FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: ஸ்ருதி on January 17, 2012, 12:58:37 AM

Title: சென்னை வரலாறு
Post by: ஸ்ருதி on January 17, 2012, 12:58:37 AM
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

சென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை.

ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.

சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.

எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.
Title: Re: சென்னை வரலாறு
Post by: ஸ்ருதி on January 17, 2012, 01:01:01 AM
சென்னை அரிய புகைப்படங்கள் ;) ;)


ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட, மெட்ராஸ் அரசு மாளிகை மற்றும் நிர்வாக கட்டடத்தின் தோற்றம். (இன்றைய கவர்னர் மாளிகை வளாகம்).

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816152949.jpeg&hash=0f21e02d47c7122713d832f2b31faf388da5c827)

சென்னை கடற்கரைச் சாலை, 1915களில்....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816173001.jpeg&hash=603267095a7711417c62e20f404e12404ee8266d)

சென்னை மாநிலக் கல்லூரியின் பழைய தோற்றம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816173058.jpeg&hash=790b3308da0794760ecaf53ef730c75c1fc135de)

ஆங்கிலேயர் காலத்திய கிருத்துவ தேவாலயம். கோதிக் கட்டடக்கலை 1871.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816173155.jpeg&hash=f2a50f18f3ac6b1b15a51fdced828d5855d4d917)

மெட்ராஸ் கிளப் 1901 களில்...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816155154.jpeg&hash=bdc3a45bd0fded836d9fe15fec7f9fef4615f7ec)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816155317.jpeg&hash=a25dac6efd644e3812887a62a782f35b4ccfd9f4)

1895ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் தோற்றம்..

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816155452.jpeg&hash=d6c24f7dbfb098523c3f475068727ddb6826d55d)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-V1J08IWI%2FAAAAAAAABHU%2FGQFcctihhHk%2Fs400%2F4.jpg&hash=62668b8290e3dd295d45c3a75e5b2446b94096d6)

20ம் நூற்றாண்டு துவக்கத்தில் சென்னையின் ஆள் அரவமற்ற ஒரு வீதி.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816173240.jpeg&hash=63546001eb9fbe0196305634817081b21659577d)

மன்றோ சிலை.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816155904.jpeg&hash=4de710d61969f8cb35ca030ccf818bf8ca5a2a78)

பிரிட்டிஷாரின் நிர்வாகக் கட்டடம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110816160139.jpeg&hash=0653ee405325c5111a2ad8484435a4139dfe9c3d)

பாரிமுனை .

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817194501.jpeg&hash=e8794667f150ce7ba31e9f07882afb7b1be12ad5)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-W9NLQOpI%2FAAAAAAAABIE%2FucKwiiWd7CQ%2Fs400%2F10.jpg&hash=d7a9abd455c866670fd10b662d2459a4c9141899)

பெட்ரோல் பங்க் .

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817194648.jpeg&hash=0f0160e66f7d529fab43d069510e906a59a75aee)

மசூலா படகு,1851.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817194835.jpeg&hash=7718c96bd87ec325285cc9cf0d044b35d886b944)

துறைமுகத்துக்கு சொந்தமான படகு .

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817195016.jpeg&hash=c45cb83d503a42fd6cf6f35579762bd2940f3c3a)

சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள செனட் இல்லம். .

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817195255.jpeg&hash=ab1a884628caf5b1b0311dff3bb4b3dcb1fffdb0)

ஸ்பென்செர் ப்ளாசாவின் பழைய தோற்றம் .

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817195533.jpeg&hash=6247f25ece6ba840a7ac2776b008b5abddb5a829)

தாஜ் ஓட்டல் பணியாளர், தன் பாரம்பரிய உடையில்..

