FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 17, 2012, 03:28:59 AM
-
* குளிர்காலத்தில் உடலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலத்தில் உடலில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. உடல் சோம்பல், தோல் வறட்சி, உதடு வெடிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே குளிர் காலத்தில் அலங்காரம் மற்றும் உணவு, ஆடை இவற்றில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
* வறண்ட சருமம் உடையவர்களுக்குச் சருமத்தில் சொறி, கீறல் தோன்றும். குளிர்காலத்தில் சோப்பின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தோலில் எண்ணெய்த்தன்மை குறைந்து போய்விடுவதால் சோப்பு பயன்படுத்தினால் மேலும் வறட்சி ஏற்படும்.
* சோப்புக்குப் பதிலாக கடலை மாவு அல்லது பயத்தம் பருப்புமாவு பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம். குளிர் காலத்தில் அதிகமாக மேக்கப் செய்யக்கூடாது என்பது மிக முக்கியம்.
* தினமும் இரு முறையாவது குளித்தல் நலம். இதன் மூலம் உடலின் நீர்த்தன்மை பாதுகாக்கப்படும். இளஞ்சூடான நீரில் குளித்தல் நல்லது.
* குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். அதனால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி உடலில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின்பு பயத்தம்பருப்பு மாவு அல்லது கடலை மாவைக் கொண்டு உடலை தேய்த்து கழுவ வேண்டும். உடலில் தேய்க்கும் எண்ணெயில் சிறிது பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன் குளிர் நேரத்திற்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்யேக கிரீமை முகத்திலும் உடலிலும் தேய்த்துக் கொள்வது நலம். சரும வறட்சி குறையும். முகத்தில் போடும் கிரீம்களில் வைட்டமின் கலந்திருப்பது நல்லது.
* கிளசரின், பால் ஆடை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்க வேண்டும். இரவில் தேய்த்துக்கொண்டு, காலையில் முதலில் சுடு நீராலும் பின்பு குளிர்ந்த நீராலும் கழுவ வேண்டும். குளிர் காலத்தில் உதடுகள் வெடிக்கும். எனவே உதடுகள் எப்போதும் நனைந்து காணப்பட வேண்டும். கோல்டு கிரீம், வெண்ணெய் போன்றவற்றில் எதையாவது உதட்டில் போடுவது நல்லது. உதட்டில் கிளசரின் தடவலாம்.
* குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெயை உடலில் தடவி, ஊறிய பின் குளித்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும். மிகவும் அதிகமான சூடு கொண்ட நீரில் குளிப்பதை தவிர்த்தல் நல்லது. சூடான நீர் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்கிவிடும்.
* உதடுகளுக்கு டார்க் நிற லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். உதடுகள் வறண்டு போகாமல் இருக்க லிப் ஜெல் தடவலாம்.
* குளிர் காலங்களில் மேக்கப் போடும்போது முதலில் ப்ளெயின் பவுண்டேஷனைப் போட்டு அதற்கு மேல் லூஸ் பவுடரைப் போடலாம். உதடு வெடிப்பிற்கு நாள்தோறும் வாஸிலின் கிரீம் மற்றும் வொயிட் பெட்ரோல் ஜெல்லி உபயோகிக்கலாம்.
* குளிர் காலத்தில் அதிகமான அளவு முடி உதிர்தல் ஏற்படும். தலையில் அரிப்பு, பொடுகுத் தொல்லையும் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு லேசாக சூடுபடுத்திக் கொள்ளவும். முட்டையை நுரைக்க அடிக்க வேண்டும். எண்ணெய் சூடாக இருக்கும்போதே பஞ்சால் எண்ணெயை ஒற்றித் தலையில் படும்படித் தேய்க்கவும். பின்பு முட்டையைத் தேய்த்து, பத்து நிமிடம் ஊறிய பின் சீயக்காய் தேய்த்துக் குளிக்கவும். இதனால் முடி கொட்டுவது நிற்கும்.
* எலுமிச்சை கொண்ட ஷாம்புகளைத் தவிர்த்து, முட்டை மற்றும் மூலிகை கொண்ட ஷாம்புகளைப் பயன்படுத்தவும். ரப்பர் காலணிகளை பயன்படுத்துவது நல்லது. வெளியே போய்விட்டு வந்ததும் கால்களை கழுவுவது மிகவும் அவசியமாகும்.
* ஆரோக்கியம் பெருகவும், நோய் எதிர்ப்புச் சக்தி கூடவும் கீரைகள், பழங்கள், பால், வைட்டமின் அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
-
Nala usefulana post thaan
ana ithu pengaluku matuma :S
-
நீங்களும் தேவைன பயன் படுத்தலாமே .....