FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 04, 2016, 08:02:47 PM

Title: ~ தக்காளி கருணைக்கிழங்கு மசியல் ~
Post by: MysteRy on March 04, 2016, 08:02:47 PM
தக்காளி கருணைக்கிழங்கு மசியல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fmasi.jpg&hash=e9bc6e054bdb1ae1de6e95384acddbaabde54d2f)

தக்காளி – 2
கருணைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – ஒன்று
மிளகாய்த் தூள் – 1 – 1 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்துமல்லி – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் / ரீஃபைண்ட் ஆயில் – 3 மேசைக்கரண்டி

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி

கருணைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைவாக வேக வைத்து எடுத்து வைக்கவும்.
வெந்த கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.
தக்காளியை சிறுத் துண்டுகளாக்கி இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதில் பொடியாக‌ நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்தில், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
பின்னர் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
பிறகு மசித்த கருணைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து தீயைக் குறைவாக வைத்து நன்றாகக் கிளறவும். மீதமிருக்கும் 2 மேசைக்கரண்டி எண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.
சுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார். ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.