FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on April 10, 2016, 12:11:22 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: Forum on April 10, 2016, 12:11:22 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 097
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  PaRuShiNi அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F097.jpg&hash=c338ea87e9c7487275d3af15eed89e93eb1b11d2)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: thamilan on April 10, 2016, 07:38:58 AM
ஆண் என்பவன் தனிமரம் போன்றவன்
ஒரு பெண் அந்த ஆணுடன் சேரும் போது
அவள் அந்த மரத்தின் கிளைகள் ஆகிறாள்
குழந்தைகள் அந்த மரத்தில்
பலன் தரும் கனிகள் ஆவர்
 
வெறும் பெண்ணாக மனைவியாக இருந்தவளை
தாய்மை எனும் கடவுளுக்கு நிகரான
உன்னதமான பதவிக்கு உயர்த்துவது
குழந்தையே

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பர்
தெய்வம் கூட சில நேரம்
அழவைக்கும்
அந்த அழுகையைக் கூட
ஆனந்தமாக்கிடும் அற்புத மருந்து
மழலையின் சிரிப்பு
அவை பேசும் பேச்சு  புரியாது - ஆனால்
அந்த பேச்சு தரும் ஆனந்தத்துக்கு
ஈடு இருக்காது

குழந்தையின் அழுகையை நாம்
மிட்டாய் கொடுத்து நிறுத்தி விடுகிறோம் - ஆனால்
குழந்தையின் சிரிப்பை காலம்
அதுவாகவே நிறுத்தி விடுகிறது
 
படிப்பால் தலைநிமிர்வார்கள் என
 பால் மனம் மாறா பருவத்தில்
 பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறோம் - ஆனால்
புத்தகப் பையை சுமந்து கூன் விழுந்த
குழந்தைகளே அதிகம்

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது
குழந்தைகள் உலகம்
அவர்களை விமர்சனம் செய்யும் தகுதி
பெரியவர்களான நமக்கு இல்லை
என்பதே உண்மை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: BreeZe on April 10, 2016, 08:56:12 PM
என்னைப் பற்றி நானே எழுதும்
கவிதை இது
வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளை தானே
கருவில் உயிராகி
உயிரில் உருவமாகி
தனி மரங்களாக இருந்த
ஆணையும் பெண்ணையும்
தோப்பாக மாற்றும்
குட்டித் தேவதைகள் குழந்தைகள்
அனைத்து  இன்பங்களையும்
ஒன்றாக குழைத்து
இறைவன் படைத்த ஓவியங்கள்
வர்ணமிகு வானவில்
வெண்பஞ்சு முகில் கூட்டம்
அலைகளின் வெண் நுரைகள்
பட்டாம்பூச்சியின் மென்மை
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து
இறைவன் படைத்திட்ட
பனிப்பொம்மைகள் குழந்தைகள்
உலகினிலே ஆயிரம் மொழிகள் இருக்கலாம்
மழலைகள் பேசும் மொழிக்கு
ஈடும் இல்லை இணையும் இல்லை
மொழி தெரியாவிட்டாலும் மனதை மகிழ்விக்கும்
சங்கீதம் போல
மனதை மகிழ்விக்கும்
குழந்தைகளின் மழலை
இனிமை என்ற வார்த்தைக்கு
இன்னொரு அர்த்தம்  மழலைகள்
தத்தி நடக்கும் நடையோ 
இலக்கியக் கவிதைகள்
பேசும் வார்த்தைகளோ
ஹய்க்கு கவிதைகள்
மொத்தத்தில் குழந்தைகள்
புதுக்  கவிதைகள்


எழுத்தாக்கம்
BreeZe

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: MyNa on April 12, 2016, 12:27:32 AM
ஒரு வளர்ந்த குழந்தைக்காக
இக்கவிதை கிருக்கப்படுகின்றது .. ;)

இக்கவிதையில் வரும் அனைத்தும் கற்பனையே ..
யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.. :)

தேவதை  இல்லைன்னு   யார் சொன்னாங்க ??
இல்லை யார்  சொன்னானு கேக்குரேனுங்க ?? ???

ஒவ்வொரு  வீட்டுலயும்  அம்மா  அப்பாவுக்கு 
அவங்க  பிள்ளைங்க  தேவைதை தானுங்க .. ;D

அப்படி நம்ம  சாட்ல (chat )  ஒரு  தேவதைய
பத்தின கவிதைய  கிறுக்கிறேன்  படிங்க .. ;)

மைக் எடுத்தா நேயர்  விருப்பம் மாதிரி
மூச்சு  விடாம  பாட்டு  பாடும்  குயிலுங்க .. ;D

ஆளே இல்லைனாலும் சலிக்காம 
வேர்ட் கேம் நடத்துறது இவங்க தில்லுங்க .. 8)

