தில் மகன்கள் இருவரும் நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் தன்னுடைய குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட தன் ஒரு மகன்களுக்கும் மூன்று நேரமும் வயிறார சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று அந்த தாய் மனம் வேதனை படுவதை அறிந்து இவர்களோட மன வேதனையே தன் தாயிடம் சொல்லாமல் நாங்கள் இருவரும் படித்தது போதும் என்று கெஞ்சி கேட்கின்றார்கள். இந்த வார்த்தையை கேட்ட தாய் மகன்களிடம் என்ன பதிலை சொல்லுவார்? ஆனாலும் தன் தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகன்கள் தன்படும் கஷ்டத்தை அறிந்து அவர்களே வேலைக்கு போவதாக சொல்லுகின்றார்களே என்று நினைத்து வேதனை படுகிறார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:15:15 AM
4.பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்


இந்த கால கட்டத்தில் சத்தியபாமா அவர்களின் குடும்ப நண்பர் (கேரளா) திரு. நாராயணன் என்பவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் முக்கியஸ்தராக பணிபுரிந்து வருகிறார். தற்செயலாக சத்தியபாமா அவர்கள் வீட்டிற்கு வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்கள் நாராயணனிடம் தன்னுடைய பையன்களை பற்றி விபரமாக சொல்லுகிறார். எல்லா விபரத்தையும் கேட்ட நாராயணன் இவ்வளவு கஷ்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது. அதனாலே பையன்கள் இருவரும் நல்லா அழகாக இருக்கின்றார்கள். இவர்களை நாடக கம்பெனியில் நான் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி செல்கின்றார். ஒரு வாரம் கழித்து பையன்களை கம்பெனியில் சேர்க்க அழைத்து செல்ல வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்களிடம் கம்பெனியின் விதிமுறைகளை விளக்கமாக எடுத்து செல்லுகிறார். கம்பெனியின் விதிமுறை யார் எந்த வேலைக்கு சேர்ந்தாலும் கம்பெனியிலே அவர்களுக்கு சாப்பாடு, துணிமணிக்ள, தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சம்பளம் உடனே போடமாட்டார்கள். பையன்களுடைய திறமையை அறிந்து அவர்கள் நடப்புக்கு உள்ளவர்களா, அல்லது எடுபடி வேலைக்கு தகுதி உள்ளவர்களா என்பதை அறிந்து கம்பெனியால் சம்பளம் கொடுக்க முடிவுக்கு வருவார்கள். எனவே நீங்கள் எதற்கும் தயங்காமல் பையன்களை உடனே என்னுடன் அனுப்புங்கள், இப்போது அவர்கள் நல்லா சாப்பிட்டு உடல் வளர்ச்சி அடைய கூடியவர்கள் அவர்களுக்கு இப்போது முக்கியம் உணவு தான் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நாராயணன் பையன்கள் இருவரையும் அழைத்து இந்த விவரத்தை சொல்லுகிறார். இதை கேட்ட பையன்கள் இருவரும் அம்மாவுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறார்கள்.
 
உடனே நாராயணன் சத்தியபாமா அவர்களை அழைத்து அம்மா உங்கள் பையன்களை அழைத்து உங்க சம்மதத்தை சொல்லுங்கள் என்கிறார். இதை கேட்ட சத்தியபாமா அவர்கள் பையன்களை அழைத்து மகன்களே நீங்கள் வேலைக்கு போவதாக சொன்னீர்கள் இப்போது உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உங்களோட அபிப்ராயம் என்ன மகன்களே என்று கேட்கின்றார்கள். அம்மா நாங்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றோம். நாராயணன் மாமா சொன்ன விவரங்களை நாங்கள் நன்றாக கேட்டு கொண்டோ ம். ஆனால் நாங்கள் உங்களை தனியாக விட்டு விட்டு எப்படி போவது என்று எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது. இந்த வார்த்தையை கேட்ட தாய் இரு மகன்களையும் கட்டி கொண்டு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். எதுவுமே சொல்லாமல் பிள்ளைகளும் அம்மாவை கட்டி பிடித்து அழுகின்றார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த நாராயணன் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லி இருவரையும் அழைத்து செல்கின்றார். பாண்டிச்சேரியை சேர்ந்த காரைக்கால் என்ற ஊரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் நாடகங்கள் நடந்து கொண்டு வருகிறது. இந்த கம்பெனியால் நடத்தும் நாடகங்களில் நடிப்பவர்கள் பெரும்பகுதி சிறுவர்கள்தான் இந்நிலையில் நாராயணன் அழைத்துச் சென்ற இந்த இரு சிறுவர்களையும் கம்பெனி முதலாளி பார்த்து விட்டு பையன்கள் நன்றாக நல்ல நிறமாக, அழகாக இருக்கின்றார்கள் இவர்களை நடிக்க வைக்கலாம் என்று சொல்லி நடிகர்களுக்கான பயிற்சி கூடத்திற்கு அனுப்புகிறார்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:16:05 AM
5.குழப்பத்தில் ஆழ்ந்த சத்திய தாய்

MGRஇதை கேட்ட சத்தியபாமா அவர்களுக்கு மிக குழப்பமாகி விட்டது. மகன்களுடைய வளர்ச்சி முக்கியமா, தன்னுடன் வீட்டில் வந்து தங்கி செல்வது முக்கியமா என்ற குழப்பத்தில் உள்ள போது மீண்டும் நாராயணனை சந்தித்து விபரத்தை சொல்லி இதற்கு என்ன வழி என்று கேட்கும்போது வாரத்தில் நாடகங்கள் இல்லாத நாட்களில் ஒரு நாள் அல்லது இரு நாள் என்னுடன் என் பிள்ளைகள் வந்து தங்கி செல்ல வழி வகுத்து கொடுங்கள் என்று நாராயணனிடம் அவர் மிக அன்போடு கேட்கிறார். அதன்படி நாராயணன் அவர்களும் முதலாளியை சந்தித்து இந்த விவரத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட முதலாளி இந்த இரு பையன்களும் நமக்கு முக்கியமாக நாடகத்திற்கு வேண்டும் என்ற நினைப்போடு இந்த பையன்களுக்கு ஒரு சலுகை, நாடகங்கள் இல்லா காலத்திலும் பயிற்சிகள் இல்லாத நாட்களிலும் ஒரு, இரு நாட்களுக்கு தங்கி வரலாம் என்று கம்பெனி முதலாளி சொல்கி஢றார். இதுவே பெரிய தெய்வ வாக்காகக் கொண்டு சத்தியபாமா அவர்களிடம் விவரத்தை சொல்கிறார் திரு. நாராயணன் அவர்கள், அதன்படி MGRக்கும் சக்கரபாணி அவர்களுக்கும் நாடகங்கள் இல்லாத நாட்களில் லீவு நாட்களில் அம்மாவுடன் தங்கியிருந்து கம்பெனி முதலாளி அனுமதித்தை அறிந்து இருவரும் ஆனந்தம் அடைகிறார்கள். அதன் படி அந்த நாட்களில் இருவரும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து தன் அம்மா கையினால் சாப்பாடு சாப்பிடுவதை நினைத்து பூரிப்பு அடைகின்றார்கள். அதே நேரத்தில் சத்தியபாமா அவர்கள் தன் இளைய மகன் சாப்பாட்டை மிக குறைத்து சாப்பிடுவதையும் மிக மெலிந்து இருப்பதையும் கவனிக்கிறார்.
 
என்ன மகனே மிகவும் மெலிந்து இருக்கிறாய் சாப்பாடும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்கிறார். உடனே செல்ல மகன் MGR அவர்கள் மிகதுடிப் போடு செல்லத்தோடு அம்மாவோட கண்ணத்தை வருடி அம்மா நான் மெலிந்து போனால் நான் என்ன செய்ய முடியும். நான் என்னால் முடிந்த வரைதான் சாப்பிடமுடியும் முன்போல் இப்போது எல்லாம் சாப்பிடமுடியவில்லை அம்மா. அதை கேட்ட தான் மகனை தொட்டு தழுவி மேலும் கீழுமாக பார்க்கிறார். அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் இளைய மகனுடைய உடல் மெலிவை பற்றியும், உணவு குறைவாக உன்னுவதை பற்றியும், இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் ஒருவர் பெரியதாக வைத்தியம் செய்ய வேண்டாம் நான் சொல்வது போல் சீரகம், கொஞ்சம் வெந்தயம், தண்ணீர், போட்டு நன்றாக சுடவைத்து அதோடு மேலும் கொஞ்சம் பச்சை தண்ணியை கலந்து ஒரு சொம்பில் குடிப்பது போல் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்லு, அதோடு வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாவாக்காய் சமைத்து கொடு வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் செத்துவிடும். அப்புறம் அவனுக்கு முடிந்த வரைக்கும் பால், பழங்கள் ஏதாவது கொடுத்து வா இதோடு சேர்த்து முடிந்தால் ஒரு கோழி முட்டை கொடு என்று ஒரு வயதான பாட்டி சொல்லுகிறார். இந்த நிலையில் கம்பெனியில் நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து நாடகத்தில் நடிப்பவர்கள் அத்தனை பேரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்து நாடகத்தில் நடிக்கிற முக்கியமானவர்கள் நடனம் பயிற்சியும், சண்டை பயிற்சியும் பாட்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக கம்பனெ஢ தனித்தனியாக வாத்தியர்களை நியமித்து உள்ளர்கள். இப்படி இருக்கும்போது MGRக்கும் சக்கரபாணியும் அம்மாவுடன் இருந்தால் எப்படி என்று நாராயணன் அவர்கள் கேட்டு சத்தியபாமா அவர்களிடம் சொல்லி மீண்டும் ஒரு வார காலத்தில் அழைத்து சொல்கிறார். மீண்டும் தொடர்ந்து எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:16:52 AM
6.உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்கிறார்

MGRஇதில் MGR அவர்கள் அண்ணனைவிட எல்லா பயிற்சிகளையும் கற்று கொள்கிறார். இப்படி இருக்கும் போது பாட்டுக்கு குரல் அமைப்பு சரியாக அமையவில்லை. சரி இப்போதைக்கு MGR அவருக்கு என்ன கற்று கொள்ள வருகின்றதோ அதை கற்று கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள். முதலாளி MGRக்கு உடற்பயிற்சி செய்வதும், அடுத்து சண்டை பயிற்சியையும் செய்வதிலும் மிக வேகமாக, கவனமாகவும் வாத்தியார் அவர்களிடம் பிரம்பு அடி வாங்காமல் செய்வார், நடன பயிற்சியும் சற்று குறைவுதான் ஆயினும் அதை விடாமல் செய்து கொண்டுவந்தார். எப்படியாவது நாம் சொந்த குரலில் பாட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்கு குரல் வலம் சரியாவரவில்லையே என்று வேதனைப்பட்டு கொண்டார்.
 
இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாட வரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு அண்ணன் சொல்கிறார் தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவைகளை விடாமல் ஒழுங்காக கற்று கொள். அதோடு அவர் நிறுத்தாமல் இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்பட கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை அதை பற்றி நான் என்ன கவலைபட்டு கொண்டா இருக்கின்றேன். காலைக்காலில் தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்து கொண்டு வரும், ஒரு நாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காலுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக MGRக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு இது தினமும் MGR அவருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:33:26 AM
7.ஏழாவது மகனாக நாடகத்தில்


இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யபட்டு வந்தது. அந்த காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம், ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள். சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும்போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது, மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணென்யை லைட்களும் தான் எங்கும் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும் பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும் நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தை பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கி போட்டு கொள்ளும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்து விட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்து போய்விடுமா என்று கிணற்றை நோக்கி பார்க்கிறார்.
 
கதையில் அமைப்பின் படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார் அதன் படி தன்னுடைய குழந்தைகளை கட்டி அழுகிறார். இந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற பொது மக்களிடமிருந்து ஒரு சிறிய சத்தம்கூட கேட்கவில்லை. இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள், இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார். 7வது குழந்தையாக MGR தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியை பார்த்த MGR தன்னிடம் அந்த தாய் வரும் போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கம் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார் இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவதும் அழ வைக்க வேண்டும் என்ற என்னத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள். அந்த அடியில் பலி தாங்க முடியாமல் MGR அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 26, 2012, 03:35:15 AM
8.பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார்


MGRஇந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் மிக ஆரவாரத்தோடு கை தட்டினார்கள். அதில் சில பெண்கள் மிக உணர்ச்சி வசப்பட்டு இந்த பையனை கொன்றுவிடாதேடி என்று உணர்ச்சிவசபட்டு கதறினார்கள். பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார் உடனே MGRரை அழைத்து கொண்டு உள்ளே சென்று செல்லமாக கட்டி அனைத்து கொண்டு ராமசந்திரா நீ ரொம்ப நன்றாக நடித்து விட்டாய் என்று தான் பிரம்பால் அடித்த இடத்தை கையில் தடவி கொண்டு மிக மிக சந்தோஷபடுகின்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் மிக அற்புதமாக நடித்து பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற்று கம்பெனிக்கு ஒரு நல்ல பெயரை எடுத்தது கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டது.
 
இலங்கை சிங்கள நாட்டிலே பிறந்து இந்திய நாட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வந்து கல்வி பயின்று (ஆங்கிலேயர் காலத்தில்) பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாண்டிச்சேரி, காரைக்காலில் மிக அருமையாக நடித்த எம்.ஜி.ஆருக்கு பொதுமக்களின் கைதட்டலும், ஆசியும் கிடைத்தது. அதோடு மதுரை பாய்ஸ் ஒரிஜினல் நாடக கம்பெனியாரின் பாராட்டும் கிடைத்தது. இந்த செய்தியை கேட்ட தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகனின் வளர்ச்சியை பார்த்து அளவற்ற அளவுக்கு சந்தோஷப்பட்டு தான் 10 மாதம் சுமந்த பெற்ற தாய் அந்த மகனின் வளர்ச்சி நினைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மிக பெருமைபடுகிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் நாராயணன் வழியாக தான் இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைக்கின்றார். வீட்டிற்கு வந்த மகன்களை பார்த்து சத்திய தாய் மகன்களை அனைத்து கட்டி பிடித்து ஆனந்தப்படுகிறார். அடுத்த நாள் தன் இளைய மகன் ராமச்சந்திரனை பார்த்து ஏன் அப்பா இன்னும் மெலிந்து போய்
 இருக்கிறாய் என்று சொல்லி கவலைப்படுகிறார், இதை எம்.ஜி.ஆர் பொருட்படுத்தவில்லை.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:22:23 AM
9.ஒரு மாதம் வைத்தியம் செய்ய வேண்டும்

MGRஇந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் நாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டுமுதலாளி பெயர் ஆறுமுக நாடார் இவர் வயதானவர் அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுகடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன. இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம்.ஜி.ஆரை பார்த்து கொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம். நீங்கள் கவலைபடாதீர்கள் இதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல்வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி 1 மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்து கொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த விஷயத்தை சத்தியதாய் எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். எம்.ஜி.ஆர் அதை கேட்டு நான் நல்லாதான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு 1 மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள்.
 
சத்தியபாமா அம்மா அவர்கள் கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம்தன் மகன் எம்.ஜி.ஆர் உடல்நிலையைப் பற்றி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியே பார்த்து பேசலாம் என்று நாராயணன் சொல்லுகீறார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்தியபாமா அம்மா அவர்களை அழைத்து சென்று பேச வைக்கிறார். முதலாளியை பார்த்த சத்தியபாமா அவர்கள் பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொல்லுகின்றார். எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசிக்கிறார்.
 
பிறகு, சத்தியபாமா அம்மாவை பார்த்து, அம்மா நீங்க சொல்கிறபடி ராமச்சந்திரன் அவனுக்க உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியா கொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். அம்மா, பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து செயல்களின் நான் ஈடுபடும்போது கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும், உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்.
 
முதலாளியை பார்த்து கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டி கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்த உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பொருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும். உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பொருத்து இருப்பது நல்லது. அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து 1 மாதத்திற்கு நீ உன் உடல்நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்ய தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து கொண்ட இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைக்கிறார்.
 
போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம்நாடார் சத்தியபாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார். நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லிட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:25:24 AM
10.தினமும் பனங்கள்ளை சாப்பிட வேண்டும்



இது வரையிலும் எம்.ஜி.ஆருக்கு தன் உடம்பு என்ன செய்கிறது, எதற்தாக தனக்கு மருந்து கொடுக்கின்றார்கள். அதுவும் ஒரு மாத காலத்திற்கு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், ஆறுமுக நாடார் நேராக கல் இறக்கும்தோப்புக்கு செல்கிறார். அங்கு முக்கியமான ஒரு நபரை அழைத்து தினமும் காலையில் 7 மணிக்கு ஒரு மரத்து பணமரத்து கள் ஒரு முட்டியோடு (சிறிய மண் குடுவை) பனங்கள்ளை, சத்தியபாமா அவர்கள் வீட்டில் இது மருந்துக்காக மிக கவனமாக எச்சரிக்கையாக எடுத்து சென்று கொடுக்கவேண்டும். அதன்படி மறுநாள் காலையில் 7 மணிக்கு ஒரு மண் குடுவையுடன் சத்தியபாமா வீட்டில் கதவை தட்டி அம்மாவை அழைத்து அம்மா தோப்புக்கார அய்யா அவர்கள் இதை தங்களிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். இது போல் தினமும் காலை 7 மணிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அடுத்து குடுவையில் கொண்டு வந்த பனங்கள்ளை சுத்தமாக ஒரு துணியில் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொண்டு காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது தன் மகனை அழைத்து ராமச்சந்திரா வைத்தியற் கொடுத்து அனுப்பிய மருந்த ரெடி. இதை உடனடியாக வந்து சாப்பிட்டு விடு தன்மகனை அழைக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் முகபாவம் கசப்பு அடைந்து போய் வேண்டா வெறுப்போடு, இதை வாங்கி குடித்த எம்.ஜி.ஆர் சற்று நேரத்தில் என்ன இனிப்பாக இருக்கிறதே இது என்ன மருந்து என்று தாயிடம் கேட்கிறார்.
 
உடனே தாய், நீ சாப்பிடுவது மருந்து அது இனிப்பா இருக்கா கசப்பா இருக்கா என்று கேட்க கூடாது. கொடுத்ததை குடித்து விடவேண்டும். இதே போல் தினம் 7 மணிக்கு குடிக்க வேண்டும். இதை கேட்ட MGR அவர்கள் அம்மா சொல்லை தட்டாமல் பயபக்தியோடு நடந்து கொள்ளுபவர். ஒரு நாள் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லாமல் வீட்டு வாசலிலே வெளியே நின்று கொண்டு மருந்து எடுத்து கொண்டு வரும் நபரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் மருந்து கொண்டு வரும் அவரும் ஒரு துணி பையில் ஒரு சிறிய மண் குடுவையில் நிறைந்த பனை மரத்து கள்ளை கொண்டு வருகிறார். இதை MGR அவர்கள் அம்மா உள்ளே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதை என்னிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறேன் என்று கேட்டு வாங்கி கொண்டார், குடுவையே பிரித்து பார்க்கிறார். அந்த குடுவையில் உள்ள கல்லில் தேன் ஈக்கள் செத்து மிதப்பதோடு நூங்கு நொறையோடு இருப்பதை பார்க்கிறார். இது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, வீட்டில் உள்ளிருந்துகள் குடுவை இன்னும் வரவில்லையே என்று நினைத்து கொண்டு வெளியே வருகிறார்கள் சத்தியபாமா அம்மா அவர்கள். கள் குடுவை MGR கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு மண் குடுவையை கையில் வாங்கி கொள்கிறார். உடனே MGR அம்மாவை பார்த்து அம்மா இது என்ன இதிலே பூச்சி புழுவும் பொங்கும் நுறையாக இருக்கிறதே இது என்ன என்று அம்மாவிடம் சற்று கோபத்தோடு கேட்கிறார். உடனே அம்மா! ராமசந்திரா இது உனக்கு தேவையில்லை, நான் இதை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன். நீ குடித்துவிட வேண்டும் என்று அம்மா சொன்னவுடன் அவர் குடித்து விட்டார்.
 
இருந்தாலும் MGRக்கு குடிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அன்னைக்கு குடுவையைப் பார்க்கும்போது பூச்சி புழுவும்இ பொங்கும் நுறையாக இருந்தது இது என்ன மருந்து என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு MGR அவர்கள் இந்த பிரச்சனையை விட்டு விட்டு ஒரு நாளைந்து நாள் கழித்து அந்தகல் குடுவை கொண்டு வரும் நபரிடம் ஐயா, இந்த மருந்து குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கிறது. முன்னைவிட என் உடம்பு நல்ல தெம்பாக, வலுவாக இருக்கின்றது. இது என்ன மருந்து எங்கே இருந்து எடுத்து வருகிறீர்கள். பொங்கும் நுறையாக இருக்கிறது என்று அவரிடம் அன்போடு கேட்கின்றார். உடனே கள் குடுவையை கொண்டு வந்தவர் இந்த கள்ளுடைய விவரத்தையும் மகிமையையும் விவரமாக சொல்லி விடுகிறார். இதை அறிந்து கொண்ட MGR அடுத்து ஒரு இரண்டு நாளில் மதிய நேரத்தில் சாப்பாட்டு நேரத்தில் தன் தாயிடம் அம்மா எனக்கு கொடுத்து வருகிறீர்களே அதற்கு பெயர் என்ன என்று அம்மாவிடம் கேட்கிறார். அம்மா நீங்கள் சொன்னால்தான் மருந்தை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறார். ராமசந்திரா இதற்கு பெயர் பனங்கல் வைத்திய முறைபடி இதை வைத்தியர் ஆறுமுக நாடார் ஏற்பாட்டில் நான் உனக்கு தினமும் நான் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். இதை கேட்ட MGR சற்று யோசிக்கிறார். கம்பெனியில் வேலை செய்கின்ற வாத்தியார்கள் மற்றும் பெரிய ஆட்கள் கள் குடிப்பதை பற்றி பேசி கொண்டு இருப்பதை MGR சில நேரங்களில் கேட்டு இருக்கிறார்.
 
அந்த கள்ளுதானே இது என்ற முடிவோடு தன் தாயிடம் அம்மா நீ இதை மருந்து என்று நினைக்கிறாய். அம்மா இது மருந்து அல்ல இது போதை பொருள் இதை இப்போ குடிப்பவர்கள் நாளடைவில் ஒரு பெரிய குடிகாரனாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருளை எனக்கு கொடுத்து என்னை ஒரு குடிகாரனாக்கி விடாதே நாளையிலிருந்து குடிக்கமாட்டேன் என்று கடுமையாக சற்று கோபத்தோடு சொல்கிறார். உடனே சற்றும் தயங்காமல் அம்மா படபடவென்று மகனே என்ற பொருள் நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது நமது மனநிலையை பொருத்தது. நீ சொல்வது போல் மற்றவர்களுக்கு போதை பொருளாக இருக்கலாம், ஆனால் இது உனக்கு மருந்து, எனவே நீ இதை மருந்தாக நினைத்து 30 நாட்களுக்கு குடித்தாக வேண்டும். இது மாதிரி குடிபொருள்களையோ, போதை பொருள்களையோ, குடிப்பர்களை என் வீட்டுக்குள் கூட நுழையவிடமாட்டேன் இதை மிக கண்டிப்பாக சொல்கிறார். இது உங்களுக்கும் தான் என்று சொன்னவுடனே இதை கேட்ட MGR அவர்கள் தாயின் அறிவுரைகளை கேட்டு மெளனமாக இருந்து விட்டார். அதோடு சத்திய தாய் சில அறிவுரைகளை கூறினார்க்ள. கம்பெனியில் உடல்நிலை வளர்ச்சிக்காக பனங்கல் வாங்கி கொடுத்தார்கள் என்று அண்ணன் சக்கரபாணி உள்பட யாருக்கும் தெரியகூடாது. அதற்கு பதிலாக ஏதோ கசாயம் கொடுத்தார்க்ள என்றுதான் நீ சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்குள் ஓர் அளவு உடல் சற்று, உடல் வளர்ச்சியடைந்து இருந்தது. ஒரு மாதம் ஆகிவிட்டது, நான் வரும்போது இருந்த உடல் நிலை எனக்கே கொஞ்ச நல்லா வந்து இருக்கிற மாதிரி தெரியுது, நல்லா பசிக்குது நல்லா சாப்பிடுகிறேன். கம்பெனிக்கு சென்ற பிறகு கம்பெனியில் எல்லோருக்கும் கொடுக்கும் உணவைதான் உண்ணமுடியும் எனக்கு என்று தனியாக கேட்க முடியாது.
 
மேலும், காலையிலேயே உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, மாலையில் நடன பயிற்சி, நடிப்பு பயிற்சி இப்படி எனக்கு தினமும் பயிற்சிகள் இருக்கும் இந்த மாதிரி பயிற்சி எடுத்து கொள்ளும் காலத்திலே உடல் சற்று மெலியலாம் அதை பார்த்துவிட்டு மகனை சரியாக சாப்பிடுவது இல்லையா என்று கேட்க கூடாது. அம்மா எனக்கு உடல் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதற்கு பதிலாக உடல் வளர்ச்சியை மன வளர்ச்சி, திடம் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நான் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், அதோடு அண்ணனும் தொழிலில் வளர்ச்சி அடையவேண்டும் என்பது என்னுடைய நோக்கம், என்று சொல்லி முடித்தவுடனே சத்தியதாய் தன்மகனை கட்டி பிடித்து, உச்சி முகர்ந்து மிக ஆனந்தப்படுகிறார். மகனே உங்கள் தொழிலில் மேலும் மேலும் உயரவேண்டும் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையவேண்டும் என்று கடவுளை நான் வணங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கம்பெனி சென்ற MGRரை பார்த்து எல்லோரும் இப்போது உன் உடல்நிலை நல்லா இருக்கு, ஓரளவு உன் உடம்பு நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லி அண்ணன் சக்கரபாணி உள்பட எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.
 
அவர்களிடம் விடைபெற்று கம்பெனி முதலாளியைப் பார்த்து வணங்குகிறார். என்னாடா ராமசந்திரா மருந்துகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிட்டியா இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு என்று கேட்கி஢றார். உடனே MGR ஐயா எங்க அம்மா கொடுத்த மருந்துகளையும், உணவுகளையும் ஒழுங்காக சாப்பிட்டேன், இப்போ என் உடம்பு எப்படி இருக்குது நீங்கள் சொல்லுங்கள், இதை கேட்ட முதலாளி இவன் அழகன் மட்டுமல்ல, மிக அறிவிலும் கூட என்று நினைத்து கொண்டு ராமசந்திரா நீ முன்னைவிட நல்லாதான் இருக்கிறாய் என்று கம்பெனி முதலாளி வாழ்த்துகிறார். பிறகு MGR அவர்கள் தொடர்ந்து தன் பணிகள் எந்த குறைகளும் ஏற்படகூடாது என்ற எண்ணத்துடன், அடுத்து நமக்கு என்ற வேஷத்தில் நடிப்பு பாத்திரம் கி஢டைக்கும் அதில் நாம் எப்படி புகழ் அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு தன் பணிகளை தொடர்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன் கம்பெனியில் பல நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது ஒரு நாள் தனக்கும் அண்ணன் சக்கரபாணிக்கும் சரியான சம்பளம் போடவில்லை. ஏதோ அப்போ அப்போ அம்மாவிக்கு அனுப்பி வைப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் தனக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்பதை பற்றி யோசிக்கிறார்கள்.
 
நாடக கம்பெனியில் சேர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் பணியாற்றியும் நமக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்று நினைத்து கவலைபடுகிறார்கள். இவர்கள் இருவரும் நாடக கம்பெனியில் பயிற்சி கற்றுக் கொள்ளும்போது முக்கிய நாடக நடிகர்கள் P.U. சின்னப்பா, காளி.என். ரத்தினம், மற்றும் பல முக்கிய நடிகர்கள், நாடக வாத்தியர் T.S. பாலையா, M.கந்தசாமிபிள்ளை, MGR, சக்கரபாணிக்கும் நாடக பயிற்சியாளராக இந்த நாடக கம்பெனியில், MGRக்கும் MGCக்கும் தினம் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்தில் MGRக்கு சண்டை பயிற்சி மிக கடுமையாக இருக்கும், MGR மிக சுறு சுறுப்பாகவும் கற்றுக் கொண்டார். கம்பெனியின் முதலாளி பெயர் சச்சிதானம் பிள்ளைக்கு MGR இவ்வளவு சிறிய வயதில் புத்தி கூர்மையுடன் பயிற்சிகளை இவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருக்கிறானே என்று பெருமை அடைந்தார்.

 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:30:48 AM
11.முதன் முதலில் பேசிய வசனம்


இந்த பயிற்சிகளை தனக்கு சொல்லி தரும் வாத்தியார்களிடம் MGR மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் MGRக்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும். ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். MGRக்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்று கொண்டார். இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. MGR சிறு சிறு வேடங்கள்தான் கம்பெனியில் கிடைத்தது, இந்த கம்பெனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். இப்படிபட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை MGRக்கு உண்டு. என்ன செய்வது MGR சின்னபையன் கம்பெனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைபோல் நடித்து பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமாக பணம் அனுப்பமுடியும் என்ற எண்ணமும் உண்டு. அவர் நடித்த முதல் நாடகம் “மகாபாரதம்” முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. MGRக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுணன் மீது மோதி கீழே விழுந்து விட்டார் தவறுதளாக, ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது.
 
MGRக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்னபையன் ராமசந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில், பல சிரமமான காட்சிகளில்நடித்து வந்தார். MGRக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த கம்பெனியில் P.U. சின்னபா, காளி.என், ரத்தினம் இவர்களுடன் மிக சிரமபட்டு MGR தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் MGR மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு நாள் MGR, P.U. சின்னப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னார், சின்னப்பாவும் MGRக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார்.
 
ஒரு நாள் தசவதாரம் நாடகம் இதில் P.U. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக MGRரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி, MGRக்கு மிகபெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து MGR அவர்கள் மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதை MGR பார்த்துவிட்டார். MGRக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று MGR முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார். MGR நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பெனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆழுசு P.U. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டைக்குள் வந்து காளி.என். ரத்தினத்தை அழைத்து எங்கே P.U. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த MGR மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார்.
 
தன்னை பற்றி எதுவும் குறை சொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் P.U. சின்னப்பாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேளையை சரியாக செய்வான் என்றார் காளி உடனே கிட்டப்பா MGRரை பார்த்து, கிட்ட வரும்படி அழைத்தார் MGR தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் MGR ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார். கிட்டப்பாவும் MGRரை கட்டி தழுவி முதுகில்தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பெனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. இதில் சிங்கப்பூர் மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பெனி நல்ல பெயரை எடுத்தது, முதலில் பர்மா தமிழ்ர்கள் சார்பில் நாடக கம்பெனியை அழைக்கப்பட்டது. அதில் பெரிய நடிகர்களோடு MGRருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் MGR அவர்களுக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் MGRரை சமாதானப்படுத்தினார்கள். கப்பலில் 3வது நாள் MGRக்கு குமட்டல், வாந்தி, ஏற்பட்டது, மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரிந்தது கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் M.K. ராதா அவர்களும் MGRக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுதினார்கள்.
 
முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்து சென்று ஒரு பெரிய பள்ளிகூடத்தில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ரங்கோன் தமிழ் சங்க தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்யும், உபசரிப்பும் MGR அவர்களுக்கு இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் MGR நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள். அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்று கொண்டவர் இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பெனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலைஇன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேருகிறார்கள். சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்கு கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வழிந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
 
வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது MGRக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியிலே இருக்க வேண்டியதாகியது.
 
MGR அவர்களும் P.U. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடக கம்பெனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை எப்படியும் இந்த கம்பெனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த MGR, அவர்களும் சக்கரபாணி அவர்களும் இந்த யோசனையை, P.U. சின்னப்பாவிடம் சொன்னார்கள்.
 
P.U.C. கம்பெனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு, பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:34:12 AM
12.நாடக கம்பெனி சென்னை விஜயம

பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து தேசம்காக்கும் என்ற நாடகத்தை ஆரம்பித்து (நடத்த) ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் 1930ல் இதில் நடிக்க MGR, MGCக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டது. நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது தேசபக்தி என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள், காங்கிரஸ்காரர்களும் பெரும் அளவில் ஆதரவு ஏற்பட்டது. இந்த நாடகத்தில் MGRக்கு தேசபக்தர் ஒரு சாமியார் வேசம். 17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இந்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒற்றவாடை என்ற நாடகக் கொட்டகையில் நடந்தது.
 
17 வயது பையன் பழுத்தபழம் போல் சாமியார் வேடத்தில் MGR மிக சிறப்பாக நடித்து இருந்தார். இந்த நாடக கம்பெனி பல ஊர்களுக்கு சென்று கடைசியாக சென்னைக்கு வந்தது. இதில் இந்த நாடகத்தில் அரசியல் காங்கிரஸ் இருந்தது. MGR 17 வயதில் அரசியலில் (காங்கிரஸில்) சுபாஷ்சந்திரபோஸ் பக்தன் ஆகிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் எப்படியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் ஏற்பட்டு விடவே அம்மா அண்ணன் இவர்களிடம் தெரியபடுத்தினார். அவர்களும் சினிமாவில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைக்கும் யாரை போய் பார்த்து, எப்படி பார்ப்பது நமக்கு சினிமா ஆசை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தை விடவில்லை. சென்னை வால்டாக்ஸ்ரோடு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ரோடு சந்திப்பில் பழைய நண்பர் உதவியுடன் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு சென்னையில் ஏற்கனவே தங்கி இருந்து சினிமாவில் நடிக்கும் நாடக கம்பெனி முதலாளி கந்தசாமியும் P.U. சின்னப்பா, M.K. ராதா போன்றவர்களிடம் தினமும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். 18வது வயதில் நல்ல உடல் கட்டு, கதர் வேட்டி, ஜிப்பா, சாப்பாடு இவைகளைப்பற்றி கவலைபடுவதில்லை, உடை மிக சுத்தமாக இருக்கணும், உள்ளமும் சுத்தமாக இருக்கணும் என்று நினைத்து கொண்டு காலையும் மாலையும் அவர்களை சென்று பார்த்து வந்தார்.
 
மேலும், இந்திய சுதந்திர போராட்டம் மிகவும் வலுவாக இருந்தது மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலேயேருடைய முதல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரி விஷயங்களை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தானும் ஏன் அரசியலில் ஈடுபடகூடாது. நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் பல விதமான போராட்டங்களை நடத்தித் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் ஏன் காந்தியவாதியாக இருக்கக்கூடாது என்று நினைத்து இவரை ஒரு கதர் ஜிப்பா ஒரு கதர் பைஜாம்மா யாருக்கும் தெரியாமல் வாங்கி தைத்து போட்டு கொண்டார்.
 
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் கம்பெனி முதலாளியைப் பார்த்து இத்தனை வருடங்களாக எனக்கும் என் அண்ணனுக்கும் நாடகங்களில் நடிக்க எங்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து எங்களுக்கு பல வேஷங்களை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்தில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்படி எங்களை ஒரு நல்ல நாடக நடிகனாக வளர்த்துவிட்ட உங்களை நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை என்றென்றும் மறக்க மாட்டோ ம். ஐயா நானும் என் அண்ணனும் சினிமாவில் நடிக்க ஆசைபடுகிறோம். எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புங்கள் என்று சொன்னவுடன், கம்பெனி முதலாளி இதற்கு ஏதும் பதில் சொல்லமுடியாமல் சற்று மெளவுனமாக இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் காலில் விழுந்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். கோபம் இல்லாமல் என்னை சந்தோஷமாக அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் இந்த சொல்லை கேட்ட முதலாளி பதில் ஏதும் சொல்ல முடியாமல் எம்.ஜி.ஆரின் தோள்பட்டையும் தட்டிகொடுத்து நீ, சினிமாவில் சேர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன். இந்த செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மிகுந்த மன மகிழ்ச்சியோடு தன் பெட்டிகளை எடுத்துகொண்டு தன்னுடைய சக நடிகர்களிடம் பிரியாவிடை சொல்லி ஆனந்த கண்ணீரோடு வெளியே வரும்போது அந்த இடத்தில் கம்பெனி முதலாளி நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே, முதலாளி எம்.ஜி.ஆரிடம் வந்து கைபிடித்து எம்.ஜி.ஆரிடம் ரூ. 100/- பணத்தை கொடுத்து வழி அனுப்பிவைக்கிறார்.
 
அடுத்த நாள் சென்னையில் இருக்கும் பி.யு. சின்னப்பா, எம். கே. ராதா இவர்களைப் பார்க்க செல்கிறார். அப்போது என்னடா ராமசந்திரா, ஏதோ வேசத்தில் வந்திருக்கே ஏதாவது சினிமாவில் நடித்துவிட்டு வருகிறாயா என்று ஆச்சரியத்தோடும், சிரிப்போடும் கேட்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர் அது எல்லாம் ஒன்றும் இல்லை நானாகவே ஒரு உடையை மாட்டிகொண்டேன் வேண்டாம் என்று சொன்னால் நான் கழற்றிவிடுகிறேன். ஐய்யயோ வேண்டாம் உடை உனக்கு மிக பிரமாதம்மா இருக்கு நீ ஒரு காந்தியவாதி மாதிரி இருக்கிறே. ஆனால் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் விபூதியும் தான் பொருத்தமில்லாமல் இருக்கு என்று சொல்லுகின்றார்கள். இதை கேட்ட எம்ஜிஆர் சற்று மனவருத்தத்தோடு பதில் சொல்லுகிறார், இந்த உடையையும், உத்திராட்சகொட்டையும் நேற்றுதான் அணிந்தேன். இதை அணிந்ததிலிருந்து எனக்கு ஏதோ ஒரு பெரிய மனமகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் எனக்கு சினிமாவில் நடிப்பு சான்ஸ் கிடைக்கும் வரையில் இந்த உத்திராட்சகொட்டை வெளியில் தெரியாமல் சட்டைக்குள் போட்டு கொள்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு அவர்கள் ராமசந்திரா நாங்கள் இப்படி சொல்லிவிட்டோ மே என்று வருத்தப்படக்கூடாது என்று சொல்லி முடிக்கிறார்கள்.
 
பிறகு, மறுநாள் கும்பகோணத்திலிருக்கும் அம்மாவுக்கு நீங்கள் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு தாமதப்படாமல் உடனே வாருங்கள் என்று கடிதம் எழுதுகிறார். அதோடு நாராயணனுக்கும் கடிதம் எழுதுகிறார். அம்மாவையும் அண்ணனையும் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் தனியாக ரூம் எடுத்து ஒட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று கடிதம் எழுதுகிறார். நான் சினிமாவில் சேர்ந்தவுடன் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கடிதம் எழுதுகிறார். எம்.ஜி.ஆர் சலிப்பு இல்லாமல் சாப்பாட்டை பற்றி கவலைபடுவதில்லை, உடையை மட்டும் வெள்ளையாக வைத்து கொண்டு தினமும் காலை நீட்டா உடை உடுத்திக் கொண்டு சினிமா கம்பெனிகளுக்கும் நாடக வாத்தியார் கந்தசாமி முதலியார் வீட்டிற்கும் சென்று விடுவார். இப்படியே மாதங்கள் பல கடந்தன இவரது நிலைமை நன்கு புரிந்து கந்தசாமி முதலியார். ராமசந்திரனுடைய திறமைக்கும் நல்ல அழகுக்கும், கட்டான உடலமைப்புக்கும் இவை அனைத்தையும் நன்கு அறிந்த கந்தசாமி முதலியார், எம்.ஜி.ஆருக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரவேண்டும் என்று ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் சென்று முயற்சி செய்தார் வாத்தியார் கந்தசாமி முதலியாரின் முயற்சி வீண் போகவில்லை. ஒரே வாரத்தில் ஒரு சினிமா கம்பெனியில் “சதிலீலாவதி” என்ற படத்தில் நடிக்க 1936ல் வாய்ப்பு கிடைத்தது. வேசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சம்பளம் ரூ. 100/- அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு வயது 19 இதற்கு இடையில் கும்பகோணத்தில் இருக்கும் அன்னையும், சக்கரபாணியும் சென்னைக்கு வந்து வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு சிறிய வீட்டில் இருந்தார்கள்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:47:14 AM
13.சதிலீலாவதியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகிறது. இந்த செய்தியை கேட்ட தாயும் அண்ணனும் அளவு கடந்த ஆனந்தம் அடைகிறார்கள். பிறகு, முதல் முதலில் சினிமா கம்பெனி ஒப்பந்தத்துக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். அப்போதுகூட அண்ணனையும் அழைத்துச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அடுத்து அவருக்கு மேக்கப் நடைகிறது போலீஸ் அதிகாரியாக வேடத்தில் நடிக்க. இது முடிந்து சூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இருந்த பல கம்பெனி முதலாளிகளும், டைரக்டரும் எம்ஜிஆரை பார்த்து மேக்கப் ஓகே என்று சொல்லுகிறார்கள். இந்த படத்துக்கு டைரக்டர் ஒரு வெள்ளைகாரர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். எம்.ஜி.ஆர் அவர்கள் டைரக்டர் காலை தொட்டு வணங்குகிறார் பக்கத்தில் நின்ற தன் அண்ணன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்துகிறார். உடனே டைரக்டர் சக்கரபாணி அவர்களை உற்று கவனிக்கிறார். உடனே டைரக்டர் டங்கன் அவர்கள் சக்கரபாணியை பார்த்து நீ என்ன படித்து இருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார் அதற்கு சற்றம் தயங்காமல் ஆங்கிலத்தில் பதில் சொல்லுகிறார், இதை கேட்ட டைரக்டர் What man you are study only 7th standard. Yes sir, Why, sir I am very poor family இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தில் சரியாக பதில் சொன்னதால் டைக்ரடர் டங்கன் மனதில் இடம் பெற்றுவிட்டார். டங்கன் இந்த படத்திலே நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதை அறிந்த சத்தியதாய் அவர்கள் இந்த படம் என்று தியேட்டருக்கு வருமோ என்று ஏங்கி கொண்டு இருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் NSK. T.S. பாலையா, M.K. ராதா. முதல் முதலாக இந்த படத்தில் முன்பணமாக ரூ. 100/- பெற்றுக் கொள்கிறார் எம்.ஜி.ஆர். சதிலீலாவதி 1937 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது. அதற்கு முன் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த சத்தியபாமா அவர்களும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ரிலீஸ் ஆன அன்று முதல் காட்சிக்கே தியேட்டருக்கு மகன்களை கூட எதிர்ப்பார்க்காமல் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்று படத்தை பார்த்து பூரித்து போனார்கள்.
 
