FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 05, 2016, 09:25:28 PM
-
உடல் சோர்வை நீக்கி உற்சாகத்தை தரும் இஞ்சி மல்லி டீ
இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங்கள் கவலை காணாமல் போய்வி டு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக் கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
இஞ்சி கொத்தமல்லி காபி தயாரிக்க சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லி விதை, அச்சுவெல்லம் அல்லது நாட்டு வெல்லம், தேவையான அளவு தண்ணீர் இது மூன்றும் போதும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fvff.jpg&hash=6d6db672eafdf118b11be425b29bf7d6b8424bea)
கொத்தமல்லி விதையை தண்ணீரில் கழுவி பிழிந்து கொள்ளவேண்டும். இஞ்சியை அரிந்துக் கொள்ளவெண்டும். அடுப்பில் தண்ணீர் வைத்து கொதிக்க தொடங்கியதும். இஞ்சி கொத்தமல்லி விதை, வெல்லம் இந்த மூன்றையும் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி இறக்க வேண்டும்.
இதில் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையோ அல்லது ஜீனியையோ சேர்க்கவேண்டாம்.
தேவைப்பட்டால் கொஞ்சம் மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜலதோஷம், மூக்கடைப்பு உடல் சேர்வுக்கு சிறந்த உற்சாக டானிக் இது.
கவலை நிவாரணி
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜீரணசக்தி கிடைக்கும்
மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக் தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற் றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பின் குறிப்பு…!
மலச்சிக்கல் உள்ளவர்கள் குடிக்க வேண்டாம்..!