ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....   
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால் 
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..
***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 091
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Gabஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F091.jpg&hash=527d30dea631e7be71d3bc32c488fc832bb32895)
			
			
			
				
உழைத்தே  களைத்தாலும் 
அதை மனதோடு வைத்து 
புன்னகையோடு பிள்ளையை 
வளர்க்கும் ஒவ்வொரு 
தகப்பனும் புனிதனே ...
தந்தையின் அன்பை பொறுத்தவரை 
நான் சுயநலவாதி தான்,
என் உடன் பிறப்புக்கும் 
விட்டுத்தரமாட்டேன் ...
தாய் இல்லாத பிள்ளைகளுக்கு
தான் தெரியும் தந்தையின் 
அன்பு எவ்வளவு 
இனிமையானது என்று புரியும்...
விரல் பிடித்து நடக்க
 பழகியதிலிருந்து 
கல்வி அறிவோடு 
வாழ்க்கை பாடத்தையும் 
சேர்த்தே பழக்கிவிட்டாய் ...
வன்மம் நிரந்த உலகில் 
தைரியமாய்  சமுதாயத்தில் 
சுயமரியாதையோடு 
வாழக்கற்று கொடுத்த என் தந்தையே ...
நீ இல்லாது போனால் 
எப்படி வாழ என்று கற்று
கொடுக்க மறந்து இருப்பினும் 
வருகிற சவால்களை சந்தித்து 
வாழ பழகிக்கொண்டேன்...
தந்தையின் முழுமையான 
அன்பை பெற்ற ஒவ்வொரு மகளும் 
கடவுளிடம் கேட்கும் வரம் 
அடுத்த ஜென்மத்திலும் 
இவருக்கே  மகளாக வேண்டும்...