அடுத்த படம் என்ன செய்வது என்று நினைத்து பெரிய கம்பெனிகளுக்கும் நடிகர்கள் வீட்டிற்கும் சென்று வரும்போது வழியில் முன்னால் அவர்களுடன் நாடகத்தில் நடித்த நண்பர் கேசவன் என்பவரை திடீர் என்று வழியில் சந்திக்கிறார். அந்த நேரத்தில் நான் பாம்பேக்கு போகிறேன். எனக்கு படம் ஒன்று புக் ஆகியிருக்கு நீ வேண்டுமானால் என் கூடவா அந்த படத்தில் உனக்கு சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னவுடன் தன் வீட்டுக்கு வந்து அம்மாவிடமும் அண்ணனிடமும் இந்த விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட இருவரும் சென்னையில் சினிமா சான்ஸ் கேட்டு அலைவதை விட கேசவன் அவர்களுடன் நீ பம்பாய்க்கு சென்று வருவதுதான் நல்லது, ஆனால் மகனே பம்பாய்க்கு சென்று ஒரு வாரம் 10 நாட்கள் நடிப்பு சான்ஸ்க்குகாக காத்து கொண்டு இருக்க வேண்டுமே இதற்கு பணம் அதிகம் தேவைப்படுமே என்று சொல்லும்போது உடனே சக்கரபாணி குறுக்கிட்டு அம்மா நானும் தம்பியும் கேசவன் அவர்களை சந்தித்து விவரத்தை பேசி வருகிறோம் என்று சொல்லி கேசவன் அவர்களை சந்திக்க செல்கிறார்கள். அவருடைய வீட்டில் அவரை சந்தித்து பணச் செலவை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்வதை கேட்ட கேசவன் அவர்கள் சற்று யோசித்து பிறகு நீங்கள் சொல்வது சரியான விஷயம்தான். ராமசந்திரனுக்கு என் கூட பம்பாய்க்கு வருவதற்கு டிக்கெட்டுக்கு மட்டும் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்புங்கள் மீதி செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன உடன் இருவரும் அம்மாவிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார்கள்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:49:02 AM
14.பம்பாய் சென்றார் எம்.ஜி.ஆர்

அம்மாவும் சற்றும் யோசிக்காமல் மகனே நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ புறப்படுவதற்கு தயாராகு என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் சக்கரபாணியை அழைத்து மகனே நீ சென்று கேசவன் அவர்களிடம் ராமசந்திரனை எப்போ அனுப்ப வேண்டும் என்று கேட்டறிந்து வா என்று சொல்லி அனுப்பிவிட்ட பிறகு சத்தியதாய் அவர்கள் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கேசவன் அவர்களை சந்திக்க போன சக்கரபாணி அவர்கள் நாளை காலையில் ராமசந்திரனை பெட்டியோடு என் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் என்று சக்கரபாணி அவர்களிடம் கேசவன் சொல்கிறார். அதன்படி மறுநாள் காலையில் சக்கரபாணி தம்பியை அழைத்துக் கொண்டு கேசவன் வீட்டிற்கு செல்கிறார். சென்ற உடன் நமக்கு மதியம் தான் பம்பாய்க்கு ரயில் அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொன்னார். அதன்படி அவர்களும் அங்கு தங்கி இருந்து மதியம் ரயிலுக்கு சென்று பம்பாய் ரயிலில் தம்பியை வழி அனுப்பிவிட்டு சக்கரபாணி வீட்டிற்கு வந்து, தம்பியை பாம்பேக்கு வழி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லுகிறார். அன்று முழுவதும் அம்மா அவர்கள் சற்று மனவருத்தத்துடன் இருப்பதை கண்டு அம்மா என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய் தம்பி நடித்த முதல் படம் ஜெ ஜெ என்று ஓடி கொண்டு இருக்கிறது. 2வது படத்தில் நடிக்க தம்பி வட இந்தியாவுக்கு செல்கிறான். அதை நினைத்து நீங்க ஏன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த நாள் சக்கரபாணி தனக்கு சினிமா தொழிலை தேடி கம்பெனிகளுக்கு செல்கிறார். அந்த நேரத்தில் “சதிலீலாவதி” டைரக்டர் எல்லீஸ் டங்கனை பார்க்கிறார். டங்கன் யோசிக்கிறார் அப்போது ஐயா நான் ராமசந்திரன் அண்ணன் My name is சக்கரபாணி என்று சரளமாக அடுத்து பேச வேண்டிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்.
 
அவரும் சக்கரபாணியை அடிக்கடி நீ என்னை வந்து பார்த்து செல் சக்கரபாணி அவர்கள் ஒரு வெள்ளைக்காரர் சினிமா பட டைரக்டர் அவரிடம் இவர் எப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்தது? தன் தகப்பனார் கோபாலன் அவர்கள் நன்றாக ஆங்கிலம் படித்தவர் பெரும்பாலும் இவர் கண்டியில் ஆங்கிலத்தில்தான் பேசுவார் (ஆங்கில ஆட்கிக்காலம்) சில சமயங்களில் கோபாலன் அவர்கள் தன் மூத்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் படங்களை சொல்லி கொடுப்பார். அப்போது சக்ரபாணி அவர்கள் சிறு குழந்தையாக இருந்தாலும் அவருக்கு வயது 4 அவரும் மற்ற குழந்தை அண்ணன், அக்காவுடன் அமர்ந்து ஆங்கில உச்சரிப்புகளை கவனிப்பார் அதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவர்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுங்கல் என்று கேட்பாராம் இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதுதான் இப்போது பயன் அளித்தது. பாம்பேக்கு வந்து பட முதலாளியை சந்தித்து எம்.ஜி.ஆருக்கு ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கொடுங்கள் என்று சொல்லுகிறார். பட முதலாளியும், டைரக்டரும் எம்ஜிஆரை ஏற இறங்க பார்க்கிறார்கள் அந்த சமயம் எம்ஜிஆர் அவர்கள் ஜிப்பா, பைஜாமா அணிந்து இந்தி நடிகர் போல் நல்ல வாட்ட சாட்டமாக நிற்பதை கண்டு எம்ஜிஆரிடம் உனக்கு என்ன என்ன தொழில் தெரியும் என்று கேட்கிறார். உடனே எம்ஜிஆர் கடகட என தனக்கு தெரிந்த நடிப்புகளையெல்லாம் வரிசையாக சொல்கிறார்.
 
இதை கேட்ட அந்த இருவரும் எம்ஜிஆருக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்த கேசவனை பார்க்கிறார்கள் இதை புரிந்து கொண்ட கேசவன் அவர்கள் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு பையன் ஏற்கனவே நாடக கம்பெனியில் எல்லா நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லுகிறார். ஓ, அப்படியா சரி, பையன் ஒரு லாட்ஜியில் தங்க வையுங்கள். சாப்பாடு, லாட்ஜ் வாடகை எல்லாம் கம்பெனி கொடுத்துவிடும். பிறகு இந்த படத்தில் பையனுக்கு என்ன வேசம் கொடுக்கலாம் என்பதை பார்த்து முடிவு எடுக்கலாம். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வயது 20 ஆகிறது. நேரத்துக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு லாட்ஜில் தங்கி இருக்கிறார். அதிகாலையில் எழுந்து எப்போதும் செய்வது போல் உடற்பயிற்சிகளை செய்வதில் தவறுவதில்லை (யோகாசனம்) படபிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கிறது இடையில் எம்.ஜி.ஆர். டைரக்டர், பட முதலாளி, கேசவன் இவர்களை சந்திப்பதிலும் தவறுவதில்லை. எம்.ஜி.ஆர். இந்த படத்தில் சி.ஐ.டி. ஆபீசராக வேடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அந்த வேடம் வேர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. பிறகு எம்.ஜி.ஆருக்கு ஜெமீன்தார் வேடம் கொடுக்க முடிவு ஆனது. பிறகு அதுவும் அந்த வேடத்திற்கு T.S. பாலையாதான் மிக பொருத்தமானவர் என்று ஜெமீன்தார் வேடத்தை T.S. பாலையாவுக்கு கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தில் சரியான கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை. ஆதலால் கம்பெனி முதலாளி மிக சிரமப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ரூ. 500/- கொடுத்து ஆறுதல் கூறி அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று சொல்லி எம்.ஜி.ஆரை கேசவனிடம் சென்னைக்கு அனுப்பிவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் படமுதலாளி.
 
அதன்படி கேசவன் எம்.ஜி.ஆருக்கு சமாதானம் சொல்லி சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கிறார். பாம்பேயில் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னை ரயிலில் இறங்கி காலை வீட்டிற்கு வரும் வழியில் அம்மாவையும், அண்ணணையும் எதிர்பாராமல் பார்க்கிறார் எம்.ஜி.ஆரை பார்த்தவுடன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் அதிர்ச்சி ஆகிறது. அம்மா மகனை என்ன திடீர் என்று வந்து விட்டாய், அம்மா எங்க நீங்க போயிட்டு வருகிறீர்கள் என்று அம்மாவிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார். அம்மா உடனே நானும் அண்ணனம் கோயிலுக்கு சென்று அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை அம்மனுக்கு செய்து விட்டு வந்து கொண்டு இருக்கிறோம் நான் வேலை கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு இருக்கிறேன். இந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அனாவசிய செலவுகள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் சிறப்பு பூஜை என்றும் தெய்வம் என்று அனாவசிய செலவு செய்தால் அந்த கல்லா எனக்கு வேலை வாங்கி தரப்போகிறது கோபமாக ரோட்டில் நடந்து கொண்டே அம்மாவிடம் சற்ற கோபமாக பேசுகிறார். அம்மா மகனை வீட்டில் சென்று பேசி கொள்ளலாம் என்று மூவரும் வீட்டிற்கு வருகிறார்கள் முதலில் நீ குளித்து விட்டு வா, மெதுவாக உட்கார்ந்து பேசலாம் என்று அன்போடு சொல்கிறார்.
 
அவரும் அதன்படி குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவிடமும் அண்ணனிடமும் தானாகவே பாம்பேயில் நடந்த சம்பவங்களை சொல்கிறார். அதன் பிறகு உள்ளே என்று பெட்டியை திறந்து அவர்கள் கொடுத்த ரூபாய் 500/- வழியில் சாப்பிட்டு செலவு பேக மீதியை அம்மாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் உள்ள சினிமா கம்பெனிகளுக்கு ஸ்டுடியோக்களுக்கு வேலை தேடி நடக்கிறார் (இது ஒரு சுருக்கம்)
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 02:53:32 AM
16.மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது

தன் மகன்களுக்கு எப்படியாவது படத்தில் நடிக்க சீக்கீரமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அந்த அம்மன் கோயிலுக்கு மகன்களுக்கு தெரியாமல் சென்று பூஜை செய்து வருகிறார். இப்படி இருக்கிற காலகட்டத்தில் இருவருக்கும் சில படங்களில் நடிக்க சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய விடா முயற்சியால் இம்மாதிரி வாய்ப்புக்கள் கிடைப்பதில் குறைவு ஒன்றும் இல்லை ஆனாலும் அவர் மனதிற்குள் நாம் எப்போது கதாநாயகனாக நடிக்க போகிறோம் என்ற ஏக்கம் இருந்து கொண்டு இருந்தது. இப்படியொரு காலகட்டத்தில் ஒரு சிலருடைய முக்கிய சிபாரிசின்படி டைரக்டர் A.S.A. சாமி பட தயாரிப்பாளர் சோமசுந்தரம் இவர்கள் இருவரும் இணைந்து ராஜகுமாரி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்து கொண்டு கதாநாயகன் தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது எம்.ஜி.ஆர் அவர்களும் இந்த தேர்வில் கலந்துகொண்டார். தேர்வை டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் மிக கவனமாக தெளிவாக நடத்தினார். இதில் எம்.ஜி.ஆர் ஆள் வாட்டசாட்டம், அழகு, நிறம் மற்றும் பயிற்சிகள் இலைகள் எல்லாமே சரியாக இருந்தது. உடனே எம்.ஜி.ஆரிடம் ஏதும் சொல்லாமல் உன் வீட்டு விலாசத்தை கொடுத்து செல் நாங்கள் உன் வீட்டிற்கு தகவல் அனுப்புகிறோம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்கள். எம்.ஜி.ஆர் மன திருப்தி இல்லாமல் வீட்டிற்கு சென்றவர் அம்மாவிடமும், அண்ணனிடமும் நான் கதாநாயகனாக நடிக்க தேர்வு ஒரு கம்பெனியில் நடந்தது என்ற விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட அம்மாவுக்கும் அண்ணனுக்கும் மகிழ்ச்சி அடைந்து மகனே நீ கவலைப்படாதே இந்த தேர்வில் நீதான் வெற்றி அடைவாய் என்று அம்மா சொல்கிறார். (இது சுருக்கம்)
 
மறு நாள் தொடர்ந்து வேலை தேடும்படலம் தொடர்கிறது. ஒரு வார காலத்தில் மேற்படி டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் எம்.ஜி.ஆரை அழைத்து வரும்படி ஒரு ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் வீட்டில் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று உள்ளார் அம்மா அந்த ஆளிடம் மகன் வந்தால் அனுப்பி வைக்கிறேன் நேரம் (மதியம்)
 
எம்.ஜி.ஆர் இரவு வீட்டிற்கு வருகிறார். மகன் எப்போது வருவான் எனற் காத்துக்கொண்டு இருந்த தாய் ஏண்டா மகனே இவ்வளவு நேரம் உடனே மகன் சொல்கிறார் நான் ஊர் சுற்றி கொண்டா வருகிறேன். எனக்கு கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பு நடித்து முடித்தவுடன் நேராக வீட்டிற்கு வருகிற஧ன் என்று சொல்லி பாத்ரூமூக்கு சென்று குளித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு தயார். மகன் சாப்பாடு சாப்பிடும்போது டைரக்டர் A.S.A. சாமி ஆள் அனுப்பி வைத்த விவரத்தை சொல்கிறார்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 03:00:26 AM
15.திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது


தன் அண்ணனுக்கு திருமணம் நடந்து விட்டு, ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் குடும்பத்தில் ஏகபோக சந்தோஷமாக இருந்து வருகிறார். இந்தநிலையில் தன்னை பெற்று எடுத்த தாய் தன் மூத்த மகனுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது. இனி இளைய மகனுக்கும் கல்யாணம் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு தன் மூத்த மகன் சக்கரபாணியிடமும் தன் மருமகளிடமும் தன் எண்ணத்தை சொல்கிறார். அவர்களும் ஆமாம் கல்யாணம் செய்து விடவேண்டியது தான் என்று மூவரும் கலந்து பேசி தன் மூத்த மருமகள் வழியாக எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்ய கடிதம் மூலமாக பெண் தேடும் படலம் தொடர்கிறது. விரைவிலேயே, சத்தியதாய் அவர்களின் பாரம்பரிய வழியிலேயே பெண் கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தை படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டிற்கு வந்த உடனே கல்யாண விஷயத்தை மகனிடம் தாய் சொல்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் அம்மா தயவு செய்து எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம். இதை பற்றி என் கிட்ட எதுவும் பேசாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார். அவர் சொல்லி விட்டு படுக்கைக்கு சென்று விட்டார். அடுத்து மகன் இப்படி சொல்லிவிட்டானே என்று மூவரும் யோசிக்கிறார்கள். சக்கரபாணியும், மருமகளும் அம்மாவிடம் இன்னும் ஒருவாரம் சென்ற பிறகு பேசுவோம். அடுத்து ஒரு வாரத்தில் படப்பிடிப்பு சீக்கிரமாக முடித்து வீட்டுக்கு வந்து விடுகிறார். வீட்டிற்குள் விளையாடி கொண்டு இருந்த தன் அண்ணன் குழந்தையை எம்.ஜி.ஆர் அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்சி கொண்டு இருந்தார். அப்பொழுது தனது அண்ணி தன் கொழந்தனாருக்கு குடிக்க பால் கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு காபி, டீ எப்போதும் பிடிக்காது அண்ணி கொண்டு வந்த பாலை தான் குடித்து விட்டு அண்ணன் குழந்தையை கொஞ்சி விளையாடுகிறார்.
 
அது சமயம் இவர் மிக சந்தோசமாக நல்ல மூடுடன் இருக்கிறார் இந்த நேரத்தை பார்த்த சத்தியதாய் தன் மகன் எம்.ஜி.ஆரிடம் கல்யாணத்தைப் பற்றி மீண்டும் தொடர்கிறார். உடனே எம்.ஜி.ஆர் அம்மா நான் அன்னைக்கே சொல்லி விட்டேன் எனக்கு கல்யாணம் ஒன்றும்வேண்டாம் இன்னும் கொஞ்சகாலம் போகட்டும் நீங்கள் அவசரப்படாதீர்கள் என்று சொல்கிறார். இந்த சமயம் வெளியே சென்று இருந்த தன் அண்ணன் சக்கரபாணி வீட்டிற்குள் நுழைகிறார். வீட்டிற்குள் நுழையும்போது தன் தம்பி வீட்டிற்குள் இருப்பதை அறிந்து என்னடா ராமசந்திரா இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்துட்டே என்று கேட்ட உடனே ஆமாங்க அண்ணே இன்னிக்கு பட பிடிப்பு சீக்கிரமாக முடிந்துவிட்டது. நாளைக்கு கூட எனக்கு படபிடிப்பு இல்லை நாளை மறுநாள் தான் படபிடிப்பு உள்ளது என்று சொல்லி முடிக்கிறார். அப்படியா நான் பாத்ரூம் சென்று வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். அவர் பாத்ரூம்சென்று வருவதற்குள் அவருடைய மனைவி காப்பியோடு வந்து நிற்கிறார். காப்பியை கையில் வாங்கி கொண்டு தம்பிக்கு பால் கொடுத்தியா என்று கேட்கும்போது எம்.ஜி.ஆர். இப்போதான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க அவரும் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்த அம்மாவை பார்த்து என்னம்மா ஓர் மாதிரியாக இருக்கே, உனக்கு அடிக்கடி தலைவலி வருமே அது வந்திருச்சோ என்று அம்மாவை பார்த்து கேட்கிறார். அம்மா சிரித்துக்கொண்டே இல்லையடா மகனே மனம் தான் சரியில்லை எனக்கு என்று சொல்கிறார்.
 
உடனே, அம்மா! தம்பி ஏதாவது கோபித்துக் கொண்டானா நீ அவன் கிட்ட ஏதாவது ஏடாகோடமாக பேசினியா என்று கேட்கிறார். இதை சொல்லி முடிவதற்குள் எம்.ஜி.ஆர் பேச தொடங்கினார். அண்ணனிடம், அண்ணே அம்மா எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக பேசுறாங்க, இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம், ஏன் வேண்டாம் என்று சொல்கிறேன். அதையும் சொல்கிறேன் நாமோ எவ்வளவோ கஷ்டத்திற்கு இடையிலே கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இதற்கு உங்களுக்கு ஒரு கல்பாணம் பண்ணி ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. இவ்வளவு நாளாக மூன்றுபேராக இருந்த நாம் 5 பேர்களாகி விட்டோ ம் இதற்கு எல்லாம் வருமானம் முக்கியம். நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த பிறகு என் கல்யாணத்தைப் பற்றி பேசுவோம். அதுவரைக்கும் இனி மேல் என்கிட்ட கல்யாணத்தைப் பற்றி பேசாதீங்க. சரிடா ராமச்சந்திரா நீ சொல்வது சரிதான். இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த சத்தியதாய்க்கு சற்று மனம் வருத்தம் அதிகமாகிவிட்டது.
 
உடனே சத்தியதாய் சமையல் அறைக்கு சென்று விட்டார். காலங்கள் ஒருமாதம் கடந்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் சில படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளது. முன்பை விட எம்.ஜி.ஆர் அவர்கள் பிஸியாகி விட்டார். சக்கரபாணி அவர்களும் அதற்காக வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து இருக்காமல் படகம்பெனிகளுக்கு சென்று சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் ஒரு நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் திருமணம் பேச்சு தொடங்குகிறது. அன்று திருமணம் பேச்சு மிக சூடுபிடிக்கிறது. அம்மாவும், அண்ணனும் கல்யாணம் முடித்தே ஆகவேண்டும் என்று திரும்ப, திரும்ப சொல்கிறார்கள். இதை எல்லாத்தையும் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் சற்று எதிர்பார்க்காமல் சமையல் கட்டுக்குள் இருந்த அண்ணியை சத்தம் போட்டு அழைக்கிறார். தன் கொழுந்தன் ஏதோ சத்தம் போட்டு கூப்பிடுகிறாரே என்ன தம்பி என்று கேட்கிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணி நம் குடும்ப விஷயம் எல்லாம் நல்லா தெரியும் உங்களுக்கு நான் ஆரம்பத்திலிருந்து எனக்கு இப்போ திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். இவர்கள் மீண்டும் மீண்டும் நீ இப்போ திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்களே இது என்ன நியாயம் என் மனதில் எவ்வளவோ லட்சியங்கள் இருக்கிறது.
 
அவைகளைவிட எனக்கு இப்போது திருமணம் தான் முக்கியமா என்று அண்ணியைப் பார்த்து கேட்கிறார். உடனே அண்ணி தம்பி நீங்க பேசுவது எல்லாமே நியாயம் தான். நீங்கள் நினைக்கிறபடி நீங்க ஒரு லட்சாதிபதியா ஆகுவிங்க அதற்கு உங்களுடைய திருமணம் தடையாக இருக்காது. அம்மாவுக்கு உங்களுக்கு திருமணம் செய்து பார்ப்பதில் மிக ஆசையோடு இருக்காங்க. உங்களுக்கும் திருமண வயது வந்து விட்டது. இப்போ நாங்க உங்களுடைய சம்மதம் பெறாமலேயே பெண் வீட்டாரிடம் பெண்பார்க்க வருகிறோம் என்று சொல்லி விட்டோ ம். அதனாலே ஒரு இரண்டு நாளைக்கு நீ படப்பிடிப்பிலிருந்து அம்மாவுடன் ஊருக்கு சென்று அந்த பெண் உங்களுக்கு பிடிக்குதா இல்லையா என்பதை என்ற விவரத்தை சொல்லிவிடுங்கள். இது நீங்கள் உங்கள் தாய்க்கு செய்யும் கடமையாகும் என்று சொல்லிவிட்டார்கள். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசித்து கொண்டு இருந்த எம்ஜிஆர் அவர்கள் கோபமாக சமையல் அறையில் இருந்த தன் தாயை அம்மா என்று சத்தம் போட்டு அழைக்கிறார். உடனே தாய் என்னடா மகனே என்று அருகில் வந்து நிற்கிறார். தாயிடம் உடனே எம்.ஜி.ஆர் உங்களுடைய மணம் நோகாமல் நடந்து கொள்வது தான் எனக்கு முக்கியம். முதலில் உங்கள் எண்ணங்கள் பிறகு தான் என் எண்ணங்கள். அந்த பெண் எனக்கு தகுந்த மாதிரி இருக்குமா என்பதை எல்லாம் அறிந்து கொண்டு வாருங்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளை எப்படி இருப்பார் என்று கேட்டால், இங்கிருந்து நீங்கள் போகும் போது என் போட்டோ வை ஒன்றை எடுத்து பெண் வீட்டாரிடம் காண்பிங்கள் என்று பட பட என்று சொல்லி பேச்சை முடித்து கொண்டார்.
 
பிறகு இரண்டு மூன்று நாட்களில் சென்னையிலிருந்து கேரளாவுக்கு தானும் தன் மருமகளும் குழந்தையும் தூக்கிகொண்டு போகிறார்கள். அங்கு தன் மருமகள் வீட்டில் தங்கி கொண்டு பெண் வீட்டார்க்கு தகவல் கொடுத்துவிட்டு தானும் தன் மருமகளும் மருமகள் வீட்டை சேர்ந்தவர்கள் பெண் பார்க்க செல்கிறார்கள். அங்கு என்ன என்ன விஷயம் பேச வேண்டுமோ பேசி விட்டு பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையோட போட்டோ வை காண்பித்து பேசுகிறார்கள். பெண் வீட்டாருக்கும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். எப்போது திருமணம் வைத்து கொள்ளலாம் என்று பெண் வீட்டு சம்மதத்தோடு தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டிலிருந்து புறப்படும் சமயத்தில் சக்கரபாணி அவர்களின் மனைவி பெண் வீட்டாரிடம் பெண் போட்டோ இருந்தால் ஒன்று கொடுங்கள் நாங்கள் மாப்பிள்ளைக்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார். அவர்களிடத்தில் போட்டோ இல்லை உங்களுக்கு பெண் பிடித்து இருக்கும் போது அப்படியே மாப்பிள்ளையிடம் சொல்லுங்கள். எல்லாத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறார்கள். பெண் வீட்டில் நடந்த சம்பவத்தைபற்றியும் பெண்ணின் அழகை பற்றியும் சக்கரபாணி அவர்களிடம் சொல்லுகிறார்கள். சரியம்மா தம்பி வரட்டும் பேசுவோம். இரவு படபிடிப்பு முடிந்து கொண்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு நுழைந்த உடனே அம்மாவை பார்த்தவுடன் என்ன அம்மா பெண்ணை எல்லாம் பார்த்து விட்டு வந்துட்டீங்களா என்று சிரித்த முகத்தோடு கேட்கிறார். மகனே நீ குளித்து விட்டு வந்து சாப்பிடு என்று அம்மா சொல்லுகிறார்கள். எம்.ஜி.ஆரும் குளித்து விட்டு வந்து சாப்பிட்டு விட்டு அண்ணனுடன் அமர்ந்து கொண்டு அண்ணியையும் உட்கார சொல்லி ஊருக்கு சென்று வந்த விஷயத்தை சுறுக்கமாக சொல்ல சொல்கிறார். உடனே அம்மா தன் மருமகளைப் பார்த்து சைகை காண்பிக்கிறார். நீ சொல்லு, என்று உடனே எம்.ஜி.ஆரிடம் தம்பி எங்களுக்கு பெண் பிடித்து இருக்கிறது. பெண் உனக்கு மிக பொருத்தமானவள், பெண் வீட்டாரும் மிகவும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதை நான் உங்களுக்கு மிக சுருக்கமாக சொல்கிறேன். இதற்கு மேல் உங்கள் உடைய முடிவுதான் என்று சொன்னதும் இதை கேட்ட எம்.ஜி.ஆர் சற்று மெளனமாக இருந்து விட்டு அம்மாவையும், அண்ணியையும் பார்த்துவிட்டு இருக்கிற பண வசதிப்படி எப்போ எங்கே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பத்திரிகை அடித்து எல்லோரையும் அழைத்து பிரபலியம் செய்யாமல் மிக சுருக்கமாக செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு அம்மாவையும், அண்ணியையும் பார்த்து அம்மா பெண் உங்களுக்கு பிடித்து போச்சி, ரொம்ப அழகாக இருக்கிறாள் என்று இருவரும் வர்ணித்து விட்டீர்கள். பெண் வீட்டாருக்கும் என்னை பிடித்து இருக்கா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது. உடனே அம்மா மகனே நாங்கள் அங்கு போகும் போது உன்னுடைய சினிமா போட்டோ க்களை எடுத்து போயிருந்தோம்.
 
அதை அவர்களிடம் காண்பித்தோம். அந்த போட்டோ வை வாங்கி பார்த்த அவர்கள் நீ பாரு, நான் பாரு என்று ஆளுளுக்கு அந்த போட்டோ வைப் பார்த்து கொண்டே உன்னை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரைக்கும் அந்த போட்டோ வை அந்த பெண்ணிடம் காண்பிக்கவில்லை. இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த அண்ணி உடனே அந்த இரண்டு போட்டோ வை வாங்கி பெண்ணை அழைத்து இந்த இரு போட்டோ வையும் பெண் கையில் கொடுத்து உனக்கு பிடித்து இருக்குதா என்று தனியாக அந்த பக்கம் போய் பார்த்து உனக்கு பிடித்து இருக்கிறதா என்று சொல், போட்டோ வை பார்த்த பிறகு வெட்கப்பட்டு கொண்டு போட்டோ வை தன் கையில் வைத்து கொண்டு சிரித்த முகத்தோடு எனக்கு பிடித்து இருக்கு என்று சிரித்த முகத்தோடு சொன்னார். இந்த விபரத்தை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் அண்ணி இந்த போட்டோ வை சினிமா மேக்கப் போட்டோ அதை பார்த்து நல்லா இருக்கேன்று சொன்னா அது எப்படி நான் மேக்கப் இல்லாமல் நான் அசிங்கமா இருந்தால் அவுங்க என்ன செய்வாங்க என்று முடித்து உடனே அம்மா மகனே அசிங்கம் என்ற வார்த்தைக்கே நம் இடத்தில் இடம் இல்லை. நான் பெற்ற பிள்ளைகள் அத்தனைபேரும் தங்கம், வைரம், மாணிக்கம், முத்து என்று வர்ணிக்க கூடிய வகையில் எல்லோரும் அழகா இருப்பீங்க. இதிலே நான் பெற்ற கடைசி செல்ல மகன் நீ எவ்வளவு அழகு எவ்வளவு திறமையை பற்றி மற்றவர்களுக்கு தான் தெரியும் உனக்கு தெரியாது.
 
இப்படி எல்லாம் விதண்டா வாதம் பேசாதே எல்லாம் நல்ல படியாக நடக்கும் கவலைபடாதே என்று அம்மா சொல்லி ஒரு வழியாக தன் இளைய மகனிடம் சொல்லி முடிக்கிறார். இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அண்ணன் மனதிற்குள்ளேயே இவன் ஒரு முரண்டு பிடித்தவன். கல்யாணம் எப்படியும் நல்ல விதமாக முடியனும் என்று மனதிற்குள் ஆண்டவனை நினைத்து கொள்கிறார். அடுத்த நாள் காலையில் எழுந்து “ஜோதிமலர்” என்ற படபிடிப்புக்காக (1941)ல் ஸ்டுடியோவுக்கு சென்று விட்டார். இதே போல் எம்.ஜி.சியும் வேறு ஒருபடத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள கம்பெனிக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருக்கமான மூத்த நடிகருமான பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இவர்கள் இருவரையும் சந்தித்து இவருடைய கல்யாண விஷயத்தை அவர்களிடம் சுருக்கமாக சொல்கிறார்.
 
உடனே அவர்கள் சந்தோச முகத்தோடு சிரித்து கொண்டு சரி கல்யாணம் எங்கே வைக்க போகிறீர்கள் முதலில் தான் உன் அண்ணன் சக்கரபாணி கல்யாணத்தை எங்களுக்கு எல்லாம் சொல்லாமல் நடத்தி விட்டீர்கள். அப்படி இல்லாமல் உன் கல்யாணத்திற்கு நாங்கள் வரவேண்டும். நாங்கள் வருவோம் நீ உன் கல்யாணத்தை சொல்லு. அல்லது கல்யாண பத்திரிகை கொடு. ஒரு நிமிஷம் மவுணமாக இருந்து விட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் பேச தொடங்குகிறார். அண்ணே நான் ஒரு நியாயத்தை இப்போ பேச போகிறனே. நீங்கள் இருவரும் சரியான பதிலை சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு பேச தொடங்குகிறார்.
 
அண்ணே, என்னுடைய பாட்டனார் பாரம்பரியம் கோவை மாவட்டத்தை அடுத்து உள்ள காங்கேயம் என்ற ஊருக்கு பக்கத்தில் ஒருகிராமம். அது ஒரு சிறிய ஜமீன் போல் மன்றாடியார் என்று சொல்லுவார்கள். எங்கள் பாட்டனார் வம்சத்தை கொங்குவெள்ளாலர் என்று சொல்வார்கள். நான் ஈழதமிழ் நாட்டில் இலங்கை கண்டியிலே எனது தாய் தந்தையாருக்கு நான் 5வது குழந்தையாக பிறந்தவன் என் உடன்பிறந்த சிலரும், என் தந்தையும் இறந்த பிறகு, என் தாய் என்னையும், என் அண்ணன் எம்.ஜி.சியையும் அவர்களையும் அழைத்து கொண்டு செந்தமிழ்நாடு என்று இப்போ சொல்லப்படும் கவிஞர்களும், புலவர்களும் நிறைந்த சோழ மன்னர் நாட்டிலேயே தஞ்சையை சேர்ந்த கும்பகோணத்திற்கு என் தாய் எங்களை அழைத்து கொண்டு வந்து பள்ளிக்கூடத்தில் சேர்த்து 4ஆம் வகுப்பு வரை படிக்க வைத்து பிறகு நாடககம்பெனியில் எங்களை சேர்த்து விட்டு நாடகத்திலே நானும் எனது அண்ணனும் எப்படி வளர்ந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும், பிறகு நாங்கள் சினிமாவில் எப்படி இருக்கிறோம் என்பதும் தெரியும்.
 
அண்ணே நான் தமிழ் ஈழத்திலேயே பிறந்து தமிழ் இலக்கியமான இந்த நாட்டில் படித்து வளர்ந்து கலை தொழிலிலே முன்னேற்றம் அடைந்து வரும் நான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என் உடல் முழுவதும் தமிழ். இப்படி பட்ட எனக்கு இந்த தமிழ் நாட்டிலேயே இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்து கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதா, என் வாழ்நாளிலே நான் தெரிந்தோ தெரியாமலோ சமீப காலத்தில் நான் ஒரு தவறை விளையாட்டு பிள்ளை போல் செய்து கொண்டு வந்தேன். அதாவது நாங்கள் குடி இருந்த வீட்டில் எதிர்வீட்டில் ஒரு 17,18 வயது மதிக்கத்தக்க நல்ல ஒரு அழகான பெண் என்னை போல் அவளும் சுறுசுறுப்பாக இருப்பாள். அந்த பெண் நான் வீட்டிற்கு வந்த பிறகு என்னை பார்க்க தவற மாட்டாள். நான் தற்செயலாக இந்த பெண் என்னை பார்த்து சிரிப்பாள், நான் காலையில் வெளியே செல்லும் போது மெளனமாக சிரிப்பாள். இது நாள் அடைவில் என் மனதில் அவளுடைய அன்பார்ந்த சிரிப்பு முகமும், அவளுடைய உருவமும் என் மனதில் புகுவதை உணர்ந்தேன். பிறகு நான் எப்போதும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். உடற்பயிற்சி, யோகா என்னுடைய உள்ள பழைய ஆர்மோனிய பெட்டியை வைத்து குரல் சரியாக வரவேண்டும் என்பதற்காக நான் பாடுவேன். இதில் சில நேரங்களில் சத்தமாக பாட ஆரம்பித்தேன். இந்த சத்தத்தை கேட்ட எதிர்வீட்டு பெண் நான் எழுந்து விட்டேன். தயாராகிவிட்டேன் என்று அறிந்து கொண்டு அவுங்க வீட்டிலே குடி தண்ணீர் வசதி இல்லாததால் எங்கள் வீட்டில் குழாய் தண்ணீர் பிடித்து செல்ல இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு குழாய் அடிக்கு வந்து விடுவாள். இதை அறிந்த நான் பல்பொடியை கையில் கொட்டி கொண்டு குழாய் அடிக்கு வந்து விடுவேன். இப்படி ஒரு சில மாதங்கள் இருவரும் கண் நோக்கினோம் என்று சொல்லுக்கு இணங்க நாங்கள் இருவரும் பேசினதே இல்லை. ஆனால் என் மனதிலே அந்த பெண் மீது கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. இவைகளை அறிந்த என் தாயும், அண்ணியும் சரி மகனுக்கு கல்யாண வயது ஆகிவிட்டது. எதிர் வீட்டு பெண்ணை இவன் காதலிக்கிறான் என்ற எண்ணத்தோடு கேளராவுக்கு சென்று என் தாயும், அண்ணியும் என்னை கட்டாயப்படுத்தி என் சம்மதத்தோடு கேரளாவுக்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கு பேசி முடித்துவிட்டு வந்துவிட்டார்கள். எப்போதுமே அம்மா சொல்லை தட்டாதவன் நான். நான் தமிழ்பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மிக மிக ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் என் ஆசை நிறாசையாகிவிட்டது. இந்த செய்திகளை கேட்டு கொண்டு இருந்த பி.யு. சின்னப்பாவும் எம்.கே. ராதாவும் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்கள். பிறகு பி.யு. சின்னப்பா சரி நீ தாய் சொல்லை தட்டாதவன் நீ உன் அண்ணன் எம்.ஜி.சியிடம் சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லவில்லை. சரி உன்மனதில் உள்ள எண்ணங்களை உன் உடன் பிறவா சகோதரனாக நினைத்து கொண்டு இந்த விஷயத்தை சொல்லிவிட்டாய். ஆனாலும் இது உன்னுடைய வாழ்க்கை பிரச்சனை நாங்கள் உனக்கு ஆறுதல்தான் சொல்லமுடியுமே தவிர, மாற்று யோசனைகள் எதுவும் சொல்லமுடியாது. ராமச்சந்திரா என்று எம்.கே. ராதா ஆரம்பிக்கிறார். நீ நாடகத்தில் நடிக்கிற காலத்திலிருந்தே நீ ஒரு பெரிய திறமைசாலியாக, அறிவு உடையவனாகவும், அன்பு, பாசம், நேசம் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய் என்பதை நான் நன்கு அறிவேன். தாய்க்கு மிஞ்சிய கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை அறிந்தே நீ இனிமேல் தாய் சொல்லை தட்டாமல் நடந்து கொள்வது தான் நல்லது என்று நினைக்கிறேன். உனக்கு எப்போதுமே உதவி செய்ய நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். கவலைபடாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
 
இந்த ஆறுதலைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு மனதிலேயே உள்ள குழப்பங்கள் ஓரளவுக்கு தெளிவாகிவிட்டது. அடுத்த மாதம் கல்யாணம் நடைபெற இருக்கிறது. கேரளாவில் ஏதோ ஒரு கோயிலில் சென்னையில் இருந்து இவர்கள் ஐந்து பேர்கள் தாய், அண்ணன், அண்ணி, எம்.ஜி.ஆர் பிறகு குடும்ப நண்பர் நாராயணன் அவர்களும் எம்.ஜி.ஆருக்குக் கல்யாணம் செய்து வைக்க கேரளா போகிறார்கள். கல்யாணம் முடிந்து சென்னைக்கு பெண் வீட்டாருடன் எல்லோரும் வருகிறார்கள். இதை அறிந்த தெருவில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் எல்லோரும் வந்து பெண் மாப்பிள்ளை எல்லோருக்கும் வரவேற்பு கொடுத்து வாழ்த்தினார்கள்.
 
