FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on April 24, 2016, 12:12:31 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: Forum on April 24, 2016, 12:12:31 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 099
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  நண்பர்கள் இணைய  வானொலி பாவணையாளர் ஒருவரால்  வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F099.jpg&hash=7f8917bd38429b71caf7da6ec97802dbd44cdc79)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: பொய்கை on April 24, 2016, 01:02:11 AM
[highlight-text]படம் காட்ட யாரும் இல்ல
படம் பார்க்க யாரும் மில்ல ..

அரங்கத்தின் வாசலும்
அடைப்பட்டு  போயிடுச்சா..
காணொளி கண்டு கண்டு
கண்ணும் மங்கிதான் போயிடுச்சா..

நேரான நிகழ்ச்சி பார்க்க அரங்கத்தின்
முன் வரிசை முதல் வகுப்பு தானங்க..
நிழலாக பார்க்க போனால் அரங்கத்தின்
பின் வரிசை முதல் வகுப்பு ஆகுமுங்க ..

ரசிகனுக்கும் ரசிகைக்கும்
பிடிச்ச படத்த போடுங்க...
இருக்கை மொத்தம் நிறைச்சு நிறைச்சு 
காச அள்ளி கொள்ளுங்கோ ..

அரங்கத்தில் யாரும் வந்து அமரும் வரை
வெள்ளை திரை தானங்க .,,
என் மனதில் யாரும் வந்து அமரும் வரை
வெள்ளை மனம் தானங்க ..

சினிமா வின் காட்சி ஒளி வெண்திரையை
வண்ணமயம் ஆக்குதுங்க...

கள்ளி இவள் கண்ணின் ஒளி
என் மனத்திரையை
வண்ணமயம் ஆக்குதுங்க..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: JEE on April 24, 2016, 06:01:24 AM
பண்டைய காலத்தில் கிரேக்கத்தில்
பிரமாண்ட அரண்மனை இருந்திருப்பதும்
 பத்தாயிரம் பேர் அமர்ந்து ரசிக்கக் கூடிய மிகப்
 பெரிய மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதும் 
பண்டையகால அதிசயம்
 

ரசிகர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் நோக்கில்
ரசிக்கும் பல வித்தைகளுடன் ஆயிரம் கதைகள


வண்ணத்திரை வந்தபின் வரவேற்பும்
அதிகமாக அதிகமாக நன்மைகள் பல
எத்தனை எத்தனை நன்மைகள் சொல்லி முடியாது
அரங்குகளில் விழக்காலங்களில்
ரசிகர்கள் வந்த வரத்தென்ன  சொல்லி முடியாது
.
திரைஅரங்குகள் மூடப்படவேண்டி
 பல பரிசுத்தவன்கள் போராடி
 பல தெய்வங்களை வேண்டினர் வேணடிய
பலர் பயனின்றி மண்ணுக்குப் போயினர்

அனைத்தும் ஆளில்லா அரங்குகளாக மாறியது
அனைத்து வீடுகளையும்    பகவான் 
தொலைக்காட்சி பெட்டியால்
அரங்குகளாக மாற்றினார்

மனிதன் நினைப்பததொன்று
மாறாய் நடப்பதொன்று

இப்டித்தான் எண்ணதான் வேண்டினாலும்
அனைத்து மக்களும் வேண்டினாலும்
அவன் பதித்து வைத்தது தான் நடக்கும்

 மனிதன் அறியாமையில்
பலவற்றை செய்கிறான் காலம் கழிந்து
 பலவற்றிற்கு விடை காண்கிறோம்

ஆளில்லாஅரங்குகள் திருமண மண்டபமாக
கட்சிகளின் அரங்காக பரிமளிக்கிறது


அரங்கின் பங்களிப்பு
 அற்புதமாய் திகழும்
அனைவரும் கண்டு மகிழ்வோம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: !! DJ HussaiN !! on April 24, 2016, 02:19:56 PM
                             
                                   
                     !!   அனைவருக்கும் வணக்கம்   !!




