FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 01, 2016, 01:41:30 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: Forum on May 01, 2016, 01:41:30 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 100

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி தனது 100 ஆவது  பதிப்பை எட்டுவதை முன்னிட்டு  இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F100.jpg&hash=09be4ecab15edc740b4ce5fd64dcaa3d34b74602)


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: !! DJ HussaiN !! on May 01, 2016, 02:20:03 AM
              !!  ஓவியம் உயிராகிறது  !!

!! உன்னிடம் பல கவிதைகள் வந்து உயிராகிறது !!
!! இன்று உனக்கே உயிர்  கொடுக்கிறேன்  !!

!! இன்று உனக்கு 100 வது நாள் !!
!! உன்னை பார்த்து தான் நானும் கவிதை எழுத வேண்டும் என்று
   ஆசை பட்டேன் !!

!! என்னை போன்ற பல நண்பர்களுக்கும் நீ உதவியாய் இருக்கிறாய் !!
!! உன்னால் தான் பல நண்பர்கள் தங்களுடைய திறமையினை
   வெளிகொண்டு வருகிறார்கள் !!

!! அப்படி தான் நானும் என் திறமையை வெளிகொண்டு வந்தேன் !!
!! எங்கள் கவிதைகளுக்கு உயிர் கொடுத்து எங்கள் மனதையும்
   மகிழ்வித்து !!
!! மற்றவர்க்கும் எங்கள் திறமைகளை காண்பிக்கிறாய் !!

!! என்னை போன்ற பல நண்பர்கள் அவர்கள் திறமைகளை
   வெளிகொண்டுவரவேண்டும் என்று ஆசை படுகிறேன் !!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: thamilan on May 01, 2016, 06:49:41 AM
ஓவியம் உயிராகிறது
ஒரு கருவுக்கு உயிர் கொடுத்து
அந்தக் உயிருக்கு உடல் கொடுக்கும்
தாயுமானவள் எங்கள் ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சி

ஓவியம் உயிராகிறது
கொடுக்கும் நிழலுக்கு உயிர் கொடுப்பதால்
நாங்களும் பிரமாக்களே
தூங்கிக் கிடந்த எங்கள் சிந்தனைகளுக்கு
உயிர் கொடுப்பதால்
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியும்
பிரம்மனே 

ஒரு நிழலுக்கு உருவம் கொடுத்திட
பலப்பல திறமைசாலிகள்  இங்கே
அந்த உருவத்துக்கு உயிர் கொடுத்திட
இனிமையை பெயரிலும் குரலிலும் கொண்டிருக்கும்
பெண் குயில்  சுவீடி
இன்னொருவர் பேச்சால் மனதினில்
பால் வார்க்கும்  போல் வாக்கர்

எங்கெங்கோ மலர்களில் இருக்கும் தேன்கள்
ஒன்று சேர்ந்து தேன்கூடாவது போல
எங்கெங்கோ  சிதறிக் கிடந்த
எங்கள்  சிந்தனைகள் ஒன்று சேர்ந்து
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி கவிதைகளாக

முதல் அடியெடுத்து வைத்த வாரம்முதல் 
நூறாவது  வாரம் வரை
ஓவியம் உயிராகிறது கைபிடித்து
வழிநடத்திய பெருமை எனக்குண்டு
ஓவியம் உயிராகிறது வளர வளர
என்னையும் வளர்த்தப் பெருமை 
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சிக்கும் உண்டு

எங்கள் நண்பர்கள் இணையதலத்திற்கு
பெருமை சேர்த்திடும்
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
இன்னும் பலப்பல வருடங்களக் கடந்து
வெற்றிநடை போட
நாம் அனைவரும் துணை இருப்போம் நண்பர்களே

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: பொய்கை on May 01, 2016, 01:51:02 PM
"தொண்ணுற்று  ஒன்பது" ஓவியங்களுக்கு
நீங்கள் இட்ட பாமலைக்கும்.,எழுத்துகளால்
நீங்கள் செய்த அரச்சனைகளுக்கும்  FTC  சார்பாக
நன்றியை சொல்லி "நூறாவது" ஓவியத்திற்கு
வார்த்தை என்ற பூவெடுத்து ,எண்ணம் என்ற
நூலினால் கவிதை என்ற மாலை தொடுத்திட
எல்லா கவிப்பிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன் ..!
                     அன்புடன்,
                     பொய்கை

ஓவியமே உன்னை கண்டு
உயிரூட்ட அலைந்திட்டோம் !
உயிரூட்டி உயிரூட்டி
மகிழ்ச்சியிலே திளைத்திட்டோம் !