இதற்கு இடையில் சத்திய தாய் அவர்கள் மிக சாமார்த்தியமாய், புத்திசாலித்தனமாக மிக வேகமாக இந்த ஏரியாவே விட்டு காலி செய்து விட்டு யானைகவுனியிலிருந்து தென் சென்னை அடையாருக்கு ஒரு சுமாரான வீட்டை பார்த்து மூத்த மகன் எம்.ஜி.சி. மூலமாக வைத்து இருந்தார்தள். உடனே நல்ல நாள் பார்த்து அடையாறு வீட்டுக்கு குடியோய்விட்டார்கள். சுமார் 10 ஆண்டு காலமாக வால்டாக்ஸ் பகுதியிலேயே இவர்கள் குடி இருந்த தெருவில் இருந்த அத்தனை பேர்களையும் விட்டு பிரிய மனம் இல்லாமல் சென்றது ஒரு பெரிய விஷயமாகும். (இது ஒரு சுருக்கம்)
 
இப்படி ஒரு சுருக்கத்திற்கு ஒரு அர்த்தம் தருகிறேன். முடிவில் இது நாள் வரையிலும் சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து ஸ்டூடியோவுக்குபோய் வந்து கொண்டு இருந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.சிக்கும் இப்போ அடையாரிலிருந்து ஒரு புது இடம் அடையாரிலிருந்து ஸ்டுயோவுக்கு போய் வர இவர்கள் இருவருக்கும் இது ஒரு புதிய வழியாகவும், புரியாத ஒரு விஷயமாக தோன்றியது. எது எப்படி இருந்தாலும் தினம் குடும்ப செலவுக்கு வீட்டு வாடகைக்கும் அண்ணன் குழந்தைகள் மற்றும் இதர செலவுகளுக்கும் மாத வருமானத்தை பற்றி எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சியும் யோசித்தார்கள். இதுவரையிலும் தொழிலுக்கான எடுத்த முயற்சியை விட இனிமேல் சற்று கடுமையாக உழைத்து ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு மன உறுதியோடு தன் மனைவியையும், தாயையும் உடன்பிறந்த அண்ணன் மனைவி மக்களையும் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தன் உழைப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் தீவிர முயற்சி எடுத்து கொண்டார்கள். தன் உழைப்பு அண்ணனுடைய உழைப்பு இதை தவிர தன் குடும்பத்திற்கு வேறு யாரும் உதவி செய்கின்ற நிலைமையில் இல்லை. பொதுவாக திருமணம் ஆன பிறகு பெண் வீட்டார் வழியிலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டும் அல்லது பையன் வீட்டார் வழியிலிருந்து பெண் வீட்டாருக்கு உதவி கிடைக்க வேண்டும். இது இரண்டும் சரியில்லை என்றால் அந்த குடும்பம் எப்படி இருக்கும்? ஆனால் இவர்கள் இரு வீட்டிலும் ஏழைகள். ஒருவருக்கு ஒருவர் பொருள் உதவி பணம் உதவி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.
 
இதை எல்லாம் யோசிக்காமல் தன் மகன்களுக்கு தன்னுடைய சொந்த ஊரிலேயே பெண் பார்த்து கல்யாணம் செய்து விட்டார். இதை எல்லாம் சிந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் மனம் எப்படி இருந்து இருக்கும். இதோடு இன்னொரு விஷயமும் சொல்கிறேன் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிந்தனையில் கல்யாணம் செய்த உடனேயே சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து வடசென்னை பகுதியிலிருந்து தென் சென்னை பகுதிக்கு ஏன் வீடு மாற்ற வேண்டும் என்ன இதற்கு காரணம் என்று யோசிக்கிறார். இதற்கு ஒரு முடிவு கிடைக்காமல் தன் அண்ணியிடம் ஒரு நாள் தனியாக இந்த விஷயத்தை சொல்லி கேட்கிறார். அம்மா எதுவுமே காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். இதற்கு என்ன காரணம் தயவு செய்து சொல்லுங்கள் என்று கேட்ட உடனேயே தன் கொழந்தனாருடைய பரிதாப நிலையை கேட்டவுடன் அந்த அம்மாவால் தன் மனதிற்குள் மறைத்து வைத்து உள்ள ஒரு முக்கியமான விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் தம்பி நான் இப்போ சொல்லுகிறேன். இந்த விஷயம் யாருக்கும் நான் சொன்னேன் என்று தெரிய கூடாது. நான் உங்களிடம் சொல்லுகின்ற விஷயம் யாருக்குமே தெரிய கூடாது. உங்கள் மனதிற்குள் இருக்கவேண்டும். தம்பி நம்ம வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும்போது நம்ம வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்து அந்த பெண்ணின் பெயரை சொல்லி நம் வீட்டு வாசலுக்கு தினமும் காலையில் தண்ணீர் பிடிக்க வருவாள். அந்த பெண்ணை நீங்கள் காதல் செய்வதாக நினைத்து அத்தை அவர்கள் உங்களுக்கு உடனே கல்யாணம் செய்யவேண்டும் சொந்த ஊரிலேயே, சொந்தத்திலேயே கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று நினைத்து உங்களுக்கு கல்யாணத்தை செய்தார்கள். அதனால் எடுத்த முடிவுகள் தான் இது எல்லாம். தம்பி அம்மா மேலே வைத்து இருக்கிற அன்பும், பாசமும் தான் இதற்கு காரணம். எனவே, நடந்தது எல்லாவற்றையும் மறந்து நம் குடும்பம் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டிய வளர்ச்சியும் முழுபொறுப்பும் உங்களிடம் தான் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் முயற்சியை கைவிடாமல் மனம் தளராமல், எந்த குறைபாடுகளும் இல்லாமல் உங்கள் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாம் எவ்வளவு பேர்கள் இருந்தாலும், பேசினாலும் தன் கணவர் வந்து தன்னிடம் பேசினால்தான் அவளுக்கு ஒருமன நிம்மதி கிடைக்கும் தங்கை பார்க்கவியை மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் இதைகேட்ட எம்.ஜி.ஆர் உடனே வெளியே சென்று நடமாடுவது போல் இவைகளை எல்லாம் யோசித்தார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 03:04:10 AM
17.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார்



யோசித்து இனிமேல் அவர் எப்படி இந்த குடும்பத்தை நடத்தி செல்லவேண்டும் என்று அடுத்த நாளில் இருந்த எந்த விதமான குடும்ப சிந்தனையும் இல்லாமல் ஒரு புதுமனிதன் போல் வெளியே தன் தொழிலுக்காக செல்கிறார். காலையில் எழுந்து எப்போதும் போல் காலை 5 மணிக்கு எழுந்து தன் காலை கடன்களை முடித்து கொண்டு வெளியில் செல்லும் போது தன் மனைவியை அவர்களுடைய அறையில் செல்லமாக மனைவியின் கன்னத்தை கிள்ளிவிட்டு அடுத்து ஒரு பொன் சிரிப்போடு சிரித்து விடைபெற்று அடுத்து அம்மாவுடைய ஆசிரிவாதத்தோடு வெளியே செல்லும் பழக்கத்தை வைத்து கொண்டார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது ஒருவருடம் ஆகிவிட்டதா என்று யோசித்து காலங்கள் இவ்வளவு வேகமாக போகிறதே அம்மா என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்று மகனே உன் மனைவியை அழைத்து கொண்டு எங்கேயோவது கோயிலுக்கு சென்று விட்டு வாருங்கள். உடனே மகன் எம்.ஜி.ஆர் எனக்கு எப்போதுமே கோயில், குளம் சினிமா கடைவீதி கடற்கறை அங்கு இங்கு சென்று போய் பழக்கம் உண்டா, அதனாலே நீயே அழைத்துபோய் கோயில், குளம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார்.
 
எந்த படத்தில் எந்த வேஷத்தில் கிடைத்தாலும் நடிப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஒரு நாள் தன் தாய் எம்.ஜி.ஆர் சூட்டிங் முடித்து வீட்டிற்கு வந்த பிறகு சந்தர்ப்பம் பார்த்து மகனே என்று அழைத்து உனக்கு நான் ஒரு சந்தோஷமான செய்தியை சொல்ல போகிறேன். அப்படியா என்னங்கம்மா சொல்லுங்கம்மா என்கிறார் எம்.ஜி.ஆர் மகனே நீ ஒரு குழந்தைக்கு தகப்பனராக ஆகிவிட்டாய் என்று தாய் மிக மன மகிழ்ச்சியோடு சொல்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் எந்த விதமான ஒரு சந்தோஷமும் இல்லை. ஆனாலும் அதை அம்மாவிடம் காட்டி கொள்ளாமல் அம்மா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார். அண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண், ஒரு ஆண் இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் நமக்கும் குழந்தையா என்று நினைத்து வேதனைப்பட்டார்
. என்ன செய்வது, எல்லாம் கடவுள் செயல். உழைப்பில் கவனமாகவும், உறுதியாகவும் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மீண்டும் ஒரு கடுமையான சோதனை ஏற்பட்டது[/b]
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 03:10:52 AM
18.முதல் மனைவி மறைவு


கர்ப்பமாக இருந்த தன் மனைவியை 7வது மாதத்திலேயே ஊருக்கு தாய் வீட்டுக்கு கடிதம் போட்டு தங்கள் மகள் இப்போது 7 மாதமாக இருக்கிறாள். நீங்கள் வந்து முறை பிரகாரமாக அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் தன் மாமியார் வீட்டார் முறைபிரகாரம் செய்ய வேண்டிய முறைகளை செய்து தன் ஊருக்கு தன் மகளை அழைத்து சென்றார்கள். பிறகு ஒரு மாதம் கழித்து மாமனார் வீட்டிலிருந்து சத்திய தாய்க்கு ஒரு கடிதம் வந்தது. உங்களது மருமகள் பார்க்கவி உடல் நலம் சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறாள். தன் கணவரை பார்க்கவேண்டும் கடிதம் போட்டு என் கணவரை உடனடியாக வரசொல்லுங்க என்று சொல்கிறார். எனவே உடனடியா தாங்கள் உங்கள் மகனை அழைத்து கொண்டு வரவேண்டும். இந்த கடிதத்தை பார்த்த சத்திய தாய் தன் மூத்த மருமகளுடன் ஆலோசனை நடத்தி தன் மகன்கள் படபிடிப்புக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே ஊருக்கு புறப்படலாம் என்று முடிவுடன் இருந்தார்கள். அன்று இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த தன் மகன்களிடம் இந்த கடிதத்தை காண்பித்து மகனை என்னுடன் உடனே புறப்படு என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். அவர் படித்து பார்த்து விட்டு அம்மா நாங்கள் தினமும் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து சூட்டிங் போய் கொண்டு இருக்கிறோம். உடனே நீ ஊருக்கு போகவேண்டும் புறப்படு என்றால் எப்படி தொடர்ந்து ஒரே படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு போக வேண்டும். நீ உடனே புறப்படு என்றால் எப்படி இந்த படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிந்து விடும் பிறகு நான் வருகிறேன் என்று உடனே சொல்லி அண்ணே உடனே அம்மாவை ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு வாங்க என்ற சொன்ன உடனே சத்தியதாய் ஏதும் மறுப்பு சொல்ல முடியாமல் புறப்பட்டு விட்டார். கடிதத்தை படித்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது ஒரு பெரிய வேதனையாக இருந்தது.
 
இருந்தாலும் வாழ்க்கையில்தான் எடுத்த லட்சியத்தை மனதில் மிகவும் உறுதியுடன் வைத்து கொண்டார். இங்கு இருந்து பாலக்காடு சென்ற தன் தாய் பாலக்காட்டிலிருந்து 20 மைல் உள்ள மருதூர் என்ற ஒரு சிறிய ஊர் அங்கு செல்லவேண்டும். இங்கிருந்து இரவு 9 மணிக்கு ரயிலில் புறப்பட்டவர், அடுத்த நாள்மதியம் சம்பந்தி வீட்டிற்கு போய்சேருகிறார். அந்த நேரம் தன் மருமகளுக்கு இன்னும் மிக மோசமான நிலையில் வைத்தியர்கள் வைத்தியம் செய்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சத்தியதாயை கண்டவுடன் உங்கள் மகன் வரவில்லையா என்ற ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். உடனே சத்தியதாய் மகன் நாளைக்கு புறப்படுவார் என்று சொல்லிவிட்டு தன் மருமகளை பார்த்து என்ன செய்கிறது உனக்கு என்று ஆவலோடு மருமகள் கன்னத்தை தொட்டு பார்த்து கேட்கிறார். உடனே மருமகள் அறையும், குறையுமாக அந்த பக்கம், இந்த பக்கம் பார்த்து விட்டு ஏக்கத்துடன் தன் கணவர் வரவில்லையா என்று மாமியாரை மீண்டும் பார்த்து கேட்கிறார். உடனே அவர் நாளைக்கு வருவான் என்று ஆறுதல் சொல்கிறார். அதை கேட்டவுடன் மருமகள் தங்கமணியின் முகத்தில் ஆறுதல் இல்லை. பார்கவி என்ற தன் மருமகளுக்கு தங்கமணி என்ற பெயர் எப்படி வந்தது. சத்திய தாய்க்கு பிறந்த குழந்தைகளில் மூத்த மகளின் பெயர் தங்கமணி, அந்த குழந்தை மிகவும் அழகாக இருப்பார். அந்த இளைய மருமகளின் ஜாடை இருந்ததால் தன் மகளின் ஞாபகமாக தங்கமணி என்று வீட்டில் எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள். இப்போ தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வேதனை ஏற்பட்டது. மூன்று நாட்களாக காய்ச்சலில் படுத்து இருந்த தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வலி வந்தது. உடனே வைத்தியரை அழைத்து பார்க்கும்போது சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லி வைத்தியத்தை பார்க்கிறார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த சத்திய தாய்க்கு மிகவும் கவலை அதிகமாகிவிட்டது. இருந்தாலும் சத்தியதாயின் மன தைரியத்தை விடாமல் நடப்பது நடக்கட்டும் என்று எல்லாம் அந்த மகாகாளி கிருபை என்று நினைத்து கொண்டு 5 பிள்ளைகளை பெற்ற இந்த தாய் தன் மருமகளுடைய பிரசவ வேதனையால் துடித்து கொண்டு இருக்கும் தன் இளைய மருமகளின் நிலைமை என்ன ஆகும் என்பதை கூர்மையாக கவனிக்கிறார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வைத்தியருடைய விடா முயற்சியால், குழந்தையை பிறக்க செய்கிறார்கள். ஆனால் குழந்தை உயிருடன் இல்லை. எப்படியோ குழந்தை வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்தது போதும் என்ற நிலை இருந்தது. எல்லோருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டார்கள். அடுத்து தங்கமணியுடைய நிலை எப்படி இருக்கிறது என்று கவனிக்கும் போது முன்பை இருந்ததை விட மிக மோசமாக இருப்பதை வைத்தியர்கள் அறிந்தார்கள். தங்கமணிக்கு மூளை காய்ச்சல் அதிகமாகிவிட்டது. வைத்தியர்களும் தங்கமணி உடைய தாய், தந்தையர்களும், சம்பந்தி அவர்களும் பக்கத்தில் உள்ள கொல்லம் கோடு என்ற ஊரில் மருத்துவமனை இருக்கிறது. 10 மைல் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தார்கள்.
 
இது சத்திய தாயின் தூண்டுதலின் பெயரில் அப்படி இருந்தும் தங்கமணி நாடி துடிப்பு மிக மோசமாக இருப்பதை வைத்தியர் அறிந்தார். இதற்கிடையில் தங்கமணியை அந்தகாலத்தில் கார், டாக்சி இந்த ஊரில் இல்லை. ஆஸ்பத்திரிக்கு மாட்டு வண்டியின் மூலமாக கொண்டு போக ஏற்பாடுகளும் ஆகிவிட்டது. வைத்தியர் சத்திய தாய் அவர்களை தனியாக அழைத்து, இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் என்று சொல்கிறார். இதற்கிடையில் தன் மகன்களுக்கு இந்த செய்தியை எப்படியாவது மிக மோசமாக இருக்கிறாள். உடனடியாக புறப்பட்டு வா, என் தந்தி மூலமாக தெரியபடுத்த வேண்டும் என்று வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாக செய்தார். தந்தி கொடுக்கவேண்டும் என்றால் பாலகாட்டிற்குத் தான் செல்லவேண்டும். சென்னைக்கு தந்தி கொடுக்க சென்றவர் திரும்பி வருவதற்குள் எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனைவி பார்கவி என்ற தங்கமணி இறந்துவிட்டார். அடுத்த நாள் சென்னையில் தந்தியை பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஜி.சியுடன் உடனே புறப்படுகிறார்கள். புறப்பட்டு தங்கமணியுடைய ஊருக்கு வருகிறார்கள். மூன்றாவது நாள் தன் மனைவி தங்கமணி வீட்டிற்கு அண்ணனும் தம்பியும் வருகிறார்கள். தங்கமணி இறந்து போன இரண்டாவது நாள் வருகிறார்கள், தங்கமணி வீடு மிக அமைதியாக இருக்கிறது. எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சியும் பார்த்தவுடன் அங்கு இருந்த அனைவரும் தன் தாயும் சேர்ந்து தன் மகன் எம்.ஜி.ஆரை கட்டி பிடித்து ஓ…. என்று கதறி அழுகிறாள். இதை அறிந்த எம்.ஜி.ஆரும் என் தங்ககுட்டிக்கு என்னவாயிற்று எங்கே என் தங்ககுட்டி என்று உடனே வீட்டிற்குள் செல்கிறார். தங்ககுட்டி இறந்து விட்டாள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவளை கொன்றுவிட்டீர்கள். ஓ! என்று கத்துகிறார். இதை பார்த்த அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் தங்கமணிக்கு வீட்டிக்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். தங்கமணி எப்படி இறந்தார் என்ற விளக்கத்தையும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டு அறிந்த எம்.ஜி.ஆர் மெளனம் அடைந்து வாய் திறந்து பேச முடியாத அளவிற்கு துக்கம் கொண்ட எம்.ஜி.ஆர். யாரிடமும் பேசாமல் மெளனமாக அமர்ந்து விடுகிறார்.
 
சிறிது நேரம் கழித்து தன் மகன் கண்ணீரும், கவலையுமாக அமர்ந்து இருப்பதை பார்த்து தன் மகனிடம் வந்து மகனே, நீ, அழுகாதே என்று ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட மகன் தாயை பார்த்து எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். அதை கேட்காமல் உன் இஷ்டத்திற்கு எனக்கு கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஒரு வருடத்தில் அந்த அன்பு மனைவியை இழந்து என்னை இப்படி ஒரு விதவையாகிவிட்டாயே என்று தாயிடம் உங்களுடைய சமாதானம் தேவையில்லை என்று சொல்கிறார். இந்த வார்த்தைகளை கேட்ட தாய் வாய் அடைத்து போய் விட்டார். இதை பார்த்த எம்.ஜி.சி. அவர்கள் இப்போது தாயிடம் எதுவும் பேச கூடாது என்று மெளனமாக இருந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் அண்ணனை அழைத்து அண்ணே அம்மாகிட்ட செலவுக்கு பணத்தை கொடுத்து எல்லா விஷயத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வர சொல்லுங்கள் நாம இப்போ புறப்படுவோம். தன் மகளை பறிகொடுத்த மாமனாரும் மாமியாரம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்து என்னய்யா வந்தவுடன் புறப்படுகிறீங்க? உடனே எம்.ஜி.ஆர் நான் என் தங்ககுட்டியை கல்யாணம் செய்து கொள்ளும் போது இந்த ஊருக்கு வந்தவன் அதற்கு பிறகு எனது தங்ககுட்டியை இறந்து போன பிறகு வந்து இந்த வீட்டில் இருக்க எனக்கு மனம் இல்லை என்று சொல்லிவிட்டு வாங்க அண்ணே போகலாம் என்று புறப்படுகிறார்கள். சென்னைக்கு வந்த சேரும் வரை எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை. அடுத்த நாள் சென்னைக்கு வந்த பிறகு, வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே படுத்துவிட்டார். இதற்கிடையில் எம்.ஜி.சியுடைய மனைவி தன் கணவருடன் தங்கமணியின் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டு அறிக்கிறார்கள். எம்.ஜி.சி. தன் தம்பி உடைய வாழ்க்கை நிலையை நினைத்து வேதனை பட்டாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற யோசனையில் தானும் வீட்டுக்குள் இருக்காமல் தம்பிக்கு அடுத்து எந்த கம்பெனியில் என்ன சூட்டிங் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தம்பியின் நிலைமைகளை சொல்கிறார். தம்பி இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சூட்டிங் வர முடியும் என்பதை தெரியபடுத்துகிறார். இதற்கிடையில் அண்ணி அவர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து தம்பி நடந்தது நடந்துவிட்டது நீங்கள் கவலைபட்டு கொண்டு வீட்டிற்குள் இருப்பதால் இறந்து போன உங்களுடைய தங்ககுட்டி திரும்ப வரவா போகிறாள், மூன்று நாள் எங்களிடம் யாரிடமும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் இப்படி படுத்து கிடப்பது உங்களுடைய உடம்பு என்னவாகும். நீங்கள் இப்படி படுத்து கிடப்பது, மணியும் ராமும் ஏன் சித்தப்பா சாப்பிடாமல் படுத்து கிடக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
 
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவர்கள் இருவரையும் அழைத்து செல்லமாக கொஞ்சுவீர்களே. அந்த சின்ன சிறு குழந்தைகள் உங்களை நினைத்து உங்களிடம் வருவதற்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து எழுந்து குளித்து வந்து சாப்பிடுங்க, எந்த விஷயத்தையும் எப்படிபட்டதாக இருந்தாலும் கவலைபடாமல் உங்களுடைய முயற்சியே வீண்போகாமல் நடந்து கொள்ள கூடிய நீங்கள் இப்படி படுத்து கொண்டு இருக்கலாமா, உங்களுடைய வெற்றி பாதையை இடையிலேயே விட்டு விடலாமா என்று சொல்லிவிட்டு அவர் அந்த அறையை விட்டு போய்விடுகிறார். இவைகளையெல்லாம் நினைத்து பார்த்த எம்.ஜி.ஆர். எழுந்து அவருடைய பணிகளை தொடங்க முயற்சி செய்கிறார்.
 
ஆனாலும், அவர் அடையாரில் அவர் தங்கி இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று ஒரு உத்திராட்சை கொட்டை வாங்கி கழுத்தில் கட்டி கொண்டு நெற்றியில் விபூதிபட்டை அடித்து கொண்டு, கதர்சட்டை கதர்ஜிப்பா அணிந்து கொண்டு நேராக அவர் நடித்து வரும் பட கம்பெனிகளுக்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆரை மிக ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். ஏற்கனவே எம்.ஜி.சி அவர்கள் சொன்ன தகவலை மனதில் நினைத்து கொண்டு வாங்க எம்.ஜி.ஆர் உங்க அண்ணன் எம்.ஜி.சி அவர்கள் ஏற்கனவே எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். நடப்பது எல்லாம் நம்ம கையிலா இருக்குது எல்லாம் அவன் செயல் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள். இதை கேட்ட எம்.ஜி.ஆர் சற்று சிரித்தமுகத்தோடு அவர்களை பார்த்து கடவுளே நான் ஏற்கனவே இந்த முடிவுக்கு வந்து விட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே, நான் கழுத்தில் உத்திராட்சை கொட்டையும், நெற்றியில் விபூதி பட்டையும் போட்டு இருப்பதை பார்த்து என்னை ஒரு சாமியார் என்று நினைத்து விடாதீர்கள். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ள விரதம் என்று சொல்லி விட்டு மற்ற கம்பெனிகளுக்கும் இவர் செல்லும் இடம் எல்லாம் இதே கேள்வி இதே பதில் எந்த எந்த கம்பெனியில் சூட்டிங் இருக்குது என்று அறிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது தன்னுடைய அண்ணன் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொண்டு வருகிறார். வீட்டிற்குள் நுழையும்போது மணி, ராமு என்று அண்ணன் குழந்தைகளை அழைக்கிறார். சித்தப்பாவின் குரலை கேட்ட அந்த குழந்தைகள் ஓடோ டி வந்த கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் இட்டு கொஞ்சுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்த அண்ணனும், அண்ணியும் கண்ணீர் விடுகிறார்கள். காரணம் எம்.ஜி.ஆர் கழுத்தில் இருக்கும் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் உள்ள விபூதி பட்டையும் அடுத்து எம்.ஜி.ஆர் அவர்கள் எப்போதும் போல் படப்பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்தார். தன் மனைவி ஊருக்கு செல்லும்போது குழந்தையை பெற்று நீ குழந்தையுடன் நீ வரும் போது நான் ஒரு கதாநாயகனாக சினிமாவில் நடித்து கொண்டு இருப்பேன், என்று சொன்னதை நினைத்து பார்க்கிறார். அதன்படி தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியை இன்னம் தீவிர படுத்துகிறார். இந்த முயற்சியில் தான் பிரபல பட தயாரிப்பாளர் ஆன நாராயணன் கம்பெனியாரால் A.S.A. சாமி அவர்கள் டைரக்ஷனில் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய கதை வசனத்தில் உருவாக இருக்கும் “ராஜகுமாரி” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிற்று. ஒரு வருடத்தில் இந்த படபிடிப்பு முடிந்து வெளியே வந்தது. அதே நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவினால் டைரக்ஷன் ஜெமினி வாசன் அவர்களால் பல லட்சக்கணக்கான ரூபாயால் தயாரிக்கப்பட்ட படம் பெயர் “சந்திரலேகா” இதில் நடித்தவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக வேண்டிய நண்பராகிய எம்.கே. ராதா, டி.ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், என்.எஸ்.கே, டி.ஏ. மதுரம் அவர்கள் நடித்த படம் ஓ ஓ என்று ஓடிக்கொண்டு இருக்கும் போது எம்.ஜி.ஆர் நடித்து “ராஜகுமாரி”யும் ஓடிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்னாடி எம்.கே. தியாகராஜபாகவதர், டி.ஆர். ராஜகுமாரி நடித்த படம் “அரிதாஸ்” என்ற இந்த படம் ஒரே தியேட்டரில் மதுரையில் ஒருவருடத்திற்குமேல் ஓடியது. சென்னையில் இதே போல் பி.யு. சின்னப்பா, பி.கண்ணாம்பாள், இருவரும் நடித்த கண்ணகி என்ற சரித்திர படம் இதைவிட பிரமாதமான பெண்களுக்கு உரிய கதை அம்ஸம் கொண்ட படம். இந்த மூன்று படத்துக்கும் இடையிலே புதுமுகமாக நடித்த எம்.ஜி.ஆர். அவர்களின் முதல்படம் நான்காவது இடத்தில் ஓடி கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் இவர்களையெல்லாம் சந்தித்து பேசி கொண்டு வரும் நேரத்தில் என்.எஸ்.கே. அவர்களை சந்திக்கிறார்.
 
அவரிடம் தன் நிலைமைகளை தெரிவிக்கிறார் என்.எஸ்.கே. அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தம்பி நீ எதற்கும் கவலைபடாதே அவசரபடாதே உன் முயற்சியிலிருந்து தவறாதே காலங்கள் கடந்தாலும் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும் காலங்கள் இருக்கிறது. உன்னுடைய அழகுக்கும், திறமைக்கும் வாய்ப்புகள் உன்னை தேடிவரும். முதலில் இந்த வேஷத்தைக் கலைத்துவிடு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்னை வந்து பார்த்து பேசி செல்லு என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
 
அங்கிருந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கேரளாவுக்கு சென்று இருந்த தன் தாய் வீட்டிற்குள் இருப்பதை கண்டார். தன் மகன் வீட்டிற்குள் நுழைந்த உடன் தாய் ஓடோ டி வந்து தன் மகனை பார்த்து, மகனே என்று சொல்லி கட்டி பிடித்து அழுகிறார். மகனே என்னடா வேஷம் என்று சொல்லி கொண்டு அழுகிறாள். மகன் ஒன்றும் சொல்லாமல் தன் ரூமுக்குள் சென்று விட்டார். அடுத்தநாள் காலையில் என்.எஸ்.கே. அவர்கள் சொன்ன அறிவுரைப்படி எப்போதும் போல் ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்து செல்கிறார்.
 
இதை பார்த்த அம்மாவும், அண்ணனும் அண்ணியும் மூவரும் மன சந்தோஷப்படுகிறார்கள். முதல்நாள் இரவு எம்.ஜி.ஆர் கட்டிபிடித்து இது என்ன கோலம் என்று தாய் கட்டி அழுததால்தான் எம்.ஜி.ஆர் உடுத்தியிருந்த உடைகளை கழற்றிவிட்டார் என்று மூவரும் நினைத்து கொள்கிறார்கள். வெளியே சென்ற பிறகு எம்.ஜி.ஆர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் சில படங்களும் ஒப்பந்தம் ஆகிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய முன்னேற்றப் பாதையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறார். உலகில் முதல் யுத்தம் 1938, நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இந்தியாவில் இந்தியாவுக்கும் ஆங்கிலேயர்க்கும் கடும்போர் நடக்கிறது. சென்னையில் ஆங்கிலேயர்கள் குண்டு வீசப்படும் அபாயகட்டத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் கூட எம்.ஜி.ஆர் எதற்கும் அஞ்சாமல் படப்பிடிப்புக்கு போனார். சென்னையைதாக்க வந்த எதிரிகளின் விமானங்களை இந்திய படை விரட்டி அடிக்கின்றது. இந்த மாதிரி ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் சென்னையை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 18 வயது நிரம்பிய வாலிபர்களை கட்டாயமாக ராணுவத்திற்கு அழைத்தார்கள். இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவில் நடிக்க ஸ்டூடியோக்களுக்கும், கம்பெனிகளுக்கும் அலைவதை விட பேசாமல் ராணுவத்தில் சேர்ந்து ஒரு வீரனாகி விடலாம் என்று நினைத்தது உண்டு. பிறகு ஒரு நாள் அம்மாவிடமும், அண்ணனிடமும் இதை பற்றி பேசும் போது அம்மாவும், அண்ணனும் இந்த யோசனை ஏற்றுகொள்ளவில்லை. இதற்கு பதிலாக எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தம்பி நீ குதிரை, ஒட்டகம், கத்தி சண்டை, கம்பு சண்டை, குத்து சண்டை இவைகளை எல்லாம் நீ சரளமாக செய்கிற மாதிரி வரனும், இதோடு கொஞ்சம் ஆங்கிலமும் எழுத படிக்கிற மாதிரி கத்து கொள்ளனும். நீ ஏற்கனவே பல தமிழ் புத்தகங்களை வாங்கி, தமிழ் பேப்பர்களையும் படித்து நல்ல அனுபவசாலியாகி விட்டாய். இப்போ நீ தமிழை சரளமாக எழுதுகிறாய், படிக்கிறாய், நீ எப்படியும் ஒரு பெரிய ஆளாய் ஆகனும், ஆவாய் இனிமேல் இந்த மாதிரி மிலிட்டரி ராணுவம் என்று பேசாதே என்று சொல்லுகிறார். 1942ல் தந்தி பேப்பர் விலை ஒரு அணா, இதை வாங்கி படிக்க தவறுவது இல்லை எம்.ஜி.ஆர். அவர்கள்.
 
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தன் தாய் சொல்லை தட்டாத இவருக்கு அந்த தாய் வழியாக இரண்டாம் கல்யாணம் ஏற்பாடு ஆகிறது. பெண்ணின் பெயர் சதானந்தவதி சுமாரான அழகு, நல்ல அன்புகுணமுள்ளவர், சத்தியதாயுடன் வழி வம்சத்தை சேர்ந்தவர், இந்த பெண் வீட்டார் எம்.ஜி.ஆருக்கு பெண் கொடுக்க முழு சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்கள். இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் எப்படி பேசுவது யார் பேசுவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சக்கரபாணி அவர்களும் அவரது மனைவியும் எம்.ஜி.ஆரிடம் பேச மறத்துவிட்டார்கள். தங்கமணி இறந்து ஒரு வருடம் ஆச்சு மகன் இன்னும் அவளையே நினைத்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு எப்படியும் இந்த திருமணத்தை செய்து வைக்கனும் அவனிடம் நாமே பேசிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஒரு நாள் இந்த விஷயத்தை பற்றி எம்.ஜி.ஆர் அவர்களிடம் தாய் பேசுகிறார். தாய் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் உடனே அம்மா இப்போது தான் நான் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு தேட வேண்டும். நான் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையே எனக்கு கல்யாணம் தான் முக்கியமா, நான் என் வாழ்க்கையில் முன்னேறுவது முக்கியமா, தயவு செய்து இனிமேல் என்னிடம் இந்த கல்யாண பேச்சை பேசாதீர்கள் என்று சற்று கோபத்தோடு பேசியதும் சத்தியதாய் வாய் அடைத்து போய் இருந்துவிட்டார். எப்படி இருந்தாலும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகன்று கொடுக்கும் இந்த விஷயத்தை சத்தியதாய் விடவில்லை கொஞ்சநாள் கழித்து மீண்டும் மீண்டும் தன் மகனுடைய மூடுபொறுத்து இந்த திருமண விஷயத்தை மீண்டும் பேசுகிறார்.
 
எம்.ஜி.ஆருக்கு தன் அன்பு தாயின் வேண்டுதலை உதரிதல்ல முடியவில்லை. தாயிடம் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். வேறுவழி இல்லாமல் இந்த திருமணம் பெண் வீட்டிலேயே நடந்தது இதை சினிமா வட்டாரத்திற்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் தனக்கு வேண்டிய மூத்த நடிகர்களிடம் மட்டும் சொன்னார். முதல் திருமணம் போல் இந்த திருமணத்திற்கும் யாரையும் அழைக்கவில்லை. கேரளாவில் திருமணம் நடந்தது சென்னைக்கு வந்து விட்டார்கள். பிறகு எப்போதும் போல் எம்.ஜி.ஆர். அவர்கள் தினமும் தவறாமல் படப்பிடிப்புக்கு செல்வார். வருடத்திற்கு வருடம், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகியது. சிரமங்கள் இல்லாமல் குடும்பம் நடந்து கொண்டு இருந்தது. சதானந்தவதி அவர்கள் கர்ப்பம் அடைந்தார். குடும்பத்தில் மிகவும் சந்தோச நிலை ஏற்பட்டது. ஆனால் விதி விடவில்லை. சதானந்தவதிக்கும் மூன்றாவது மாதம் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. இதனால் சதானந்தவதி அவர்கள் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிறகு உடல் நலம் குணம்பெற்று சுப வாழ்வுக்குள்ளானார். எம்.ஜி.ஆர் அவர்கள் குடும்ப பொறுப்பை தாயிடமும், அண்ணி இடமும் விட்டு விட்டு அண்ணனும், தம்பியும் முழுக்க, முழுக்க படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய கடும் உழைப்பு வருவாய்க்கு தகுந்தாற் போல் செலவுகள் இருக்கணும். இது போல் கொஞ்சம் வசதியான வீடு பார்க்கனும், இந்த விஷயத்தில் எம்.ஜி.சி. அவர்கள் ரொம்பவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். இதில் சென்னை ராயப்பேட்டை என்ற இடத்தில் நாடக நடிகர்கள் சில சினிமா நடிகர்களும் வசிக்கிறார்கள். இதனால் இந்த ஏரியாவில் ஒரு நல்ல வீடு பார்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொன்னார் நல்லவர்கள் மனதிற்கு நல்லதே நடக்கும் என்றது போல ராயப்பேட்டை லாயஸ்ரோட்டில் ஒரு வீடு அமைந்தது வீடு பழையதாக இருந்தாலும் சற்று பெரிய வீடு எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் சத்தியதாய்க்கும் மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் வாடகை சற்று அதிகம் என்ன செய்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது. சரி நாம் மற்ற செலவுகளை எல்லாம் குறைத்து கொள்வோம் எப்படியும் இந்த வீட்டை அமைத்து விடுங்கள் என்று சத்தியதாய் சொல்லின்படி அந்த வீட்டை வாடகைக்கு அமைத்து குடியும் வந்து விட்டார்கள். இந்த வீடு ஏற்கனவே குடி இருந்த வால்டாக்ஸ்ரோடு, அடையாறு வீட்டை விட நல்ல வசதியாக இருந்ததோ இல்லையோ பெரியவர் எம்.ஜி.சி அவர்களுடைய குழந்தைகளுக்கு மிக மிக வசதியாக இருந்தது.
 
இந்த வீட்டின் வசதியை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் எம்.ஜி.சிக்கு ஏதோ ஒரு அளவுக்கு முன்னேறி வருகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த வீட்டிற்கு குடி வந்த பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னை விட சூட்டிங்கில் பிசியாக இருந்தார். அவர் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு அவரிடம் எந்த விதமான குடும்ப பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது. அவரும் சாமியார்போல் இருக்காமல் தான் சினிமாவில் வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுவார். முன்பெல்லாம் மகன்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பணத்தை சுருக்கு பையில் போட்டு மடியில் சொருகி வைத்து கொள்ளும் காலம் போய் இப்போ காட்ரேஜ் பிரோவில் வைத்து அந்த பீரோவின் சாவியை தான் தன் இடுப்பில் சொருகி வைத்து இருப்பதை பார்த்த மகன்கள் ஆனந்தமடைந்தார்கள். குடும்பம் ஓர் அளவிற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் சமயத்தில் 1949ல் மீண்டும் சதானந்தவதிக்கு கர்ப்பம் உண்டாகி பிறகு அது முன்போல் கருசிதையு ஏற்பட்டு உடல்நலம் சரி இல்லாமல் படுக்கையில் கிடந்து விட்டார். இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தன் மனைவி சதானந்தவதிக்கு உடலில் ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. அது என்ன வியாதி என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். இதற்காக சில டாக்டர்களை எம்.ஜி.ஆர் அவர்கள் நேரில் சென்று அனுகினார் அதன்படி சதானந்தவதிக்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் எம்.ஜி.ஆரிடம் வியாதியின் விபரத்தை சொன்னார்கள். இருதய நோய் மற்றும் கர்பப்பையில் கோளாறு இப்படி பல விஷயங்களை எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னார்கள். சதானந்தவதி அவர்கள் இனிமேல் எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. தனக்கு இந்த மாதிரி சோதனைகள் ஏற்பட்டால் எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் மனத்திடத்தையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு மேலும் சற்று வேகமாக சினிமா வட்டாரத்தில் வீர நடை போட ஆரம்பித்தார்.
 
இவர் வீர நடை நடந்தாலும் வீட்டில் தன் மனைவி, தாய், அண்ணன், அண்ணி மிகவும் சோர்ந்து விட்டார்கள். தன்னுடைய இளைய செல்லமகனுக்கு வாழ்க்கையில் இப்படி கடுமையான சோதனைகள் ஏற்படுகிறதே என்று ஆண்டவனையும் அந்த அம்மனையும் நினைத்து வேதனை பட ஆரம்பித்து விட்டார்கள். தன் மகனுடைய சம்மதம் இல்லாமல் அவனுக்கு கல்யாணம் செய்தது ஒன்றுக்கு இரண்டும் சரியாக அமையவில்லையே இதற்கு காரணம் என்னவாக இருக்கும். மகனுடைய இல்லற வாழ்க்கையை நாம் கெடுத்து விட்டோ மோ இப்படி சத்தியதாய் பலவாறு தன் மனதை குழப்பி கொண்டே இருந்தார்.
 
இந்த சமயத்தில் வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு தனியாக சென்று அந்த கோயில் பூசாரியிடம் தன்னுடைய இளைய மகனுக்கு இல்லற வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி விவரமாக சொன்னார். அந்த காளி கோயில் பூசாரி இவைகளை எல்லாம் கேட்டுவிட்டு அம்மா நீங்க அடுத்த வெள்ளிக்கிழமை வாருங்கள். விபரம் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன்படி அடுத்த வெள்ளிக்கிழமை அன்று அந்த கோயிலுக்கு சென்று பூசாரியை பார்த்து விபரம் கேட்டார். பூசாரி சொன்ன பதில் அம்மா உங்கள் இளைய மகனுக்கு 27 வயது வரை இல்லற வாழ்க்கை அதாவது திருமணம் பாக்கியம் இல்லை.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 03:51:23 AM
19.இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார்


இதை அறியாமல் நீங்கள் அவனுக்கு உங்கள் இஷ்டப்படி திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள். அது உங்கள் தவறு. இப்போ இரண்டாவது திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணும் இறந்து விடுவாள். எனவே இனிமேலாவது அம்மா அவனுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிடாதீர்கள். எந்த விஷயத்தையும் உங்கள் மகன் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். இதைகேட்ட சத்தியதாய்க்கு தான் மிக பெரிய தவறு செய்து விட்டோ ம் என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளே வைத்து கொண்டார். பிறகு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் கிடக்கும் சதானந்தவதிக்கு தினமும் வீட்டிற்கு வந்து நோயை பார்த்து கவனித்துச்செல்லும்படி ஒரு நல்ல டாக்டரை அமைத்தார் எம்.ஜி.ஆர் அவர் தன் தன்னுடைய குடும்ப டாக்டர் B.R. சுப்பிரமணி (BRS) இவர் நிரந்தரமாக எம்.ஜி.ஆர் குடும்ப டாக்டராகிவிட்டார். 1950 முதல் 1976 வரை அவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. எம்.ஜி.ஆர் என்ற பெயருடன் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்ற பெயர்களும் மக்களால் சூட்டப்பட்டது.
 