!! திரை அரங்கு ... உன்னை பற்றி என்ன எழுதுவது !!
!! சிறியவர் முதல் முதியவர் வரை மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய ஒரு இடம் நீ !!
   
!! கிராமபுறங்களில் மணல் திடலில் விரிப்பு  விரித்து !!
!! வெள்ளை திரையில்  காணும் படம் !!
!! அதில்  ஆரம்பித்த எங்கள் மகிழ்ச்சி !!
!! இன்று கட்டிடங்களில் குளிர்சாதன பெட்டிகள் நடுவே !!
!! நாற்காலிகளில்  அமர்ந்து பார்க்கும் இன்று வரை !!
!! எங்கள் மகிழ்ச்சி நீடித்துக்கொண்டிருகிறது !!

!! அன்று நாங்கள்  மணல் திடலில் அமர்ந்து பார்த்த படங்களில் !!
!! எண்ணற்ற கருத்துகள் இருந்தன !!
!! இன்று எண்ணற்ற படங்கள் வருகின்றன ஆனால் நல்ல கருத்துக்கள் தான் இல்லை!! 
       
   
!! எவ்வளவு தான் உலகம் முன்னேறினாலும் பழைய நினைவுகள்  என்றும் அழியாது !!
!! இப்போது  எல்லாருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி உள்ளது !!
!! ஆனால் உன்னில் வந்து குடும்பத்தினருடன் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது !!

!! என் வாழ்க்கை முழுவதும் உன்னால் எனக்கு மகிழ்ச்சியே எபோதும் உண்டாகும் !!

!! படம் பாருங்கள் அனால் அதில் தேவையான விஷயங்களை மட்டும் எடுத்து கொள்ளவும் !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: பவித்ரா on April 25, 2016, 04:22:46 AM
   திரைப்படத்தோடு ஒரு உரையாடல்

குலு குலு அறையில்
சொகுசாய் வேளை
பார்பவனுக்கும் சரி !
ஏட்டு கல்வி காணாத
பாமரனுக்கும் சரி
பொழுது போக்கு
என்னவோ நீ தான் ...!

குடும்பதலைவிக்கும் சரி
குழந்தைக்கும் சரி கல்லூரி
மாணவ மனைவியருக்கும் சரி
வயது வேறுபாடு இன்றி
ரசிக்கும் அளவிற்கு
அனைத்து அம்சமும்
உன்னிடமே உள்ளது...!

பல தலைவர்களின் தியாகங்கள்
சில காவியக்கதைகளின் சிறப்பு
பல மறைக்கப்பட்ட நிஜங்கள்
சில ராஜாக்களின் வீரங்கள்
நீ இன்றி என்னால் இவ்வளவு
அறிந்திருக்க முடியாது ...!

நீ ஒரு மாயாஜால
வித்தை தெரிந்தவன்
கந்தல் உடையில்
கடையில் வேளை செய்யும்
கதாநாயகன் கூட  காதல் வந்த
அடுத்த நிமிடம் கனடாவில்
கானம் பாடுவது உன்னில்
மட்டுமே சாத்தியம்....!

உன்னால் வாழ்க்கையில்
முன்னேறியவரும் உண்டு
உன்னால் நடுத்தெருவுக்கு
வந்தவரும் உண்டு
உன்னால் அன்றாட பிழைப்பு
நடத்துபவரும் உண்டு
உன்னால் அரசியலுக்கு வந்து
ஆதாயம் கண்டவரும் உண்டு....!

உன் மூலமாக நல்ல கருத்துக்களை
பதித்த காலம் போய்
இன்று வன்முறை  பகைமை
அடிதடி ஆபாசம் இவற்றைவிதைத்து
பணம் பார்பவர்களை  சற்றே சிந்திக்க சொல் 
 கெட்டதை கற்றுகொள்வது
அவர்களது வாரிசுகளும் தான்...!

