FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on February 21, 2016, 07:33:13 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi328.photobucket.com%2Falbums%2Fl333%2Frosevini1%2FGlamorous-Sexy-Girl-in-Rain-Images_zpsbzu4wxon.jpg&hash=b09fc5c87962e8364a3d0b27c93ea9a7f3d402eb) (http://s328.photobucket.com/user/rosevini1/media/Glamorous-Sexy-Girl-in-Rain-Images_zpsbzu4wxon.jpg.html)
ஓர் மழைக்கால
மாலையில்
உன்னிடம்
மயங்கிக் கொண்டிருகிறது
மனமும் .......
ஓர் குளிர் காற்றில்
கூசி சிலிர்க்கும்
கைகளின் ரோமத்தில்
படர்ந்திருந்தது
உன் பார்வை ....
ஓர் அழகான
மழைப் பறவை என
மனது
மழை வெள்ளத்தில்
முக்குளித்து
புரள்கிறது ...
அதன் சிறகுலர்த்தும்
ஒவ்வொரு துளியும்
உன் மீது பட்டு
உலர்ந்து கொள்கிறது ....
ஒரு சாரலின் வேகத்தில்
சட்டென்று ஆடிய மேனி
சரிந்து கொள்கிறது
ஜன்னலோரத்தில்...
ஓர் போர்வைக்கும்
ஓர் கதகதப்புக்குமான தேவை
அதிகரித்துக்கொண்டே இருந்தது ...
ஓர் செல்லப் பூனையாக
உன்னிடம் ஒட்டிக்கொள்ள
ஆசைப்படும் மனதுக்கு
ஒரே ஒரு சமிக்கை கொடு
ஒருகணமும் பிரியாமல்
உனக்குள்ளே அடங்கி முடிக்கிறேன் ..
-
தூரத்து நிலவில் தூரிகையால் வரைந்த ஓவியமாய் அழகான ஒரு காதல் கவிதை. வாழ்த்துக்கள் தோழி... :) :)