இவருடைய மூத்த நடிகர்கள் ஆசான்கள், பாராட்டும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வந்தார். இதற்கு இடையில் தற்போது குடி இருக்கும் வீட்டை நமக்கு சொந்தமாக வாங்கனும் இதைபற்றி வீட்டுக்காரரிடம் பேசுங்கள் என்று எம்.ஜி.சி. அவர்களிடமும் தன் தாயாரிடமும் சொன்னார். அதன்படி அவர்களும் அதை பற்றி மிகவும் முயற்சி எடுத்துமிக குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இந்த விஷயத்தை தன் அண்ணனிடம் சொல்லி மகனே நீ போய் வீட்டு ஓனரைப் பார்த்து பேசினால் இந்த வீடு நமக்கு சொந்தமாகி விடும். அதன்படி எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் சூட்டிங் இல்லாத நாள் அன்று வீட்டுக்காரர் வீட்டிற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சென்றார். அங்கு அந்த நேரம் வீட்டில் வீட்டுக்காரரும் இருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை அவரிடம் நான் தான் எம்.ஜி.ஆர் தங்களிடம் ஒரு 5 நிமிடம் பேசனும் அடியேனுக்கு அனுமதி கிடைக்குமா என்றார். உடனே அவர் வாங்க, வாங்க 5 நிமிடம் என்ன 10 நிமிடமே பேசலாமே என்ன விஷயம் சொல்லுங்க எம்.ஜி.ஆர் அய்யா நான் பேசப்போவதை கேட்டு கோபப்படக்கூடாது (தவறாக நினைத்து) நாங்கள் குடி இருக்கும் தங்களுடைய வீட்டை விற்க போவதாக கேள்விபட்டோ ம். அப்படி அந்த வீட்டை விற்பதாக இருந்தால் அதை எங்களுக்கே விலைக்கு கொடுத்து உதவுங்கள் என்று மிக பணிவோடு கேட்டார். வீட்டுக்காரர் சற்று யோசனை செய்து விட்டு அதை நான் இப்போதைக்கு விற்பதாக இல்லை என்று அவர் சொன்னதும் உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் ரொம்ப நல்லது. வணக்கம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அம்மாவும், அண்ணனும் மிக ஆவலோடு விவரத்தை கேட்டார்கள். எம்.ஜி.ஆர் விவரத்தை சொன்னார். கடவுள் செயல் நமக்கு இந்த வீடு கிடைக்கனும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும். அது போல் அந்த வீடு இவங்களுக்கே கிடைத்தது குறைந்த விலைக்கு நிறைந்த மனதோடு அந்த வீட்டுக்காரர் அட்வகேட் ஐயர் பெயர் ராமன் நல்ல குணமுள்ளவர். இந்தவீடு தான் எம்.ஜி.ஆர் அவர்களுடைய கடும் உழைப்பால் பெரும் முயற்சியால் முதல் முதலாக சொந்தமாக வாங்கப்பட்ட சொத்து.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 27, 2012, 03:55:05 AM
20.முதன் முதலில் சொந்தமாக வீடு


அந்த வீடுசற்று சிறியதாக இருந்தாலும் வீட்டிற்கும் முன்னும் பின்னும் காலி இடம் இருந்தது. சென்னை நகரில் ராயப்பேட்டை என்பது ஒரு முக்கியமான இடம். மேலும் இந்த வீடு இருக்கும் நல்ல பெரிய ரோடு பெயர் லாயட்ஸ்சாலை இப்போ அவ்வை சண்முகம் சாலை ஐகிளாஸ் ஏரியா இந்த வீட்டின் கதவு எண் 160 கூட்டு எண் 7 எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 நாளடைவில் அந்த வீட்டில் உள்ள காலி இடங்களில் வசதிக்குத் தகுந்தார் போல் கட்டிடங்கள் கட்டி பழைய கட்டிடத்தை புதுப்பித்து, புதுசையும், பழசையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய வீடாக்கி விட்டார்கள். அந்த வீட்டிற்கு “தாய் வீடு” என்று பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர் பிறகு அந்த வீட்டை ஒரு புதிய வீடாக கட்டியதை அந்த வீட்டை விற்ற அட்வகேட் ராமன் அவர்களிடம் விவரங்களை சொல்லி அந்த வீட்டின் திறப்பு விழாவில் விளக்கேற்றி வைத்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர். அதன்படி அட்வகேட் ராமன் அவர்களும் வந்து விளக்கேற்றி வைத்து ஆசிர்வாதம் செய்தார். இதை போல் இன்னும் பல சொத்துக்களை வாங்கிநல்ல பெயரும் புகழுமாக வாழவேண்டும் எம்.ஜி.ஆரை பார்த்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த அட்வகேட் காலை தொட்டு வணங்கினார். அவர் எம்.ஜி.ஆரை தூக்கி தோள்பட்டை தட்டி கொடுத்து வாழ்த்தினார். அவருக்கு அப்போது வயது 60க்கு மேல் இருக்கும். ஒரு வக்கீல் அதிலும் பிராமின் இவர் நம்ம குடும்பத்தில் இவ்வளவு அன்பு பாசம் வைத்து இருக்கிறாதே மகன்களே இவரை என்றும் மறக்கக்கூடாது என்று சத்தியதாய் மிக உணர்ச்சி வசத்தோடு மகன்களிடம் சொன்னார். வருடத்திற்கு வருடம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் அதிகமாக புக்கானது இவர் நடித்த படங்கள் நல்ல வருமானத்தை பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.
 
1950க்கு மேல் இவருடைய வீட்டிற்கு முன் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க காலையிலும் மாலையிலும் ரசிகர்கள் கூட்டமாக வீட்டுக்கு வெளியே ரோட்டில் நின்று கொண்டு இருப்பார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் சூட்டிங்குக்கு போகும் போதும் திரும்பி வீட்டிற்கு வரும் போதெல்லாம் ரசிகர்களை பார்க்காமல் போவதில்லை. இதை கண்ட சத்தியதாய் மிகவும் பெருமை அடைந்தார். இந்த நிலை மாதம் வருடம் என்ற முறையில் தமிழ்நாடு எங்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். பிறகு 1954க்கு மேல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் பெருகிவந்தது. இவர் D.M.K.யில் சேர்ந்த பிறகு சென்னையில் நடிகர்கள் என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ஆர், வளையாபதி, முத்து கிருஷ்ணன் இன்னும் சிலர் ஒரு கூட்டாக அமைந்தார்கள். சிவாஜி, டி.ஆர். மகாலிங்கம் இவர்கள் தனி இவர்கள் வளர, வளர சினிமாவில் இவர்களுக்கு முன் மூத்த கதாநாயகர்கள் கொன்னப்பா, தியாகராஜ, பாகவதர், பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இன்னும் சிலர்கள் இவர்கள் எல்லாம் சினிமாவில் இருந்து விலக ஒருசந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டது. இதை நான் சுருக்கமாக எழுதி உள்ளேன்.
 
1960ல் இருந்து 1976 வரை தமிழக மக்களின் இதயங்களிலும், அகில உலக தமிழ் மக்கள் இதயங்களிலும் கொடி கட்டி பறந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சினிமா வாழ்க்கையை சற்று சுருக்கமாக முடித்து கொண்டு அடுத்து அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி பார்ப்போம். எம்.ஜி.ஆர். அவர்கள் 1937ல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் காந்தியுடைய இயக்கத்தில் இணைந்து வெள்ளையனே வெளியேறு, வந்தே மாதரம் மகாத்மாகாந்திக்கு ஜே என்று சொல்லியவர்களில் ஒருவர் மக்கள் திலகமும் ஒருவர். இவருக்கு நாடக கம்பெனி முதலாளிகள் எல்லாமே காந்தி இயக்கம் இதைபோல் சினிமாவுக்கு வந்த பிறகு இங்கேயும் காந்தி இயக்கம். இதில் காந்தி அடிகள் அகிம்சை போராட்டம் செய்பவர். அகிம்சை முறை பிடிக்காமல் சுபாஷ் சந்திரபோஸ் விலகி வீரபோர் என்ற பெயரில் ஒரு அமைப்பை வீர சுபாஷ் போஸ் கொண்டு வந்தார். இந்த இயக்கத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தார்கள் இதில் மக்கள் திலகமும் ஒருவர்.
 
1947ல் இந்தியாவை காங்கிரஸ் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. 1948ல் இருந்து எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காமராசர் சிஷ்யனாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1953ல் கலைஞர் கருணாநிதி, டி.வி. நாராயணசாமி இவர்களுடைய தூண்டுதலில் அண்ணா அவர்களுடைய சிஷ்யன் ஆனார். பிறகு எம்.ஜி.ஆர். அவர்களுடைய புரட்சிகரமான அரசியல் வாழ்க்கையை பற்றி தமிழ் மக்களும், அகில உலக தமிழர்களும் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அரசியல் திறமையை பற்றி எல்லோருக்கும் அறிந்த விஷயமே. எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே. இந்த 10 ஆண்டு கால கட்டத்தில் தமிழக மக்களுக்கு எப்படி ஒழுங்கு முறையாக ஆட்சி நடத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முப்பிறவி எடுத்தவர், மூன்று முறை அரசு ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்தவர், மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று துறைகளில் புகழ் பெற்றவ்ர, சினிமா, அரசியல், அரசாட்சி இதோடு அவருடைய சொந்த வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இதில் முப்பிறவி எடுத்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவைகள் அனைத்தும் தமிழக மக்கள் நன்கு அறிந்ததே.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 08:36:31 PM
21.வி.என். ஜானகி அம்மா வரலாறு


வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள். வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பக்கா பிராமின் வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் K. சுப்பிரமணி, நடிகை S.D. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் K. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்த படம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் ௾ல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள்.
 
இதற்கு இடையில் எம்.ஜி.ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை. என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்த பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்த பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழமுடிந்தது.
 
பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும், தயவு செய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக ௾ருப்போம் தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மிக விளக்கமாக சொன்னார். இருந்தாலும் தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். வி.என். ஜானகி அவர்கள் பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறு பக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிபட்ட இவருக்கு வி.என். ஜானகி அம்மா விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம். இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதை பற்றி பேசி விடலாம் என்ற எண்ணத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானிகி அவர்களைப் பற்றி முழுவிவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையை பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்த சதானந்தவதி அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
 
இதை பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேச கூட மாட்டேன். கவலைபடாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூடநான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல் அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார். இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.சி. அவர்களிடமும் இந்த விஷயத்தை பற்றி பேசினார். இந்த செய்தியைக்கேட்ட இந்த இருவருக்கும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி.சி அவர்களிடமும் தன் கணவர்விருப்பப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக்கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம்பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்த வித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் அவரிடம் நீங்களே உங்களுடைய சம்மத்தை சொல்லுங்கள். அவர் மனம் புன்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையை பிடித்து கண்ணீர் விட்டார். இந்து அகராதிப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளபோகிறேன் என்று சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ 2வது பெண்டாட்டி வைத்து கொள்ள நல்லமனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.
 
ஆனால் சதானந்தவதி அவர்கள் தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும். நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சி. அவர்களும் எந்த வித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகி அவர்களை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி அவர்கள் சதானந்தவதி அவர்களுடைய காலை தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி அவர்கள் வி.என். ஜானகி அவர்களுடைய கையைப்பிடித்து கொண்டு நான் இருக்கிறேன் கவலைபடாதே என்றார்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 08:37:32 PM
22.ஜானகி அம்மையாரின் சபதம்


அன்று மதியம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். கல்யாணத்திற்கு பிறகு, வி.என். ஜானகி அவர்கள் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை நான் உங்கள் மனைவி, வீட்டோ ட இருந்து விடுகிறேன் என்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சபதம் எடுத்து கொண்ட வி.என். ஜானகி அவர்கள் கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்த காலங்கள் 40 ஆண்டுகள். 1957 முதல் 1987 வரை. பிறகு, 1958ல் சத்தியதாய் இறந்துவிட்டார். எம்.ஜி.ஆர். அவர்களும் வி.என். ஜானகி அவர்களும் தினமும் தாய் வீட்டிற்கு வந்து சதானந்தவதி அவர்களின் உடல் நலத்தைப் பார்த்து செல்வார்கள். இந்த கால கட்டத்தில் “எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்” என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அவர்கள் சொந்தமாக “நாடோ டி மன்னன்” என்ற பெயர் வைத்து பிரமாண்டமான முறையில் ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தை அவரே டைரக்ட் செய்தார். படம் சூட்டிங் முடிந்து வெளியிடப்பட்டது அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு முன் “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் சில நாடகங்கள் சொந்தமாக நடத்தினார். திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடைய லட்சியமும் சத்தியதாயுடைய தெய்வ வேண்டுதலும் வீண் போகாமல் கொஞ்சம் நிறைவேறியது.
 
தன்னுடைய கடும் உழைப்பும் தன் அண்ணனுடைய உழைப்பும் தாயுடைய சிக்கன செலவும், அதாவது சிக்கனம் முக்கியம். சேமிப்பு அவசியம் என்ற சொல்படி எல்லாமே வெற்றிகரமாக நடந்தது. சொந்தத்தில் வீடு சொந்தத்தில் கார், சொந்தத்தில் நாடக கம்பெனி, சொந்தத்தில் ஸ்டூடியோ, சொந்தத்தில் சினிமா படம் தயாரிப்பு, சொந்ததில் கல்யாண மண்டபம், சொந்தத்தில் ஒரு சிறிய மார்க்கெட், சொந்தத்தில் ஸ்கூல், சென்னை நகருக்கு வெளியே ஒரு தோட்டத்தில் ஒரு சிறிய பங்களா, ஆடு, மாடு, கோழி, குருவிகள், பழமரங்கள், பண்ணையில் வேலை செய்ய பலவேலை ஆட்கள் உணவு உன்னும் நேரத்தில் தன்னை காண வீட்டுக்கு வந்து இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு தனக்கு வேண்டிய அளவிற்கு சம்பாத்தியம் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்படி வாழனும் என்று நினைத்தாரோ அதே போல் வாழ்ந்தார், நினைத்ததை முடித்தவர். மக்கள் திலகம் தன் தாயுடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய மகன் எம்.ஜி.ஆர். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். திரு. மக்கள் திலகம் அவர்களுக்கு தாய்க்குப் பின் தாரம் இந்த சொல் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமாய் இருந்தது. நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த சதானந்தவதி 1962ல் இறந்து போனார். பிறகு, இரண்டு மாதம் கழித்து சென்னை நகருக்கு வெளியே ராமாபுரம் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு தன்னுடைய மூன்றாவது மனைவி வி.என். ஜானகியுடன் சென்று வாழ்ந்தார்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 08:38:28 PM
23.தாய்க்குக் கோயில்



ராமாபுரம் தோட்டத்தில் தன் தாய்க்கு கோயில்கட்டினார். மக்கள்திலகம் வெளியே போகும் போது தினம்தோறும் தன் தாயை வணங்கிவிட்டு தான்செல்வார்.
 இதே போல், ராயபேட்டையில் தன் தாய் வீட்டிலும் ஒரு பெரிய தாயின் படம், “சத்யா ஸ்டூடியோ”விலும் அவருடைய அலுவலகத்திலும் தாயின் படம் மாம்பலம் அலுவலகத்திலும் தாயின் படம். தாயே தெய்வம் என்று தினந்தோறும் பூஜித்து வந்தார் மக்கள் திலகம். மக்கள் சேவையே என் சேவை. நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.
 
தன் தாய் இறந்த பிறகு தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை தாயாக நினைத்து எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து பேசாமல் செய்ய மாட்டார். இதில் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பியும் சொந்தத்தில் ஆரம்பித்த நாடக கம்பெனிக்கும் சினிமா கம்பெனிக்கும், முழு பொறுப்பையும் தன் அண்ணணிடமே கொடுத்து இருந்தார். அவருக்கு துணையாக இருந்து எல்லா பொறுப்புகளையும் கணக்கு, வழக்குகளையும் கவனிக்கும்படி ஆர். எம். வீரப்பன் அவர்களை நியமித்தார். தான் முதல் அமைச்சராக ஆன பிறகும் கூட தன் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து கொண்டே இருந்தார். இதே போல் சக்கரபாணி அவர்களும் தன் உடன் பிறந்த தம்பி மனம் நோகாமல் நடந்து கொள்வார். தம்பி தன்னிடம் பேசும்போதெல்லாம் மிக கவனமாக தம்பிக்கு ஏற்றமாதிரி பதில்களை சொல்வார். திரு. சக்கரபாணி அவர்கள் தன்னுடன் பிறந்த மூத்தவர்கள் சகோதரிகளையும், சகோதரனையும், தன் தந்தையுடைய புகழ்களையும் தன் தாய் அவர்களுக்கு பிறகு தன்னையும் தன் உடன் பிறந்த தம்பியையும், வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைக்காத நேரமும்இல்லை. இதை பற்றி தனக்கு வேண்டிய முக்கியஸ்தர்களிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. தன்னையும் மனைவி மக்களையும் எந்த குறைகளும் இல்லாமல் எனது தம்பி ராமச்சந்திரன் பார்த்து கொள்கிறான் என்ற பெருமையை வெளியே பேசாமலும் இருப்பதும் இல்லை. தன் தம்பி ராமச்சந்திரன் சிறுபிள்ளையாக இருக்கும் போது ரொம்பவும் சுறுசுறுப்பாகவும், சட்டித்தனமாகவும் இருப்பான். அவன் செய்யும் குறும்புகளை அம்மா ஒருவரால் தான் அவனை அடக்க முடியும். அப்படிப்பட்ட என் தம்பியுடன் நாடகம், சினிமா, அரசியல், இப்படி அவனுடன் நான் சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் பிரபலமாக வாழ்கின்ற இந்த காலத்தில் பெரிய சாது போலவும், ஞானிகள் போலவும் பெரும் அரசியல் தலைவர் போலவும் அவன் பேசுவதும் அவன் நடந்து கொள்ளும் விதமும் ஒரு பெரிய உயர்ந்த மாமனிதனாக ஆகிவிட்டான் என்பதை நினைத்து பூரிப்பு அடைகிறேன்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 08:58:03 PM
24.1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்



மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
 1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
 2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
 3. கம்பெனி முதலாளி
 4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.
 
எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 09:00:46 PM
25.கலைஞர்களை ரசித்த மக்கள் திலகம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Furl5.jpg&hash=4270ab015d7c51c4c74749b46bdec35aacea0a93)
                டி.ஆர்.மகாலிங்கம்



மக்கள் திலகம் அவர்கள் ஒரு முக்கிய நண்பரிடம் சொன்ன விஷயம் எனக்கு டி.ஆர். மகாலிங்கம் அவர்களை பிடிக்கும். அவருடைய கர்நாடக இசையிலிருந்து சினிமா படங்கள் வரை நல்ல உயர்ந்த குரல் வளம் உடையவர். ஒருவர் சொந்த குரலில் பாடுவார். அந்த காலத்தில் சுதி, சுரம், என்று சொல்வார்கள். சுருக்கமாக கட்டை என்றும் இதற்கு ஒரு சொல் உண்டு.
 
இதில் தமிழ்நாட்டிலேயே அந்த காலத்தில் மகாலிங்கம் அவர்கள் 8 கட்டை சுரத்தில் பாடிய ஓரே ஆள் இவர்தான். இம்மாதிரி நான் இன்னும் எவ்வளவோ பெயர்களைப் பற்றி சொல்லுவேன். இப்போ நேரம் இல்லை. இன்னொரு நாளைக்கு பேசலாம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முடித்துகொண்டார்.
 
அதே நபர் சில நாட்கள் கழித்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மீண்டும் சந்திக்கிறார். வந்தவர் எம்.ஜி.ஆர். அவர்களை சார் என்று தான் அழைப்பார். வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் எனக்காக அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும் என்று சொல்லி கொண்டே சார் உங்கள் வாழ்க்கையில் நாடகம், சினிமா, அரசியல் இப்படி மூன்று துறைகளிலும், இடையில் ஏற்பட்ட சிரமங்களையும் சமாளித்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை முயற்சியின் படி எல்லாவற்றிலும் நீங்களே முதல்வராக வெற்றி கொண்டு இருக்கிறீர்கள். இன்று உள்ள அரசியலைப் பற்றிபேசுவதை விட சினிமாவைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை விவரம் கேட்கிறேன்.
 
அதாவது இன்றைய தமிழ் சினிமா உலகத்தில் மக்கள் திலகம், நடிகர் திலகம் இந்த இருவரும் தான் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கும், தங்களுக்கும் போட்டி பொறமை எப்போதாவது ஏற்பட்டது உண்டா? உடனே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பதில் ஒரு அட்டகாசமான சிரிப்பை சிரித்து கொண்டு சார் என் உடன் பிறந்த அண்ணன் சக்கரபாணி அவர்கள் எப்படியோ, அதே போல்தான் சிவாஜியும் தொழிலில் ஒருவருக்கு ஒருவர் அக்கறை கொள்வது தான் முக்கியம் அதற்கு பெயர் போட்டி அல்ல.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 10:39:25 PM
எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் – காவல் தெய்வத்தை கண்முன் நிறுத்தினார்



மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது. இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது. பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த். கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார், அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம்) எடுத்து “வீரன்” என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கிறான், வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள். வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார். கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். மதுரை வீரன் கதை ஏற்கனவே வி.ஏ.செல்லப்பா _ டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939_ல் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. எனினும், எம்.ஜி.ஆர். நடித்த “மதுரைவீரன்” 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன், பட அதிபர் லேனா செட்டியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. உடுமலை நாராயணகவி எழுதிய “பார் கடல் அலை மேலே” என்ற பக்திப் பாடல், இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தார். தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்ட காரணத்தால், இப்பாடல் தன் கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதினார். எனவே, பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். பாடலை விட, பத்மினியின் நடனம் அருமையாக அமைந்திருந்தது. அதை நீக்கிவிட பட அதிபர் லேனா செட்டி யாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடவும் விரும்பவில்லை. எனவே, அவர் ஒரு யுக்தி செய்தார். நடனக்காட்சியை மட்டும் தனியாக வெட்டி எடுத்தார். தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கினார். இடைவேளை முடிந்ததும், தனியாக இந்த நடனக் காட்சியைத் திரையிட்டு, நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தார். “மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 10:52:22 PM
26.மக்கள் திலகம் அவர்கள் சிவாஜி பற்றி சொன்ன தகவல்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Furl4.jpg&hash=7f401843c9c76dd349ee824592375dedfe161a99)


மக்கள் திலகத்தின் அரவனைப்பில் நடிகர் திலகம்

திறமைதான் முக்கியம் இதில் சிவாஜியின் நடிப்பு திறமையை சினிமா உலகத்தில் பாராட்டதவர்கள் இல்லை, நடிப்பில் அவர் பாணி எனக்கு வராது, என்னுடைய பாணி அவருக்கு வராது. எங்கள் இருவருடைய படங்களும் வெளியிலே வெளியிடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் அந்த தியேட்டரை அலங்காரம் செய்வதும், ஆரவாரத்தோடு முதல்நாள் அன்று படத்தை பார்ப்பதும் முக்கியமான விஷயமாக இருக்குமே தவிர, மக்கள்திலகம், நடிகர் திலகம் என்று ரசிகர்களுக்குள் கூட போட்டி இருக்காது எங்கள் இருவருக்கும் தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து வெளிநாடு எங்கும் எங்களுக்கு ரசிகர் மன்றங்கள் உண்டானது.
 
இது சினிமா, சிவாஜி 1953ல் தி.மு.கவிலிருந்து காங்கிரசில் இணைந்தார். நான் தி.மு.கவில் அண்ணா முன்னிலையில் இணைந்தவன். நாங்கள் இருவரும் தமிழ்நாடு அரசியலில் முக்கியஸ்தர்களாக இருந்தோம். அப்போ கூட எங்களுக்குள் போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசி கொண்டதும் இல்லை. சார், உங்களிடம் இதை நான் மிக சுருக்கமாக சொல்லி உள்ளேன் என்று சொன்னவுடன் அவர் சிரமத்துக்கு மன்னிக்கனும் சார் நீங்கள் எவ்வளவோ உயர்ந்த மனிதராக இருக்கிறீர்கள். உங்களுடைய நல்ல பண்பாட்டுக்கு உங்களை யாராலும் வெற்றி பெற முடியாது. வணக்கம் சொல்லி அவர் விடைபெறுகிறார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 10:54:56 PM
27.கலைவாணர் என்.எஸ்.கே.



திரு. என்.எஸ்.கே. அவர்களுடைய இரண்டாவது மனைவி டி.ஏ. மதுரம் அவர்கள் சென்னையில் என்.எஸ்.கே. மறைவுக்கு பிறகு ஒரு காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தன் மனைவி ஜானகி அம்மாள் வழியாக அப்ப அப்ப வேண்டிய உதவிகளை செய்து வந்தார் இறக்கும் வரையில்.
 
அடுத்து, எம்.கே. தியாகராஜ பாகவதர் மறைவுக்கு பிறகு திருச்சியில் உள்ள அவரது குடும்பத்திற்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று உதவி செய்து உள்ளார்.
 
அடுத்து பி.யு. சின்னப்பா அவர்களுடைய குடும்பம் புதுக்கோட்டையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் புதுக்கோட்டைக்குச் சென்று உதவி செய்து உள்ளார். மக்கள்திலகம் அவர்கள் பொதுவாகவே பழைய நடிகர்களுக்கு, தனக்கு உதவி வேண்டும் என்று கேட்டால் உடனே, அவர்களுக்கு தகுந்தாற் போல் பல உதவி செய்வார். ஆனால், அவர்கள் குடி பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது. இது போல கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் மறைந்த பிறகு அவரைப் போலவே நாகர்கோயிலை சேர்ந்தவர் சந்திரபாபு, இவர் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகரானவர், இவர் சொந்த குரலில் பாடி நடிப்பவர், சில படங்களில் மக்கள் திலகத்துடன் கூடசேர்ந்து நடித்து உள்ளார். இவர் பிரபலம் ஆனவர். ஆனால், இவரிடம் குடிபழக்கம் உண்டு. இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் அவரை தன் வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்தார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 10:56:28 PM
28.கவிஞர் கண்ணதானுக்கு உதவி


இதை போல் பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
 
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 10:57:29 PM
29.எம்.ஆர். ராதாவைப் பற்றிய விவரம்



மக்கள் திலகம் அவர்களிடம் உள்ள மனித நேயமும் வள்ளல் குணமும் இவை இரண்டையும் புத்தக வடிவில் எழுதுவது என்றால் ஒரு புத்தகம் போதாது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பலபாகங்களாக எழுத வேண்டும். மக்கள் திகலம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1967, 12ம் தேதி அன்று 2.30 மணிக்கு பிற்பகல் “எம்.ஜி.ஆர் தோட்டம்” ராமாபுரம் மக்கள் திலகம் அவர்கள் வீட்டில் அவரை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று நேரம் கேட்டு வந்த, நடிகர் எம்.ஆர். ராதா அவர்களுடன் ஒரு படதயாரிப்பாளருடன் வந்தார்கள். பேசிக்கொண்டு இருக்கும் போது சற்று விவாதம் ஏற்பட்டு கோபம் கொண்ட, எம்.ஆர். ராதா தீடீர் என்று துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார். இது இந்த விஷயத்தின் சுருக்கம். துப்பாக்கி சூடு காது ஓரம் கழுத்தில் தர்மம் தலையை காத்தது போல் அந்த துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்த குண்டு சக்தி இழந்து பாதியுடன் நின்றுவிட்டது. உடனே தானும் சுட்டுக் கொண்டார் எம்.ஆர். ராதா. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். துப்பாக்கி குண்டோ டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் திலகம் அவர்கள். அதிர்ஷ்ட வசமாக கழுத்தில் இருந்த குண்டை அகற்றி நல்ல முறையில் வைத்தியம் செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். உணர்வு தெளிந்தவுடனேயே மக்கள் திலகம் அவர்கள். அண்ணன் ராதா அவர்களின் நிலைமை என்னாயிற்று என்று தன் படுக்கை அருக்கில் உள்ளவர்களிடம் கேட்டார்.
 
அது சமயம் அங்கு அவருக்கு துணைக்கு இருந்த அவர்கள் எல்லா விஷயத்தையும் சொன்னார்கள். இதை கேட்ட மக்கள் திலகம் அதிர்ச்சி அடைந்து போய் அங்கு உள்ள முக்கியஸ்தர்களையும், டாக்டர்களையும் அழைத்து ராதா அண்ணன் அவர்களுக்கு நல்ல முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டுகொண்டார். அந்த சமயம் தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஒரு பிரபல சினிமா நடிகராகவும், தி.மு.க. வில் கட்சியில் ஒரு உறுப்பினராக சென்றார். அவர் வைத்தியம் முடிந்து வீட்டிற்கு வரும்போது பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக வருகிறார். அதே நேரத்தில் எம்.ஆர். ராதா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்றார். ஜெயிலிலிருந்து விடுதலை ஆகி வரும்போது மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சராக ஆகிவிட்டார். இந்த காலகட்டத்தில் எம்.ஆர். ராதா அவர்கள் நாடகங்களிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ராதா அவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. வேதனையால் வெந்து கொண்டு இருக்கும் ராதா அவர்கள், அவர் குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரிடம் மக்கள் திலகம் அவர்களிடம் உதவிகேட்டு அனுப்புகிறார். உதவி என்றால் பணம் அல்ல மீண்டும் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கும்படி பட முதலாளிகளிடம் சொன்னால் போதும் இந்த தகவலை அவருக்கு வேண்டியர் மக்கள் திலகத்திடம் நேரில் சந்தித்து சொல்கிறார்.
 
இதை கேட்ட மக்கள் திலகம் வந்தவரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவரிடம் பேச தொடங்கினார். அய்யா ராதா அண்ணே ஒரு பெரிய கொலை குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த பிறகு விடுதலையாகி வந்து உள்ள செய்தி இந்தியா முழுவதும் நன்கு தெரிந்த விஷயமே, அவர் கொலை குற்றவாளி. நான், மேலும் ஒரு முதலமைச்சராக இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் நான் எப்படி உதவி செய்ய முடியும், உதவி செய்யலாமா? இதை மற்ற அரசியல்வாதிகளும், பொது மக்களும் நான் ராதா அண்ணனுக்கு உதவி செய்தால் என்ன நினைப்பார்கள். நான் அவருக்கு மேற்கொண்டு எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை என்று சொல்லி அண்ணனுக்கு என் மீது வருத்தம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிடுங்கள் என்றார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 10:59:20 PM
30.மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் பிரமுகர்களுக்கு சொல்லும் அறிவுரைகள்


ஒரு நாள் மக்கள் திலகம் அவர்கள் மாம்பலம் ஆபிசில் மந்திரிசபை அமைத்ததைப்பற்றி பேசியபோது 1980ல் நடந்த எம்.பி. தேர்தலில் (அ.இ.அ.தி.மு.க) நம்ம கட்சி படுதோல்வி அடைந்தது. அதனால், மந்திரிசபையை கலைத்தார்கள். அது சமயம் நாம் மனம் தளராமல் அடுத்து நடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள். ஆக எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும். அவர்கள் நாம் எப்போதும் சந்தித்து கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளீர்களோ அதே போல் தான் நம்மை மந்திரிகளாக இருக்க ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பன் ஆகிவிட்டேன் அதனால்தான்.
 
நான் இப்போ ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும். இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:00:52 PM
31.1975-ல் மக்கள் திலகத்துக்கு வந்த சோதனை காலம்


இப்படிப்பட்ட பாரிவள்ளல் மனதிநேய சிகரத்திற்கு ஒரு சமயம் 1975ல் ஒரு சோதனை ஏற்பட்டது. அதாவது (அப்போது தி.மு.க அரசு) வருமானவரி பாக்கி இவ்வளவு ரூபாய் இருக்கிறது. அதை இவ்வளவு மாசத்திற்குள் கட்ட வேண்டும் என்று மக்கள் திலகம் அவர்களுக்கு வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இதை அறிந்த மக்கள் திலகம் மிகவும் மனம் நொந்து போனார். கடவுளை நினைத்து நான், யாருக்கும் எந்த வித துரோகமும் செய்ததில்லை யாரிடமும் நான் கடன் வாங்கியதும் இல்லை இப்படிப்பட்ட நான் அரசாங்கத்திடம் கடன்காரனாகிவிட்டேனே? இதை பற்றி மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார். பிறகு, இதை பற்றி யாரிடமும் பேசாமல் அவரே ஒரு முடிவுக்கு வந்தார். நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கும் “சத்யா ஸ்டுடியோ”வை விற்று. இந்த அரசு கடனை கட்டிவிடலாம். நாம் சம்பாதித்து வாங்கிய சொத்துதானே, மேலும் இது நமக்கு லாபரமாக இல்லை. அதோடு சில மாதங்களாக ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும் மற்றும் கரண்டுக்கு, டெலிபோனுக்கு நிலத்துவரி, கட்டிடவரி இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் நாம் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த ஸ்டுடியோக்களுக்கு செலவு செய்ய முடியும். எனவே இதைவிற்றுவிடலாம் என்ற முடிவோடு தன்னுடைய உற்ற நண்பர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இந்த விஷயத்தை மிக உருக்கமாக சொன்னார். இதை கேட்ட அவருக்கு உடம்பே புல்லரித்துவிட்டது. அவர் சிறிது நேரத்திற்கு பிறகு சார் இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு உங்களை பொருத்தவரையில் சரிதான். ஆனால், இப்போது உள்ள உங்களுடைய மதிப்புக்கு இது சரிவராது. அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இந்த விஷயத்தை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்க நீங்க சினிமாவிலும், அரசியலிலும் கொடி கட்டி பறக்கிறீங்க இந்த நேரத்தில் யாரோ ஒரு வருமான வரி அதிகாரி உங்களுக்கு வரிபாக்கி இருக்கு அதை, உடனே கட்டவேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டார் என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பது சரி இல்லை. தயவு செய்து எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்கள் பிறகு அதை பற்றி பேசுவோம்.
 
இந்த விஷயத்தைப் நினைத்து கவலைபடாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அந்த பெரிய மனிதர் போய்விட்டார். பிறகு, அவர் வருமானவரி அதிகாரிகளை சந்தித்து எப்படி இவ்வளவு பெரிய தொகை பாக்கி ஏற்பட்டது. உங்களுடைய கணக்கு விவரம், முழுமையாக விபரம் எழுதிகொடுங்க ஏன் இவ்வளவு நாள் கழித்து உங்களுக்கு பாக்கி இருக்கிறது? என்று இப்போ எழுதி உள்ளீர்கள். இதற்கு சரியான பதில் எழுத்து வழியாக அனுப்புங்கள் என்று அவர் சென்னை வருமானவரி உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவர் மீண்டும் மக்கள் திலகத்திடம், சார், இது விஷயமாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி விட்டேன். அதாவது நியாயப்படி ஏன் இவ்வளவு காலதாமதம்? இவ்வளவு ஒரு பெரிய தொகையை கட்ட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளீர்கள் அது தவறு. மீண்டும் கணக்கு பார்த்து சரியான பதிலை அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்து, உள்ளேன். தயவு செய்து நீங்கள் ஸ்டூடியோவை விற்கனும் என்று நினைக்காதீர்கள். கடன் உங்களை விட இன்னும் பெரிய கோடீஸ்வரர் என்று சொல்பவருக்கு கூட இருக்கும். நீங்கள் கடன்காரனாக வாழ கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. இதை கேட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் குறுக்கிட்டு சார், இப்போ இது வெறும் கட்டுகதைதான் என்று நாம் எப்படி சொல்ல முடியும் சார், என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு கடன்காரன் என்ற, சொல்லை கேட்ககூடாது. இதுதான் என்னுடைய லட்சியம், அடுத்து சார் இந்த ஸ்டூடியோவில் இருந்து எந்த வித லாபமும் இல்லை. சமீபகாலமாக ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கம் கரண்டுக்கும், போனுக்கும் நான் என் கையில் இருந்து கொடுத்து வருகிறேன். இப்படி இருந்தால் எப்படி சார் எல்லாவற்றையும் என்னுடைய நடிப்புத் தொழிலில் இருந்துதானே சார் சமாளிக்கனும் சினிமாவைத் தவிர, வேறு எனக்கு என்ன தொழில் இருக்குது. என் உடல் உழைப்பை தவிர, இந்த விஷயம் மக்கள் திலகம் அவர்களுக்கு ஒரு பெரிய சிந்தனையை உருவாகியது. அது தான் 1976ல் “சத்யா ஸ்டூடியோ”வை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக (லீசுக்கு) வாடகைக்கு கொடுத்து சிரமத்தை தீர்த்துக்கொள்ளனும் அல்லது விற்றவிடனும். பிறகு, ஒரு மாதத்தில் எப்படியோ அந்த பெரிய மனிதர் உதவியால் அரசாங்க கடனை தீர்த்தாச்சு. இனிமேல் நாம் மாதாமாதம் கையில் இருந்து ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது பிரச்சனை என்று நினைத்த மக்கள் திலகம் அவர்கள் சத்தியா ஸ்டூடியோவை அங்கு வேலை செய்யும் சக தொழிலாளர்களையும் அழைத்து ஒரு குறிப்பிட்ட வருசத்துக்கு குறைந்த வாடகைக்கு எழுதி கொடுத்துவிட்டு ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பினார் வள்ளல்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:02:01 PM
32.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய முதல் திருமணம்



வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களுடைய முதல் திருமணம் நடந்த நாள் புதன்கிழமை அவருடைய முதல் மனைவி பெயர் “தங்கமணி” என்பதாகும். இவர் பிரசவத்திற்காக ஊருக்கு போனது புதன்கிழமை இவர் வள்ளலையும், உலகத்தையும் விட்டு பிரிந்து சென்றதும் புதன்கிழமை இதை அடிக்கடி சொல்வார். வள்ளல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நாள் செவ்வாய்கிழமை காலை 11.35 மணிக்கு அவருக்கு திருமணம் நடந்தது புதன்கிழமை காலை 10.15க்கு இதை விட முக்கியம் வள்ளல் பிறந்த வருடம் 17.1.1917 ஜனவரி காலை 11.55க்கு பிறந்தவர் அதே செவ்வாய் கிழமை இரவு மரணம் அடைந்தார்.
 
எப்போதுமே வெள்ளிக்கிழமை அவர் அசைவம் சாப்பிடமாட்டார். அதே போல், அவருடைய பொன்மேனியை பூமியில் வெள்ளிக்கிழமை புதைத்தார்கள். அவருடைய புகழையும் தர்மத்தையும், மனித நேயத்தையும் நாடெங்கும் விதைத்து உள்ளார்கள். மக்கள் திலகம் அவர்கள் வருடத்தில் முதல்மாதம் செவ்வாய்கிழமை பிறந்தார். அதேபோல் வருடத்தில் கடைசிமாதம் செவ்வாய்கிழமை இரவு மறைந்துள்ளார். இந்த கடைசி டிசம்பர் மாதத்தில் காலம் சென்ற இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய முழு உருவச்சிலை தமிழக அரசின் சார்பில் சென்னையில் உருவாக்கிய பிரமாண்டமான விழா கோலத்தில், அப்போது உள்ள இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையில் சிலை திறப்பு விழா நடந்தது. இதுவே மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்ட கடைசி விழா ஆகும். விழா நடந்த தேதி 22.12.87 மாலை விழா முடிந்தது. வள்ளல் மறைந்தது 23.12.1987 இரவு. 24.12.1987 காலை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ கட்டிட பல்கலைக்கழகம் திறப்பு விழா அது நடைபெறவில்லை. பிறகு இந்த கட்டிடத்தை 1990ல் அப்போதைய தமிழக முதல் அமைச்சராக இருந்த கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் தலைமையில் மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடந்தது.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:03:44 PM
33.ஆங்கிலோ போலீஸ் அதிகாரியை பார்த்து ஆச்சர்யப்பட்டார் மக்கள் திலகம்.



இது ஒரு மலரும் நினைவாக இருந்தது.
 
