FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 27, 2016, 05:23:27 PM
-
சாக்கடையில் வசித்தாலும்
சந்தனமாய் மணக்கிறோம்
சாதாரணமாக நினைத்தாலும்
சாகசங்கள் செய்கிறோம்
சந்தனமாய் மணந்தென்ன
சாகசங்கள் புரிந்தென்ன
வறுமைக் கோடு வகுத்தவன் யாரடா
கோடே இல்லாத வெறும்
புள்ளிகள் நாங்களடா
கண்ணில் பொங்கும் நீரது ஒன்றே
நாம் கொண்டாடிடும் பொங்கலடா
ஆசைகளை குவித்துவைத்து கொளுத்துவதே
நாம் கொண்டாடும் போகியடா
பசுமையே காணாத பயிரானோம்
பாதை இல்லாத ஊரானோம்
விளக்கில்லா வீட்டின் இருளானோம்
வறுமையின் விதைகல்லானோம்
பள்ளத்தின் படிகலானோம்
போதும் இந்த வாழ்க்கை
வறுமையின் விதைகள்
வெடிகுண்டுகள் ஆகட்டும்
பள்ளத்தின் படிக்கட்டுக்கள்
ஏணிப்படிகள் ஆகட்டும்
கண்ணீர்த் துளிகள்
நெருப்புப் பொறிகள் ஆகட்டும்
சூரியன் எழாமல் உதயமாவதில்லை
சுருங்கி இருந்தால் சோகம் தீர்வதில்லை
கரையை மோதிச் செல்லாமல்
கடல் அலைகள் கூட ஓய்வதில்லை
ஏர் முனையில் சாசனம் எழுதிடுவோம்
உழைப்பவர் மட்டும் வாழும் உலகை
மீண்டும் நாமே படைத்திடுவோம்
உறிஞ்சும் வர்க்கம் இல்லாமல் - அதை
நாமே பாதுகாத்திடுவோம்
-
மிக அழகான கவிதை நண்பா... அழகான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வறுமையினை விரட்ட கோடுகளே இல்லாத கோலங்களை வரைந்து தன்னம்பிக்கை கவிதை பதிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
செழிப்பாக
இருக்கிறது
ஏழையின்
வீட்டில்
வறுமை..!
பள்ளியில் ஆசிரியர்
கற்றுத் தராத பாடம்
வீட்டில்அம்மா
கற்றுத் தராத பாடம்
தொழிலில் அப்பா
கற்றுத் தராத பாடம்
வறுமை கற்றுத்தருகிறது !…
வறுமை ஒரு நோய். நோய்க்கு மருந்தெடுத்து மாற்றுகிறோமோ அதுபோல் வறுமையையும் மாற்றலாம் வறுமையோடு வாழ்பவன் நோயோடு இறந்து விடக்கூடாது என்கிறேன். பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கும்.
உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் உழைப்பைக் கண்டால் ஓடி விடும் - பாரதியார்