உன்னை ஒரு பொழதுபோக்குவதற்கு
மட்டும் அல்லாமல் உன் மூலமாக
மேலும் பல நல்ல விஷியங்களை
மக்களுக்கு கொண்டுபோனால்
அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக
பயன்பெறுவார்கள் உன்னையும்
மேலும் புதிய தொழில்நுட்பத்துடன்
மெருகேற்றுவார்கள் என்பதில் ஐய்யமில்லை ...!

!! இந்த நிழல் படம்  கொடுத்த நண்பர்கள் இணைய  வானொலி பாவணையாளருக்கு எனது நன்றி !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: SweeTie on April 25, 2016, 08:39:48 PM
கண்ணைப் பறிக்கும்  வெள்ளித்திரை 
வரி வரியாய் வசதியான இருக்கைகள்
ரம்மியமான குளு  குளு  காற்றோட்டம்
நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியில்
வளர்ந்திடும்  அனுமதி சீட்டின் விலையும்

தொழில் நுட்பவியலின்  வளர்ச்சி
கருப்பு வெள்ளை  நிழற் படங்கள் மறைந்து 
வண்ண வண்ண நிறங்களின் மெருகேற்றம்
காதுகளை   இனிமையில் பிளக்கும்  இசைப்பெருக்கு
அருகில் இருப்பதுபோல் முப்பரிமாண  உணர்வு

கால ஓட்டத்தின்  நெரிசலில் சிக்கிய மனிதர்கள்
நேரமின்றி  தவிக்கும் வேளையில் …. நேரம் ஏ து ?
திரை அரங்கத்தில் நிழற்படம் பார்க்க 
வீட்டுக்கு ஒன்றென்று இல்லாமலில்லை
தொலைகாட்சிப் பெட்டிகள் 
தினமும் திரைப்படம்  அலைவரிசைகளில்

நேரத்தை விழுங்கும் தொலைகாட்சிப் பெட்டிகள்
காலத்தைக் கடத்தும் நீள்தொடர் நாடகம்
வேண்டவே வேண்டாம்
அதனிலும் சிறப்பு  கணினியில் நேரடித் தொடர்பு
தேவையற்ற  காட்சிகள் நீக்கி  பார்த்து முடிக்கலாம்
வேண்டிய திரைப்படம்

களரிகள் போட்டு கூத்துகள்  ஆடி
கொட்டகை  கட்டி  நாடகம் நடித்தது   
தெருக்கூத்து  பார்த்து நம்மை மறந்தது
எல்லாமே  இன்று கனவாய்  ஆனது
நேரமும் இல்லை  சந்தோசமும்  போனது
எதிலும் அவசரம்  எல்லாமே  அவசரம்
மனிதனின் வாழ்க்கை இப்படி ஆனதோ!!!
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: thamilan on April 26, 2016, 12:16:40 AM
வேகமாக ஓடும் நவீன யுகமிது
நின்றால் முந்திவிடுவார்கள் என
முட்டித் தள்ளிக்கொண்டு ஓடும் மனிதருக்கு
இரண்டு மணி நேரம் என்பது
ஒரு யுகம் போல
 
இதில் வருசையில் நின்று
இடம் பிடித்து
அருகில் இருப்பவர் வியர்வை நாற்றத்தையும்
புகையிலை நாற்றத்தையும் சகித்துக்கொண்டு
காதுகிழியும் விசில் சத்தத்தையும் பொறுத்துக் கொண்டு 
படம் பார்க்க நேரம் ஏது

முன்பு வெண் திரையானது மாறி
வெள்ளித்திரை ஆனது
கருப்பு வெள்ளைப் படங்கள் மாறி
வர்ணப் படங்களாக ஆகின

இந்தப் படங்களால்
மக்கள் மனதை ஆண்டவர்கள் பலர்
மக்களையே ஆண்டவர்களும் ஒரு சிலர்
கட்டபொம்மனின் வீரம் புரிந்தது 
இந்த திரைப்படத்தால் தான்
கண்ணகியின் கோபம் கண்ணெதிரே கண்டதும்
இந்த திரைப்படத்தால் தான்

