FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 10, 2016, 09:48:44 PM
-
அத்திப்பழம்...
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/10443435_1544624455835024_7095036751750336933_n.jpg?oh=b97ee0934fcad7cb7e7cf8d72ddf7507&oe=575C8E19)
நாள் ஒன்றுக்கு மனிதனுக்குத் தேவைப்படும் 20-30 கிராம் நார்ச் சத்தில், 1.6 கிராம் நார்ச் சத்து, இரண்டு அத்திப் பழங்களைச் சாப்பிட்டாலே கிடைத்துவிடும். சீக்கிரமாக செரிமானம் அடையக்கூடிய தன்மையும் இதில் உண்டு.
இதில் உள்ள கால்சியம், எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்கும். மேலும் இரும்புச் சத்து ரத்த உற்பத்தியை அதிகப்படுத்தும்.
வைட்டமின் 'ஈ’ முதியவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு நோயில் இருந்து காப்பாற்றும்.
அத்திப் பழ விதையில் உள்ள துத்தநாகம், தாமிரம் போன்ற தாது உப்புக்கள் வெண்புள்ளி, தோல் நிறமாற்றம் போன்ற நோய்களைக் குணமாக்க உதவும்.
கல்லீரல் வீக்கம், ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், மாதவிடாய்ப் பிரச்னைகள், அத்திப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், விரைவிலேயே சரியாகிவிடும்.
உலர் அத்திப் பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்து தினமும் சாப்பிட்டால், மது போன்ற போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டுவரலாம்.
இதில் உள்ள சோடியம், கெட்ட நீரை வெளியேற்றிவிடும். இதனால் வயிற்றுவலியிலிருந்து தப்பிக்கலாம்.