FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 21, 2016, 07:26:07 PM

Title: ~ தலை அரிப்புக்கு தீர்வு தரும் துவரம் பருப்பு ~
Post by: MysteRy on April 21, 2016, 07:26:07 PM
தலை அரிப்புக்கு தீர்வு தரும் துவரம் பருப்பு

து.பருப்பு 200 கிராம். கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் இந்த இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை. இந்தப் பொடியை பேஸ்ட் போல குழைத்து, முகம் முதல் பாதம் வரை பூசி பிறகு குளியுங்கள். முகத்தில் இருந்த கரும்புள்ளி, தேமல், வறட்சி எல்லாம் போயே போச்சு..

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ftha.jpg&hash=2184b8e67aecafb1f29dd0fa4f0ccb475280ce97)

• சிலருக்கு அரிப்பு தொல்லை அதிகமாக இருக்கும். இந்த அவஸ்தைக்கும் அருமருந்தாக இருக்கிறது து.பருப்பு! சீயக்காய் 1 கிலோ, சுட்டு, கறுப்பாக்கிய வசம்பு 10, து.பருப்பு கால் கிலோ. வேப்பங்கொட்டை 20 கிராம். உலர்ந்த நெல்லிக்காய் 100 கிராம். வெந்தயம் கால் கிலோ…. இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெயில் 2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி, தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறகு இந்த பவுடரை சுடுதண்ணீரில் கலந்து, தலையில் “பேக்” போட்டு அரை மணி நேரம் விட்டு, அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்தால், பேன், பொடுகு ஈறு பக்கத்திலேயே நெருங்காது. முடியும் மிருதுவாக இருக்கும்.
• இளம் பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் கூந்தலுக்குத் தினம் ஒரு நிறத்தில் சாயம் பூசி அதைப் பாடாய்ப்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் அதன் பளபளப்பை இழந்து வறண்டுவிடுகிறது. அப்படிப்பட்ட கூந்தலை மிருதுவாக்கி. வசிகரமூட்டுவதுடன் நுனி முடி வெடிப்பையும் போக்கும் வைத்தியம் இது. து.பருப்பு 2 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன். தயிர் 1 டீஸ்பூன். தோல் நீக்கிய பூந்திக் கொட்டை 2 இவற்றை இரவே ஊறவைத்து, காலையில் அரைத்து, தலையில் “பேக்” போட்டு 20 நிமிடம் கழித்து அலசுங்கள். கூந்தல் பொலிவுடன் பளபளக்கும்.
• உடம்பின் ஒட்டுமொத்த எடையைத் தாங்கிச்சுமக்கிற பாதங்களையே பதம் பார்க்கும் விஷயம் பித்தவெடிப்பு! இந்த பாதிப்பைப் போக்கி, பாதத்தை மிருதுவாக்கும் சக்தியும் உண்டு து.பருப்புக்கு. து.பருப்பு 1 டீஸ்பூன், ஐந்தாறு மருதாணி இலை இவற்றை தயிரில் ஊற வைத்து, அரைத்து பாதத்தில் பத்து மாதிரி போட்டு அலசுங்கள் பாதம் மிருதுவாகி மிளிரும்.