FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 19, 2016, 07:25:31 PM
-
சாத்தானொன்றின்
பிடியிலிருக்கிறது
தேவதையொன்று...
தேவதையொன்றின்
மடியிலிருக்கிறது
சாத்தானொன்று...
நாம்
கவனிக்கிறோம்....
சாத்தானின் பிடியை
இன்னும் அப்படியே
இறுகாமலிருக்கிறது
சற்றே நிமிர்ந்து
கண்களை கவனிக்கிறோம்
சாந்தமாய் தானிருக்கிறது
மீண்டும்
கரங்களை கவனிக்கிறோம்
பிடி
தளரத்துவங்குகிறது
தேவதையென்னவோ
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது
விடுவிக்கப்பட்ட தேவதையின்
விழிகளில் வலியில்லை
சிநேகமாய்
சிரித்தபடி
சிறகுவிரித்துப்பறக்கிறது
நானும் நீங்களும்
பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறோம்
பெருமூச்சொன்றை..
இப்போது
சாத்தான் மட்டும்
அழ ஆரம்பிக்கிறது....
கவனம் திருப்புகிறோம்
பிழை புரிகிறது
சாத்தானை வைத்திருந்த
தேவதையை
யாரேனும் கவனித்திருக்கலாம்
-
piraba migavum niyayamaana kavithai. sirapu
-
Nanba,
Miga arumaiyana kavithai,.. nam kangal ipoluthu devadhayin madiyil irukum saatanai nokatum.
devadhai vidupadatum,..
un kavithayin azhagirkum karuthin aazhathirkum endrum rasigan naan..
-
Azhagiya kavithai prba na;) vazhthukkal ;)
-
நல்ல சிந்தனை வளம். வாழ்த்துக்கள் நண்பா பிரபா!