வாரம் ஒரு ஓவியத்தை இங்கே
கொண்டு வைத்திட்டோம் !
வந்தவரை  எல்லோரையும்
கவி புனைய செய்திட்டோம் !

ஓவியத்தை பார்த்ததுமே
வார்த்தை தேடி புறப்பட்டோம் !
கிடைத்தவற்றை எல்லாம்
இங்கே வந்து கொட்டி விட்டோம் !

ஒன்று முதல் நூறு வரை
இன்று நாமும் வந்து விட்டோம் !
இன்று வரை எத்தனையோ
கவிஞர் நாமும் கண்டு விட்டோம் !

ஓவியத்திற்கு உயிர் ஊட்டி
காலமெல்லாம் களித்திருப்போம் !
வாரா வாரம் உயிரூட்ட
எப்போதும் விழித்திருப்போம் !

உங்களது கவிதை எல்லாம்
உலகம் முழுதும் ஒலிக்கவைத்தே!
தமிழ் எனும் தேமதுர
ஓசை தனில் மூழ்கிடுவோம் !

ஒவ்வொரு வாரமும் சனிகிழமை
இங்கே வந்து கூடிடுவோம் !
தமிழ் உள்ளங்கள் யாவருக்கும்
கவிதையினால் விருந்தளிப்போம் !

நமக்கெல்லாம் வாய்ப்பு
அளித்த இக்குழுமத்தை,
நாளும் வளர உழைத்திடும்
நண்பர்களை இன்று
மனதார வாழ்த்திடுவோம் !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: சக்திராகவா on May 02, 2016, 09:12:59 PM
எத்தனை சித்திரம்
எழுத்தாய் போனது
எத்தனை ஓவியம்
உயிராய் ஆனது

நண்பர்கள் நற்றமிழ்
வலையத்திலே!
அடுப்படி கவிஞன் நான்
அரசவை ஏறவைத்தாய்!

கற்பனை வளர்கிறதோ
காட்சிவழியிலே!
இதயத்தை அடைகிறதோ
இணையவழியிலே!

தமிழருமை தெறியாதோர்
தன்னிலை வருந்த கண்டேன்
என் கவியால் மாறவைத்தாய்
என செவியும் கேள வைத்தாய்!

என்னற்ற மாற்றமுன்னாலே!
எண்ணத்தில் ஏற்றமுன்னாலே!
இன்றோடு நூறாம் உனக்கு!
இது கூட முதல் தான் எனக்கு!

வணக்கத்தில் சக்தி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: பவித்ரா on May 03, 2016, 04:19:56 AM
அடடா! அதற்குள் இது 100வது
ஓவியம் உயிராகிறதா
நாட்கள் நகர்ந்ததே
தெரியவில்லை ...!

அடுத்து என்ன நிழல்படம்
அடுத்து என்ன என்ற
ஆர்வத்திலே காலம்
கடந்ததே தெரியவில்லை....!

இத்தனை வாரம் சிறப்பாய்
சென்ற இந்த நிகழ்ச்சியில்
எத்தனை  பேரின் ஆசை,
கனவு நிழல்படங்கள் ....!

எத்தனை பேரின் அறிவுக்கு
தீனி போட்டாய்.எத்தனை
கவிஞர்களை உருவாக்கினாய்...!

பலரது காதல்கள் கவிதைகளாக
காலச்சுவட்டில் பதிவாகின 
சிலரது குமுறல்கள் கவிதைகளாக
கொந்தளித்தன ...!

சிலரது நட்பு சிலாகித்து
செதுக்கியது கவிதையாக
சிலரது துயரங்கள்
இறக்கி வைக்கப்பட்டது
கவிதையாக ....!

எவ்வளவு வித்தியாசமாக
நிழல்படம் கொடுத்தாலும் சவாலாக ஏற்று
வண்ணமயமான வார்த்தைஜாலம்
கொண்டு அவர்களது படைப்புக்களை
வழங்கச்செய்தாய்...!

இன்று நானும் கூட  எனதருமை
தாய்மொழியின் அழகும் பெருமையும்
உன்னாலே கற்றுணர்ந்து சற்றே
கிறுக்கவும் கற்றுக்கொண்டேன்...!

