ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 101
இந்த களத்தின்இந்த நிழல் படம் PaulWalker அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F101.jpg&hash=d2086c2c73f2479a17dc9d37e0afe398058159ce)
அந்த காலத்தில் நல்ல மனதோடு
பொது மக்களுக்கு சேவை செய்யும்
பலர் இருந்ததால் படிப்பு ஒரு தகுதியாக
இருக்க வேண்டாம் என்று கருதினர்
அதனால் பலரும் அரசியலுக்கு வந்து
ஆதாயம் தேடாமல் தன் இன்னுயிரையும்
தாரைவார்த்தனர் ....
ஆனால் இன்றோ தனக்கு சுரண்டியது
போதாதென்று தன் தலைமுறைக்குமாய்
சேர்த்து சுரண்டும் நோக்கோடு
அரசியலுக்கு வந்தவனுக்கு எப்பவுமே
போதும் என்ற மனம் வராத ஒருவன்
அடுத்தவனுக்கு எப்படி சேவை செய்வான் ...
இனாமாக எதையும் கொடுத்தால்
உடனே வாங்கும் உள்ளங்களே !
சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் வாக்குகளை விலைக்கு வாங்கி
ஆட்சிக்கு வரும் அவன்
ஊழல் செய்தால் தட்டி
கேட்க்கும் தகுதி உங்களுக்கு இருக்குமா என்று....
சாதிக்க துடிக்கும் ஆர்வமுள்ளவர்களை
அவர்களின் திறமை அறிந்து
தேர்ந்தெடுக்காவிடில் பொது
நல திட்டங்கள் நிறைவேறாது
தனி ஒரு இந்தியனின் கடன் சுமையும் கூடும்
இது கண்டிப்பாக நாளைய இந்தியா
பேரழிவை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை ....
பணத்தின் மேல் பற்றில்லாமல்
பொது நலம் கருதி வாழ்பவர்
சமுதாயத்திற்கு தன்னால் முடிந்ததை
எதையும் எதிர் பார்க்காமல்
பாகுபாடின்றி உழைக்கிறார்கள்
அவர்களை இனம்கண்டு வாக்களியுங்கள்
நாளைய இந்தியா வல்லரசு ஆகும் ....