FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 27, 2016, 09:29:45 PM
-
போண்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fpooo.jpg&hash=ae944faffdf5d071e4a7a30f8773373821a14c6d)
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – 200 கிராம்
பச்சைமிளகாய் – 8
மிளகு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – அரைத்தேக்கரண்டி
தேங்காய் – 5 கீற்று
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும்.
தேங்காய் கீற்றினை சிறு சிறு பற்களாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்புடன், இரண்டு பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கி மாவில் போடவும்.
இதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டு, எண்ணெய் காய்ந்ததும், எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
கண்கரண்டியினால் அடிக்கடி புரட்டிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுக்கவும்.