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110817200046.jpeg&hash=ad75ae72e3396aaf6099959fb5c73f07a1608827)

குதிரைவண்டிச் சவாரி.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2Fmadraslarge_20110820193041.jpeg&hash=96cf96f33e4e34554ce58b2370f4af3d1df8b016)

மதராசப்பட்டினத்து மளிகைக் கடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Flarge%2FMD2011_95079.jpg&hash=8d3defd699ddfac51cd64e95770e8304e9d7d46f)


மூர் மார்க்கெட்டின் முகப்புத் தோற்றம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Flarge%2FMD2011_95083.jpg&hash=cb70d8cbd596ba06f45ea37fc05b3542270b6212)

கொத்தவால்சாவடி காய்கறி சந்தை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Flarge%2FMD2011_95080.jpg&hash=58074341ea3bff8e314fb07b32e915797d23ef9f)

போர்டு' ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-XqExYCfI%2FAAAAAAAABIs%2FnOmq3Xj8GgQ%2Fs400%2F15.jpg&hash=63020a4ab098d86128bdc69ba73ef2f19d325976)

கார் ஷோரூம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-XpsQ1csI%2FAAAAAAAABIk%2FxDa3UCtuL_I%2Fs400%2F14.jpg&hash=c6586d36af0cd0b33409a602395e48667559e459)


பேங்க் ஆப் மெட்ராஸ் - 1935.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-Xpfpnx-I%2FAAAAAAAABIc%2FfL5SMFk82vI%2Fs400%2F13.jpg&hash=a6adbe352c70ccb89e9a16e8c3337f8bee93fb75)

அன்றைய ஆம்புலன்ஸ் வாகனங்கள்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-W9wQT4DI%2FAAAAAAAABIU%2FSe_j8l0CvX8%2Fs400%2F12.jpg&hash=f2d903470f14ceb8ddcffe05baa4b697f8b5dcc4)

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு செல்லும் காட்சி - 1925.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-W9tvN-lI%2FAAAAAAAABIM%2F0V2Uf0PsFBk%2Fs400%2F11.jpg&hash=190c9666ac1302ca4e96d115e17970daf97b7d3a)

மயிலாப்பூர் கோயிலின் அழகிய காட்சி - 1906.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-W89VzK5I%2FAAAAAAAABH8%2Fo4GY98R0mZY%2Fs400%2F9.jpg&hash=e89c1152a7fa8eed3f6e16cc86909f1ecdd98a78)

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-VX6CmlzI%2FAAAAAAAABG8%2Fk_WJ_C9WUWo%2Fs400%2F1.jpg&hash=71228487ed1f8346e1f49888035c4ae5c71ef1f9)

அரசினர் இல்லம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_2QZRkrneFx4%2FTG-V1gsZudI%2FAAAAAAAABHc%2FoTpVd1tq5I8%2Fs400%2F5.jpg&hash=b4403c8b5401c3e39edaf7aa0b808a8d6b08707e)
Title: Re: சென்னை வரலாறு
Post by: RemO on January 25, 2012, 04:20:14 AM
nala pathivu shur
chennaiyin palaya matrum ariya pugaipadangal alagu, asaththal

chennai than tamilagaththin adaiyalam, athan varalaaru, tamilarkaluku mukiyamana ontru
thodaratum ithu pontra pathivukal
Title: Re: சென்னை வரலாறு
Post by: ஸ்ருதி on January 26, 2012, 02:42:17 PM
nala pathivu shur
chennaiyin palaya matrum ariya pugaipadangal alagu, asaththal

chennai than tamilagaththin adaiyalam, athan varalaaru, tamilarkaluku mukiyamana ontru
thodaratum ithu pontra pathivukal

Thanks thanks Remo :D
Title: Re: சென்னை வரலாறு
Post by: ஸ்ருதி on March 08, 2012, 06:30:18 AM
22- 8- 1639 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின்சார்பாக ஃப்ரன்சிஸ்டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்பநாயக்கர் என்றஅக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:

1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.

1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது

1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.

அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.

1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.

1892 – உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.

1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.

1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்

1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.

1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.

1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி

1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.


அன்றும் இன்றும்!


ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!

மவுண்ட் ரோட் – அண்ணா சாலை

பூனமல்லி ஹை ரோட் – பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோட் – டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோட் – சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோட் – டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோட் – எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோட் – உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோட் – பக்தவசலம் சாலை

லாயிட் ரோட் – அவ்வை ஷண்முகம் சாலை

ஆலிவர் ரோட் – முசிரி சுப்ரமணியம் சாலை

மான்டியத் ரோட் – ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோட் – பாரதி சாலை

பர்ஸ்ட் லைன் பீச் ரோட் – ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் – டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை

சேமியர்ஸ் ரோட் – பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோட் – மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோட் – வ.வு.சி சாலை.