மக்கள் திலகம் தமிழக முதல் அமைச்சர் ஆக அவையில் 1977 ஆண்டில் அரச சபையில் கோட்டையில் ஆட்சியில் அமரும் முதல்நாளன்று, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியாக (ஐ.ஜி) யாக இருந்தவர் ஒரு ஆங்கிலேயர் பார்ப்பதற்கு நல்ல உயரமாக வாட்ட சாட்டமாக இருப்பார். அவர் பெயர் டிரைசி முதல் நாள் அன்று கோட்டையில் இம்மாதிரி உயர் அதிகாரிகளை சந்திக்கும்போது, கோட்டையில் தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரி அப்படி அறிமுகப்படுத்தும்போது, மக்கள் திகலம் அவர்கள் அவருக்கு கை கொடுத்து அந்த அதிகாரி முதல் அமைச்சருக்கு தரும் மரியாதையை பெற்று கொள்ளும் போது சற்று நேரம் அவர் கையை பிடித்தமுதல் அமைச்சர் அவர்கள் அவரையே சற்று நேரம் உற்று பார்த்தார். பிறகு, அந்த அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையைப் பற்றியும், ஆங்காங்கே நடக்கும் அசம்பாவிதம் நடக்கும் இடங்களைப் பற்றியும், முதல் அமைச்சர் அவர்களே நேரில் சந்தித்து முக்கிய சம்பவங்களை பற்றி பேசுவார். இந்த மாதிரி விஷயங்கள் பேசுவதற்காக சென்னை தி.நகரில் அமைந்து உள்ள முதல் அமைச்சர் அலுவலகம் (மாம்பலம் ஆபீஸ்) இது இப்போது “எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்”. இந்த கட்டிடத்திற்கு, அந்த போலீஸ் அதிகாரி முதல் அமைச்சர் அவர்களை பார்க்க வரும்போதெல்லாம் இவரை வரவேற்று முதல் அமைச்சர் அமர்ந்து இருக்கும் மேல் மாடிக்கு அழைத்து செல்லும் போது அவரை பார்த்த உடனே வணக்கம் சார் என்று சொல்வேன். ஏன் என்றால் அவர் ஆங்கிலேயர் அவருக்கு அந்த வார்த்தை சொல்ல வராது. இதே மாதிரி முதல் அமைச்சர் அறைக்குள் சென்றவுடனே முதல் அமைச்சர் மக்கள் திலகம் இவரை பார்த்தவுடனே வணக்கம் வாங்க உட்காருங்க.
 
இந்த வார்த்தையை முதல் அமைச்சர் அவர்கள் சொல்லுவார். இதை கவனித்த அந்த போலீஸ் அதிகாரி சற்று நேரத்தில் இந்த வணக்கத்துக்குரிய உட்காருங்கள் என்ற சொல்லை சற்று நேரம் மெளனமாக நின்று விட்டு பிறகு உட்காருவார். அவர் முதல்அமைச்சர் அவர்களிடம் என்ன பேச வேண்டுமோ, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவார் முழுமையாக அவருக்கு தமிழ் பேச தெரியாது. அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்களுக்கு அவர் மீது தனி ஒரு பிரியம் உண்டு. காரணம் மக்கள் திலகம் அவர்கள் 1935-ம் ஆண்டு “சதிலீலாவதி” என்ற சினிமா படத்தில் முதன்முதலில் நடிக்கும் போது போலீஸ் அதிகாரியாக நடித்தவர் மக்கள் திலகம். அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். மேலும், அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். இதையும் அவர் பல வருடங்கள் கழித்து பல போராட்டங்களை சந்தித்து தான் வந்து ஒரு முதல்அமைச்சராக அமர்ந்த அன்று தன் கட்டுப்பாட்டில் உள்ள மிக பொறுப்பில் உள்ள போலீஸ் இலாகா, அந்த போலீஸ் இலாகாவில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியான (ஐ.ஜி) ஒரு ஆங்கிலேயர்? இதை நினைத்து ஆனந்த பூரிப்பு அடைந்தார். ஆனால், அவர் ஒரு சில மாதங்களில் வயது கட்டுப்பாட்டின்படி ஓய்வு பெற்றுவிட்டார்.
 
சிறப்பு குறிப்பு:
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் படமான “சதிலீலாவதி” 1935 நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் பிறகு 42 ஆண்டுகள் கழித்த பிறகு, தமிழக முதல் அமைச்சர் ஆனபிறகு, தன் இலாகாவான போலீஸ் இலாகாவின் போலீஸ் அதிகாரி I.G. அவர்கள் ஒரு ஆங்கிலேயர் ஆவார்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:04:50 PM
34.திருமணப் பத்திரிகை அடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர் மக்கள் திலகம்




மக்கள் திலகம் அவர்கள் திருமணங்கள் விஷயங்களில் வித்தியாசமானவராக நடந்து கொள்வார். ஆரம்பத்தில் தான் சினிமா காலத்தில் நடித்து கொண்டு முன்னேற்றம் அடையும் சமயங்களில் படபிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) பணியாற்றுபவர்களும் இவருடன் நடிக்கும் சக நடிகர்களும் அவர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்துக்கோ திருமணம் நடந்தால் படமுதலாளி, இயக்குனர், மற்றும் இது போன்ற முக்கியஸ்தர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் பத்திரிகை கொடுக்க தவறுவது இல்லை. இந்த மாதிரி கால கட்டத்தில் தனக்கு கொடுத்த பத்திரிக்கையை நன்கு படித்துவிட்டு, அதற்கு தகுந்த மாதிரி இவருடைய வசதிக்கு ஏற்ப பணம் கொடுப்பார். ஆனால் திருமணத்திற்கு போகமாட்டார். இதனுடைய முக்கிய தத்துவம் என்னவாக இருக்கும். சரி இவருக்கு முதல் திருமணம் கேரளாவில் நடக்கும் பொழுது இவர் அப்போது சினிமாவில் நடித்து கொண்டு இருந்தார். திடீர் என்று அவருடைய தாயாரும், அண்ணனும் திருமணத்திற்கு முடிவு செய்துவிட்டதால் இவருடைய திருமணமும் இதே போல் கேரளாவில் நடிந்தது. அடுத்த இரண்டாவது திருமணம் அதுவும் கேரளாவில் எளிமையான முறையில் நடந்தது. மூன்றாவது திருமணம் சென்னையில் இதே போல் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல் ஒரு விஷயம் அவருடைய வாழ்நாளில் முதல் முதலாக நடந்த திருமண விழாவை காண்கிறார். திருமணம் என்பது ரகசியமாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடப்பது ஒரு காதல் திருமணமாகும். அதுவும் இந்த காலத்தில் மாறிவிட்டது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ வருகை தந்து நடக்கும் திருமண விழாவாகும். ஆனால் இது மக்கள் திலகம் அவருடைய வாழ்க்கையில் ஒன்று இரண்டு, மூன்று என்று திருமணம் அவருக்கு நடந்தது. ஆனால், அது மேலே குறிப்பிட்டது போல் நடைபெறவில்லை. பத்திரிகை அடிக்கவில்லை. பலரை சந்தித்து அழைக்கவும் இல்லை. இது அவருக்கு அவருடைய வரலாற்றில் முக்கிய விஷயமாகும்.
 
பிறகு, சினிமா துறையில் பிரபலம் அடைந்து இதே போல் அரசியலிலும் பிரபலம் அடைந்தபோது பலர் மக்கள் திலகம் தலைமையில்தான் திருமணம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் திலகம் அவர்களிடம் சொல்லி அனுமதி பெறுவதற்காக பல நாட்கள் அவர்கள் அலைவதும் உண்டு. இந்த மாதிரி எந்த விஷயத்திலும் ஒதுங்கி இருக்காமல் கலந்து கொள்வதுதான் சரியாகும் இது உன்னுடைய பெயருக்கும் புகழக்கும் மிக உயர்ந்ததாக இருக்கும். இந்த விஷயத்தை ஒரு முக்கியமானவர் மக்கள் திலகம் அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி மக்கள் திலகம் அவர்களும் இதை பற்றி யோசித்து பார்க்கும் போது நமக்கு இப்படி நடக்கவில்லையே அப்படி என்கிற எண்ணம் மனதில் இருக்காமல், இன்னும்நாம் உயர வேண்டிய நாட்கள் இருக்கிறது. இந்த மாதிரி முடிவுக்கு பிறகு தன் பெயரை பத்திரிகையில் இட்டு தன்முன்னிலையில் திருமணம் நடத்துபவர்கள் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நன்கு அறிந்த பிறகு, தான் சம்மதத்தை கொடுப்பார். இதில் எப்படிபட்டவர்களாக இருக்கனும் என்ற ஒரு முறை உண்டு மக்கள் திலகம் அவர்களிடம் இதில் விதி முறைகள் என்ன,
 1. திருமண குடும்பத்தார் வசதியில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 2. காதல் திருமணமாக இருக்கக்கூடாது.
 3. கோயிலில் திருமணம் நடத்தகூடாது.
 4. திருமண மண்டபத்தில் ஐயர்களை வைத்து ஓம பூஜை நடத்த கூடாது.
 இப்படிபட்ட திருமணங்களுக்கு தவறாமல் சென்று முன்நின்று நடத்தி வைப்பார். அது சமயம் மணமகனுக்கும், மணமகளுக்கும் தனி தனியாக பணம் கொடுத்து வாழ்த்துவார். அடுத்து சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, மிக ஆடம்பரமான முறையில் அதிக பணம் செலவழித்து திருமணம் நடத்துவார்கள் எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த திருமணத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு பலமுறை அவரே நேரில் சந்தித்து அழைப்பவர்களுடைய திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் சென்று மணமக்களை வாழ்த்தி வருவார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:06:02 PM
35.வள்ளல் இரங்கல் விஷயத்திற்கு செல்லும் முறை


மக்கள் திலகம் அவர்கள் தனக்கு வேண்டியவர்கள் சினிமா துறையாக இருந்தாலும் சரி, அரசியல் துறை, அரசாங்க துறையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் இவருக்கு அந்த விஷயம் தெரிந்தால், உடனே அங்கு சென்று அவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு ஏதேனும் பணம் உதவி தேவைப்படுமானால் அதை உடனே செய்வார். அடுத்து இரங்கல், இறந்து போனவர் எப்படிபட்டவர், சினிமாவா, அரசியலா, அரசாங்க அதிகாரிகளா என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் அந்த செய்தி தனக்கு கிடைத்த உடனே அங்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு வருவார்.
 
இது சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்காமல் தவறாமல் அந்த காரியத்துக்கு சென்று வருவார். இதே போல் தன்னுடன் மிக நெருங்கி பழகிய தன்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள். பட முதலாளிகள், டைரக்டர்கள் அரசியல்தலைவர்கள், எம்.எல்.ஏ. எம்.பி மந்திரிகள் போன்றவர்களுக்கு இறுதி சடங்கு மயானத்திற்கு சென்று இறுதி சடங்கு முடியும் வரையில் இருந்து வருவார். இது ஒரு தலையாய கடமையாக வைத்து இருந்தார்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:07:05 PM
37.தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்



மக்கள் திலகம் அவர்கள் கும்பகோணத்தில் படிக்கின்ற காலகட்டத்தில், அன்றைய காலம் ஆங்கிலேயர் காலம், பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஏழைபிள்ளைகளுக்கு அன்றைய காலத்தில் உள்ள படிப்பு ஏட்டு சுவடி, பிறகு சிலைட்டு, மூன்றாவது புத்தங்கள் அப்படி இருக்கிற காலகட்டத்தில் கூட அரசாங்க செலவில் இவைகளை வாங்கி கொடுக்கமாட்டார்கள். பெற்றோர்கள் தான் சொந்த செலவில் வாங்கி கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் குடிதண்ணீர் பானையை கூட பிள்ளைகள் சொந்த காசில் தான் வாங்க வேண்டும். படிக்கின்ற நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காது. அந்த காலகட்டத்தை நினைத்து? மக்கள் திலகம் அவர்கள் தான் முதல் அமைச்சர் ஆன பிறகு இனிமேல் முன்போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததை போல பள்ளி பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது! ஏற்கனவே காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக தமிழ்நாட்டில் இருக்கம் போது கிராமம் தோறும்பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். பிறகு, அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கம்பிள்ளைகளுக்கு பள்ளி கூட நாட்களில் மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதைவிட மிக சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏழை குழந்தைகளுக்கும் சத்துணவு போட வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தினார்.
 
சில மாதங்களில் இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூட நாட்கள் மட்டும் தான் உணவு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்த முதல் அமைச்சர் அவர்கள் ஒருநாள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இப்படி கொடுக்கிறீர்கள் எல்லா நாட்களிலும் மதிய சாப்பாடு கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை கேட்கும்போது அன்றைக்கு கல்வி உயர் அதிகாரி திரு. வெங்கட சுப்பிரமணி அவர்களும், வருவாய் துறை அமைச்சரும், நீதி துறை அமைச்சரும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து முதல் அமைச்சர் அவர்களிடம் பேசும் போது வாரம் 7 நாட்களும் மதிய சத்துணவு போட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற விளக்கத்தை கூறுகிறார்கள். இதற்கு முதல்வர் அவர்களுடைய பதில் அய்யா இந்த லீவு நாட்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ளதுதான். அந்த லீவு நாட்களில் நாம் சாப்பிடாமல் இருப்பது இல்லை. எந்த செலவுகளையும் குறைத்து கொள்வதும் இல்லை. அரசாங்கத்தின் சாப்பில் சில விழாக்கள் கூட இந்த லீவு நாட்களில்தான் நாம் நடத்தி வருகிறோம். ஆனால் வயிற்றுக்கு பசிக்கு உணவு என்பது எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் தேவைபட கூடிய ஒரு விஷயம். அதனால், தமிழ் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கு மதியத்தில் சத்துணவு சாப்பாடு கொடுக்க வேண்டும் தயவு செய்து அரசாங்கத்தில் இதை விட ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு இந்த சத்துணவு நல்ல முறையில் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த வேண்டும். நான் இன்றைக்கு முதல் அமைச்சராக இருந்து கொண்டு ஏழை மக்கள் உடைய குறைகளை அறியாமல் நடந்து கொள்பவன் அல்ல. உங்களை போன்ற மற்ற அதிகாரிகளும் அமைச்சர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து செயல்படவேண்டும். இப்படி மக்கள் திலகம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கியமான விஷயம் இது.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:08:07 PM
39.இளைய மகனுக்கு ஜோசியம் பார்த்த சத்திய தாய் மக்கள் திலகம் சொன்னவை



மக்கள்திலகம் அவர்கள் பேசும்போது மனிதனுடைய தலை எழுத்தை பற்றி அது எப்படி எந்த எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு என்ன என்ன நடக்கும் கணக்கு போட்டு சொல்லுபவர்களுக்கு தான் ஜோசியர் என்று சொல்லப்படுகிறது இந்த மாதிரி ஜோசியங்களை தன்னுடைய மகன்கள் பலன் எப்படி இருக்கின்றது வரும் காலம், அவன்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்த தாய் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் உள்ளவர். இந்த மாதிரியான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பிரகாசான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பரிகாசமான வாழ்க்கை ஏற்படும். மக்கள் திலகத்தின் ஜாதக பலன் எழுதப்பட்டு இருந்தது. ஜாதகம், ஜோசியம், சாமி கும்பிடுவது அந்த சாமிக்கு சிறப்பு பூஜை செய்து விரதம் இருப்பது. இப்படி எந்த விசயத்தில் ஒரு காலத்தில் ராமச்சந்திரனுக்கும் உண்டு. பிறகு, அவனுடைய வாழ்க்கையில் தாங்கி கொள்ள முடியாத சில சோதனை ஏற்பட்டது. அது தான்முதல் மனைவி தங்கமணி இறந்தது. அடுத்து இரண்டாவது மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு படுக்கையில் நோயாளியாகியது. ஆனால், மக்கள் திலகத்திற்கு ஒரு பெரிய மனதிடத்தையும் நம்பிக்கையும்தான் எப்படியும் தான் வெற்றியை எட்டி பிடிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு செயல்பட்டார்.
 
1958ல் அவருடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. இதைவிட ஒரு விசயம் மக்கள் திலகம் கூட ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்த ஒரு பிரபல நடிகை கதாநாயகி நான் உங்களை உண்மையாகவே காதலிக்கிறேன். என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டது. அப்பதான் தன்னுடைய கிரகத்தைபற்றி ராமச்சந்திரன் அவர்கள் நினைக்கிறார். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல என் வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்களை சந்தித்து நீந்தி கரை ஏறி சற்று நிம்மதியாக இருக்கிறேன். நான் உண்டு என் தொழில் உண்டு என்று இருக்கிறேன். எனக்கு மீண்டும் சோதனையா என்று நினைத்தார் மக்கள் திலகம் அவர்கள். ஆரம்பத்தில் இருந்து கடவுளிடம் எனக்கு புகழை மட்டும் கொடு வேறு எதுவும் வேண்டாம் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தார்.
 
தாயையும் தந்தையும் தெய்வமாய் நினைப்பவர் தந்தை தன்னுடைய மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தைக்கு தந்தையாகவும், தாய்க்கு தாயாகவும் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் என்னையும் என் அண்ணனையும் வளர்த்து வந்த என் தாய் சொல்லை தட்டாமல் மதித்து வந்தோம். எங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சிகளையும் கண்டு எங்கள் தாய் பெருமை படுவார். தந்தைக்கும், தாய்க்கும் செய்யும் கடமைகளை எங்கள் தாய்க்கு தவறாமல் செய்து வந்தோம். இதோடு எங்களுக்கு குருவாக இருந்தவர்களை வணங்காமல் இருப்பதும் இல்லை. அவர்களுக்கு ஏதாவது நன்றி கடன் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது இல்லை
.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:09:01 PM
41.சோதனைகளை சாதனை ஆக்கியவர்



1958ல் அவருடைய சொந்தநாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. அது சமயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமா படங்களில் இனிமேல் நடிக்க முடியாது என்று பேசப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் போது, மக்கள் திலகம் அவர்கள் கடவுளே இது என்ன சோதனை என்று நினைத்துக்கொண்டார். கடவுளின் ஆசிர்வாதத்தால் மேலும், புகழை அடைந்தார்.
 
1967ல் எம்.ஆர். ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் கடவுளே நான் பிழைப்பேனா மீண்டும் எனக்கு சோதனையா என்று நினைத்தார். கடவுள் முன்னை விட மேலும் நீ புகழ் அடைவாய் என்று சொன்னது போல் எம்.எல்.ஏ.வாக வெளியே வந்தார். 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும்போது, மறுபடியும் கடவுளை நினைக்கிறார். கவலைபடாதே உன் ஆயுள் வரை நீ முதல்அமைச்சராக இருந்து மக்களுக்காக சேவை செய்வாய் என்று கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
 
மக்கள் திலகம் அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனைகள் முதல் மனைவி தங்கமணி திருமணம் ஆகி ஓரே வருடத்தில் இறந்து போனது. அடுத்து இரண்டாவது திருமணம் சதானந்தவதியை திருமணம் செய்து இரண்டாவது வருடத்தில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மக்கள் திலகத்துடன் சேர்ந்து வாழமுடியாமல் போனது. 1957ல் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ள ஏற்பட்ட நிபந்தனை. 1959ல் தன் தாய் இறந்துபோனது. அதேவருடம் தன்னுடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கையில் கால் உடைந்தது. 1967ல் துப்பாக்கியால் சுடப்பட்டது. 1969ல் தன்னுடைய அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா இறந்தது. 1972ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறியது. 1973ல் தன்னுடைய சொந்த கட்சி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ஏற்பட்ட சூழ்நிலை, 1977ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சந்தித்தது. 1980ல் தமிழ்நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. தன்னுடைய அரசாட்சியை கலைத்தது. அதே 1980ல் மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து தர்மயுத்தத்தில் இறங்கியது. 1984ல் தனக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியத்திற்காக அமெரிக்கா சென்றது.

 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:10:06 PM
42.மக்கள் திலகம் நிறுவனத்தில் ஆர்.எம்.வீ.


ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் இந்த மாதிரி சொந்தத்தில் நாடகங்கள் நடத்தனும். பிறகு, சினிமாவில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் சொந்தத்தில் படம் எடுக்கனும். சொந்தத்தில் வீடு கட்டணும், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வாங்கனும் என்றெல்லாம் நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. இதில் முதலில் 1953ல் சொந்த நாடக கம்பெனி “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்”, ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953ல் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்தாபனத்திற்கம் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை நிர்வாக பொருப்பாளராக நியமித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் இந்த ஸ்தாபனத்தில் 1953ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வாகித்து கவனித்து வந்தார். மக்கள் திலகம் அவர்கள் ஆர்.எம்.வீ அவர்களிடம் சிலமுக்கியமான விஷயங்களை கலந்து பேசுவதில் தவறுவதில்லை. ஆர்.எம்.வீ. அவர்கள் கம்பெனி வரவு செலவுகளை மிக திறமையுடன் கவனித்து மக்கள் திலகம் மனதில் இடம்பிடித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு சம்பளம் 500 ரூபாய். சில சமயங்களில் மக்கள் திலகம் அவர்களிடமும் திரு. சக்கரபாணி அவர்களிடம் கணக்கு கேட்பார். இந்த கணக்கு விஷயத்தில் ஆர்.எம்.வீ. அவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டார். இவர் நாடகம், சினிமா, அரசியலில் மிகவும் அனுபவமுள்ளவர். இவர் ஒரு சமயம் மக்கள் திலகம் அவர்களிடம் 1963ல் நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும் அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளனுமென்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட மக்கள் திலகம் அவர்கள் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.
 
பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ. அவர்களுக்கு, உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரு மாதத்தில் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட கம்பெனி தயாராகிவிட்டது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க மக்கள் திலகத்தை அழைத்தார். அதன்படி அலுவலகத்தில் 1963ல் விளக்கு ஏற்றி வைத்து முதல் படத்திற்கு பூஜையும் நடந்தது. படத்தின் பெயர் “தெய்வத்தாய்”, நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை “சத்யா மூவிஸ்” தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து மேலும் ஐந்து வெற்றி படங்களை தயாரித்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் திலகம் அவர்களிடமே பொறுப்பில் இருந்தார்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:11:57 PM
43.மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் போட்டி

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் “கூண்டுகிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.
 
இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன்” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:15:29 PM
44.இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை




1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது.
 
மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்
 
கலைத்துறையில் பல புதுமைகளை உண்டாக்கினார். அரசியலில் பல புரட்சிகளை செய்தார் படைத்தார். அரசாங்கத்தில் நேர்மையான நல்லாட்சியை நடத்தினார். மக்கள் குறைகளை அறிந்து மாவட்டம்தோறும் திட்டம் போட்டார். வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏழை மக்களுக்கு உடனே, என்ன செய்யவேண்டும் என்பதை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். பழஞ்சோறும் கூட பார்த்து அறியா பாலகர்களுக்கெல்லாம் தினம் தோறும் ஒரு வேலை மதிய சத்துணவு கொடுக்க உத்தரவு இட்டார். ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் மீது அக்கறை காட்டினார்.
 
தான் ஒரு நாட்டின் “முதல்மந்திரி” என்ற தற்பெருமை இல்லாமல் ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார் மற்ற மந்திரிகளிடமும், 1960ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்கனும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார். இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியல் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கைரிக்ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்கனும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விசயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விசயங்கள்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:16:42 PM
45.மக்கள் திலகம் விரும்பிக்கொண்டாடும் விழா


மக்கள் திலகம் மிக விரும்பி கொண்டாடும் விழாக்களில் ஒன்று தைப்பொங்கல் அன்று காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து 7 மணிக்கு குளித்து புத்தாடை உடுத்தி சூரிய நமஸ்காரம் செய்து, வீட்டு மாடியில் இருந்து கீழே உள்ள ஹாலுக்கு வந்து விடுவார். பொங்கல் வாழ்த்து சொல்ல வந்து இருப்பவர்களையும் பார்ப்பார். பிறகு, சாப்பாடு ஹாலில் பந்தி பாய் விறிக்கப்பட்டு தலைவாழை இலைபோட்டு நெய் மணக்கும் சர்க்கரை பொங்கலும், உளுந்து வடையும், மல்லிகைப்பூ இட்லியும், சட்டினியும், சாம்பாரும் இருக்கும். வள்ளல் வந்து இருப்பவர்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவார். ஸ்பெசலாக ஐயர்கள் சமையலுக்கு வந்து இருப்பார்கள். அன்று ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்து இருப்பவர்களுக்கு வேஷ்டி சட்டையும், புடவைகளையும் அதோடு, பணமும் இவர்கள் மாடிக்கு வரவழைத்து ஜானகி அம்மையார் கொடுப்பார்கள்.
 
அன்று தோட்டத்தில் திருவிழா போல் இருக்கும் அடுத்து சித்திரை தமிழ் வருடப்பிறப்பு அன்று மாடியில் அவருடைய ரூமில் பல தட்டுக்களில் நவதானியங்கள், தேங்காய் பழம் வகைகள் புதுவேஷ்டி சட்டை, புடவை நிறைய நகைகள் ஒரு ரூபாய் நாணயங்கள் இவைகள் எல்லாம் தாம்பூலத்தில் வைக்கப்பட்டு இருக்கும். வருடப்பிறப்பு காலை படுக்கையில் இருந்து எழுந்த உடன் தாம்புலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களைத் தொட்டு கும்பிட்ட பிறகு, தான் மற்ற வேலைகள். அன்று காலை 8 மணிக்கு எல்லாம் கீழே ஹாலுக்கு வந்து விடுவார் இதற்குள்ளாக தோட்டத்தில் வேலை செய்பவர்கள் “சத்யா ஸ்டுடியோ”, “மாம்பலம் ஆபிஸ்” தலைமைக் கழகம் கட்சி ஆபிஸ் இவர்கள் எல்லாம் முன் கூட்டியே மாடிக்கு சென்று விடுவார்கள். காரணம் நாம் முதல்லே முதல் ஆளாக ஆசிர்வாதம் பெற்று விடனும் என்ற ஆர்வம். அதேபோல் வள்ளல் அவர்கள் ஆசிர்வதித்து பணம் கொடுப்பார். ரூ.100/- அன்றைக்கு வள்ளலைப் பார்க்க வந்து இருப்பவர்கள் எல்லோருக்கும் பணம் கொடுப்பார். அன்று காலை 10 மணி வரை இந்த திருவிழா நடக்கும் அதற்கு பிறகு சூட்டிங்குக்கு போய்விடுவார். அங்கு எந்த ஸ்டூடியோவில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்குமோ அந்த இடத்தில் அது சமயம் படப்பிடிப்புக்கு உள்ள சக தொழிலாளர்கள் விபரம் தெரிந்தவர்கள் அன்று அண்ணே, தமிழ் புத்தாண்டு “எங்களை வாழ்த்துங்கள்” என்று வந்து நிற்பவர்களுக்கெல்லாம் வாழ்த்தி பணம் கொடுப்பார். அன்று மதிய சாப்பாடு படப்பிடிப்பு நிலையத்திற்கே தோட்டத்தில் இருந்து வந்து விடும். எப்போதும் அசைவ சாப்பாடு வரும். ஆனால், தை பொங்கல் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் வெள்ளிகிழமை சைவ சாப்பாடு கூட்டு பொறியல், உருளை கிழங்கு மசாலா, அவியல், கீரை ஊறுகாய், அப்பளம், பாயாசம், தயிர், சாம்பார், மோர் குழம்பு, ரசம் இத்தனை வகைகளுடன் 25 பேர்களுக்கு வரும். வாழை இலைபெரியதாக இருக்கும். இந்த விஷயம் வள்ளலுடைய வரலாறில் முக்கியமானது
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:18:00 PM
46.மக்கள் திலகம் அவர்கள் விரும்பாத பண்டிகை


ஆங்கில வருடப் பிறப்பை கொண்டாடமாட்டார். இதை அறிந்தவர்கள் யாரும் அன்று “ஹாப்பி நியூ இயர்” என்று சொல்ல மாட்டார்கள். அவரும் யாருக்கும் போனில் நேரில் சொல்லமாட்டார். காரணம் ஆங்கிலேயர்கள் தினம் இது. சுதந்திர போராட்டத்தின் போது நம் நாட்டு வீரர்கள் தமிழர்கள் மற்றும் எவ்வளவு பேர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். 1935ல் மக்கள் திலகம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் காந்தி பக்தராக இருந்தார். கதர் ஆடைகள் உடுத்துவார். பிற மொழிகளை கற்றுக்கொள்ளதவர் இல்லை. ஆனால், அதற்கு அடிமையாகி விடக்கூடாது. நான் அரசியல்வாதி சிறு வயதில் இருந்தே அதாவது 1954ல் இருந்து அறிஞர் அண்ணாவுடைய அரசியலைக் கற்றுக்கொண்டவன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திராவிட பரம்பரை கொள்கையாக கொண்ட நான் ஆங்கில வருடப்பிறப்பை எப்படி கொண்டாடுவேன். அதனால் தயவு செய்து இனிமேல் அடுத்து வரும் “புதுவருடப் பிறப்பு” அன்று மாலை மரியாதை எதுவும் வேண்டாம் என்று இதை மக்கள் திலகம் முதல் அமைச்சர் ஆன பிறகு 1978ல் ஜனவரி முதல்நாள் சில முக்கிய அரசாங்க அதிகாரிகள் முதல்அமைச்சரை பார்த்து ஆங்கில வருடப் பிறப்பு வாழ்த்துக்களை சொல்ல வந்தவர்களிடம் சொன்ன செய்தி இது.
 
அடுத்து இதே போல் தீபாவளி பண்டிகையை மக்கள் திலகம் அவர்கள் கொண்டாட மாட்டார்கள். காரணம், இந்த பண்டிகையை யாருக்காக எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்து கொண்டாடுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் ஒரு பெரியவர் சொன்னார். வடநாட்டில் நரகாசூரன் என்ற ஒரு பெரிய அரக்கன் இருந்தான். அவனை கொன்று விட்டார்கள் அதற்காகத்தான் தீபாவளி என்று சுருக்கமாக சொன்னார். எது எப்படியோ நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று நருக்கென்று பதில் சொன்னார் மக்கள் திலகம். இதில் ஒரு முக்கிய விசயம். ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். திருமணம் செய்து கொண்டவராக இருந்தால் அவர்களுடைய மனவை஢ மக்களுக்கு அவர் அவர் குடும்பத்திற்கு தகுந்தாற்போல ஜானகி அம்மையாரிடம் சொல்லி இரண்டு நாள்களுக்கு முன்பாகவே பணம் கொடுத்து விடுவார்கள். தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் அவர்களுக்கு சொந்த வீடு போல் தோட்டம் – உதவியாளர்கள் – ஓட்டுநர்கள் – சமையல்காரர்கள் – வாட்சுமேன் – தோட்டத்தில் விவசாயம் பார்ப்பவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள் சலவைத் தொழிலாளி இப்படி 25க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் தீபாவளி அன்று புத்தாடை உடுத்தமாட்டார்கள். வீட்டிற்கும் போகமாட்டார்கள். மக்கள் திலகம் எவ்வழியோ அவ்வழியே இவர்களும்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:19:16 PM
47.மக்கள் திலகம் வருடத்திற்கு இரண்டு நாள் மவுனத்துடன் உண்ணாவிரதம் இருப்பார்.



அதாவது ஒன்று 1967 ஜனவரி 12ம் தேதி எம்.ஆர். ராதா மக்கள் திலகம் அவர்களை துப்பாக்கியால் சுட்ட நாள். அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 வரை பேசமாட்டார். சாப்பிடவும்மாட்டார். வெளியே எங்கும் செல்லவும் மாட்டார். அடுத்து 1969 மார்ச் மாதம் அறிஞர் அண்ணா இறந்தார். அன்று காலை சக தோழர்களுடன் அவருடைய சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் உண்ணாவிரதம் மவுன விரதம் தனக்கு அரசியல் ஆசானாக இருந்த அண்ணா நினைவு நாளன்று மக்கள் திலகம் மட்டும் தான் மவுனமாக சாப்பிடாமல் இருப்பார். இப்போ அப்படிப்பட்ட மகான் மறைந்த நாளன்று எவ்வளவோ பேர்கள் அன்று சாப்பிடாமல் மவுனமாக இருக்கிறார்கள். டிசம்பர் 24ந்தேதி அவருடைய நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு காலை 6 மணிக்கெல்லாம் விளக்கேற்றி சிலைக்கு மாலைபோட்டு அன்று இரவு 9 மணி வரை சாப்பிட மாட்டேன். நான் எவ்வளவோ விசயங்களை மக்கள் திலகம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு அந்த வள்ளல் பெருமான் தான் ஆசான்.
 
பெரியவர் எம்.ஜி.சி. சொன்னது
 
எங்கள் அப்பா மலையாளி அல்ல அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு கோவை மாவட்டம், காங்கேயம் ஆகும். மன்றாடியார் வகையை சேர்ந்தவர் கோபால மேனன் அல்ல. மருதூர் கோபாலன் தான் அவர் பெயர். இது ரெக்கார்டுபடி உள்ள பெயர் அவர் பாலக்காட்டுக்கு அடுத்து உள் வடவனூர் என்ற ஊரில் பிறந்தவர். அவர் பட்ட படிப்பு படித்தவர் நடுத்தர குடும்பம். தமிழ், ஆங்கிலம் மலையாளம் படித்தவர் சாதுவானவர் தர்மம், சத்தியம், நியாயம், அன்பு, பண்பு உள்ளவர். அவர் பாலக்காட்டில் துணைநீதிபதியாக வேலைபார்த்தவர். பிறகு, இலங்கை கண்டியில் ஆங்கில புரபசராகவும் மேஜிஸ்ட்ரேட் கோர்டில் நீதிபதியாகவும் வேலை பார்த்தவர். என்னையும் எனக்கு முன்பு பிறந்தவர்களையும் நல்லா இங்கிலீஸ் மீடியம். ஆங்கில பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார் எந்த கஷ்டமும் தெரியாமல் வளர்ந்தோம். பிறகு எனது தம்பி ராமச்சந்திரன் 5வது குழந்தையாக பிறந்தான். அவன் எங்களை விட ரொம்ப அழகாக இருப்பான். மிக சுறு சுறுப்பாகவும் இருப்பான். எங்க அப்பா வீட்டில் இருக்கும்போது அவனை தான் தூக்கி வைத்து கொண்டு கொஞ்சுவார். அவனுக்கு அவர்தான் ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தார். ஆனால், நாங்கள் எல்லோரும் “சந்திரா” என்று கூப்பிடுவோம். நல்ல செழிப்போடு இருந்த எங்கள் குடும்பத்தில் சனீஸ்வரன் நுழைந்து விட்டான். 1919ல் திடீரென்று எங்க அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அப்பாவை இழந்த எங்களுக்கு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அம்மாவுக்கு அப்பாவுடைய இறப்பு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அவரையே நினைத்து கொண்டு எங்களை சரிவர கவனிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் என்னுடன் பிறந்த இரு சகோதர சகோதரியும் விசக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்து போய் விட்டார்கள். இந்த காலகட்டத்தில் எங்கள் தாயுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும். என் அழகான தம்பியும் என் தாயோட துயரத்தையும் நினைத்து நான் அழுகாத நேரமே இல்லை. இந்த விசயத்தை 1976ல் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் அவருடைய ஒரு உற்ற நண்பரிடம் சொன்ன விசயம்.
 
நாங்கள் கஷ்டப்படுகிற காலத்தில் என்னிடம் தம்பி அடிக்கடி சொல்வான் கவலைபடாதீங்க அண்ணா, முன்னை போல் வாழ்ந்து காட்டுவோம். பெரிய பணக்காரங்க போல் நாமும் பணக்காரர்களாகி விடுவோம். நாங்கள் நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும்போது மற்ற நடிகர்களிடம் தமாசுக்கு அடிக்கடி சொல்வான். நான் சொந்தத்தில் நாடகங்கள் நடத்தும் போது வாங்க நல்லவேசம் தருகிறேன். இப்படி எதையாவது தமாஷாக பேசுவான்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:20:33 PM
48.மக்கள் செல்வாக்கு மக்கள் திலகத்திற்கு மட்டும் தான்




மக்கள் செல்வாக்கு மக்கள்திலகத்திற்கு மட்டும்தான் என்ற பெருமையைப் பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய உருவம் தான் மறைந்தது. அவருடைய புகழ் மறையவில்லை குறையவில்லை மலைபோல் உயர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வள்ளலின் புகழை நாடெங்கிலும் மண்ணிலே விதைத்து வைத்து இருக்கிறார்கள். மக்கள் அவரை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. மக்கள் திலகம் மக்களுக்கு தொண்டு செய்து மக்களின் அன்பை பெற்றவர். பொது மக்களே என் சொத்து என்று சொன்னவர். மக்களால் உயர்ந்தது தான் என் புகழ். நான் மக்கள் சொத்து என்று அடிக்கடி சொல்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
 
சேர சோழ பாண்டியன்
 
தமிழ்நாடு, கேரளம் ஆந்திரம், கர்நாடகம் இவைகளை சேர்ந்தது தான் திராவிட நாடு. சேரநாடு – கேரளம், ஒரு காலத்தில் இங்கே எல்லாம் தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து “நாடோ டி மன்னன்’ படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நம்பியார் – கேரளம், பானுமதி – ஆந்திரம், சரோஜாதேவி – கர்நாடகம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு “நாடோ டி மன்னன்” படத்திலேயே திராவிட நாடு என்பதை காண்பித்து உள்ளார்.
 
இவைகளுக்கெல்லாம் மீறி அறியாதது போல் ஒரு சமயம் திமுகவினர் மக்கள் திலகம் அவர்களை மலையாளி கேரளத்துக்காரன் என்று பேசினார்கள். அவர்களுடைய தந்தையை கோபாலன் மேனன் என்று எழுதுகிறார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கொங்கு வெள்ளாளர் என்பதை 1978ல் அவரிடமே சொல்லப்பட்டது. ஒரு சினிமா நடிகர், அரசாங்கம் நடத்துவதா என்று பேசப்பட்டது. ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வள்ளலுக்கு வள்ளல், நல்லவர்களுக்கு நல்லவர், வல்லவனுக்கு வல்லவன். தர்மத்திற்கு தலைவணங்குபவர். அநியாயத்தை கண்டிக்க அஞ்சாதவர். இந்த உத்தமபுத்திரரின் வாழ்க்கை வரலாறுகளை எழுத எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து கடவுளை வணங்குகிறேன்.
 
ஒரு முக்கியமான குறிப்பு
 
1920 கும்பகோணம் வந்தது
 1924ல் பாண்டிச்சேரி காரைக்கால்
 1932ல் சென்னை
 1941ல் முதல் திருமணம், பார்கவி என்ற தங்கமணி
 1942ல் தங்கமணி இறந்துவிட்டார்
 1944ல் இரண்டாவது திருமணம் சதானந்தவதி
 1957ல் மூன்றாவது திருமணம் ஜானகி அம்மாள்
 1958ல் சத்திய தாய் இறந்துவிட்டார்
 1962ல் சதானந்தவதி இறந்து விட்டார்
 1962ல் எம்.ஜி.ஆர். ஜானகி அம்மா ராமாபுரம் தோட்டத்திற்கு தனிகுடித்தனம் போனார்கள்
 1986ல் அண்ணன் எம்.ஜி.சி. மறைவு
 
இரண்டாவது மனைவி சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது அந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் மனம் எப்படி இருந்து இருக்கும்? இதே சமயத்தில் அண்ணன் சக்கரபாணி அடுத்து அடுத்து குழந்தைகள் பெற்று வளர்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் அந்த குழந்தைகளை அவர் கட்டிபிடித்து கொஞ்சி மகிழ்வார்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:21:27 PM
49. சில சோதனகைளும், மனவேதனைகளும்.



மக்கள் திலகம் அவர்களுக்கு 1955க்கு மேல் நல்ல நிலைக்கு வந்த பிறகு ஏற்பட்ட சில சோதனகைளும், மனவேதனைகளும்.
 
அதாவது 1957ல் மக்கள் திலகம் அவர்கள், சொந்தத்தில் தயாரித்த “நாடோ டிமன்னன்” படம் வெற்றிபெற்றால் மன்னன், இல்லையென்றால் நாடோ டி என்று உண்மையிலேயே பலரால் பேசப்பட்டது இருந்த சமயம், சிலர் மக்கள் திலகம் அவர்களிடம், நீங்கள் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வருகிறீர்கள். அதுவும் இது உங்களுடைய சொந்த படம் நிச்சயமாக நீங்கள் இதில் வெற்றி பெறுவீர்கள் என்றார்கள். படப்பிடிப்பு முடிந்து 1958ல் “நாடோ டி மன்னன்” மக்களை சந்திக்க வெளிவந்தார் வெற்றியும் கண்டார். அடுத்து இதே 1958ல் இவருடைய சொந்த நாடகத்தில் நடித்துக் கொண்டு இருக்கையில் கால் எலும்பு அடிபட்டு, பாதியிலேயே நாடகம் நிறுத்தப்பட்டது. பிறகு, நடக்க முடியாமல் மூன்று மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில், மக்கள் திலகம் அவர்கள் இனிமேல் படங்களில் நடிக்க முடியாது என்று பரவலாக பேசப்பட்டது. கால்முன்பு போல் நடக்கலாம் ஓடி ஆடி வேலை செய்கிற அளவிற்கு பழைய காலைப் போன்று இருந்தது. இதற்கு பிறகு, முன்பை விட அதிக படங்கள் ஒப்பந்தமானது.
 
