FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaViTha on March 15, 2016, 12:33:32 AM
-
என் ஆன்மாவை விழுங்கி விட்ட கருத்த இரவே !
என் தனிமை கனவிற்குள் குதித்து விட்ட கள்வனே
என் தூக்கத்தை தொலைத்துவிட்டேன் உன் நினைவில்..
என் தேகம் தொடும் உன் சுவாசம் ..
இருள் ஒளி கொள்கிறதே !
காதல் பெருக்கெடுக்கிறதே !
நான் எந்த உலகில் சஞ்சரிகிறேன்
சில்லென்ற மழை ..
மேனி தழுவிடும் குளிர் காற்று
நான் விழித்து விட்டேனா ?
விடிந்து விட்டதா?
எங்கே உன்னை காணோம் ?
ஓ.,, கனவா ? களைந்து விட்டதா ?
நானும் விடை பெறுகிறேன் ...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcommentphotos.com%2Fgallery%2FCommentPhotos.com_1405786801.jpg&hash=35de4df93c85033ac226ed09637080763685601e)
-
தொடர்ந்து எழுதவும் !!
வாழ்த்துக்கள் !!
-
நவீன கவிதையின் நுழைவாயில் வழியே வரிகளை தொகுத்து கவிதை வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.... :) தொடர்ந்து எழுதுங்கள் தோழி... :) :)
-
kalakurel kavitha..... vaalthukkal