FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 06, 2016, 07:40:11 PM

Title: ~ எதற்காக கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்? ~
Post by: MysteRy on March 06, 2016, 07:40:11 PM
எதற்காக கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்?

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/10455577_1542820286015441_5165586570873679438_n.jpg?oh=8d8fd944e4e1d017c808d4ea0c9cd6cc&oe=57963D24)

மூட்டுவலி, முதுகு தண்டு வலி. மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் கருணைக்கிழங்கை சேர்த்து வந்தால் நன்மை கிடைக்கும்.
கருணைக் கிழங்கு.சத்துக்கள்

விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.
பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம், கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து காக்கிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்
மூல நோயை குணப்படுத்தும், ஆசன வாயிலில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.
ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.
உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.
இதன் சுவை வீரியமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும்.
குறிப்பு
மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்.
“மைக்ரேன்” எனும் ஒற்றைத் தலைவலியால் அவஸ்தையா? என்ன காரணம்?