அதற்கு பிறகு 1958ல் கடைசி மாதத்தில் தன்னுடைய தெய்வத்தாய், சத்தியத்தில் வாழ்ந்த தர்மத்தாய் சத்தியபாமா அவர்கள் இறந்து விட்டார்கள். இது அவருக்கு ஒரு பெரிய இழப்பு. இதற்கு பிறகு 1962ல் தன்னுடைய இரண்டாவது மனைவி சதானந்தவதி அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். இந்த நேரத்தில் மக்கள் திலகத்துடைய மனம் எப்படி இருந்து இருக்கும். 1962க்குப் பிறகு மூன்றாவது மனைவியான ஜானகி அம்மாளுடன் எந்தக்குறைவும் இன்றி, ராமாபுரம் தோட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அதாவது சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் நல்ல அம்சம் நிறைந்த காலம் அது. அப்படிப்பட்ட அந்த நல்வாழ்வில் 1967ல் ஒரு பெரிய சோதனை ஏற்படுகிறது. அதுதான் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டது. இந்த கொடூரமான சம்பவத்தை நினைத்து ஊரும், உலகமும் அனுதாபப்பட்டது. இரண்டே மாதத்தில் குணமடைந்து விட்டார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்று பேசியவர்கள் எல்லாம் ஆச்சரியப்படுகிற மாதிரி, மக்கள் திலகம் அவர்கள் நான் செத்துப் பிழைத்தவண்டா எமனைப் பார்த்து சிரித்தவண்டா என்பதனை போல் மீண்டும் அதிகமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:22:21 PM
50.அண்ணாவின் மறைவு ஏற்பட்ட வேதனை


1969-ம் ஆண்டு அவரால் தாங்கிக் கொள்ள முடியாத சோதனை ஏற்பட்டது. எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டம் என்றும் “தம்பி உன் முகத்தை காட்டினால் போதும் உன்னை என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்” என்று சொன்னவர் மக்கள் திலகம் அவர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, கடைசி கட்டத்தில் சென்னை அடையார் புற்று நோய் மருத்துவமனையில் வைத்தியத்திற்காக சேர்க்கப் பட்டு இருந்த சமயம், ஆஸ்பத்திரிக்கு வந்து அவர்களைப் பார்க்க வரும், வெளியூர் கட்சிப் பிரமுகர்கள் அத்தனை பேர்களுக்கும் மதிய உணவுக்காக சைவ சாப்பாடு, அடையாரில் உள்ள “சத்யா ஸ்டூடியோ”வில் பெரிய பந்தல் போட்டு பத்து சமையல்காரர்கள் நியமித்து சாப்பாடு போட்டார். அதாவது காலை, மதியம் ஆஸ்பத்திரிக்கு வந்து அண்ணாவைப் பார்த்து விட்டு மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராக இருக்கும். வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப்போவார்கள். இது வெளியூர்காரர்களக்கு மட்டும் இப்படி இரண்டு வாரம் நடந்தது. பிறகு, 1969 பிப்ரவரி மாதம் அண்ணா இறந்து போனார். அண்ணா அவர்கள் இறந்த நாளன்று, மக்கள் திலகம் அவர்கள் ஒவ்வொரு வருடமும் அன்று காலை, அவருடைய சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு பிறகு, அன்று முழுவதும் யாரிடமும் பேசமாட்டார். இரவு வரையிலும் சாப்பிட மாட்டார். இதே போல் அவரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட நாளன்றும் மெளனமாகவும், சாப்பிடாமலும் இருப்பார். இது அவருடைய வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயம்.
 
அண்ணாவுக்கு பிறகு அரசியல் மாற்றம்
 
அடுத்து மக்கள் திலகம் அவர்கள் 1972ல் தி.மு.கவில் இருந்து விலகி அண்ணாவின் பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சியை ஒரு நிலைக்கு கொண்டு வர, அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களுக்கு அளவே இல்லை. கட்சி ஆரம்பித்த அடுத்த வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் 1973-ல் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேதியும் அறிவித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மத்திய அரசான இந்திரா காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழக அரசான தி.மு.க. கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தனி கட்சி வேட்பாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். இந்தத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று, கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் எல்லாம் மக்கள் திலகம் அவர்களிடம் சொல்கிறார்கள். இதற்கு மக்கள் திலகம் ஒத்துக் கொள்ளவில்லை. காரணம், நாம் கட்சி ஆரம்பித்து மூன்று மாதம் தான் ஆகிறது. எப்படி நாம் வெற்றி பெற முடியும்? டெபாசிட் ஆவது நம்முடைய கட்சிக்கு கிடைக்குமா? வேண்டாம் இந்த விஷப்பரிட்சை. ஆரம்பத்திலேயே தோல்வி காண்பதா? இது கண்ணை மூடிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த மாதிரி. காங்கிரசும், தி.மு.க.வும் எவ்வளவு பெரிய கட்சிகள். மலைமீது மோதி, மண்டையை உடைத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது என்று மக்கள் திலகம் பேசி முடித்தவுடன் மற்றவர்கள் தலைவரே, நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஓட்டு நம்ம கட்சிக்கு இல்லை உங்களுக்குத்தான். நீங்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி. அந்த வேட்பாளர் ஜெயிக்கிறார் அல்லது இரண்டாவது இடத்திற்கு வருவார். இது உறுதி. எனவே எப்படியும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். தயவு செய்து எங்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள் தலைவரே. நமக்கு தேர்தல் பணியை செய்ய மன்றத்தின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக பெண்கள் ஓட்டு எல்லாம் நமக்குத்தான் மறுக்காதீர்கள் தலைவரே என்று ஒரே பிடிவாதமாக கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுடைய வேண்டுகோள். மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையாகி விட்டது. இது சினிமா படம் அல்ல, அரசியல். இதில் நாம் தோல்வி அடைந்தால் மிகக் கேவலமாகி விடும். ஆளும் கட்சி ஜெயித்தாலும் அதிலே நமக்கு பாதியாவது ஓட்டு கிடைக்கணும் என்ன செய்வது சரி எதுவானாலும் சந்திப்போம். நம்பிக்கை பெரிது என்ற மன உறுதியோடு புரட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்தில் இருபது நாட்கள் கலந்து கொண்டார். அடிக்கடி ஏற்பட்ட தி.மு.கவுடனான இடையூறுகளை எல்லாம் எதிர்த்து சமாளித்தார். தேர்தல் பிரச்சாரம் குருஷேத்திரப் போல் தர்மயுத்தம் போல் இருந்தது. அதில் தர்மர் புரட்சித் தலைவர். லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார். அந்த வேட்பாளரின் பெயர் மாயத்தேவர் (அட்வகேட்). இது ஒரு சுருக்கம்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:23:14 PM
51.மக்கள் திலகம் கடுமையாக உழைத்தார்

அரசியல் மக்கள் திலகம் மிகக் கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதாயிற்று. 1977ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொது தேர்தல் நடக்க இருந்தது. இதில் அண்ணா திமுக கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் மத்தியில் இரட்டை இலையா? உதயசூரியனா? என்று வைக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இரட்டை இலையை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். பெரும்பான்மையில் மக்கள், மக்கள் திலகம் அவர்களை அரசு ஆட்சியில் அமர்த்தினார்கள். 1957ல் நாடோ டி மன்னன் புரட்சி நடிகரின் புரட்சி படைப்பு நாடோ டியா? மன்னனா என்ற கேள்விக்கு மக்கள் அதில் மக்கள் திலகம் அவர்களை மன்னனாக்கினார்கள். மன்னன் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? என்ற சொல்லின்படி பத்து ஆண்டுகளாக மக்கள் ஆட்சி நடத்தினார். நெருப்பிலே நடந்து நீரிலே நீந்தி சாதனைகள் புரிந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1984ல் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது, உடல் நலக்குறைவு அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு நான் செத்துப் பிழைத்தவன்டா எமனைப் பார்த்து சிரித்தவன்டா என்று சொல்லிக் கொண்டே 1987ல் இறைவனடி சென்று விட்டார்.
 
மக்கள் திலகம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் 1947ல் இருந்து 1953வரை காங்கிரஸில் இருந்து காமராஜரை குருவாக ஏற்று கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்தவர். பிறகு, 1954ல் அண்ணாவினுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்றார். அவருடைய வழியில் அரசியலில் முன்னேற்றம் அடைந்தார். திமுக அரசியல் பொதுக் கூட்ட மேடைகளில் மாநாடு மேடைகளில் பேச்சாளர் ஆனார். பிறகு, கட்சியின் தலைமைப் பொருளாளராக பொறுப்பு வகித்தார். இதே போல் சிறுசேமிப்புத் தலைவர். பிறகு, 1972ல் திமுக வில் இருந்து விலகி அண்ணா அவர்களுடைய பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவம் பதித்த கொடியை அமைத்தார். அவர் தனிகட்சி ஆரம்பித்த பிறகு 1977ல் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார். வருடத்திற்கு வருடம் அரசியலில் வெற்றி வாகை சூடிவந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1980ல் பெரிய சோதனை ஏற்பட்டது. 1980ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் தமிழக முதல் அமைச்சராய் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக கட்சி ஆட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. எதிர்தரப்பில் திமுகவும் இந்திரா காங்கிரசும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிற 39 எம்.பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இதில் அதிமுகவிற்கு இரண்டு இடம் தான் கிடைத்தது. இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு காங்கிரசம், திமுகவும் வள்ளல் எம்.ஜி.ஆர். அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே அந்த அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்ட மன்றத்திற்கு புதியதாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து 1980ல் மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சியை கலைத்து விட்டார்கள். அரசாங்கத்தை எந்த வித குறைகளும் இல்லாமல் நேர்மையோடு நடத்தி வந்த நம்மை கலைத்து விட்டார்களே என்ற கவலை இருந்தது. ஆயினும் எதையும் தாங்கும் இதயம் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் வரட்டும் மக்களை சந்திப்போம் என்ற விஷயத்தை தன் கட்சியில் உள்ள (பொறுப்பில்) அத்தனை பேர்களையும் அழைத்து பேசினார். தோல்வியே காணாத மக்கள் திலகம் அவர்கள் சற்றும் சோர்வு இல்லாமல் மிகவும் சுறுசுறுப்போடு, மனதிடத்தோடு தேர்தலை பற்றி பேசினார். கட்சியில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஆட்சியைக் கலைத்த மூன்றாவது மாதத்திலேயே தேர்தலை வைத்து விட்டார்கள். இந்த எம்.எல்.ஏ. தேர்தலில் பிரச்சாரம் நடந்தது. இதில் திமுக, இந்திரா காங்கிரசும், இணைந்து போட்டியிட்டது. அதிமுக தனித்து போட்டியிட்டது மற்ற சில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கலந்து கொண்டனர். மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை பார்த்து நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் ஆட்சியை கலைத்தார்கள்? என்று நியாயம் கேட்டார். தேர்தல் முடிவில் பொதுமக்களின் நியாயம் புரட்சித் தலைவர் பக்கம் நின்றது. மீண்டும் மக்கள் திலகம் ஆட்சியில் அமர்ந்தார்கள்.
 
பிறகு 1984ல் நடந்த பொதுத் தேர்தலில், “நான் செத்துப் பிழைத்தவன்டா. மக்கள் மனதில் குடி இருப்பவன்டா” என்பது போல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து கொண்டே 1985ல் மூன்றாவது முறையாக முதல்வரானார். அண்ணாவுடைய தம்பிகள் ஐந்து பேர் 1963ல் மதுரையில் திமுக மாநாடு நடந்தது. மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக மக்கள் திலகம், வளையாபதி, முத்து கிருஷ்ணன், எஸ்.எஸ்.ஆர். கே.ஆர்.ஆர், டி.வி. நாராயணசாமி இவர்கள் அத்தனை பேர்களும் பிரபல சினிமா நடிகர்கள். இவர்கள் அப்போது திமுக வில் சிறப்பு பேச்சாளர்களாக இருந்து வந்தார்கள். கட்சியில் இவர்களுக்கு எந்த பதவியும் எதுவும் இல்லை. இந்த ஐந்து பேர்களும் கட்சித் தலைவர் அண்ணா அவர்களுடைய விசுவாசிகளாகவும், பக்தர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை அண்ணா தன் இதயத்திற்குள் வைத்துக் கொண்டார். பிறகு, ஒரு சமயத்தில் அண்ணா அவர்கள் நாராயணசாமி, ராமசாமி, வளையாபதி, முத்துகிருஷ்ணன். இவர்கள் அண்ணா அவர்கள் கதை, வசனம் எழுதிய சினிமா, நாடகங்களில் நடித்தவர்கள். இவர்களை தன்னுடைய வலது, இடது கரமாக வைத்து இருந்தார். ஆனால், வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களை தன் இதயத்திலேயே வைத்துக் கொண்டார். மேலும் எம்.ஜி.ஆரை இதயக்கனி என்றும் சொன்னார். 1963ல் மதுரைக்கு மாநாட்டுக்கு சென்று இருந்த இந்த ஐந்து பேர்களும், மாநாட்டுப் பந்தலுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். பஞ்ச பாண்டவர்கள், அண்ணன் தம்பிகள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டது போல் இருந்தது. இந்த நேரத்தில் திடீரென்று வளையாபதி முத்து அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது என்றுமே, எங்கேயும் இப்படி ஒரே இடத்தில் சந்தித்தது அல்ல. இப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு மாநாட்டு விழாவை போட்டோ எடுக்க வந்திருந்த போட்டோ கிராபரை வளையாபதி அழைத்து வந்து விட்டார். இதை அறிந்த மற்ற நால்வரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே இந்த ஐந்து பேரும் வரிசையாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இந்த ஐந்து பேர்களும் நாடகத் துறை, சினிமா துறையில் அப்போதைய முன்னணி நடிகர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா இதயத்தில் “இதயக்கனி” ஆக இருப்பவர் மற்ற நால்வரும் அண்ணாவின் அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிட்டதக்க விஷயம்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:24:08 PM
54.40 ஆண்டுகால நண்பர்கள்

ஆரம்ப காலத்தில் சேலம், கோவை சென்னையில் சினிமா சம்பந்தமாக இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வார்கள். அதிலிருந்து, சினிமா, அரசியல் இதில் இந்த இருவருக்கும் பெரிய ஒற்றுமை ஏற்பட்டது. நல்ல நட்புடன் இருந்த இந்த இருவருக்கும் 1972ல் கட்சி கணக்கு வரவு செலவு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணக்கு கேட்பவர் மக்கள் திலகம். வரவு செலவு கணக்கை சொல்ல மறுத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். பிறகு, கணக்கு கேட்டவர் அண்ணா தி.மு.க. என்ற பெயரில் தனிகட்சி ஆரம்பித்துவிட்டார். இவர் 10 வயதிலேதான் படித்த பள்ளிக் கூடத்தில் (கும்பகோணம்) குடி தண்ணீர் பானை வாங்கிய விஷயத்தில் கணக்கு கேட்டவர். இவர் போட்ட கணக்கை கடைசி வரை யாராலும் அழிக்க முடியவில்லை. இவருடைய கணக்குபடி வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தவர். இவருடைய மறைவுக்குப் பிறகும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக்கு 40 ஆண்டு கால நண்பர் என்று அடிக்கடி சொல்வார் கலைஞர் அவர்கள்.
 
மனித நேயம் உள்ள மக்கள் திலகம்
 
ஏறத்தாழ 1960-61 ஆம் ஆண்டில் கை வண்டி இழுப்பவர்களுக்கும், கைரிக்ஷா இழுப்பவர்களுக்கும் காலுக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தவர். அதோடு மட்டுமில்லாமல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு மழையில் நனையாமல் இருக்க மழைக்கோட்டு கொடுத்தவர். ஒரு காலத்தில் மனிதனை உட்கார வைத்து, மனிதனே இழுப்பதா, மாட்டைப்போல் மனிதன் வண்டி இழுப்பதா, என்ற கேள்வியை எழுப்பியர் மக்கள் திலகம் அவர்கள்.
 
முயற்சியை கைவிடாதே, முயன்றால் முடியும் என்று வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்படும் நேரங்களில் இந்த சொல் அவருடைய அறிவில் தோன்றும். விதி யாரை விட்டது. அது யாராக இருந்தாலும் விடாது. ஆனால், மக்கள் திலகம் அவர்கள் தனக்கு சோதனை ஏற்படும் போது மட்டும் கடவுளை நினைப்பார். இந்த மூன்று எழுத்து கொண்டவர். முப்பிறவி எடுத்தவர். மூன்று முறை முதல் அமைச்சரானவர். அண்ணா என்ற மூன்று எழுத்துக்காரரிடம் அரசியல் கற்றுக் கொண்டவர். மூன்று எழுத்துள்ள கட்சியில் இருந்து விலகி மூன்றும் மூன்றும் ஆறு எழுத்தில் தனிக்கட்சி ஆரம்பித்தவர். இந்த மூன்று எழுத்துக்காரருக்கு மூச்சு நின்ற பிறகும் மூன்று எழுத்து மறையவில்லை.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:25:31 PM
53.மக்கள் திலகம் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்கள்


மக்கள் திலகம் அவர்கள் கும்பகோணம் அனையடி பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடப் பிள்ளைகளுடன் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றி மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விபரம் இது. அதாவது நீரில் நீந்தி விளையாடுவது, சடுகுடு விளையாடுவது, கிட்டி அடிப்பது, அதுதான் தற்போது கிரிகெட் பந்து விளையாடுவது, புட்பால் விளையாடுவது அந்த காலத்தை நினைத்து மிக பெருமையோடு சில சமயங்களில் பேசுவார். 1962ல் ராமாபுரம் தோட்டத்தில் தனக்கென்று ஒரு தனிவீடு கட்டும் போது, தான் நீந்திக் குளிக்க ஒரு நீச்சல் குளம் கட்ட சொன்னார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நிச்சல் குளத்தில் குளிப்பார். வாரத்தில் ஒரு முறை தண்ணீர் மாற்றப்படும். அடுத்து கிரிக்கெட், இந்த கிரிக்கெட்டை பெரிய அளவில் பல நாடுகள் கலந்து கொண்டு விளையாடுகின்ற காலத்தில், இந்த கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்க்க மிக ஆசைப்பட்டார். அதற்காக டெல்லி, பாம்பே போகமாட்டார். சென்னையில் விளையாடும் போது நேரில் பார்க்கத் தவறமாட்டார்.
 
இதில் 1974 ஆம் ஆண்டில் சென்னையில் விளையாடும் போது அப்போது திமுகவின் ஆட்சி நடந்த சமயம் முன்னதாகவே டிக்கெட்டு வாங்கிக் கொண்டார். அது 5வது நாள் ஆட்டம். இவர் முதல் நாள் விளையாட்டு மைதானத்திற்கு போகும்போது, நம்பர் படி இவருடைய இருக்கையில் வேறு சிலர் அமர்ந்து இருந்தார்கள். அது சமயம் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவர்கள் தனது இருக்கையில் இருந்தவர்களை எழுந்து கொள்ள சொல்லாமல் அவர்களுக்குப் பின்புறம் காலியாக இருந்த இருக்கையில் பெருந்தன்மையோடு போய் அமர்ந்தார். இவர் உள்ளே நுழைந்த உடனே எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர். என்று ஒரே சலசலப்பு ரசிகர்கள் இடையில் ஏற்பட்டது. பிறகு 1/2 மணி நேரத்தில் எழுந்து புறப்பட்டு வந்து விட்டார் மாம்பலம் அலுவலகத்திற்கு காரணம், தனகென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் வேறு ஆட்கள் அமர்ந்திருந்தது. மற்றொன்று ரசிகர்களுடைய சலசலப்பு. மாம்பலம் அலுவலகத்திற்கு வந்தவுடனே தன்னுடன் கிரிக்கெட் பார்க்க வந்த ஒரு முக்கிய நண்பரிடம், உடனே ஒரு டி.வி. வாங்க வேண்டும் என்றார். அவரும் சற்றும் தயங்காமல் மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டையில் உள்ள ECTV கம்பெனியில் கறுப்பு – வெள்ளை பெரிய சைஸ் டி.வியை வாங்கி வந்து விட்டார். கூடவே, அந்தக் கம்பெனி ஆட்கள் வந்து, இணைப்புகளைக் கொடுத்து டி.வியை இயக்கி வைத்தார்கள். இதெல்லாம் ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிந்தது. மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம். எந்தத் தொந்தரவும் இல்லாமல் நண்பர்களுடன் டி.வி.யில் கிரிக்கெட்டை பார்த்து மகிழ்ந்தார். இதே போல் தோட்டத்திலும் டி.வி. ஏற்பாடு செய்யப்பட்டது. 1974ல் தான் முதல் முதலாக சென்னை நகருக்கு டி.வி. வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு மக்கள் திலகம் அவர்கள் கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கையில், படப்பிடிப்பிலோ அல்லது வேறு எங்கேயாவது போக நேர்ந்தால், கையில் சிறிய ரேடியோ வைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையை கேட்பார்.
 
அதுவும் முடியாவிட்டால் மாம்பலம் அலுவலகத்தில் உள்ள டி.வி.யை போட்டு கிரிக்கெட்டை பார்த்து அவர் எங்கே இருக்கிறாரோ அங்கு ஆட்டத்தின் விபரத்தை போனில் உடனுக்குடன் சொல்ல வேண்டும். பொதுவாகவே மாம்பலம் அலுவலகத்தில் நானும், மற்றொருவரும் இருப்போம். இதில் எப்படியும் ஒருவர் இரவு, பகலாக இருந்து அலுவலகத்தை கவனித்துக் கொள்வோம். மக்கள் திலகம் அவர்கள் முதல்-அமைச்சரான பிறகு, பொதுவாகவே இம்மாதிரி விளையாட்டுத் துளைகள் மீது மிகவும் அக்கறை செலுத்துவார். 1983ல் கிரிக்கெட் உலகச் சாம்பியனுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள், கலந்து கொண்டு விளையாடியதற்காக அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் ஒரு வீட்டு வசதி வாரியத்தின் பேரில் ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அது சமயம், ஸ்ரீகாந்த் அவர்கள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, இவர் விளையாடிய கிரிக்கெட் மட்டையை பரிசாக அளித்தார். ஏனென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கிரிக்கெட் ரசிகர் என்பதை நன்கு அறிவார். அந்தக் கிரிக்கெட் மட்டையை மக்கள் திலகம் அவர்கள் மிக பத்திரமாக தன் வீட்டில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பிறகு, அந்த கிரிக்கெட் மட்டையை, தற்போது நினைவு இல்லத்தில் ஒரு அலமாரியில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் தான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதற்காக வாங்கிய டி.வி யையும் பொதுமக்கள் பார்வைக்காக அவரது அலுவலக அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது அவருடைய வரலாற்றில் ஒரு முக்கியம் வாய்ந்த விஷயம்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:28:59 PM
55.தனி அலுவலகம்


மக்கள் திலகம் அவர்களுக்கு 1970ல் சென்னை தி.நகர் பகுதியில் ஆற்காடு முதலியார் என்ற தெருவில் ஒரு கட்டிடம் வாங்கி அதை தன்னுடைய தனி அலுவலகமாக வைத்து, தன்னை நேரில் பார்த்து பேசனும் என்று சொல்பவர்களை எல்லாம் தனக்கு சூட்டிங் நேரங்களை அனுசரித்து இந்த ஆபிசுக்கு வரச்சொல்வது வழக்கம்.
 
ஆரம்பத்தில் படிக்க வசதியில்லாத மக்கள் திலகம், பிறகு ஒரு பட்டப்படிப்பு படித்த ஒரு பட்டதாரி போல் கல்வி பயின்றுள்ளார் (தனிப்பட்ட) முறையில் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மக்கள் திலகம் அவர்கள் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரைதான் அன்றைய சூழ்நிலையில் படிக்க முடிந்தது. பிறகு, அவர் வேலை செய்யும் காலத்தில் முடிந்த வரையில் தமிழும், அங்கிலமும் படித்தார். ஒரு மனிதன் வாழ்வில் உயர்ந்த புகழ் அடையவேண்டும் என்றால் உயர்கல்வி படிக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஓர் அளவிற்காவது படித்திருக்க வேண்டும்.
 
அந்தக் காலத்தில் எல்லாம், அனைத்து வீடுகளிலும் அவ்வளவாக மின்சார வெளிச்சம் இருக்காது. நாங்கள் கும்பகோணம், காரைக்கால் இங்கே எல்லாம் நாங்கள் குடியிருந்த போது மண்ணென்ணை விளக்குத்தான் சென்னைக்கு வந்த பிறகு தான் மின்விளக்கு உள்ள வீடு கிடைத்தது. நான் இரவு நேரங்களில் தெருவில் உள்ள விளக்கின் வெளிச்சத்திலே படித்துள்ளேன். அப்போதெல்லாம் குண்டு பல்புகள் தான் மெர்க்குரி (Mercury) டியூப்லைட்கள் எல்லாம் கிடையாது. நாடகக் கொட்டையில் எல்லாம் பெரும்பாலும் பெட்ரோமாஸ் விளக்குதான். ஒலி பெருக்கி இருக்காது. கத்தித்தான் பேசணும், பாடனும். எப்படியோ நானும் பத்துப் பதினைந்து வரை படித்தவர்கள் போல் கல்வி அறிவு பெற்றுள்ளேன். எனக்கு கல்வி அறிவில் உள்ள ஆர்வத்தில்தான், இப்போது இவ்வளவு புத்தகங்களை எல்லாம் வாங்கி அடுக்கி வைத்து இருக்கிறேன். என்று, 1976ல் மாம்பலம் அலுவலகத்தில் ஒரு அரசியல் பிரமுகரிடம் மக்கள் திலகம் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:32:43 PM
56.டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்


மக்கள் திலகம் அவர்கள் மிக ஆர்வத்தோடு ராமாபுரம் தோட்டத்து வீட்டிலும், மாம்பலம் அலுவலகத்திலும் சேர்த்து வைத்துள்ள புத்தகங்கள் அதிகம் அதில் தமிழ் மட்டும் 3244 ஆங்கிலம் 674 புத்தகங்கள், இதில் (Encyclopaedia) என்சைக்ளோபீடியா போன்ற இன்னும் எத்தனையோ முக்கியமான புத்தகங்களும் இதில் அடங்கும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் தமிழ் அகராதி இப்படி இன்னும் எத்தனையோ விதமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை “டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்ல”த்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பழைய காலத்துப் பல நாட்டு நாணயங்களும், அதாவது 1763 ஆண்டு முதல் 1968 வரை உள்ள இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ், ஆகிய நாடுகளுடைய நாணயங்கள் சுமார் 100 நாணயங்கள் இதை மக்கள் திலகம் மிக ஆசையோடு பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இப்போது இந்த நாணயங்கள் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் அவர் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்) மிக மிக பிரியத்துடன் வளர்த்த சிங்கம், 1968ல் அவரது சொந்தப் படமான “அடிமைப்பெண்” நடிப்பதற்காக பாம்பேயில் இருந்து வாங்கி வந்த சத்யா ஸ்டியோவில் ஒரு பெரிய அளவில் கூண்டு அமைத்து, அதில் மாலை, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அடிமைப்பெண் படத்தில் அந்த சிங்கத்தோடு சண்டை போடும் காட்சிப் படமான பின்பு மிருகக் காட்சி சாலையில் வைத்து இருக்கும் படி கொடுத்து விட்டார். அந்த சிங்கத்திற்கு வேண்டிய சாப்பாட்டு செலவுக்கான பணத்தை மாதாமாதம் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கி வந்தார். பிறகு, அந்த சிங்கம் 1974ல் இறந்து விட்டது. சிங்கம் இறந்த தகவலை உடனடியாக மக்கள் திலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். இந்தச் செய்தியை கேட்டவுடன் மிருகக் காட்சி சாலைக்கு மக்கள் திலகம் சென்று பார்த்தார். பிறகு உடனே அந்த சிங்கம் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போலவே “பாடம்” செய்து தர வேண்டும். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று மக்கள் திலகம் அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி, அந்த சிங்கத்தை பாம்பேயில் இருந்து நல்ல நிபுணர்களை வரவழைத்து, அவர் விரும்பியபடியே மிகப் பிரமாதமாக அமைத்துக் கொடுத்தனர். உயிர் இல்லாத அந்த சிங்கத்தை தனது ராமாபுரம் தோட்டத்து வீட்டில் ஒரு பெரிய கண்ணாடிக்குள் அந்த சிங்கத்தை வைத்து மக்கள் திலகம் அவர்கள் மாடிக்குச் செல்லும் வழியின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் வெளியே போகும் போதும், வரும் போதும் அவருடைய பார்வைக்குப்படும் படியாகவும் வைத்திருந்தார்.
 
பின்னர் மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பின்னர் அந்த சிங்கம் உட்பட தோட்டத்து வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் இந்த நினைவு இல்லத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. நினைவு இல்லத்தில் மக்கள் திலகம் பெற்ற ஆயிரக்கணக்கான பரிசுப் பொருட்களுடன் அவர் உபயோகப்படுத்திய பொருட்களும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் மிகவும் விரும்பி சுமார் பத்து வருடங்களாக உபயோகப்படுத்திய அம்பாசிடர் காரும், மற்றும் 7அடி நீளம், 4 அடி உயரம். பெயர் ராஜா என்ற சிங்கமும் நினைவு இல்லத்தில் மிக முக்கியமான பொருட்களாகப் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடமானது 1970ல் இருந்து 1987வரை அலுவலமாக இருந்தது. இந்த கட்டிடம் வள்ளலுக்கு ராசியான ஒன்றாகும். அதனால் தான் அவருக்குப் பிறகு, இதை நினைவு இல்லமாகத் தொடங்க வேண்டும் என்று அவரே எழுதியிருக்கிறார். இந்தக் கட்டிடம் தற்போது உலகம் முழுவதும் தெரிந்த ஒரு இடமாகி உள்ளது.
 
மக்கள் திலகம் அவர்கள் அவர்களுடைய சுய சம்பாதியத்தில் வாங்கிய சொத்துக்களில் முக்கியமாக, “ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டம்”, அடையார் சத்யா ஸ்டூடியோ இவை இரண்டும் அவருக்கு மிக முக்கியமான சொத்துக்கள் ஆகும். இதில் அவர் வாழ்ந்த இடம் ராமாபுரம் தோட்டத்தின் ஒரு பகுதியில் காது கேளாத, வாய்பேச இயலாத குழந்தைகளுக்காக பெருமளவில் தங்கிப் படிக்கும் வசதியோடு உணவோடு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அந்தப் பள்ளியில் 300 குழந்தைகள் படிக்கிறார்கள். அடுத்து அவர் சொந்தமாக வாங்கிய மிகப் பிரபலமாகவும் விளங்கிய அடையாறு சத்யா ஸ்டூடியோவில் “எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலைக்கல்லூரி” என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கல்லூரியில் படிக்கிறார்கள். மங்காத புகழ் பெற்ற மக்கள் திலகம் அவர்களது வரலாற்றில் இது ஒரு சான்றாகும்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:38:19 PM
57.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நீரும் – நெருப்பும்


மக்கள் திலகம் கோபத்தில் நெருப்பாய் இருப்பாரமே? என்று சிலர் கேட்பதுண்டு. அப்படி அவர் நெருப்பாய் இருந்தாலும், உடனே நீராகி விடுவார். நெருப்பிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று பார்த்தால், அது மிகவும் எல்லாவற்றுக்கும் மிக உயர்ந்தது. ஆனால் அதனிடம் யாரும் கோபம் வரும்படி நடந்து கொள்ளக் கூடாது. சூரியன் தான் நெருப்பு. சந்திரன் தான் நீர். நீரும்-நெருப்பும் இல்லை என்றால் உலகம் இல்லை அதாவது வெளிச்சம் இருட்டு இவை இரண்டும் ஜீவராசிகளுக்கும், உலகத்தில் உள்ள மனிதனுக்கும் தேவையானதாகும். இதில் இருட்டு எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் திலகம் அவர்கள் சொன்ன உதாரணங்கள் பின்வருமாறு.
 
நெருப்பு எப்போதுமே சூடாகத் தான் இருக்கும் அதனைத் தொட்டால்தான் சுடும். அது போலவே தான் மக்கள் திலகமும். கோபம் யாருக்குத் தான் வராது. உலகினில் வாழும் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கோபம் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதோடு மட்டுமில்லாமல், இருட்டு என்பது நம்மிடம் உள்ள ஒன்றாகும். வெளிச்சம் என்பது நாம் உண்டாக்கிக் கொள்ளும் ஒன்றாகும். கண்ணை மூடினால் இருட்டு. கண்ணைத் திறந்தால் வெளிச்சம் இதை ஒன்றுமே அறியாதவர்கள் பார்வையற்றவர்கள். இயற்கை என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகும் என்று கூறுவார்.
 
1974ல் மாம்பலம் அலுவலகத்தில் ஒரு முக்கியஸ்தர் கேட்ட கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில்கள். நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம். என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:39:23 PM
58.வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் “அடிமைப்பெண்” இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் “25 நாட்கள்” நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
 
அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மேகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே இது என்ன பரிசு? என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத்திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புறட்டிப் புறட்டிப் பார்த்தார். அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள் என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது. முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா என்று கேட்டதும், ஜானகி அம்மையார் உங்கள் தலையில் இந்தத் தொப்பியை வைத்தவர் ஒரு நாட்டு முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா, சரி இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கருப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள் என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து இருக்கிறதுங்க, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
 
சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். அதே போல் அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். “அடிமைப்பெண்” படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் எப்படி இருக்கு என்று கேட்க ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நால்வரும் கூறினர்.
 
தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார் நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது. மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள். “சத்யா ஸ்டுடியோ”வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் ஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார். பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார். அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால் எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.
 
தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், அண்ணே என் வாழ்நாளில் அல்லாவையே பார்த்த உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார். படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை “மேக்அப்” அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம். தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை அவருக்கு எல்லோரும் சமம். மேலும் அவர்தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார். பாய் வரும் வரை மக்கள் திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார். அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே மக்கள் திலகத்திற்கு சாப்பாடு தினமும் இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார் மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார். மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார். பாய் மக்கள் திலகம் தந்த பணத்தை எண்ணிப் பார்க்காமல், தன் பையில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:40:58 PM
59.மக்கள் திலகமும் மாவீரன் ஜேப்பியாரும்


இவர் 1972ல் மக்கள் திலகம் அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் மக்கள் திலகம் அவர்களை சந்தித்துப் பேசி அண்ணா திமுக கட்சியில் சேர்ந்தார். கட்சியில் யார் சேர்ந்தாலும் அவர்கள் கட்சியில் உறுப்பினர் ஆக வேண்டும். பிறகு, நான் ஒரு உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் மக்கள் திலகம் அவர்கள் கட்சிக்கு முதல் உறுப்பினர். உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் இருக்கும். அந்த விண்ணப்பப் படிவத்தில் அண்ணா அவர்களுடைய உருவப்படம் மட்டும் இருக்கும். அந்த விண்ணப்பப்படிவத்தில் மொத்தம் 25 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்யலாம். பிறகு நம்பர் படி அடையாள அட்டை கொடுக்கப்படும். இதில் புரட்சித் தலைவருடைய விண்ணப்பப்படிவத்தில் அவர்களுடைய பெயரும் இருக்கிறது. வயது 33 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். 1973ல் தென் சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவர் அரசியலில் மிகவும் சுறுசுறுப்பானவர். 1973ல் திண்டுக்கல் இடைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் மிகவும் ஈடுபட்டவர். புரட்சித் தலைவர் பேசும் மேடைகளில் இவரும் பேசுவார். அப்போதைய தமிழ்நாட்டை ஆளும் கட்சியினரான (திமுக)வினர் மிகவும் அராஜகமாக ஈடுபட்டார்கள். இதில் சென்னை நகரம் முழுவதும் இவர்களுடைய ஆட்சியாகவே இருந்தது. இதை எல்லாம் மக்கள் திலகம் அவர்கள் மிகவும் அமைதியாகச் சமாளித்தார். எதற்கும் அஞ்சாமல் சென்னை நகர அண்ணா திமுக வினர் மிகத் திறமையாகச் செயல்பட்டனர். வீரகோஷம் போட்டார்கள். நியாயமான சில போராட்டங்களை நடத்தினார்கள். தன்னுடைய அரசியல் ஆசான் புரட்சித் தலைவரை அடிக்கடி சந்தித்து அரசியலை பற்றி பேசுவார். இப்படி அவர்கள் இவன் நல்ல ஒரு அரசியல் வீரனாக வருவான் வயது 35 என்று சிலரிடம் சொல்வார்.
 
இப்படி கட்சி விஷயமாக அவர்களை அழைத்துப் பேசுவதும், சில சமயங்களில் கட்சி, கூட்டத்திற்கு போகும் போது வெளியூர்களுக்கு இவரை கூடவே அழைத்துச் செல்வதும் உண்டு. 1975ல் திமுகவினருக்கு இவர் மீது மிகவும் பொறாமையாக ஏற்பட்டு, இவரை எப்படியாவது அடக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அந்தக் கட்சி தலைவரிடம் சொல்லி இவர் மீது ஒரு பொய் வழக்கைபோட்டு அபாண்டமாக இவரை சிறையில் அடைத்தார்கள். ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, இதை அறிந்த, புரட்சித் தலைவர் அவர்கள் கோபப்படாமல் மிக அமைதியாக இருக்கும் படி அதிமுகவினர்களுக்கு உத்தரவு இட்டார். மிக விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் கவலைப்படாதீர்கள். தினமும் நீங்கள் சிறைக்கு சென்று, அவரைப் பார்த்து ஆறுதல் சொல்லி வாருங்கள் என்று கட்சியில் உள்ள எல்லா பொறுப்பாளர்களிடமும் சொன்னார். அதன்படி தினமும் சிறையின் முன், வாசல் முன் ஜே.ஜே. தான். சிறையில் இருக்கும்போது எந்தக் குறையும் இல்லாமல், அப்போதுள்ள சில சிறை அதிகாரிகள் கவனித்து வந்தார்கள். அவர் தன் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் கட்சிக்காக நான் எவ்வளவு நாட்கள் ஆனாலும், பரவாயில்லை நான் சிறையில் இருக்கிறேன் என்று சிறைக்குள் இருந்து வீர முழக்கம் இட்டார். இவருடைய குடும்பத்தில் மனைவியும், 10 வயதிற்குள் இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் தான். இவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் புரட்சித் தலைவர் அவர்களே நேரடியாக கவனித்து வந்தார்.
 
இதற்கு முன்னதாகவே 1973ல் அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் மனுவை, சென்னை கவர்னர் அவர்களிடம் கொடுத்து இரு மாபெரும் பேரணியாக சென்று (பொதுமக்கள் ஆதரவுடன்) கொடுத்தார். பிறகு கலைஞர் கருணாநிதியை 1976ல் முதல்வர் பதவியில் இருந்து இறக்கினார்கள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், மத்திய அரசால் அவசர சட்டப் பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பிறகு, சிறையில் இருந்த ஜேப்பியார் அவர்கள் விடுதலை ஆகிவிட்டார். 1977ல் தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் நடக்கின்ற காலத்தில் தமிழ்நாட்டின் எல்லாத் தொகுதிகளுக்கும் அண்ணா திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளி சுற்றுப் பயணமாக மக்கள் திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து வந்தார் கூட பிரச்சாரத்திற்கு அவரையும் அழைத்து சென்றார். இந்தத் தேர்தலில் அண்ணா திமுக கட்சி அமோக வெற்றி பெற்றது. 30.6.1977ல் ஆட்சி அமைத்தது புரட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சர் ஆனார். இப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் போகும் போது ஜேப்பியாரையும் அழைத்துச் செல்வார். மக்கள் திலகம் மறைந்த பிறகு, அறவே அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார் ஏன்? இவர் புரட்சித் தலைவர் ஆசியோடு அவரிடம் நேரடியாக கட்சி உறுப்பினர் ஆனவர் புரட்சித் தலைவரிடம் அரசியல் கற்றுக் கொண்டவர் ஆசானாக ஏற்றுக் கொண்டவர்.
 
