காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .
உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம். உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 09.02.2016 வரை உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செய்யலாம் ....
என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உங்கள் இதயங்களை வந்தடையும் ....
காதல் ,வாழ்க்கை துணை தேடலின்
ஒரு அற்புத உணர்வாக இருப்பதால்
என்னவோ பலரின் வாழ்க்கையில்
வேறு வேறு விதமாக
பயணித்து கொண்டிருகிறது ...
காதல் புனிதமானதா இல்லையா
தெரியாது எனக்கு .ஆனால்
எந்த வித எதிர் பார்ப்பும்
இல்லாமல் இருந்தால் அது நட்பு ...
அவளது எண்ணத்தில்
இவன் இருந்தால் என் வாழ்க்கையில்
சந்தோஷம் நிலைக்கும்
எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது
என்று அனைத்தும் எதிர் பார்த்து வந்தால்
அதுவும் காதல் தான் ...
புரிதல் இல்லையா?
இன்றே பிரிதல் நன்று ,
என்னையும் வருத்தி உன்னையும்
வருத்தி நாம் கொண்ட காதலையும்
வருத்துவதை விட முடிந்தால்
குறை கண்டு திருத்த முயற்சி செய்
இல்லையேல் உன் வழி பயணத்தை நீ தொடர்
இனி மீண்டும் அந்த தவறு
உன் வாழ்வில் நிகழா வண்ணம்
பார்த்துக்கொள் ...
ஏன் என்றால் ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையின் வாழும் காலங்கள்
மிகவும் குறைவு நினைத்த வாழ்க்கை
நிறைவோடு வாழா விடினும்
அந்த வடுவோடு உங்கள் வாழ்க்கையை
நிறைவாக வாழ பழகுங்கள் ...
யார் கண்டது
வசந்தம் உங்கள் வீட்டு வாசற்கதவை
மீண்டும் ஒரு முறை தட்டலாம்
அதே காதலோடு ....
கவிதையில் குறைகள் இருப்பின் என் pvt வந்து பகிரவும்