FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 27, 2016, 09:54:03 PM
-
மூல நோய் மருத்துவம்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12871483_1549942188636584_3535377123953992558_n.jpg?oh=4db8dfaa2b416f8e7be6af2d786f06ee&oe=578D4333)
மூல நோய்க்கு மருந்துண்டு மூல நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு கை வைத்திய முறையில் நல்ல மருந்துகள் உண்டு. துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும். துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும். துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும். கட்டுக்கொடி இலையை பாக்களவு மென்று தின்ன இரத்தபேதி, சீதபேதி, மூலக்கடுப்பு, எரிச்சல் குணமாகும். துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)