FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 25, 2016, 10:34:54 PM

Title: ~ பஞ்சாபி சிக்கன் ~
Post by: MysteRy on March 25, 2016, 10:34:54 PM
பஞ்சாபி சிக்கன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fpan-e1454692392797.jpg&hash=97a484574749e621b012e52102c45617fe7316b5)

தேவையானபொருட்கள்

கோழிக்கறி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 3 (நடுத்தரமானது)
பூண்டு – 6 பல்
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
மல்லிவிதை – ஒரு தேக்கரண்டி
உலர்ந்த மிளகாய் – 2
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
ஏலக்காய் – 3
பட்டை – ஒரு அங்குலத் துண்டு
கிராம்பு – 3
மிளகு – 10
பிரிஞ்சி இலை – 2
தயிர் – முக்கால் கப்
நெய் – 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
தவாவில் நெய் ஊற்றி சூடேறியதும் அதில் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலாவினை இட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு, தயிரினையும் ஊற்றி, தயிர் மணம் கோழி இறைச்சியில் இறங்கும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
தேவையான உப்பு சேர்க்கவும். கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியினைத் தூவி குறைந்த தீயில் மேலும் வேக வைக்கவும்.
மசாலாத் தூள் நன்கு கரைந்து, இறைச்சியிலும் படிந்த பிறகு இறக்கி கொத்தமல்லித் தழைத் தூவி பரிமாறவும்.