மொபைல்ல இருந்தாலும் டைமிங்- கு 
கவுன்ட்டர்  கொடுக்கறதுல செம்ம ஆளுங்க .. :-X

ஒரே ஓவர்ல 4-5 பேர சும்மா அசால்ட்டா 
பொவ்ல்(bowl) பண்ணி அவுட் ஆக்குற வில்லிங்க.. :o

ரூம் போட்டு சிரிக்கிற ஆளுங்க மத்தியில 
பி ஆர் பி (brb ) போட்டுட்டு  சிரிக்கிற டைப்புங்க .. :P

இன்னும் கிறுக்கிறேன்  படிங்க .. ::)

ஏசி(AC) ரூம்ல பீசி(PC) போட்டு உட்காந்துருக்கும்
இவங்க  டீசி(DC)  குவின்  தானுங்க ..  8)

ரசத்துக்கும் பாசத்துக்கும்
இங்க  பேர் போன ஆளுங்க .. ;)

விஷ் ஒன்னு  அனுப்பினா
அத கேட்டுகிட்டே  இருக்க சொல்லுமுங்க .. :D

மைனா  வெளவால்ல இருந்து விஐபி வரை..
அட நம்ம தெய்வம் கூட இவங்க விசிறிங்க.. ;)

சும்மா சிவேனேனு இருந்த  என்ன எழுத சொன்ன
எனக்கு  என்ன எழுத தொனுமுங்க  :-\

ஓவியத்துக்கு  கவிதை  வராதனால
ஓவியம் கொடுத்த  தேவதைக்கே  கவிதை  எழுதிட்டேனுங்க  ::)

ஓவியத்திலுள்ள குழந்தை செல்வங்களுக்கு
உயிர் கொடுத்த குழந்தைக்கு இக்கவிதை ஓர் அன்பளிப்பு ;)

மைனா... (இடையகவைப்பு ). :o ::)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: பொய்கை on April 12, 2016, 01:23:47 AM
மலர் கண்காட்சியில்
கண்டிராத வண்ண மலர்கள்

அம்மா அப்பா மடியில்
அமர்திருந்தால் அவர்களின்
பொம்மைகள்

தினமும் காண கிடைக்கும்
தீபாவளி மத்தாப்புக்கள்

புரியாத மொழியில்
புதுகவிதை சொல்லிடும்
குட்டி புலவர்கள்

பசிஎன்று வந்தால்
நிற்காமல் பாடிடும்
சங்கீத வித்வான்கள்

இருண்டிருந்த இல்லத்தில்
தன் வரவால் ஒளியூட்டும்
மின்மினிகள்

சோம்பேறி அப்பனையும்
சம்பாதிக்க நினைவூட்டும்
பாசமிகு சித்திரங்கள்

தாத்தாவுக்கும் பாட்டிக்கும்
அன்பு பசி எடுத்தால்
உணவு தரும் பாத்திரங்கள்

சின்னஞ்சிறு மழலை உள்ளத்தில்
என்றும் இல்லை ஜாதி ,மதம்,
குலம்,கோத்திரங்கள்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: சக்திராகவா on April 13, 2016, 12:08:49 AM
கருவிற்கும் கைமுளைத்து
கண்மூடி மண் பிறந்து
கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சம் மகிழ்கிறதே

என் பிள்ளை
என்று சொல்ல
எத்தனை தவமிருந்தோம்
இப்படியோர் பிள்ளை வர

தொட்டில் பிள்ளையால்
தொலைந்த கோவம் எத்தனையோ?
நடைவண்டி குறுகிட்டு
நின்ற மகிழுந்து எத்தனையோ?


மிட்டாயின் சுருளுக்குள்
மறைந்திருக்கும் சிரிப்பொலியும்
எட்டாத சட்டைக்குள்
ஏமாற்றும் ஏளனமும்

குண்டில்லா துப்பாக்கி
புகையில்லா புகைவண்டி
பேசாத பெண்பொம்மை
வீடெங்கும் நீ விளையாட

அலுப்பில் முடிந்த
அலுவலகம்!
உன் சிரிப்பில் எப்படி
சிதைகிறது!

மண்ணாண்ட மன்னன் மனம்
மண்டியிடும் மழலையிடம்
எந்நாட்டு பிறப்பினிலும்
ஏதோ ஓர் சிறப்பிருக்கும்

பல்முளைக்கும்
முன் முளைக்கும்
முதல் மொழிக்கு
நிகறுண்டோ!!

தேன் கூட திகட்டிவிடும்
திகட்டாதுன்
முத்ததில் முடியும்
எச்சில் துளி!

சின்ன சின்ன கோபம்
சிரிக்க வைக்கும் சாபம்
உறங்கும் நேரம் கூட
உனை நெஞ்சில்சுமப்பேனோ!

