ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 099
இந்த களத்தின்இந்த நிழல் படம் நண்பர்கள் இணைய வானொலி பாவணையாளர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F099.jpg&hash=7f8917bd38429b71caf7da6ec97802dbd44cdc79)
திரைப்படத்தோடு ஒரு உரையாடல்
குலு குலு அறையில்
சொகுசாய் வேளை
பார்பவனுக்கும் சரி !
ஏட்டு கல்வி காணாத
பாமரனுக்கும் சரி
பொழுது போக்கு
என்னவோ நீ தான் ...!
குடும்பதலைவிக்கும் சரி
குழந்தைக்கும் சரி கல்லூரி
மாணவ மனைவியருக்கும் சரி
வயது வேறுபாடு இன்றி
ரசிக்கும் அளவிற்கு
அனைத்து அம்சமும்
உன்னிடமே உள்ளது...!
பல தலைவர்களின் தியாகங்கள்
சில காவியக்கதைகளின் சிறப்பு
பல மறைக்கப்பட்ட நிஜங்கள்
சில ராஜாக்களின் வீரங்கள்
நீ இன்றி என்னால் இவ்வளவு
அறிந்திருக்க முடியாது ...!
நீ ஒரு மாயாஜால
வித்தை தெரிந்தவன்
கந்தல் உடையில்
கடையில் வேளை செய்யும்
கதாநாயகன் கூட காதல் வந்த
அடுத்த நிமிடம் கனடாவில்
கானம் பாடுவது உன்னில்
மட்டுமே சாத்தியம்....!
உன்னால் வாழ்க்கையில்
முன்னேறியவரும் உண்டு
உன்னால் நடுத்தெருவுக்கு
வந்தவரும் உண்டு
உன்னால் அன்றாட பிழைப்பு
நடத்துபவரும் உண்டு
உன்னால் அரசியலுக்கு வந்து
ஆதாயம் கண்டவரும் உண்டு....!
உன் மூலமாக நல்ல கருத்துக்களை
பதித்த காலம் போய்
இன்று வன்முறை பகைமை
அடிதடி ஆபாசம் இவற்றைவிதைத்து
பணம் பார்பவர்களை சற்றே சிந்திக்க சொல்
கெட்டதை கற்றுகொள்வது
அவர்களது வாரிசுகளும் தான்...!
உன்னை ஒரு பொழதுபோக்குவதற்கு
மட்டும் அல்லாமல் உன் மூலமாக
மேலும் பல நல்ல விஷியங்களை
மக்களுக்கு கொண்டுபோனால்
அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக
பயன்பெறுவார்கள் உன்னையும்
மேலும் புதிய தொழில்நுட்பத்துடன்
மெருகேற்றுவார்கள் என்பதில் ஐய்யமில்லை ...!
!! இந்த நிழல் படம் கொடுத்த நண்பர்கள் இணைய வானொலி பாவணையாளருக்கு எனது நன்றி !!