FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on January 19, 2012, 05:10:39 PM
-
எல்லா நாட்டில்லும் நீதிமன்றங்கள் என்று ஒன்று உள்ளது அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை பார்த்து உலகமே சந்தோஷப்படுகிறது.
அதே போல் ஒரு நீதி நிர்வாகம் நம் நாட்டிலும் இருக்கிறது. அது எதை செய்கிறது, செய்து கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு நிர்வாகம் நமக்கு தேவையா? அன்று ஆலமரத்துக்கு கீழிருந்து இதை விட அருமையான தீர்ப்பை நம் முன்னோர்கள் கற்பித்து கொண்டிருந்தார்கள்.
நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்க சில உண்மைகள்:
* பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது பெரிய நிகழ்வு இல்லை அது ஒரு சாதாரண விஷயம் தான்!
* மாட்டை அறுத்தவனை கொல்வது தப்பில்லை!
* இலங்கையில் தமிழர்கள் கொல்லபட்டால் தப்பில்லை.
* ஆணும் பெண்ணும் விரும்பி கல்யாணம் செய்து கொள்ளாமல் உடலுறவு கொண்டால் தப்பில்லை.
* ஆணும் ஆணும் - பெண்ணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
* போப்பாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட பரிகாரம் தேவையில்லை.
* மும்பை கலவர குற்றவாளி பால்தாக்கரே தண்டிக்கப்பட தேவையில்லை.
* குஜராத் நரபலி நரேந்திர மோடி தண்டிக்கப்பட்ட கூடாது.
* போலீஸ் அதிகாரி கர்கரேயை கொன்ற கொலையாளிகள் தண்டிக்கபட்டு விடக்கூடாது.
* ராமர் பாலம் இடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்கு நடந்து தமிழகம் முன்னேறி விடகூடாது.
* வடநாட்டில் உள்ள அணு உலைகள் மூடப்பட்டு அவைகளை தமிழகத்திலே திறந்து தமிழ் மக்களை வளபடுத்த வேண்டும்.
* காவேரி பிரச்சினையும் முல்லை பெரியாறு பிரச்சினையும் தீர்க்கப்படாமல் அப்படியே இருந்து இரு மாநில மக்களும் அடித்து கொண்டு முன்னேற வேண்டும்.
* ஜாதி பிரச்சினை அப்படியே நிலை நிற்க வேண்டும்.
* தீபாவளி வெடி வெடிப்பதற்கு சிவகாசியில் உள்ள தமிழ் சிறுவர்கள் மட்டும்தான் உதவிட வேண்டும்.
* நாட்டில் குண்டு வெடிப்புகளை நடத்தும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பணி தொடர மத்தியில் வரும் அரசு மானியம் கொடுக்க வேண்டும்.
* தலித்து மக்களை எந்த காரணமும் இல்லாமல் சுட்டு தள்ளும் ஜாதி வெறிபிடித்த போலிசுக்கு பதவி உயர்வு கொடுக்கவேண்டும்.
* தலித் பிற்படுத்த பட்ட மக்கள் சுப்ரீம் கோர்ட் போன்ற உயர்பதவிகளில் வந்து விடாமல் தடுக்க உளவு பிரிவுவின் துணை கொண்டு கண்காணித்தல் வேண்டும்.
சில மாதத்திற்கு முன் ஒரு பத்திரிக்கை செய்தி. ஒரு நீதிபதி ஒரு பெண்ணிடம் ஒரு இரவு என்னுடன் படுத்தால் உனக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வேன் என்றார்.
இப்படியே போயிக்கொண்டிருந்தால் ....2020 இல் இந்தியா வல்லரசாக ஆகாது மாறாக .........உடைந்து சுக்குநூறாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதான் நமது நீதிமன்றங்களின் இப்போதைய நிலை.
-
Ithil neethi mantrangalai mattum kurai solvathu pothathu nam arasiyalamaippum thavaruthaan
oru valakkai oru idaththil thelivaaka visariththu theerpalithaal pothumallava
orey valakkai pala idangalil visarikka vendiya avasiyam ena?
keel neethimantra neethipathi koduththa theerpai uyar neethi mantram/utcha neethimantram maatrukirathu entaal keel neethimantra neethipathi etharku ingey , avar thavaraga theerpalikiraar entrhu thaney porul.
intha mathiriyaana arisiyalamaippai matra vendum
-
நன்றி ரெமோ!