ஆர்காட் ரோட் – என்.எஸ்.கே சாலை

ஹாரிஸ் ரோட்- ஆதித்தனார் சாலை

உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!

பெயரின் மறுபக்கம்!


1)P.T.உஷா – “பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் “.உஷா

2)S.P.பால சுப்ரமணியம் – ” ஷ்ரிபதி பண்டித ராயுல “.பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- “கட்டசேரி ஜோசப்”. ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் – “அல்லா ரக்கா. ரஹ்மான்” (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி – மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ – நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் – “பிரதிவாதி பயங்கரம் “ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் – “கோபால ரத்னம்” சுப்ரமணியன்

9)பாரதி ராஜா – P.சின்னசாமி

10)K.பாலசந்தர் – கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி – கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் – “நந்த மூரி தாரக”.ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் – “சாமர்லா வெங்கட்ட” ரங்கா ராவ்

14)T.R.பாப்பா – சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி – “லூர்து மாரி” ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா – செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா – மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் – கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் – வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் – சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் – கபில் தேவ் ராம்லால் நிகாஞ்

இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:


இன்னாள் – முன்னால்

1)பழனி – திருஆவினன் குடி

2)திருசெந்தூர் – திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை – பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை – செருத்தணிகை

5)மதுரை – மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு – செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி – பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் – ஆருக் காடு!

9)சோளிங்கர் – சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை – நாலுகோட்டை

11)சிதம்பரம் – தில்லை

12)தருமபுரி – தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் – நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை – திரு நல்லுர்

15)எக்மோர் – எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை – சின்ன தரி பேட்டை .

17) கோடம்பாக்கம் – கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி – திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் – பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் – குனசீல நல்லுர் (அ) தர்ம புரம்

இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.


நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு பாட்ஷா நு ரஜினி சொல்வது போல!)

புகழ்பெற்ற பெயர் – இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் – ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் – காப்பவர் , கிரைஸ்ட் – தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் – ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் – நஸ்ஸிருதின்

அக்பர் – ஜலாலுதின்

ஜெஹான்கிர் – நூருதின்

ஷா ஜெஹான் – குர்ரம்

அவ்ரங்கசெப் – ஆலம் கிர்

நூர்ஜஹான் – மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் – பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – மணிக்கர்னிகா

பூலித்தேவன் – காத்தப்ப துரை

மருது பாண்டி – மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் – கருத்தப்பாண்டி

ஊமைத்துரை – சிவத்தையா

தீரன் சின்னமலை – தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் – குமரேசன்

பாரதியார் – சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் – கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் – வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் – சூரிய நாரயன சாஸ்திரிகள்

திரு.வி.க – திருவாரூர் .விருத்தாசலம்.கல்யானசுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி – தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் – ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் – மருதூர், ஜி – கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா – கோமள வல்லி

ரஜினி காந்த் – அனைவருக்கும் தெரியும் சிவாஜி ராவ் என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்றே அழைக்கப்பட்டர்!
Title: ~ சென்னை வரலாறு ~
Post by: MysteRy on July 25, 2012, 03:40:40 PM
சென்னை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-SPCFvennNac%2FTxPOdCgiqLI%2FAAAAAAAAAOg%2FGcVLvNBEo_A%2Fs1600%2FChennai_Central.jpg&hash=d10e51a84e06c24da19f903a18c7d1044e77fe64)

வரலாறு

 சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.


தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.


தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.


சென்னைக்கு செல்லும் வழி:

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.


இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.


சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.


செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது


வரலாற்றில் சென்னை

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.


1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-FqbG5jQL63s%2FTxPPMzqVY7I%2FAAAAAAAAAOo%2F3S5qBFDg2u0%2Fs1600%2Fimages%2B%2525286%252529.jpg&hash=28ca0bc97274b825fe2323fc8446073d13f51495)


ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.


1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.


1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.


சென்னையின் பூகோள மற்றும் சீதோஷ்ண நிலை:

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.


இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.


இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திரவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்ற�ப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல்ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.