புரட்சித் தலைவரின் மனதைத் தொட்டவர் அரசியலில் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். எல்லா அரசியல் வாதிகளுக்கும், பொது மக்களுக்கும் அறிமுகமானவர். புரட்சித் தலைவர் ஆட்சியில் இவருக்கு பொறுப்பு கொடுத்தார். பிறகு, சென்னை குடி நீர்வாரியத் தலைவர் பதவியும் கொடுத்தார். மொத்தத்தில் புரட்சித் தலைவர் தன்னுடைய சொந்தக் காரராக வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்களுடைய மனதில் சென்னையில் ஒரு பள்ளிக் கூடம் கட்ட வேண்டும் சொந்தத்தில் ஸ்டுடியோ வாங்க வேண்டும் ஆஸ்பத்திரி நடத்த வேண்டும் மருத்துவக் கல்லூரி இன்சினீரியங் கல்லூரி கட்ட வேண்டும் என்ற எண்ணப்படி எல்லாமே நடந்தது. 1960ல் வடபழநியில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் விருகம்பாக்கம் சத்யா தோட்டத்தில் ஒரு சிறிய ஆஸ்பத்திரி அடையாரில் ஸ்டூடியோ (சத்யா) பிறகு, மக்கள் திலகம் குடியிருக்கும் ராமாபுரம் தோட்டத்தில் இருந்து பூந்தமல்லி என்ற ஊருக்கு போகும் வழியில் நெடுஞ்சாலைக்கு அருகாமையில் ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கட்டப் பட்டது. இதன் பெயர் “ராமச்சந்திரா மருத்துவமனை”. இந்த மருத்துவமனையை மக்கள் திலகம் நினைத்த மாதிரி எல்லா வைத்திய வசதியும் கொண்ட ஆஸ்பத்திரி ஒரு பெரிய அளவில் கட்ட முன் வந்தார் ஒரு பெரிய மாமனிதர்.
 
அவர்தான் ராமசாமி உடையார் இந்த மருத்துவமனையை கட்டி முடித்த பிறகு இதன் திறப்பு விழாவுக்கு சென்று இருந்த மக்கள் திலகம் அவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. கடவுள் அருள்பெற்று பெரும் வள்ளல் ஆனார். விதவிதமான பட்டங்கள் பெற்றார். ஆனால் இவர் நினைத்ததில் ஒரு விஷயம் மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அதுதான் இன்ஜினியரிங் கல்லூரி அது மக்கள் திலகம் அவர்களுடைய மறைவுக்கு பிறகு சென்னையிலிருந்து மகாபலிபுரத்திற்கு போகும் வழியில் பிரம்மாண்டமாக இரு இன்ஜினியரிங் கல்லூரி கட்டப்பட்டு அதற்குப் பெயர் “அன்னை சத்தியபாமா” இது மக்கள் திலகம் அவர்களுடைய தாயாருடைய பெயர் இந்தக் கல்லூரியை கட்டி இதை மிக சிறப்பாக, இந்தியாவே புகழும் அளவிற்கு நடத்தி வருபவர்தான் இந்த மாமனிதர் அவர்கள் இதைப் போல் பொறியியல் கல்லூரி சென்னை நகருக்கு அடுத்துள்ள மதுரவாயல் என்ற இடத்தில் மிகப் பெரிய அளவில் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியுடைய நிறுவனர் மக்கள் திலகம் அவர்களுடைய அன்புத் தம்பிகளில் ஒருவரான திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் வரும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
இவருக்கு இரண்டு மகன்கள் சோமசுந்தரம், குமார் ஆகிய இவர்கள் இருவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவர்கள். 1960லிருந்து பிறகு 1973ல் அண்ணா திமுகவில் கட்சியின் உறுப்பினர் ஆனார்கள். இவர்கள் பக்கத்து வீட்டில் வசித்தது மக்கள் திலகம் அவர்களின் (மாம்பலம்) அலுவலகத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. இவர்களைத் தவிர மக்கள் திலகம் இந்தத் தெருவில் உள்ள யாரிடமும் பழக்கம் வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் திலகம் அவர்களுக்கு இந்த (மாம்பலம்) அலுவலகம் மிகவும் ராசியாக விளங்கியது. இதில் சினிமா, அரசியல், அரசாங்கம் ஆகிய மூன்று துறைகளையும் மிகச் சிறப்பாக நடந்தது. தனக்கு ராசியான இந்தக் கட்டிடக் கதவு எண் 18 ஆகவும் பிறகு 27 ஆகவும் இருந்தது. மக்கள் திலகம் அவர்கள் பிறந்த ராசிப்படி ராசியான எண்ணாக ஒன்பது தான். ஆனால் அவர் ராசி எண்ணை 27-18 என்ற எண்களை இன்று வரை மாற்றவில்லை. தனது இஷ்டமான எண்ணாகக் கருதிய 7வரும்படி போன் நம்பர்கள் வைத்துக் கொண்டார். 442222 இதே போல் தன்னுடைய கார்களுக்கும் நம்பர்களைக் கூட்டினால் 7 வரும்படி அமைத்துக் கொள்வார்.
 
இதில் அவர் 1956ல் முதன்முதலாக புதிய கார் “பிளைமெளத்” பெரிய கார் வாங்கி அதற்கு 2248 என்ற நம்பருடன் வாங்கினார். அந்தக் காருக்குக் கருப்பு சிகப்பு பெயிண்ட் அடிக்கச் சொன்னார். அப்போது மக்கள் திலகம் அவர்கள் திமுக வில் அண்ணாவுடைய பக்தராக இருந்தார். இந்தக் கருப்பு சிகப்பு நிறமுள்ள 2248 பிளைமெளத் கார் ஸ்டூடியோக்களுக்குள் நுழையும் போது ஒரே பரபரப்பாக இருக்கும். காலம் காலமாக அரசியல் தலைவர்கள் காருக்கு யாருக்கும் இந்த மாதிரி தன்னுடைய கட்சிக் கொடியின் நிறத்தை தனது காருக்கு அடித்தது இல்லை. வேட்டி கரை, துண்டு இவைகளில் மட்டும் தான் அந்தக் கட்சிக் கொடியின் நிறம் இருக்கும். இந்தக் காரில் கட்சிக் கொடி நிறம் இருப்பதைப் பார்த்து அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் ஆச்சரியப்பட்டார்கள். காருக்கு பிறகு சில முக்கியஸ்தர்களின் யோசனையின் படி கருப்பு, சிகப்பு கலருக்கு பதிலாக காருக்கு வேறு நிறமாக வெள்ளை, இளம்பச்சை பெயிண்ட் அடித்தார். மக்கள் திலகம் அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வாழ்ந்த வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து, எங்கே எல்லாம் நடந்து சென்றாரோ அங்கே எல்லாம் காரில் செல்ல வேண்டும் என்று கனவு கண்டார். பிளைமெளத் காருக்கு அடுத்து ஒரு அம்பாசிடர் கார் வாங்கினார். அந்தக் காருக்கும் நம்பர் 9655 நம்பர் அதுவும் ராசி நம்பர் 7. பிறகு 1976ல் புதியதாக வேறொரு அம்பாசிடர் கார் வாங்கினார். அந்தக் காருக்கு நம்பர் TMX 4777 ஆகும். இதுவும் அவருடைய ராசி எண் 7. இந்தக் கார் வாங்கிய பிறகு ஏசி வசதி செய்யப்பட்டது. பின், எங்கு சென்றாலும் இதில்தான் போவார். மக்கள் திலகம் தமிழக முதலமைச்சர் ஆன பிறகு இந்தக் காரைத் தவிர வேறு எந்தக் காரிலும் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1976ல் இருந்து 1987 டிசம்பர் மாதம் வரை இந்தக் காரைப் பயன்படுத்தினார். அப்போதைய மாம்பலம் எம்.ஜி.ஆர். அலுவலகம் என்பதுதான் இப்போது “டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவு இல்ல”மாகத் திகழ்கிறது. அந்த TMX 4777 காரை இந்த நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அயிரக் கணக்கான பொருட்களில் இந்தக் கார் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இப்படி வள்ளலுடைய வரலாற்றில் இந்த மாம்பலம் அலுவலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளது. அதனால்தான் இந்த அலுவலகக் கட்டிடத்தை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று வள்ளல் அவர்கள் கூறி உள்ளார்கள். இந்த நினைவு இல்லத்தைக் காண்பதற்கு தினமும் ஆயிரக் கணக்கான பேர்கள் வந்து போகிறார்கள். இதில் எல்லா அரசியல்வாதிகளும் பாகுபாடு இன்றி வருகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களும், உள்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்தும் பல மதத்தினரும் மதவேறுபாடு கருதாமல் வந்து செல்கிறார்கள். இது அவருடைய வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:42:24 PM
60.கொட்டும் மழையில் மக்கள் திலகம்


மக்கள் திலகம் அவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்களுடைய குறையைக் கேட்கிறார். 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் இது. மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அதிகமாக உள்ளது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது சமயம் வெள்ளம் இந்த ஊருக்குள் புகுந்து விடும் இது வழக்கம். மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சரான பிறகு, இப்படி மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இது ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் உடனடியாக அந்த இடத்திற்கு சில முக்கிய அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வை இட்டார். அது சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தது மட்டுமல்லாமல், இனிமேல் இப்படி இந்த ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் கட்டும்படி உத்தரவு இட்டார். காலதாமதம் செய்யாமல் தடுப்புச் சுவரும் விரைவாக கட்டப்பட்டது. அந்தப் பகுதியல் வசிக்கும் மக்களுக்கு இந்த வெள்ளப் பெருக்கு பற்றிய கவலை அறவே ஒழிந்தது. இப்படிப் பட்ட வள்ளல் வசிக்கும் ராமாபுரம் தோட்டம் வீட்டுக்குள்ளும் இதே ஆற்று வெள்ளம் புகுந்தது வெள்ளத்தின் சீற்றத்திற்கு இவர் யார், அவர் யார் என்று பாகுபாடு கிடையாது. 1985ல் மக்கள் திலகம் அவர்கள் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆன பிறகு, அந்த வருடம் மழை தமிழ்நாட்டில் மிக அதிகமாக பெய்தது. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒரு வாரமாக ஓயாத பெரும் அளவில் மழைபெய்தது. அது சமயம் எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஆறு அது எம்.ஜி.ஆர். தோட்டத்தை ஒட்டியவாறு செல்கின்றது. இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு கண்மூடித் தனமாக சென்று இரவு நேரத்தில் மக்கள் திலகம் வசிக்கும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்து, அது மேலும் அதிகமாகி வெள்ளம் வீட்டிற்குள்ளேயும் புகுந்துவிட்டது. தோட்டத்தில் உள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிலைமை என்ன ஆகி இருக்கும்.
 
மக்கள் திலகம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்த்து உடல் நலம் பெற்று, சென்னைக்கு வந்து மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இனிமேல் முன்போல் நீங்கள் ரொம்பவும் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது இப்படி சில விஷயங்களை சொல்லி உள்ளார்கள் டாக்டர்கள் அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்கள் முன்போலவே அரசுப் பணிகளையும், அரசியலையும் கவனிக்க தவறவில்லை. தனக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் கூட வரக்கூடாது என்று நினைக்கும் வள்ளலுக்கு, அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கும் அளவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அவர் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இம்மாதிரி வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து பழகிப் போனவர். ஒரு உதாரணம் இவருடைய தந்தை கோபாலன் அவர்கள் இறந்து போனவர் இவருக்கு முன்னால் பிறந்த இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் நோயால் இறந்து போனவர்கள். பிறகு, தான் ஒரு சினிமா நடிகர் ஆனதும், அது சமயம் இவருக்குத் திருமணம் ஆகி, அந்த மனைவி ஒரு வருடத்திலேயே இறந்து போனதும், அடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவி, சில வருடங்களில் உடல் நலமில்லாமல் இறந்து போதும், இதைவிட தன்னை தங்கமகனே! நீ இந்தத் தரணியில் நீ ஒரு தனி மனிதனாக புகழோடு வாழவேண்டும் என்று தன்னுடைய தாய் அடிக்கடி சொல்வார். அந்தத் தாயும் சிலமாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். பிறகு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் தனக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடன் பிறந்த அண்ணனும் இறந்து போனார். இப்படி இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கும் இதயத்திற்கு தன் வீட்டுக்கு தண்ணீர் புகுந்து விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாரே தவிர, கவலைப்படவில்லை. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த விஷயத்தை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், மேலே இருந்து உடனே கீழே வந்து விட்டார். அது சமயம், கீழே வீடு முழுவதும் ஒரு அடி தண்ணீர் நின்றது. உடனே வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு, வெளியே தோட்டத்தில் தண்ணீர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
 
தன்னுடைய பாதுகாப்பாளர் (போலீஸ்) அவரை அழைத்து வேலை ஆட்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இரவில் அவர்களுடைய வீட்டுக்குப் போகாமல், தோட்டத்திலேயே தங்குபவர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மேலே போய் இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் மேலே போய் இருந்து கொள்ளுங்கள். ஆடு, மாடுகள் எல்லாம் என்ன ஆச்சு? இப்படி தண்ணீருக்குள் நின்று, தன்னுடைய தோட்டத்திற்கு 1962-ல் குடிவந்த பிறகு, அதாவது 1985 நவம்பர் மாதம் 25 வருடம் ஆகிவிட்டது. இப்படி ஒரு வெள்ளம் தோட்டத்திற்குள் புகுந்தது இல்லை இதுவும் ஒரு சோதனையா என்று பெருமூச்சு விட்டார் இதைபிறகு மற்றவர்களிடமும் சொன்னார். அடுத்தநாள் தோட்டத்திற்குள் புகுந்த தண்ணீர் குறைந்த பாடில்லை. மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் திலகம் அவர்களை, உடனே தோட்டத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஒரு நல்ல ஒட்டலில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் முடிவு எடுத்து, மக்கள் திலகம் அவர்களை தோட்டத்தில் இருந்து அழைத்து வரலாம் என்றால் அவருடைய கார்கள் அனைத்தும் தண்ணீருக்குள் நிற்கிறது. அதனால் அரசாங்கக் காரில் புறப்பட்டார் ஜானகி அம்மாளுடன், மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்க வைத்தார்கள். பிறகு, அங்கிருந்து கொண்டே கோட்டைக்குச் சென்று, வெள்ளநிவாரணப் பணிகளை கவனித்தார். சென்னையில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் மிக மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகியது. தோட்டத்திற்குள் இருந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல் அனைத்தும் காப்பாற்றப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது.
 
தோட்டதிற்குள் புகுந்த தண்ணீர் வெளியேறிய பிறகு, வீட்டுக்குள் புகுந்த சில பாம்புகளை அடித்துவிட்டு, வீட்டைக் கழுவி, சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வாரம் ஓட்டலில் தங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த கதி என்றால் தமிழ் நாட்டின் ஏழை மக்களுடைய நிலைமை எப்படி இருந்து இருக்கும். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். மழையில் நனைந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கெல்லாம் நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடு செய்த, அந்த முதல்வருடைய வீட்டுக்குள் பெரும் வெள்ளம் புகுந்து, அவர் வெளியே வரமுடியாமல் இருந்ததை என்னவென்று சொல்வது.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:43:16 PM
61.தங்கத்தம்பியை காணத்தவித்த அண்ணன்


இதைவிட ஒரு முக்கியமான விஷயம் அது என்னவென்றால்! தம்பியை காண தவித்த அண்ணன். 1985-ல் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் மழைவெள்ளம் புகுந்துவிட்டது என்ற செய்தியை அறிந்த பெரியவர் சக்கரபாணி அவர்கள், சென்னை ராயப்பேட்டை என்ற இடத்தில் இருந்து சுமார் ஏழு மைல் கடந்து வரவேண்டும். அது ஒரு முக்கிய விஷயம் அல்ல எப்படி எந்தப் பக்கம் சுற்றி வந்தாலும், எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் நுழைய முடியாமல் இருந்தது. தோட்டத்திற்குள் 3 அடி தண்ணீர் அதாவது ஏறக்குறைய இடுப்பு அளவு தண்ணீர் உள்ளது. அண்ணன் வர துடிக்கிறார் என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், உடனே அண்ணன் எம்.ஜி.சி அவர்களுக்கு இங்கு வரவேண்டாம் நானே நாளை வந்து அண்ணனை அங்கு பார்க்கிறேன் என்று சொல்லுங்கள் என்று தகவல் அனுப்பினார். அந்த சமயம், தொலைபேசி, மின்சாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. இது ஒரு முக்கிய விஷயம் இதனால்தான் மக்கள் திலகம் அவர்கள் ராமாபுரம், தோட்டத்தில், ராமாபுரம் தோட்டமா! ராமருடைய தோட்டமா, இங்கு இருந்து சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் போய் தங்குவதற்கு சம்மதித்தார். இந்த சமயம் தன்னுடன் பிறந்த பாசப் பிறவியான அண்ணன் எம்.ஜி.சி. அவர்கள் சற்று உடல்நலக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். ஓட்டலில் தங்கி இருந்த மக்கள் திலகம் அவர்கள் ஜானகி அம்மாளுடன் சென்று தன் அண்ணனை அவருடைய இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.
 
பெரியவர் சின்னவர்
 
இதில் அன்புள்ளம் கொண்ட அண்ணன் தம்பி இதில் வல்லவனுக்கு வல்லவன் அஞ்சா நெஞ்சுடையவன் அவனுக்கு இப்படி ஒரு உடல் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் கவலைப்பட்டு கொண்டு இருந்த பெரியவர் எம்.ஜி.சி. அவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 1986 ஆகஸ்டு மாதம் மறைந்துவிட்டார். தன் அன்பு அண்ணன் இறந்ததை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் உடனே ராயப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று தன் அண்ணனின் கன்னத்தை தடவிக் கொண்டு கண்ணீர் விட்ட காட்சி அது சமயம் அந்த இடத்தில் நின்று கொண்டு இருந்த அத்தனை பேர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. தாய் மறைவுக்குப் பிறகு எனக்கு தந்தைக்கு தந்தையாகவும் தாய்க்கு தாயாகவும் எனக்கு அறிவுரைகளை சொல்லிக் கொண்டு எனக்கு ஆதரவாகவும் இருந்த, அண்ணன் என்னைவிட்டு சென்றுவிட்டாரே என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். அன்று அண்ணனுடைய உடல் அடக்கம் செய்யும் வரை அண்ணனின் உடல் அருகிலேயே எதுவும் சாப்பிடமால் இருந்தார். தமிழக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இறந்தபோன செய்தியை அறிந்த சினிமாதுறையினரும், அரசியல் துறையினரும், பொது மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து மரியாதை செய்து அனுதாபத்தை தெரிவித்து சென்றார்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்ட மக்கள் திலகம் அவர்கள் அன்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இது வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவம்.
 
குறிப்பு :
 
எல்லா அரசியல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் சினிமா ஸ்டூடியோ மற்றும் பிரமுகர்கள் அனுதாபத்தை தெரிவித்து மக்கள் திலகம் அவர்களுக்கு ஆறுதலையும் சொல்லிக் சென்றார்கள்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:44:04 PM
62.மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமியக் கலைகள் மிகவும் பிடிக்கும்

பொதுவாகவே மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமிய கலைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை மிகவும் பிடிக்கும். இதில் குறிப்பாக சிலம்பாட்டம் இதை அவரே பிரமாதமாக ஆடுவார். இதே போல், கர்நாடக சங்கீதத்தில் இசைக்கச்சேரி வகையில் நாதஸ்வரம், வயலின், வாத்தியம் போன்றவைகள் ஆகும். மாண்டலின் இசை கருவியை பத்து வயது பையன் பெயர் மாஸ்டர் சீனிவாசன் ரொம்பவும் பிரமாதமாக வாசிப்பான் இவனுடைய கச்சேரி சபா மேடைகளில் நடந்தது. இப்படி ஒரு சிறுவன் டி.வி.யிலும் மாண்டலின் வாசிக்கிறான் கச்சேரிகளும் செய்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்அமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், 1983ல் சென்னையில் கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு இந்தப் பையனுடைய கச்சேரி நடந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் அந்தக் கச்சேரியைப் பார்த்து ரசித்தார். சுமார் 1 மணி நேரம் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்தவுடன் மேடைக்கு வந்து பையனை தட்டிக் கொடுத்து பாராட்டி வாழ்த்திப் பேசிவிட்டு தன்னுடைய ஜிப்பாவின்பையில்வைத்திருந்த 4 பவுன் எடை உள்ள தங்க மைனர் செயினை (சங்கிலி) அவனுடைய கழுத்தில் போட்டு சென்றார்.
 
இதேபோல் 1976ல் ஒரு முக்கியஸ்தர் குடும்பத் திருமணத்திற்கு மாலை வரவேற்பு விழாவிற்காக 7 மணிக்கு சென்னையில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு ஏ.வி. ரமணன் மெல்லிசை பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கச்சேரியில் ஏ.வி. ரமணன் என்பவர் பாடிக்கொண்டு இருந்தார். திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ள மக்கள் திலகம் அவர்கள் மணமக்களைப் பார்த்து ஆசிர்வாதம் செய்து, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துவிட்டு கச்சேரி நடக்கும் மேடைக்கு அருகில் போய் அமர்ந்து விட்டார். இதைப்பார்த்து பலவிதமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இருக்கும் ரமணன் அவர்கள் மேடையை விட்டு இறங்கி வந்து கலைத்துறை அரசரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு எதுவுமே பேசாமல் மேடைக்கு சென்று பாடத் தொடங்கிவிட்டார். இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து தொடர்ந்து பாடிக்கொண்டு இருக்கையில், அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்த கலை அரசருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
 
இதை கவனித்த பாடகர் ரமணன் அவர்கள் பாடுவதை நிறுத்தினார். உடனே மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய, வாட்சில் நேரத்தைப் பார்க்கிறார் நேரம் 8.45 ஆக இருந்தது ஆச்சர்யத்துடன் பின்னாடி திரும்பிப் பார்த்தார் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள் மண்டபம் நிறைந்து இருந்தது. இந்தத் திருமண விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் முன் வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து பாட்டுக் கச்சேரியைக் கேட்டு கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் சாப்பாட்டு ஹாலுக்கும் செல்லாமல் திரும்பி வீட்டுக்குப் போகாமல் வந்தவர்கள் எல்லாம் அமர்ந்து விட்டார்கள். பிறகு, மக்கள் திலகம் பாட்டுக்களைப் பாடிய ரமணனையும், இசை வாத்தியங்கள் வாசித்தவர்களையும் பாராட்டிப் பேசிவிட்டு, ரமணன் அவர்களுக்கு, தன் கையிலே கட்டியிருந்த விலையுயர்ந்த வாட்சை கழற்றி ரமணன் கையிலே அவரே கட்டி வாழ்த்திச் சென்றார் என்பது மிக ஆச்சர்யத்திற்குள்ள விஷயமாக இருந்தது எல்லோருக்கும்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:45:10 PM
63.எம்.ஜி.ஆர். பித்தன் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுடைய ரசிகர் ஆரம்பகாலத்தில் இருந்தே இவர் ஒரு தீவிர ரசிகராக இருந்தவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் பார்த்து பேச பல வருடங்கள் முயற்சித்துள்ளார். மக்கள் திலகம் நடித்த படங்களை பார்க்க தவறுவதில்லை. இப்படி இருந்த இவர் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று இவரும் ஒரு பிரபல நடிகராகிவிட்டார். பிறகு, என்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை ஈசியாக பார்த்து விடலாமே என்று நினைக்கும் போது, அவர் தமிழக முதலமைச்சராகிவிட்டார். இருந்தாலும் சத்யராஜ் அவர்களுடைய முயற்சியை விடவில்லை. இவருடைய நண்பர்களிடம் இதற்கு வழியை கேட்டு கொண்டே இருந்தார். பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டு இருந்த இவருக்கு ஒரு வழி கிடைத்தது. அதாவது சத்யராஜ் அவர்களுடைய தங்கைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து பத்திரிகை அடித்து கோயம்புத்தூரில் உறவினர்களுக்கு எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் சினிமா துறையில் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்க பத்திரிகை வந்து விட்டது. இது 1987 மே மாதம் கடைசியில் தன் தங்கையின் திருமண பத்திரிகையை முதல்வரிடம் நேரில் தானும் தன் மனைவியும் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு சென்று கொடுத்து அவரிடம் பேசி வணங்கி வாழ்த்தும் பெற்று வரனும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தார் அதற்கான பலன் இரண்டே நாளில் கிடைத்துவிட்டது. ஒரு நாள் காலை 9 மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு திருமண பத்திரிகையுடன் தன் மனைவியையும் அழைத்து கொண்டு போனார். தோட்டத்திற்குள் போக தடை ஒன்றும் இல்லை. வீட்டு வராண்டாவில் அரசாங்க அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இருப்பார்கள். அவர்கள் சத்யராஜ் மனைவியுடன் வந்து இருப்பதை மேலே உள்ள இன்டர்காம் வழியாக மக்கள் திலகம் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு, மக்கள் திலகம் ஜானகி அம்மாளுடன் 15ந்து நிமிடத்தில் கீழே வந்து விட்டார். இந்த இருவரையும் பார்த்த அந்த இருவரும் நாம் யாரை பார்க்கிறோம் என்பது போல், பிரமித்து நிற்கிறார்கள். முதல்வரும், ஜானகி அம்மையாரும் அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் அமர சொல்கிறார். சத்யராஜ் அவர்களுக்கு சற்று நேரம் ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. பிறகு, தன் தங்கைகளுடைய திருமண பத்திரிகையை கொடுக்கிறார். அதை வாங்கி உடனே படிக்கிறார். முதல்வர் பத்திரிகையில் எந்த பிரமுகர் பெயரும் இல்லை மிக எளிமையான குடும்பப் பத்திரிகையாக இருந்தது. சற்று நேரம் மக்கள் திலகம் அவர்கள் எதையோ யோசித்து கொண்டு இருந்தார்.
 
சத்யராஜ் இப்போ ஒரு பெரிய நடிகர் மக்களுக்கெல்லாம் மிகவும் அறிந்தவர் நல்ல நடிகர் இவர். எந்த வித விளம்பரமும் இல்லாமல் தன்னுடைய தங்கைகளுடைய திருமணத்தை நடத்துகிறாரே இந்த திருமணத்திற்கு நாம் எப்படியும் போகவேண்டும் என்ற யோசனைதான் அது. பிறகு, சத்யராஜ் அவர்களை பார்த்து நானும் ஜானுவும் இந்த திருமணத்திற்கு வருகிறோம் என்றார் உடனே சத்யராஜ் அண்ணே நீங்கள் இந்த திருமணத்திற்கு வரவேண்டாம். இந்த பத்திரிகையில் உங்கள் பெயரை போடவில்லை. மேலும் காலை 4 மணிக்கு திருமணம் தயவு செய்து வரவேண்டாம்.
 
உங்களுடைய வாழ்த்துச் செய்தி மட்டும் கிடைத்ததால் போதும், அண்ணே உங்களை எப்படியாவது நேரில் பார்க்கனும் உங்களிடம் இரண்டு வார்த்தையாவது பேசனும் உங்களிடம் ஆசிர்வாதம் பெறனும் என்ற ஆசையோடு தான் வந்தேன். நீங்கள் இந்த நாட்டின் முதல்-அமைச்சர் நீங்கள் தயவு செய்து வர வேண்டாம்.
 
உங்களுடைய வாழ்த்து செய்தியே போதும் நீங்கள் நேரில் வந்த மாதிரிதான் என்னை மன்னிக்கனும் என்று சொல்லி முடித்தவுடனே மக்கள் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களுடைய தோள் பட்டையை தட்டிக்கொண்டே நான் வருவேன் என்று சொல்லி கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்தார். பிறகு, அந்த பத்திரிகையை தன்னுடைய அரசு உதவியாளரிடம் கொடுத்து நாங்கள் இந்த திருமணத்திற்கு போகனும் மறக்காமல் ஞாபகப்படுத்துங்கள் முதல் நாளே போகனும் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்யுங்கள் இந்த விசயம் ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிய மக்கள் திலகம் அவர்கள் பிறகு, காண வந்து இருந்த மற்றவர்களை எல்லாம் அழைத்து பேசினார். சத்யராஜ் அவர்களுடைய தங்கைகள் திருமண விழாவிற்கு முதல்நாளே தன் மனைவி ஜானகி அம்மாளுடன் கோயம்புத்தூர் புறப்படுகிறார். கூடபேச்சு துணைக்கு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி அவர்களையும் அழைத்துச் செல்கிறார்.
 
இந்த விசயத்தை உடனடியாக முதல்வருடைய தனி செகரட்ரி கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுக்கிறார். இந்த தகவலை கேட்ட கலெக்டர் உடனே சத்யராஜ் வீட்டுக்கு சென்று முதல்வர் கோவைக்கு புறப்பட்டுவிட்டார். உடனே, ஏர்போர்ட்டிற்கு போகனும் நீங்களும் ஏர்போர்ட்டிற்கு வருவதுதான் நல்லது என்று சற்று கோபமாக பேசிவிட்டு, கலெக்டர் அவர்கள் முதல் அமைச்சரை வரவேற்க ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட்டார். கலெக்டர் கோபமாக ஏன் சத்யராஜிடம் பேசினார். முதல்வர் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வருகிறார் என்பதை ஏன் எனக்கு முன்னதாக தெரிவிக்கவில்லை என்றதற்காகத்தான். இதை அறிந்த சத்யராஜ் அவர்களும் உடனே ஏர்போர்ட்டுக்கு கிளம்பி சென்று மிக மிக ஆச்சர்யத்தோடு ஏர்போர்ட்டில் பிளைட்டில் இருந்து மாலை சுமார் 6 மணிக்கு தங்கத் தலைவன் மின்னும் ஒளியோடு தன் மனைவியோடு இறங்கும் காட்சியை சத்யராஜும் மற்றவர்களும் பார்க்கிறார்கள். மக்கள்திலகம் மைதானத்திற்கு வந்தவுடனே, சத்யராஜ் ஓடோ டி வந்து ராமருடைய பாதங்கள் தொட்டதுபோல் இந்த ராமச்சந்திரனுடைய பாதங்களை தொட்டு வணங்கி வரவேற்றார். பிறகு, விமான நிலையத்தில் இருந்து முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ள விடுதிக்கு செல்ல காரில் ஏறும் போது அருகில் நின்று கொண்டிருந்த சத்யராஜை தன் காரிலே ஏற்றிக்கொண்டு உடன் வந்த அமைச்சர் முத்துசாமியும் அதே காரில் செல்கிறார்கள்.
 
அடுத்த நாள் காலையில் நடக்கும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டே செல்கிறார்கள். இதன்படி அடுத்த நாள் காலை 4 மணிக்கு நடைபெறும் திருமணத்திற்கு முதல்வர் தன் துணைவியாருடன் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் செல்கிறார். திருமண மண்டபத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் முதல்வர் வந்ததை அறிந்து எல்லோரும் சென்று வரவேற்கிறார்கள். தமிழக முதல்வரான மக்கள் திலகம் அவர்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று வந்து இருக்கிறாரே என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். இந்த விசயம் அப்போதைக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமண மேடையில் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி செல்கிறார். இந்த சம்பவத்தை நினைத்து சத்யராஜூம் அவரது குடும்பமும் “தெய்வமே” நேரில் வந்து வாழ்த்தி சென்றது போல, நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.
 
மக்கள் திலகம் அவர்கள் திருமண மண்டபத்தில் ஒரு மணி நேரம் அதற்கு மேல் இருக்கிறார்கள். மேடையில் ஐயர்கள் பூஜை அதாவது மாங்கல்ய பூஜை நடக்கும். இதற்கிடையில் இந்தத் திருமணத்திற்கு முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து இருக்கிறார். மேடைக்கு அருகில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தியை திருமணத்திற்கு வருகிறவர்கள் அறிந்ததும், உடனே முதல்வர் இருக்கும் இடத்திற்கு வந்து, அவரைப் பார்த்து வணங்கிச் செல்பவர்களும், அவருக்கு அருகிலேயே அமருபவர்களும் உண்டு. இப்படி இருக்கும் நேரத்தில் சிவாஜி, சிவகுமார் ஆகியோர் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். மக்கள் திலகம் திருமணத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மக்கள் திலகம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நடிகர் திலகமும், சிவகுமாரும் வந்து நடிகர் திலகம் மக்கள் திலகத்தை கட்டிப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிக் கொண்ட காட்சியை கண்டவர்கள் மனமகிழ்ந்தார்கள். சிவாஜிக்கும், சிவகுமாருக்கும் முதல்வர் அருகிலேயே சேர்கள் போடப்பட்டது. மக்கள் திலகம், ஜானகி அம்மாள், சிவாஜி, சிவகுமார் இவர்கள் மேடைக்கு அருகில் வரிசையாக அமர்ந்து இருக்கும் அழகான காட்சியை பார்த்து பார்த்து ரசித்து அளவற்ற அளவிற்கு ஆனந்தப்பட்டார்கள். சத்யராஜ் அவர்களும், அவரது குடும்பமும் இதற்கு இடையில், திருமண மேடைக்கு அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த நாதஸ்வரத்தையும், மேளத்தையும் கவனிக்கத் தவறதில்லை. மக்கள் திலகம் அவர்களுக்கு மேளக்கச்சேரி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு ஏற்ற மாதிரி அவர்களும் நல்ல நயத்துடன் வாசித்தார்கள். காலை 5 1/2 மணிக்கெல்லாம் திருமணம் முடிந்தது. மக்கள் திலகம் அவர்களும், ஜானகி அம்மாவும் இவர்கள் தங்கி இருக்கும் அரசு மாளிகைக்கு சென்றார்கள். அன்று கோவையிலேயே தங்கி இருந்து அடுத்த நாள் நடக்கும் சத்யராஜுடைய மற்றொரு தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னைக்கு புறப்படும் போது, சத்யராஜ் அவர்களும் ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப வந்தார். வந்தவர் விமானம் நிற்கும் இடம் வரை வந்து, முதல்வர் படிக்கட்டில் ஏறி, விமானத்தில் நுழையும் வரை படிக்கட்டு அருகிலேயே நின்று கொண்டிருந்த சத்யராஜைப் பார்த்து கை அசைத்து வாழ்த்தினார் மக்கள் திலகம் இதில் ஒரு முக்கிய விஷயம் விமானப் பயணிகளைத் தவிர வேறு யாரும் விமானம் வரை போகக்கூடாது இது விமான நிலைய சட்டம். இதை மீறி சத்யராஜ் விமானம் வரை அருகே சென்று மக்கள் திலகம் அவர்களை வழிஅனுப்பியது மக்கள் திலகம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிக மிக ஆச்சர்யமாக இருந்தது. இதில் மற்றொரு விஷயம் சத்யராஜையோ அவரது குடும்பத்தையோ முன் அறிமுகம் இல்லாமல் அந்தக் குடும்பத் திருமண விழாவிற்கு கோயம்புத்தூருக்குப் போய், தன் மனைவியுடன் சென்று, இரண்டு நாள் அங்கேயே தங்கி, வேறு எந்தவித நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல், அந்தத் திருமணத்திற்கு சென்று வந்தது. அதுவும், தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் எப்படி என்று இந்த விஷயத்தை ஆச்சரியமாக சினிமா துறை, அரசியல் துறையினர்கள் பரவலாக பேசினார்கள்.
 
மனிதநேயமுள்ள அன்புள்ளம், வள்ளல் குணம் உள்ள மக்கள் திலகம் அவர்களுக்கு, சொந்தம், பந்தம், பாசம் தன்னை ஒரு பெரிய புகழ் உள்ள நடிகன் என் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்திய கலைத்துறையில் உள்ள அத்தனை பேர்களும் தான் என்று அடிக்கடி சொல்வார். சத்யராஜ் அவர்களும் ஒரு நடிகர் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர். மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய உயர்வுக்கு அதிக செல்வாக்கை கொடுத்தது சினிமாவா? அரசியலா? என்பதை அடிக்கடி அளந்து பார்க்கக்கூடியவர். ஆனாலும் தனக்கு சினிமாதான் முதலில் அப்புறம்தான் அரசியல் என்று மக்கள் திலகம் நினைப்பவர்.
 
மக்கள் திலகம் அவர்களை புகழ் ஏணியில் ஏற்றுவிட்டது சினிமாதான் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மக்கள் திலகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சினிமாதான். சத்யராஜ் அவர்கள் தன்னுடைய பரம ரசிகர் இப்போது அந்த மாமனிதருடைய பக்தராக உள்ளார். அவருடைய இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து வணங்கி வருகிறார்.
 
பிறகு? ஒரு நாள் திரு. சத்யராஜ் அவர்கள் தன் மனைவியுடன் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு முதல்வரை சந்திக்க நேரத்தை தெரிந்து கொண்டு காலை 8.30 மணிக்கு செல்கிறார்கள். தோட்டத்திற்கு சென்றவுடன் சத்யராஜும் அவரது மனைவியும் வந்திருக்கும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல்வரும் துணைவியார் ஜானகி அம்மையாரும் கீழே இறங்கி வந்து இவர்கள் பார்த்து குடும்ப நலனை விசாரிக்கிறார்.
 
அது சமயம் உடனே சத்யராஜ் அவர்கள் தனது தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தி சென்ற, உங்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நானும் என் மனைவியும் நன்றி சொல்ல வந்து இருக்கிறோம். எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் என்று சொன்னபோது அவர்களை வாழ்த்தி விட்டு சத்யராஜ் அவர்களை பார்த்து தம்பி உனக்கு வேற ஏதாவது என்னால் உதவி வேண்டும் என்றால் கேள்! எதுவாக இருந்தாலும் செய்கிறேன் என்று அன்புடன் சிரித்து கொண்டே கேட்கிறார். உடனே, சத்யராஜ் அண்ணே நான் இப்போ நிறைந்த வசதியுடன் இருக்கிறேன். எனக்கு உங்களுடைய உடற்பயிற்சி பொருள்களில் இருந்து ஏதாவது ஒன்றை தாருங்கள். அதை நான் உங்களுடைய ஞாபகமாக தினமும் உடற்பயிற்சி எடுத்து செய்றேன் என்றார். உடனே மக்கள் திலகம் அவர்கள் சற்று யோசித்து அருகில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்திடம் மேலே உள்ள என்னுடைய கர்லா கட்டையில் ஒன்றை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். உடனே கர்லா கட்டை வந்தது மக்கள் திலகம் அவர்கள் அந்த கர்லாகட்டையை தன் கைபட கொடுத்தார். அத்துடன் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும் உடல் நல்ல இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம் என்று அறிவுரை சொல்லி வாழ்த்தி அனுப்பினார். இதை மறக்காமல் சத்யராஜ் அவர்கள் நடந்து வருகிறார் என்பதை நான் அறிவேன். இது வள்ளலுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சம்பவம்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:47:08 PM
64.வள்ளல் வாழ்ந்த இறுதி ஆண்டில் அவரின் வித்தியாசமான அணுகுமுறைகள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fec42b68b-bd5f-4958-b9a3-efe68feb6566_s_secvpf-gif.jpg&hash=1ebc3f8f6c5bf5a1f6f88e81b0e38eed7d71f38b)

ஜானகி ராமனாக, ஜானகி அம்மையுடன் எம்,ஜி.ராமச்சந்திரன்

இதில் ஒரு முக்கிய விஷயம் 1917ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த அவர் 1987ம் ஆண்டில் சில முக்கிய குறிப்பிடத்தக்கக்கூடிய விஷயங்களில் கலந்து கொண்டு செயல்பட்டுள்ளார். குறிப்பு 1987 ஜனவரி 1ந் தேதி, ஆங்கில வருடப்பிறப்பன்று, எப்போதுமே “ஆப்பி நியூ இயர்” என்று சொல்லாதவர் இந்த வருடம் பலரிடம் ஆப்பி நியூ இயர் என்று சொல்லி வாழ்த்தி இருக்கிறார் ஏப்ரல் மாதம் 14ந் தேதி சித்திரை தமிழ் வருடப்பிறப்பன்று எப்போதுமே இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக கொண்டாடினார். அன்று காலை 6 மணிக்கெல்லாம் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு புத்தாடை உடுத்தி ஜானகி அம்மையாருடன் தன்னுடைய தாயின் உருவம் பொதித்த டாலர் (மைனர் சங்கிலி) அணிந்து கொண்டார்.
 