உன்னால் இந்த நண்பர்கள்
இணையதள பொதுமன்றம்
பெருமைகொள்கிறது
பல நண்பர்களின் திறமைகளை
வெளிக்கொண்டு வந்ததால் ...!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: BreeZe on May 03, 2016, 07:14:04 AM
ஓவியம் உயிராகிறது
இணைய தள வானிலே
ஆயிரமாயிரம் அரட்டை அரங்கங்கள்
நட்சத்திரமாக ஜொலிக்கையிலே
தமிழ் நண்பர்கள் அரட்டை அரங்கம்
முழுநிலவென என்றும் பிரகாசிக்கிறது

தமிழ் நண்பர்கள் இணையதள பொதுமன்றத்தின்
மணிமகுடம்  ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
சிந்தனைகள தூண்டிவிடும் ஓர்
அற்புத நிகழ்ச்சி

எழுதியே பழக்கம் இல்லாதவர்களையும்
எழுதிடத் தூண்டிடும் தூண்டுகோல்
இந்த கவிதை நிகழ்ச்சி

வாரம் தோறும் மறவாமல்
வந்தெம்மை மகிழ்விக்கும்
ஆக்கபூர்வமான இனிய நிகழ்ச்சி
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி

திருவிழாக்களில் கூடும் பக்தர்கள்  கூட்டம் போல
அரசியல் வாதிகளின் கூட்டங்களுக்கு வரும்
மக்கள் கூட்டம் போல
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியன்றும்
கூடிடும் நண்பர்கள் கூட்டம்
அரசியல் கூட்டங்கள்
கூட்டி வரப்படும் கூட்டம்
நண்பர்கள் அரட்டை அரங்கத்துக்கு வரும்
கூட்டமோ அன்பால் கூடும் கூட்டம்


எத்தனை விதமான நிழல்ப்படங்கள் 
எந்த விதமான நிழல் படமானாலும்
அசரவில்லை உயிரூட்டிகள்
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
என ஒவ்வொரு  வாரமும் நிரூபிக்கிறார்கள்

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
இன்னும் என்றும் மங்காப் பொலிவுடன்
இன்னும் பல்லாண்டு வெற்றிநடை போட வாழ்த்திடும்
நண்பி


பதிப்புரிமை
             
BreeZe
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: KuYiL on May 05, 2016, 06:55:20 PM
கவிதையின் வயது 100

            இளமை ததும்பும் உனது வயது என்றும் 16!
            கடிவாளம் இல்லாத கற்பனை குதிரை நீ !
            உனக்குள்  வேகம் மட்டும் அல்ல , விவேகமும் அதிகம்!
            சிந்தனை சிற்பிகள் வடித்த சொல் ஓவியங்கள் !
            கற்பனை தூரலில் சிலிர்த்து நிற்கும் வண்ண மலர்கள்!
            புதிய எண்ணங்களின் பொலிவான பரிமாணங்கள் !

          நூறையும் தாண்டி பல ஆயிரம் ஆண்டுகள் இளமையோடு வாழ ,
          வாழ்த்து உரைத்து விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்!

என்றும்  அன்புடன்
உங்கள் குயில் ........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100
Post by: JEE on May 07, 2016, 07:51:31 AM

படம் பார்த்து கவிதை கிறுக்க போகிறேன்

FTC Teamக்கு வாழ்த்துக்கள்
நூறாம் பட பதிப்பில் கொணடாடும்
பலரில் சிலரை நான் காண்கிறேன்

ஸ்ருதி   ராம்  முருகன் பொய்கை                  
பூக்குட்டி பவித்ரா நிலா   நித்யா   
நந்தா தாமரை   தமிழன்    செல்வன்
சிநேகிதன் சக்திராகவா   குழலி

கார்மேகம் கார்க்கி காமினி                           
கவிதைக்காரன்    கவி ஆதி
அன்பென்னும் ஜீவ நீர் அருள்
அன்னக்கொடி~DivYa~_pLayeR - imranabcde   

Yousuf Yevano OruvaN   VJ   rjckE aasaiajiith   
Aadava   <SinDhu> $$JANSI RANI$$   $ Open HearT $   
$ GreeN $~Bharathy    !!SaShi143!!
!! DJ HussaiN   !!!! AnbaY     ! Viper !    ! !wills! !   


படத்தில் முகம் சரியாய் தெரியாமல்  போனது
ஒரு யூகத்தில்  உங்கள் யாவரையும் கண்டேன்
சரியாக முகம் தேரிந்தால்  விடுபட்ட உன்னையும்
இந்த அட்டவனையில் சேர்த்திருப்பேன்
வருத்தப்படாதே   நண்பா

கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
படம் பார்த்து கவிதை எழுது.வதில்
முதல் இடத்திலும் இரண்டாம்  இடத்திலும்
இருக்கும் நண்பரை வாழ்த்துகிறேன்

இன்னும் பல கொண்டாட்டம் காண துடிக்கிறேன்
பல களங்களில் உனை காண  துடிக்கிறேன்
 உன் படைப்பு பல தேவை உன் படைப்பைக் கண்டு
நாங்கள் மகிழ பல படைப்பு இ்ன்னும் தா............            
.