இன்றும் திரைப்படங்கள் வருகின்றன
வந்த  வேகத்தில் அரங்கத்தை விட்டு
தொலைக்காட்சிகளுக்கு ஓடி விடுகின்றன

தொலைக்காட்சிகள் திருட்டு குறுந்தகடுகள் இணையதளங்கள்
இவை வந்ததால்
திரை அரங்குகள்
திருட்டுக் காதலர்கள் அரங்கமாக மாறிப் போனது
படம் எடுத்து
பரதேசி ஆனவர்களும் இருக்கிறார்கள்
திரை அரங்கம் கட்டி
திருவோடு எடுத்தவர்களும் இருக்கிறார்கள்

ஆனாலும் திரை அரங்குகளில்
திரைப்படம் பார்பவர்களும் இருக்கிறார்கள்
பிடித்த நடிகர்கள் நடித்த திரைப்படம் வந்துவிட்டால்
வானுயர  கட்அவுட் அதற்கு பாலாபிஷேகம் 
என பட்டையை கிளப்பும்
வெறியர்களும் இருக்கிறார்கள்

திரைப்படம் என்பது
தனிமனித உழைப்பல்ல
பலருக்கு படியளக்கும் ஒரு தொழில்கூடம்
 அந்த உழைப்பாளிகளை கவ்ரவிக்க
ஒரு தடவையேனும் திரையங்குகளில்
திரைப்படம் பார்க்கலாமே


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099
Post by: Dong லீ on April 28, 2016, 09:52:35 PM
சிரிப்புடன் நுழைபவன்
கண் வியர்க்க செய்வதும் நீ
வருந்தும் மனங்களின்
மருந்தும் நீ

மது ஆபத்தென
புகட்டியதும் நீ
மது கெத்தென
பாடுவதும் நீ

பெண்ணை வர்ணிப்பதும் நீ
பெண்ணை இகழ்வதும் நீ

சினிமா உன்   மாயை
தெய்வத்துக்கே புரிவதிற்கில்லை

அரங்கு நிரம்பி வழிய 
ஆர்பரிக்கும் ரசிகர்கள்
அரங்கமே அதிர -
திரையில் நாயகன் !!

நம்ம ஊருக்கு
என்னதான் ஆச்சு
விடை வேண்டி 
மாறுவேடத்தில்
திரையரங்கில் தெய்வம்  !!

எதிரிகள் பந்தாய் பறக்க
"நான் அடிச்சா அடி விழாது
இடி விழும் " என
புடைத்தது நாயகனின் நரம்புகள் !!
சிலிர்த்தது தெய்வத்தின் புலன்கள் !!

"ஐ வான்டூ மேரி யூ"
நாயகன் நாயகி  காதல்கள் !!
நாணி கோலமிட்டது
தெய்வத்தின் கால்கள் !!

"டேய் பாகிஸ்தான்  தீவிரவாதி "
கண்கள் சிவக்க -சடாரென
திரையை கிழித்து
தன்னை நோக்கி
நாயகன் ஓடிவர
அதிர்ந்தது தெய்வம் !!

பக்கத்து இருக்கையாளன்
நாயகனிடம் மிதிவாங்க
பெருமூச்சுவிட்டது தெய்வம்!!

" வை திஸ் கொலைவெறி "
தெய்வம் காரணம்  கேட்க்க
"திருட்டு வி சி டிசெய்பவன்
பார்ப்பவன் 
எவனா இருந்தாலும் வெட்டுவேன் "
என்றான் நாயகன் !!

திருட்டு வி சி டி காக
ஒளிப்பதிவு செய்தவனை
தெய்வமும் நாயகனும்
 தண்டித்து கொண்டிருக்க

திரைக்குள் நுழைந்து
நாயகியை
நோக்கு வர்மத்தில்
மயக்கியிருந்தேன்
 டாங் லீ என்கிற நான் !!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FvSoD8S0.jpg&hash=b00b8176af1275c6630f078a8558b9ebbaa83857)