கவிதையில் மழலை சக்தி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: SweeTie on April 14, 2016, 01:24:33 AM
சின்ன சின்ன  பாப்பாக்கள்
செல்லகுட்டி பாப்பாக்கள்
சிரித்து மகிழும் பாப்பாக்கள்
சலனம் இல்லாப் பாப்பாக்கள்
மழலை பேசும் பாப்பாக்கள்
மனதை கவரும் பாப்பாக்கள்

உலகம் அறியாக் குழந்தை உள்ளம்
கள்ளம்  இல்லா வெள்ளை உள்ளம் 
துள்ளி விளையாடி மகிழும் பருவம்
சுட்டித் தனமும் நிறைந்திருக்கும்
பொம்மை ஒன்றே அவர்கள் உலகம்
சூது வாது தெரியாப் பருவம் 

பள்ளி சென்று  கற்க வேண்டும்
என்னும் எழுத்தும் படிக்கவேண்டும்
அறிவு நூல்கள் சுமக்கவேண்டும்
கலைகள் யாவும் பயில வேண்டும்
கணினிப் படிப்பும் படிக்கவேண்டும்
மொழிகள் யாவும்  அறிய வேண்டும்

பட்டங்கள்  ஆண்டு சட்டங்கள் செய்து
பாரினில் உன் புகழ் ஓங்கவேண்டும்
தலை நிமிர்ந்து நீ நிற்பதுகண்டு
பெற்றவர் மெய் மறந்திடவேண்டும்
நாளைய உலகில் நீ ஒரு கதாநாயகி 
என்பதை நாமும் கேட்கவேண்டும்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: பவித்ரா on April 14, 2016, 03:08:20 AM
அய்யிரு திங்கள் உன்னை
தாங்கி ஓர் உயிராய் உன்னை
 ஈன்றிடவே மனசு ஏங்குதம்மா   ...

யாவகமாய் குளிப்பாட்டி
பொட்டிட்டு புது சட்டை போட்டு
 ரசித்திடவே மனசு ஏங்குதம்மா  ...

வகை வகையாய் அமுது
 சமைத்து ஆசை ஆசையாய்
ஊட்டிவிட மனசு ஏங்குதம்மா  ...

தத்தி தத்தி நீ நடை பழக
உன்னுடன் சேர்ந்து நானும்
நடை பழக மனசு ஏங்குதடா ...

உற்றார் உறவினர் உன்னை அள்ளி
 உச்சி முகரும் வேளையில்
 பூரிப்பில் திளைக்க என் மனசு ஏங்குதம்மா  ...

ஆபரணங்கள் ஆயிரம் வாங்கி
அழகுபூட்டி அழகுக்கு அழகு
சேர்க்க மனசு ஏங்குதம்மா ...

சின்ன சின்ன சேட்டைகள்
நீ செய்ய அதை கண்டு ரசிக்க 
மனசு ஏங்குதம்மா  ...

 கலைகள் பல  நீ கற்க
உன்னை பாடச்சாலையில்
சேர்க்க மனசு ஏங்குதம்மா  ...

நீ விரல் நீட்டும் பொம்மைகளை
 எல்லாம் வாங்கி குவிக்க 
மனசு ஏங்குதம்மா ...

நான் ரசித்த இயற்கையை
உனக்குள் உணரவைக்க
மனசு ஏங்குதம்மா  ....

உன்னை  ஊரே மெச்சும் படி
வளர்த்து ஆளாக்க
மனசு ஏங்குதம்மா  ....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097
Post by: PaRushNi on April 14, 2016, 03:02:34 PM
கண்மணிகளே !
மின்மினிகளே!
செல்வங்களே!
என்ன பெயர் சொல்லி அழைப்பேன்
பளீரென்று புன்னகைக்கும் தென்றலா
பறவைகளுள் மைனாவோ
கானம்பாடும் இசையோ

யார் நீ எனக்கு
ஊரும் தெரியாது எந்த நாடென்றும் அறியாது
என் செல்லிடபேசியின் அழகு சித்திரமே
அழகிற்கு நிறமில்லை என்பேன்
ஆசை தங்கமே என  ஆர்ப்பரிக்க எண்ணியே
ஆனந்தத்துடன் கிறுக்குகிறேன் இதனையே

மழலைக்கு ஈடு இணையில்லை
மருமகளை கையில் ஏந்தும்
மாமனுக்கோ அத்தைகோ இங்கு பஞ்சமில்லை
பிள்ளைத்தமிழிலும் வயது ஐந்திற்கு முன் வகையில்லை
இதற்குமேல் என்னிடத்தில் வார்த்தையில்லை
இதைச் சொன்னாலும் யாரும் நம்புவதற்கில்லை

பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்கும்
பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும்
தாழ்மையான வணக்கமும்
அங்ஙனம் செய்யாமற்போன கூட்டத்திற்கு
சாபமும்  உடனே வந்து சேரனும்

கிறுக்கலுடன்
பருஷ்ணி :)