FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 21, 2016, 08:39:54 PM
-
திடீர் புளியோதரைப்பொடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fthi.jpg&hash=9332be52a0c66d47bf161e61efb98db707741ff5)
தேவையானவை:
புளி – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
வேர்க்கடலை – ஒரு கப்
கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
தனியா – 4 டீஸ்பூன்
மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்)
கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புளியை வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்… உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து… வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.