மக்கள் தொகை

சென்னை நகரின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 லட்சமாக இருந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 64 லட்சத்தைத் தொடுகிறது. சென்னையில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் தமிழும் பெரும்பலோருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்.


சென்னை பொருளாதாரம்

சென்னையில் வளம் கொழிக்கும் பொருளாதார நிலை நிலவுகிறது. கார்த் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உட்பட பல துறைகளிலும் சென்னை பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. இந்திய பொருளாதாரத்தில் தடைகள் அகற்றப்பட்டபின் கம்ப்யூட்டர் துறை, வர்த்தகம் மற்றும் அவுட்சோர்சிங் துறைகள் பெரிய வளர்ச்சி காண ஆரம்பித்தன.


டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ், சத்யம், ஐ.பி.எம்., ஆக்சன்சர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்.சி.எல்., மற்றும் இதர கம்ப்யூட்டர் நிறவனங்கள் சென்னையில் காலூன்றின. டெல், நோக்கியா, மோட்டோரோலா, சிஸ்கோ, சாம்சங், சைமன்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.


இவற்றில சில நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்கள் கிளைகளைத் துவக்க உள்ளன. சென்னை நகரில் தற்போது 2 உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன.


சென்னையில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்த் தொழிற்சாலைகள் உள்ளன. ஹுண்டாய், மிட்சுபி, போர்டு, டி.வி.எஸ்., அசோக் லேலேண்டு, ராயல் என்பீல்டு, டாபே, டன்லப், எம்.ஆர்.எப்., போன்ற தொழிற்சாலைகள் சென்�யை ஒட்டி அமைந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகினறன.


பாங்கிங் மற்றும் நிதித் துறையிலும் இந்தியாவில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. பணம் கொழிக்கும் தமிழ்த் திரைப்படத் தலைநகராகவும் சென்னை திகழ்கிறது.
Title: ~ சென்னை (மதராசபட்டினம்)................சில பின்குறிப்புகள் !!! ~
Post by: MysteRy on July 28, 2012, 02:25:21 PM
சென்னை (மதராசபட்டினம்)................சில பின்குறிப்புகள் !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa8.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F530134_270419799730194_1973641137_n.jpg&hash=dee85da4b80ac2bfd983dfc33e60a9e2bcea9ed5) (http://www.friendstamilchat.com)


மும்பைக்கு அடுத்த படியா நம்ம சென்னையில்தான் அதிகபடியான வேலை வாய்புகள் உருவாகின்றன, வருடத்திற்கு 35000 ௦ வேலை வாய்புகள்.
இந்தியாவிலேயே அதிகமாக இரண்டு சக்கர வாகனம் சென்னையில் தான் உள்ளதாம். அதுமட்டுமில்லை...

சென்னைதான் இந்தியாவின் மோட்டர் நகரம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு இந்தியாவின் 40 சதவிகித மோட்டர் வாகனங்களின் பாகங்கள் உற்பத்தி செய்யபடுகின்றன .

சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகத்திலேயே 50௦ நகரங்களின் கணக்கெடுப்பில் சென்னைக்கு 35 வது இடம்.

மருத்துவ வசதியில் சென்னைதான் இந்தியாவிலேயே முதன்மை வகிகின்றது .
மேலும், கல்வி வசதியிலும் முதலிடம் சென்னைக்கு தான்.

சென்னை மெரீனா கடற்கரைதான் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாக உள்ளது (ஆனா அங்கு என்ன நடக்குதுன்னு நமக்குதானே தெரியும்).

சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தென் ஏசியாவின் மிகபெரிய பேருந்து நிலையம்.

சென்னையில் உள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காதான் இந்தியாவிலேயே முதலில் உருவான பூங்கா (1855 ).

கடைசியாக, சென்னையில் உள்ள கான்சர் மையம்தான் இந்தியாவின் பழைமை வாய்ந்த ஒன்று (1920 )

இதுக்கு மேல உங்களுக்கு தெரிந்ததை தெரியபடுத்துங்கள். தயவு செய்து உலகத்திலேயே டாஸ்க் மார்க் தான் அரசால் நடத்த படுகின்ற சாராயக்கடை என்று சொல்லிடாதீங்க...........அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

உங்கள்டைய கருத்துகள் வரவேற்கபடுகின்றது.