அன்று மக்கள் திலகம் அவர்களை காண வந்தவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் நோட்டு தான். பிறகு, அன்று மக்கள் திலகம் அவர்களிடம் வாழ்த்து பெற வந்தவர்கள் எல்லாம் போன பிறகு மேலே தன்னுடைய ரூமுக்கு சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்கிற தொழிலாளர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாக மேலே அவர் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து அவர்கள் தன்னிடம் எத்தனை வருடமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு நல்லதொரு தொகையை காகிதத்தில் மடித்து பொட்டலமாக கொடுத்தார். பணப் பொட்டலத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் மக்கள் திலகம் காலை தொட்டு வணங்கி ஆனந்த கண்ணீருடன் மன மகிழ்ச்சியோடு சென்றார்கள். பிறகு அந்த வருடம் அவரிடம் உதவி கேட்டு வந்தவர்களை எல்லாம் அவர்களுடைய நிலைமையை அறிந்து பண உதவிகளை செய்தார். இதை போல் தான் அந்த வருடம் மே மாதம் நடிகர் சத்யராஜ் அவர்கள் தங்கைகளுடைய திருமணத்திற்கு யாருக்கும் சொல்லாமல் விளம்பரம் இல்லாமல் கோயம்புத்தூருக்கு போனார்.

Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:48:00 PM
65.உணவு விஷயத்தில் வள்ளலின் மனித நேயம்

1977ல் மக்கள் திலகம் முதல் அமைச்சர் அன பிறகு, முதல் அமைச்சருக்கு ஒரு தனி அதிகாரி உதவியாளர், ஒரு துணை உதவியாளர், ஒரு போலீஸ் அதிகாரி, செகரட்டரி ஆபிசர் இவர்கள் தினமும் காலை முதல் அமைச்சர் அவர்களுடைய வீட்டுக்கு வந்து விடுவார்கள். அன்று முழுவதும் முதல்வர் கூடவே இருப்பார்கள். இரவு வீட்டிற்கு போய்விடுவார்கள் இது வழக்கம். இவர்களுக்கு காலை – மதியம் சாப்பாடு முதல்வர் கூடவே சாப்பிடுவார்கள். மதியம் முதல்வர் கோட்டையில் அல்லது மாம்பலம் ஆபிசில் இவர் எங்கே இருக்கிறாரோ அங்கே சாப்பாடு வந்து விடும். சுமார் 20 பேர்கள் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு வரும். அசைவமும், சைவமும் இருக்கும் அன்று மதியம் மாம்பலம் ஆபிசுக்கு சாப்பாடு கொண்டு வர சொன்னோம் அன்று முதல்வருடன் சில மந்திரிகள் இருந்தார்கள். மதியம் 2 மணி ஆகிவிட்டது பந்தி பாய் விரித்து தலை வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. அன்று கறி வருவல், கறி கோலா உருண்டை, முட்டை, மசாலா, கூட்டு, பொறியல், கீரை, சாம்பார், ரசம், ஊறுகாய், தயிர்.
 
முதல்வர் மற்ற 3 அமைச்சர்கள் மேலே இருந்தார்கள் கீழே அதிகாரிகள் இருந்தார்கள் சாப்பாடு பறிமாறியதும் முதல்வரிடம் சாப்பாடு ரெடி என்றேன். சாப்பாடு ஹாலுக்கு வந்த முதல்வர் கீழே இருக்கும் அதிகாரிகளையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னார். நான் கீழே சென்று பசியோடு அமர்ந்து இருந்த தனி அதிகாரி, ஐ.ஏ.எஸ். இவர் தனி உதவியாளர், அடுத்து துணை அதிகாரி, காவல் துறை செகரட்ரி, இவர்கள் மூவரையும் மேலே வாருங்கள் சாப்பிட அழைக்கிறார் முதல்வர் என்றேன்.
 
அவர்களுக்கு இப்படி நான் சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது மேலே வரவே யோசித்தார்கள் அதிலே ஒருவர் வர மறுத்தார் நான் உடனே ஐயா, சீக்கிரமாக வாங்க காத்துகிட்டு இருக்காங்க என்றதும், அச்சத்துடன் மேலே வந்தார்கள் அவர்களை பார்த்து முதல்வர் வாங்க வாங்க சாப்பிடுவோம் என்றார். இவர்கள் வரும் வரை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடாமல் காத்து இருந்ததை அறிந்த இவர்கள் மிக ஆச்சர்யத்துடன் அமர்ந்தார்கள். இதில் செகரட்டரி நான் சைவம் என்றார். அடடே அப்படியா, முத்து! அவருக்கு வேற இலை போட்டு கரண்டியை கழுவி விட்டு பரிமாறு என்றார். இனிமே சைவ அயிட்டங்கள் எல்லாம் தனி கேரியரில் வரவேண்டும் என்றார் முதல்வர். இந்த சொல்லை கேட்ட அந்த சைவ உணவு சாப்பிடும் அதிகாரி உடனே சார், அதெல்லாம் வேண்டாம் இப்போ சைவமும் அசைவமும் தனித்தனி பாத்திரங்களில் தான் இருக்கு இதுவே போதும் சார் என்றார். இந்த மூன்று பேரும் தலையை குனிந்து கொண்டே சாப்பிட்டார்கள் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடுவதை கவனிக்கத் தவரவில்லை சாப்பாடு வகைகள் சாப்பிடும் முறைகளைப் பற்றி அந்த தனி அதிகாரி பிறகு என்னிடம் கேட்டார் என்ன முத்து எப்போதுமே இப்படித்தானா என்றார். உடனே, நான் வெள்ளிகிழமை அன்று மதிய சாப்பாடு முழுக்க முழுக்க சைவ சாப்பாடு தான் அன்று ஸ்பெசல் உருளை கிழங்கு மசாலா, அவியல், பாயாசம் அப்பளம் இருக்கும் என்றேன்.
 
இதை கேட்ட அவர் என்னை விடவில்லை, முத்து, ஒரு விசயம் முதல்வர் அவர்கள், மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார். எல்லோரும் சமம் என்று நினைப்பவர் அவர் மனித நேயமுள்ள நல்லவர் பல பட்டங்களை ஏற்கனவே பெற்றவர் இப்போ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அவருடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவது சரி இல்லை, முறையும் இல்லை. இப்படி நாட்டில் உள்ள எந்த முதல் அமைச்சரும் தன்னுடைய தனி அதிகாரிகளை தன்னுடன் அமர்ந்து சாப்பிட சொல்ல மாட்டார்கள் அப்படி சொன்னதாக சரித்திரமே இல்லை, நான் மிக சுருக்கமாக சொல்கிறேன். மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ளவும். நாங்கள் அவருடைய சாப்பாட்டை சாப்பிட பாக்கியம் செய்து இருக்கவேண்டும் எனவே இனிமேல் நாங்கள் கீழ்தளத்திலேயே சாப்பிட ஏற்பாடு செய்யவும். இது உன்னால் முடியும் என்றார் அதன்படி, அடுத்த நாளே இந்த விசயத்தை நான் மக்கள் திலகம் அவர்களிடம் மிகவும் பக்குவமாக சொன்னேன். இதில் எனக்கு மிக உதவியாக இருந்த சொல் அண்ணே, அவுங்க தனியாக கீழே சாப்பிட்டால் அவர்கள் மனம் போல் கூச்சம் இல்லாமல் சாப்பிடுவார்கள் அவுங்க இவ்வளவு ருசியோடு பல வகைகள் உடன்சாப்பிடுவதைப் பற்றி மிகப்பொருமையாக நினைக்கிறார்கள். பேசி கொள்கிறார்கள் என்றதும், அப்படியா சரி சரி சாப்பாட்டில் அவுங்க அவுங்க இஷ்டபடி இருப்பதில் தவறு இல்லை என்றார் மக்கள் திலகம். பிறகு அடுத்த நாள் மாம்பலம் ஆபிசில் சாப்பிட நேர்ந்தது முதல்வர் மாம்பலம் ஆபீசுக்கு அன்று 10 மணிக்கே கோட்டைக்கு போய்விட்டு சில அமைச்சர்களுடன் வந்துவிட்டார், சாப்பாடு எப்போதும் போல் தோட்டத்தில் இருந்து 1 மணிக்கெல்லாம் வந்து விட்டது. அது சமயம் கீழே உள்ள அலுவலக அறைகளில் அமர்ந்து இருந்த தனி உயர் அதிகாரியிடம் சார், முதல்வர் உங்களுக்கு பச்சைக்கொடி காண்பித்து விட்டார் என்றதும் அவர்கள் சற்று யோசித்தபடி என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் முதல்வர் உங்களை எங்கே வேண்டுமானாலும் அமர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டார்.
 
இதை கேட்ட அந்த மூன்று பேரும் எனக்கு நன்றி சொன்னார்கள். மக்கள் திலகம் அவர்களுடைய மனித நேயத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்படி பல விஷயங்களை சொல்லாம். ஒரு மனிதருக்கு மனிதாபம், மனித நேயம் இதை பற்றி மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள் எப்படி எல்லாம் பேசினார்கள், என்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம். மக்கள் திலகம் அவர்களை எட்டாவது வள்ளல் என்பதோடு முடித்து விட்டார்கள். ஆனால், மனித நேயத்தைப் பற்றி கணக்கிட முடியாது இப்போது, மக்கள் திலகம் முதல்அமைச்சர் ஆனபிறகு அவருடைய மனித நேயத்தைப் பற்றி எழுதிய பிறகு 1977க்கு முன் உள்ளதையும் எழுத உள்ளேன்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 28, 2012, 11:50:39 PM
66.முப்பிறவி கண்டவர்


வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வம்பு வழக்குகள் எதுவுமே வராது. ஆனால், 5 அல்லது 10 வருடத்திற்கு ஒருமுறை உடல் பாதிப்பு ஏற்படும். வள்ளல் அவருடைய கிரகப்படி அவைகளையும் சமாளித்து விடுவார். இதில் அவருடைய சொந்த நாடகத்தில் 1958ல் சீர்காழி என்ற ஊரில் நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் அந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் குண்டுமணி என்பவர் சண்டை காட்சியில் நடிப்பவர் சுமார் 200 கிலோ எடை உள்ளவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 70 கிலோதான் எடை. குண்டுமணியை சண்டைகாட்சியில் அவரை தூக்கி கீழே போட வேண்டும். இது தொடர்ந்து “இன்ப கனவு” என்ற நாடகத்தில் வரும் காட்சி அன்றைய தினம் சீர்காழியில் இந்த நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் குண்டுமணியை தூக்கும்போது எதிர்பாராமல் குண்டுமணி கீழே விழபோவதை அறிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கீழே உட்கார முயலும்போது அவரது முழங்கால் எலும்பு முறிந்துவிட்டது. குண்டுமணியுடன் கீழே உட்கார்ந்த எம்.ஜி.ஆர். அவர்களால் மீண்டும் எழுந்து நடக்க முடியவில்லை உடனே நாடகம் நிறுத்தப்பட்டது. அன்று நாடக கொட்டகை நிறைந்து வழிந்தது இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்களின் குரல் நாடக கொட்டகையே அதிர்ந்துவிட்டது.
 
உடனே ஒரு நாற்காலியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மேடையில் (அமர்ந்து கொண்டு) மைக் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு ஆறுதல் சொன்னார். அதோடு நான் என் கால் குணமானவுடன் மீண்டும் இதே ஊரில் இந்த நாடகத்தில் நடிப்பேன் இது உங்கள் மீது ஆணை என்று சொல்லி பொதுமக்களை கலைந்து போகும்படி வேண்டி கேட்டுகொண்டார். அதன் பிறகு, அடுத்த நாள் சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் செய்யப்பட்டது. இந்த செய்தி அப்போ சினிமா உலகத்தில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அது மட்டும் அல்ல மீண்டும் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க முடியுமா, என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், மக்கள் திலகம் அவர்களுக்கு முழங்கால் எலும்பு முறியவில்லை.
 
எலும்பு சற்று பிசகி இருந்தது. மிகவும் தீவிர சிகிச்சைக்கு பிறகு கால் முன்போல் சரியாகிவிட்டது. எந்த வித மாற்றமும் இல்லாமல் 4 மாதம் கழித்து மீண்டும் துள்ளி குதித்து கொண்டு படப்பிடிப்புக்கு சென்றார். மீண்டும் சீர்காழியில் அதே நாடகம் நடத்தப்பட்டு பெரும் பாராட்டுகளைப் பெற்றார். வள்ளல் அவர்களுக்கு அவர் செய்த தர்மம் தலையை மட்டும் காக்கவில்லை உடலையும் காத்தது. சத்தியம், நியாயம், தர்மத்தோடு சேர்ந்து கொண்டது மக்கள் திலகம் அவர்களிடம்.
 
இந்த தர்மராஜாவுக்கு 9 வருடம் கழித்து தலைக்கு ஒரு அபாயம் ஏற்பட்டது அது தலைப்பாகையோடு போய்விட்டது. அது தான் 1967 ஜனவரி 12ல் எம்.ஆர். ராதாவின் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தலைக்கு வைத்த குறி தப்பி காதோரம் கழுத்துக்குள் சென்று இரும்பு குண்டு கல்லாய், மணலாய் கரைந்து போய்விட்டது இது தான் வள்ளல் செய்த தர்மம்.
 
அடுத்து 1967க்கு பிறகு 1984 அக்டோ பர் வரை அதாவது 17 வருடம் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் விக்ரமாதித்தன் 18 படிகளையும் கடந்த பிறகு, சிம்மாசனத்தில் அமர வேண்டும் அதே போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பல சோதனைகளை சந்தித்து வெற்றியோடு 1977ல் தமிழக முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றிகளையும் பெறுவது என்பது முடியாத விஷயம். ஆனால், மக்கள் திலகம் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளார். சினிமாவில் புரட்சி நடிகராகவும், அரசியலில் புரட்சித்தலைவராகவும், அரசாங்கத்தில் சத்துணவு கதாநாயகனாகவும், பொது மக்களுக்கு தொண்டனாகவும் வெற்றி வாகை சூடியவர். இது நாடறிந்த விஷயம் இப்பேர்ப்பட்ட நாயகனுக்கு, வள்ளலுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. 1984 அக்டோ பரில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவுக்கு சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்து நல்ல குணம் அடைந்து அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். 1985க்கு இடையில் மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாதங்களில் அதாவது அக்டோ பர் 1984ல் பிப்ரவரி 1985க்குள் தமிழ்நாட்டில் பொதுதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது பெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தி.மு.க. முழு முயற்சியோடு மிக கடுமையாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பே என்று அண்ணா தி.மு.க அமோக வெற்றி பெற்றது. மக்கள் திலகம் அவர்கள் முதன் முறையாக எம்.எல்.ஏ. வாக ஆகும் போது 1967ல் எம்.ஆர். ராதா உடைய துப்பாக்கி சூட்டில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தார்.
 

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Furl13.jpg&hash=b5f94ddfa865f6fc845995180550acdd3fc201af)

துப்பாக்கி சூட்டிற்குப்பின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்

அதே போல் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரும்போது, மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக வந்தார். இதுவும் நாடு அறிந்த விஷயம். இருமுறை ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டே எம்.எல்.ஏ. ஆனார். மூன்று முறை முதல் அமைச்சர் பதவி பெற்றார். 10 வருடம் ஆட்சி புரிந்தது போதும் என்ன நினைத்தாரோ அல்லது வாழ்ந்தது போதும். நாம் நினைத்தது எல்லாம் நடந்தது. இனி நமக்கேன் இந்த பதவி பட்டம் நம்மைவாழ வைத்த மக்களிடம் இருந்து விடைபெற்று கொள்வோம் என்று நினைத்தாரோ? மக்கள் திலகம் அரசியல் அரசாங்கம் தனக்கு தனியாக எந்த விளம்பரமும் இருக்க கூடாது தனக்கு ஆள் உயர போஸ்டர்கள், கட் அவுட்டுகள் எங்கேயும் வைக்கக்கூடாது, தனக்கு சிலைகள் வைக்கக்கூடாது கட்டிடங்களுக்கு தன் பெயரை வைக்கக்கூடாது. அரசியலாக இருந்தால், அண்ணா பெயரையும், அண்ணா உருவச் சிலையும் தான் வைக்கவேண்டும் தான் முதன் முதலாக வாங்கிய ராயபேட்டை வீட்டிற்கு “தாய் இல்லம்” என்று பெயர் வைத்தார். இதே போல் ராமாபுரம் தோட்டம் வீட்டிற்கு பெயரே வைக்கவில்லை. ஆனாலும், அந்த பகுதியில் சினிமா நடிகர்கள், சிலர் தோட்டங்கள் வாங்கி இருப்பதால், அப்பகுதிமக்களும், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்டவர்களும் “எம்.ஜி.ஆர். தோட்டம்” என்று சொல்வார்கள். இது நாளடைவில் தமிழ்நாடு எங்கும் பிரபலமாகிவிட்டது. அடுத்து அடையாரில் வாங்கிய ஸ்டூடியோவிற்கு “சத்யா ஸ்டூடியோ” என்று பெயர் வைத்தார். இந்த மாதிரி அவருடைய பெயரை வைக்க விரும்பமாட்டார். பிறகு, “MGR பிக்சர்ஸ் லிமிடெட்”. “எம்.ஜி.ஆர். நாடக மன்ற குழு” என்ற பெயர் இயங்கியது. இப்படி இருக்கையில் அவர் முதலமைச்சர் ஆன பிறகு அரசாங்கத்தில் “மெடிக்கல் யூனிவர்சிட்டி”, தமிழ்நாடு வைத்திய பல்கலைக்கழகம். இதற்காக சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் எல்லா வேலைகளையும் முடித்து சுமார் ஒரு வருட காலமாக “திறப்பு விழா” நடக்காமல் இருந்தது. காரணம் யார் பெயரை சூட்டுவது, வைப்பது என்ற பிரச்சனை, ஏற்கனவே சென்னையில் “சென்னை பல்கலைக்கழகம்”, “அண்ணா பல்கலைக்கழகம்”, மதுரையில் “காமராஜர் கல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கட்டிடத்திற்கு “எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்” இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சர் ஆன பிறகு அவருடைய அனுமதியில் கட்டப்பட்ட கட்டிடம்.
 
எனவே, எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரை வைத்துவிடலாம் என்று அரசாங்க உயர் அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும், கவர்னரும் முடிவு எடுத்து அரசாங்க சட்டப்படி தீர்மானத்தில் கையெழுத்துப்போட்டு முதல் அமைச்சரிடம் ஒப்புதல் கையெழத்து வாங்கிய பிறகு, தான் பெயர் வைக்கவேண்டும். இதற்கு மக்கள் திலகம் அவர்கள் தன் பெயரை வைக்க ஒப்புகொள்ளவில்லை. ஆனாலும், கவர்னரும், மற்ற மந்திரிகளும் விடாமுயற்சி எடுத்து 24.12.1987ந் தேதி வைத்துவிட்டார்கள். இந்த “எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக”க் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு கவர்னர், மற்றும் மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோரும் முதல்வர் விழாவுக்கு வரும்படி பத்திரிகை அடித்து கொடுக்கப்பட்டது. அதோடு தின பத்திரிகைகளுக்கும் விளம்பரம், மற்றும் செய்திகள் கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடத் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.இ.அ.தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் அத்தனை பேர்களையும் கட்சி சார்பில் அழைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடனும் என்று கட்சி நினைத்தது, அதன்படி அந்த பல்கலைக்கழக கட்டிடம் திறப்புவிழாவிற்கு வெளியூர்களிலிருந்து வருபவர்கள் எந்த எந்த வழியில் வரவேண்டும் என்று சென்னை நகர காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
 
1987 டிசம்பர் மாதம் 24ந்தேதி வியாழக்கிழமை காலை “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” (யுனிவர்சிட்டி) தமிழ்நாடு இந்த கட்டிடம் அமைந்து உள்ள இடம் சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கிண்டி வழியாக நகரத்திற்குள் நுழையும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மக்கள் திலகம் “ராமாபுரம் தோட்டம்” வீட்டில் இருந்து மாம்பலம்அலுவலகம், கட்சி அலுவலகம், கவர்னர்மாளிகை முதல்அமைச்சர் அரசு அலுவலகம், கோட்டை இந்த இடங்களுக்கு போகும் வழியில் இந்த கட்டிடம் அமைந்து உள்ளது. இது ஒரு குறிப்பு.
 
உலகத்தில் நடக்கும் எல்லா விஷயத்தையும் கவனித்து கொண்டு இருக்கும் கடவுள் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர்கள் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்காமல் இருப்பது இல்லை, இந்த விஷயத்தில் திடீரென்று எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி 23.12.1987 அன்று கடவுள் நினைத்தார். அடடா இவர் மூன்று முறை செத்து பிழைத்தவர் “நல்லவர்”, “வல்லவர்”, “வள்ளல் குணம் உடையர்”, இவரிடம் “தர்மம்”, “சத்தியம்”, “நியாயம்”, “பக்தி”, எல்லாம் உள்ளது. மேலும், தன்னுடைய கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் உறவினர்களை விட மற்றவர்களை நேசிப்பவர், பிள்ளைகுட்டி இல்லாதவர், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பொதுமக்களின் அன்பை பெற்றவர் அன்னதானம் செய்பவர், அளவோடு வாழ்பவர் ஒரு நல்ல கொள்கை எண்ணம் உள்ளவர். இப்படிபட்ட இவருக்கு நாம் இன்று நல்ல உதவியை செய்யவேண்டும் என்று நினைத்தார். நாளை இவர் பெயர் வைத்த ஒரு கட்டிடத் திறப்பு விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இது தான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய பரோபகாரம் என்று நினைத்த கடவுள் மக்கள் திலகம் மனதில் உதித்தார். பக்தா உன்னை காண நாளை காலையில் நாடெங்கும் இருந்து லட்சோப லட்சம் பேர்கள் வருகிறார்கள். உடல் நல குறைவு ஏற்பட்டு சற்று மன நிம்மதி இல்லாமல் இருக்கும் உனக்கு உதவி செய்ய வந்துள்ளேன். இப்ப நீ என்னுடன் வந்து விட்டால் நாளை உன் உடலுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை கிடைக்கும். கடவுளே நேரில் வந்து வள்ளலின் உயிரை கொண்டு போன மாதிரிதான் அன்றைய, சம்பவம் இருந்தது. இது கற்பனை அல்ல, கதையும் அல்ல, மேலும் மக்கள் திலகம் வாழ்நாள்களின் “திருமண பத்திரிகை”, “புதுமனை புகுவிழா”, “பிறந்தநாள் விழா” இப்படி எதற்குமே பத்திரிகை அடித்து கொடுத்தது இல்லை. அப்படி பட்ட மக்கள் திலகம் அவர்களே பொது மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் நான் 23.12.1987 புதன் கிழமை இரவு 11.45க்கு இறந்து விடுவேன் என் இறுதி சடங்குக்கு எல்லோரும் வந்துவிடுங்கள் என்று பத்திரிகை அடித்து அனுப்பியது போல் இருக்கிறது. இதன்படி இந்த “மன்னாதி மன்னன்” மறைவு செய்தியை அறிந்த மக்கள் வெள்ளம் திரண்டு 24.12.1987 அன்று காலை சென்னைக்கு வந்து விட்டார்கள். ஏற்கனவே “எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்” திறப்பு விழாவிற்கு வந்து கொண்டு இருந்தவர்கள் வழியில் மக்கள் திலகம் மறைந்து போன செய்தியை கேட்டவர்கள் மனம், இதயம் எப்படி இருந்து இருக்கும், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில், தமிழக கவர்னர் தலைமையில், இந்திய ஜனாதிபதி அவர்கள் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை என் பெயரில் எந்த கட்டிடத்திலும் என் பெயரை வைக்கக்கூடாது, என்று மிகவும் வற்புறுத்தி வந்தார். அதையும் மீறி, நடக்க இருந்த இந்த விழாவை நடக்க விடாமல் நிறுத்தினார். “நினைத்ததை முடிப்பவர்”, “சாதனை நாயகன்” எம்.ஜி.ஆர். அவர்களுடைய சரித்திரம் படைத்த வரலாறு இது.
 
இந்த மாமனிதர் 5வயதில் கும்பகோணம் பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் விளையாடியதும், வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று, காவேரி ஆற்றில் தன்னுடைய அண்ணனுடன் குளிக்கசென்று அங்கு நீந்தி விளையாடியதையும் பள்ளிக் கூடத்தில் மாணவர் தலைவரிடம் கணக்கு கேட்டு, சண்டை போட்டதையும் 10 வயதில் வறுமைபிடியில் இருந்து தப்பி பிழைக்க நாடக கம்பெனிக்கு, சென்றதையும், நாடக கம்பெனியில் கடுமையான பயிற்சியின் போது ஏற்பட்ட சிரமங்களையும், பிறகு சென்னை வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி நடந்த நடைகளை பற்றி மற்றும் சில சம்பவங்களை மக்கள் திலகம் மாம்பலம் ஆபிசில் சில சமயங்கள் சில முக்கியஸ்தர்களிடம் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சுவிடுவார்.
 
இதேபோல், அவருக்கு ஏற்பட்ட பல சிரமங்களை எல்லாம் சமாளித்து இப்போ பெரிய வசதியுள்ளவன் ஆனேன், என்பதையும் சொல்வார். எனக்கு மக்கள் கொடுத்த வரபிரசாதம் தான் இது அவர்கள் கொடுத்த தைரியம், ஊக்கம் நம்பிக்கைதான் நான் பாராட்டு பெற இவ்வளவு பிரபலம் அடைய அவர்கள் தான் காரணம் என்றும் சொல்வார். இப்படி அவரே அவருடைய “வாழ்க்கை வரலாறு” பற்றிய சில நேரங்களில் சில விஷயங்களை பேசும்போது உதாரணத்திற்கு சொல்வார். இப்படி விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. இது மாதிரி ஒருநாள் ஒரு சம்பவத்தை சொன்னார் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு கம்பெனிக்கு போனேன் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து ராயபேட்டைக்கு நடந்தே சென்றேன். அங்கு எல்லோரும் ஸ்டூடியோவிற்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். அதன்படி, ராயப்பேட்டையிலிருந்து அடையாருக்கு நடந்து வேகமாய் போய் சேர்ந்தேன். பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தது. நான் அப்பவே “டீ, காபி” சாப்பிட மாட்டேன் தண்ணீர் தாகத்துக்காக “சோடா அல்லது சர்பத்” வாங்கி காசுக்கு தகுந்தபடி சாப்பிடுவேன்.
 
அப்போ எல்லாம் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் அதிக பட்சம் ஐந்துரூபாய் காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து ஏதோ வேலைக்கு போற மாதிரி அம்மா கொடுக்கிற பணத்தை வாங்கி புறப்பட்டு விடுவேன். இந்த மாதிரி சமயங்களில் சில நேரம் சில இடங்களில் என்னை மாதிரி சினிமா சான்ஸ் தேடி அலைகிறவங்ககிட்ட மாட்டிக்கிடுவேன். அவுங்ககிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன். ஆனால், என்கிட்ட ராமச்சந்திரா சாப்பிட காசு இல்லை. பசிக்குது உன்கிட்ட காசு இருந்தால் கொடு என்பார்கள். நானும் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் என்னிடம் ஒரு ரூபாய் இருந்தால் 1/4 ரூபாய் கொடுப்பேன். மீதியை நான் வச்சிக்கிடுவேன். அந்த எட்டணாவில் 4 அணாவுக்கு ஏதாவது சாப்பிட்டு மீதம் “4″ அணாவை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவேன். இப்படி ஒரு உதாரணத்திற்கு சொல்வார். அதாவது, ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியது இருக்கிறது என்பார். இப்படி எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிற வரை நடையை பற்றி கவலையே படுவதில்லை. கையிலே காசு இருந்தால் கூட அப்போ, எல்லாம் பஸ் வசதி இல்லை. “டிராம் வண்டி” ரயில்மாதிரி தண்டவாளத்தில் ஓடும் அப்போ எல்லாம் “கைரிக்ஷா” இல்லை ஆளை உக்கார வைத்து ஆள் இழுத்து கொண்டு போறது. அது எனக்கு பிடிக்காது. குதிரை வண்டி உண்டு காசு அதிகம் கேட்பார்கள். வீடு வால்டாக்ஸ் ரோடு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்து ரோடு அங்கு இருந்து ராயப்பேட்டை, மைலாப்பூர், மாம்பலம், கோடம்பாக்கம் இந்த இடங்களுக்கு போக வேண்டும் என்றால் தூரத்தை நினைக்காமல் நடந்தே போய்விடுவேன். எனக்கு வசதி வந்தவுடன் முதலில் சொந்த வீடு வாங்கனும், பிறகு ஒரு கார் வாங்கனும் எங்கே எங்கே எல்லாம் நடந்து போனோமோ அங்கே எல்லாம் காரில் போகனும் இப்படி இதை எல்லாம் நினைத்துக்கொண்டே நடந்து விடுவேன். கோயிலுக்கு போய் சாமி கும்பிட மாட்டேன். கடவுளை மனசுக்குள்ளே நினைச்சிக்கிடுவேன். ஆனால், அம்மா, அண்ணன் இருவரும் ஒரு கோயில் விடமாட்டாங்க பசிக்குது என்றால் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டேன். எவ்வளவு பசிவந்தாலும் பொருத்துகிட்டு வந்துடுவேன். இது அம்மாவுக்கு தெரியும் வீட்டில் எனக்குனு ஏதாவதும் வச்சு இருப்பாங்க.
 
சாயங்காலமோ, ராத்திரிக்கோ எப்போ வந்தாலும் குளிக்காமல் சாப்பிடமாட்டேன். இப்படி மக்கள் திலகம் பல சம்பங்களை இதற்கு தகுந்தவர்களிடம் தான் பேசுவார். நல்ல மூடில் இருக்கும் போது, ஆபிஸில் அல்லது பகலில் காரில் வெளியூருக்கு போகும்போது காரில் அவருக்கு பேச்சு துணைக்கு அவருக்கு தகுந்தாற் போல் ஒருவர் உதவியாளர் ஒருவர் காரில் குடிதண்ணீர் திண்பண்டங்கள் இருக்கும் அது சமயம் இப்படி ஜாலியாக பேசிகிட்டோ வருவார்.
 
இப்படி இதில் சில சமயம் காரில் நான் உதவியாளராக போவதும் உண்டு. அந்த சமயம் அவர் சொல்லும் இம்மாதிரியான விஷயங்களை நான் மனதில் பதியவைத்து கொள்வேன். ஒரு மாமனிதர் எப்படி இதற்கு முன்னால் வாழ்ந்து உள்ளார் என்பது முக்கியம். இதை அவரே சொல்வதென்றால் இதை விட பெரிய விஷயம் எதுவுமே இருக்க முடியாது.
 
முக்கிய குறிப்புகள்
 
1987 ஜூலை 25ந்தேதி இலங்கை ஒப்பந்தம்
 
1987 ஆகஸ்டு மாதம் 5ந்தேதி சென்னை கடற்கரையில் இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பிரமாண்டமான பொதுக்கூட்டம்
 
1987 ஆகஸ்டு 7ந்தேதி அமெரிக்கா பயணம்
 
1987 ஆகஸ்டு 30ந்தேதி சென்னை வருகை
 
1987 டிசம்பர் 22ந்தேதி கத்திப்பாரா ஜவகர்லால் நேரு உருவச்சிலை திறப்புவிழா
 
1987ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். 23ந்தேதி இரவு இறைவனடி சென்றுவிட்டார்.
 
கடற்கரையிலே உறங்கினாலும் அவர் உலக மக்களின் மனதில் குடிகொண்டு உள்ளார். அந்த மக்கள் திலகத்தை நினைத்துக் கொண்டு அவருடைய நினைவில்லத்தில் இரவு பகலாக இருந்து கொண்டு அவருடைய வரலாற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.
 
மக்கள் திலகம் அவர்களுடைய மனிதநேயமிக்க பண்புகளை “மக்கள் திலகமும் – மனித நேயமும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்.
[/b]
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:22:53 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1

சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.
 
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
 
2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !
 
3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
 
4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
 
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
 
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.
 
6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
 
7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:27:03 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Furl1.jpg&hash=a597dd22208721bf309809e70d398bd432bd2877)

8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
 
9. ஒரு மனிதனின் எண்ணமும்,நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்
 நாட்டில் நல்லவை நடக்கும்.
 
10. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குடோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.
 
11. கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.
 
12. கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
 
13. பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும்.பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
 
14. கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
 
15. குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
16. கலை எப்போதும் நிரந்தரமாய் இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாய் இருக்கமாட்டார்கள்.
 
17. இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
 
18. சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:27:46 AM
19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.
 
20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
 
21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.
 
23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.
 
24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.
 
25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
 
26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.
 
27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.
 
28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.
 
29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:28:58 AM

 
 
30. இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.
 
31. நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால் நீதி செத்துவிடும்.
 
32. நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.
 
33. சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.
 
34. சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.
 
35. ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.
 
36. நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
 
37. மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும் ; எந்தத் திட்டமும் நிறைவேறும்.
 
38. உடலைப் பேணிக் காப்பது, தேகப் பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது ; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமை ஆகும்.
 
39. எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனிதற்கொண்டு விமர்சியுங்கள்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:29:47 AM
40. மக்களையே மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
 
41. வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு ஆகும்.
 
42. ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும்.ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.
 
43. சராசரி மனிதனின் எண்ணங்கசளையும்,அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.
 
44. என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக் காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம் என்பதனாலும் தான்.
 
45. அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம் ; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
 
46. மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப் படக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
 
47. சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.
 
48. கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:31:19 AM
49. திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.
 
50. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
 
51. நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
 
52. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.
 
53. எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான் ; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
 
54. நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
 
55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.
 
56. சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.
 
57. மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:32:03 AM
58. உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது ; ஆனால் அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
59. ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக்கூடாது.
 
60. ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.
 
61. இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
 
62. என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
 
63. அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.
 
64. சமுதாயத்தின் கட்டுப்பாடுகள்.ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.
 
65. தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்
.
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:39:17 AM
லண்டன் ரேடியோவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி

லண்டன் (பி.பி.சி.) ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார். 1974_ம் ஆண்டு, ரஷியத் தலைநகரான மாஸ்கோவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன் சென்றார். அங்கு “பி.பி.சி.” க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
என்னுடைய 2 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என் தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். ஆனால்; கேரளத்தில் தந்தையின் சொத்துகள் குழந்தைகளுக்கு இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டோம். என் தாயின் அரவணைப்பில்தான் வளர வேண்டி இருந்தது.
 
என் தந்தை மாஜிஸ்திரேட்டாக இருந்தார். பிரின்சிபாலாகவும் இருந்தார். பிரின்சிபாலாக அவர் இலங்கையில் பணியாற்றும் போது, கண்டியிலே நான் பிறந்தேன். 2 வயதில் தந்தையை இழந்து அதற்கு பிறகு 4, 5 வயதில் தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டோம். என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர் போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக பணியாற்றினார். அவரது ஆதரவில் நாங்கள் வளர வேண்டி இருந்தது.
 
முதன் முதலில் நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான் பார்த்துக்கொண்டு, பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது, சூடு தணியாமல் இருக்கிறது, நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால், அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும்.
 
ஆகவே, தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதிகமாகக் கல்வி பெறுகின்ற வாய்ப்பு எனக்கு இல்லை. எனது 7_வது வயதில், நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். நாடகங்களில் நடித்து, பிறகு திரை உலகில் சேர்ந்தேன்.
 
தொடக்கத்தில் நான் காங்கிரசில் இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக இல்லாமல் ஊழியனாக இருந்தேன். 1933_ 34_ம் ஆண்டில் உறுப்பினரானேன். அதன்பிறகு அங்கே சில குறைபாடுகளை கண்டதால், நான் விலகி, அஞ்சாதவாசம் என்று சொல்வார்களே, அதுபோல எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல் இருந்து கொண்டிருந்தேன்.
 
ஆயினும் நான் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பும், நம்பிக்கையும் கொண்டவன். தமிழகத்தில், அக்கொள்கைகள் அனைத்தையும் கொண்டிருந்த ஒரே தலைவராக அமரர் அண்ணாதான் இருந்தார்கள். அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.
 
1972_ல் தி.மு.கழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, தொண்டர்களுடைய, மக்களுடைய வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை உருவாக்கினேன். அதில் நான் முதல் தொண்டனாக இருக்கிறேன்.” இவ்வாறு “பி.பி.சி.”க்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
 
திரைப்படத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பிற்காலத்தில் பிரிய நேரிட்ட போதிலும் தொடக்க காலத்தில், நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கோவையில் ரூ.14 வாடகையில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார்கள். திரைப்படத்துறையில் முன்னேற, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது வழக்கம்.
 
சென்னையில் குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று, சத்யா அம்மையார் பரிமாற உணவு சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல் கருணாநிதி வீட்டுக்குச் சென்று, அவர் தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த உணவை உண்டு மகிழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.
 
1963 ஜனவரியில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-
 
சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்களோடு, பழகவும், அவர்களுடைய ஈடுகாட்ட இயலாத அன்புள்ளத்தை உணரவும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.
 
பார்த்தவுடனே, “தம்பி வா!” என்று அழைப்பதிலேதான் எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான் வேண்டும்’ என்று வற்புறுத்துவதிலேதான் எவ்வளவு அழுத்தமான தாய்மை உணர்ச்சி. உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், வீட்டு விஷயங்களிலேயிருந்து, தொழில், அரசியல் வரையிலே அளவளாவும் அன்னையைத் தவிர வேறு யாருக்குமே இராத_ அன்புள்ளம். இவைகளையெல்லாம், என்னாலேயே மறக்க முடியவில்லையே! சகோதரர் மு.க. எப்படித்தான் மறப்பாரோ?
 
இன்பத்தைப் பிரிந்தால், மறுபடி இன்பத்தை அடையலாம். நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையைப் பிரிந்தால் கூட வேறொரு வாழ்க்கை துணையை பெறலாம். மக்கட்செல்வத்தை இழந்தாலும், மறுபடி பெற்று விடலாம். ஆனால், அன்னையைm, அன்புத்தாயை, உலகத்தை வளர்க்கும் தாய்மையைப் பிரிந்து விட்டால், மறுபடி நமக்கு யார் அன்னை? நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.”
 
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
 
எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, “யார் சிறந்த நடிகர்? யார் வசூல் சக்ரவர்த்தி?” என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம்.
 
ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்” என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி” என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.
 
எம்.ஜி.ஆர். “டாக்டர்” பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும் இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-
 
“தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு வளர்ந்தவர்கள்” என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.
 
என் மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு என்பார்களே, அந்த அளவு அழுதேன். அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.
 
எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். “சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம் கிழித்தது” என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார் கிழித்தார்கள்’, `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்’ என்று கூறினார்கள்.
 
அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி சிவாஜி பேசும்போது, “பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே” என்று சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது.”
 
இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 04:59:40 AM
என்றும் எம்.ஜி.ஆர் NO 1


மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பற்றி நாளேடுகளும் இணையதளங்களும் அடிக்கடி சர்வே நடத்துவது வழக்கம். அப்படி whopopular.com தளத்தில் 12 தலைப்புகளில் சர்வே நடந்து வருகிறது. அதில் தலைவர்கள் மற்றம் அரசியல்வாதிகள் பிரிவில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 49090 வோட்டுகள் இட்டு மக்கள் இந்திய தலைவர்களில் முதன்மையானவராக நிறுத்தி இருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர் மறைந்து 22 வருடங்கள் சென்ற பின்கூட மக்கள் மனதில் என்றும் நீக்கமற்றவராக நிறைந்திருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி.
 
உலக அளவில் நமது எம்.ஜி.ஆருக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா. பதினொன்று. அதாவது இரண்டு ஒன்றுகள்.
 
எம்.ஜி.ஆர் இன்றல்ல என்றும் No – 1.
 
நீங்களும் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.
 
அன்புடன்,
 ஜெகதீஸ்வரன்.
 
சில புகைப்படங்கள்.
 
இந்திய தலைவர்கள் பட்டியலில்,…



(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F111-4.jpg&hash=e7bf81cd545fd43fdb2c3bb3eb1f4fbf8c43507f)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F2222-1.jpg&hash=ef6a2a0970eab4e64523cb77abeb11987695a3ed)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F33333.jpg&hash=0032140b9e5ffbc9efed847423f797f40a662737)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F4444.jpg&hash=253a0fcd32f98ee7b1564c4dd8f03e4b15a0b486)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F55555.jpg&hash=697dab1c88010d8888009633e94eb278799f5b1a)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F666.jpg&hash=aaa97d1b431a319c8f5ed8b75855f46fa895be7e)

 
Title: Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
Post by: Global Angel on January 29, 2012, 05:10:39 AM
எம்.ஜி.ஆர். முத்து எழுதிய புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம் மென்நூல் வடிவில்

புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம் 1   (http://www.mediafire.com/?c7vtqx9g7v1c1fh)


புரட்சிதலைவரின் வாழ்க்கை வரலாறு பாகம் 2 (http://www.mediafire.com/?fn5qp10m7vtupyi)