ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 089
இந்த களத்தின்இந்த நிழல் படம் Vaseegaranஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F089.jpg&hash=f918071ab31a499c835f88db878577cbb9fa689a)
இறைவன் படைப்பில் இயற்கை
அதிசயங்கள் ஆயிரம்
அதில் வரங்களாக பல
சாபங்களாக சில
மழை அது பெருங்கொடை ....
மழை பெய்தாலும் குற்றம்
பொய்த்தாலும் குற்றம்
மழை தேவை அறிந்து மும்மாறி
பொழிந்தது ..பொழிய விட்டார்களா ..
சிறு பிராயத்திலே
மழை நீரை சுவைத்தபடி
மழையில் நனைந்து காகித கப்பல் விட்டு
இயற்கையோடு இணைந்து
நாம் ஆடிய ஆட்டங்கள் இன்றும் பசுமையாக ...
இன்று ஏட்டில் புகை படங்களாக
மட்டுமே இது சாத்தியம்
நாம் ரசித்த மழையை
நம் சந்ததிகள் ரசிக்க
முதலில் நாம் விடுவதில்லை
காரணம் இதன் பின் வரும்
நோய்தொற்றுக்கு பயந்து .....
யார் கண்டார்கள் இந்த புகை படம்
எடுத்த அடுத்த நொடி அவன்
முதுகில் இரண்டு அடி விழ்ந்ததோ என்னவோ....
மரத்தை வெட்டி.. கட்டில் ,அலமாரி
அலங்கார பொருள்கள், வீடுகட்ட
என்று மனிதன் அவன் தேவைக்காக
அளவுக்கதிகமாக வெட்டி சாய்த்தானோ
அன்றோடு முடிந்தது பருவ மழை ..
அவரவர் தேவைக்காய்
அளந்து பொழியாது
இயற்கையின் கொடை
உன் பயன்பாட்டிற்கு
நீ தான் சேமித்து கொள்ள வேண்டும் ...
மழை தங்கும் இடமெல்லாம்
உன் தேவைக்காய் பூசி மொழுகி
மாடி மேல் மாடி கட்டி
உன் போதாதகுறைக்கு
புத்தி இல்லாதவன் கண்ட தீர்வு.....
விளைவு இயற்கை அன்னை
பொழிந்த போது தாக்கு பிடிக்க
இயலாமல் துவண்டு போகிறான்
அடுத்தவன் உதவியை நாடி நிற்கிறான்
விவசாயி நொடிந்து நிற்கிறான் ...
இயற்கையை நேசிக்க கற்று கொடுங்கள்
இயற்கைக்கு வழி விட்டு வாழ பழகுங்கள்
மரம் நடுங்கள், வளத்தை பெருக்குங்கள்
வாழ்க்கை மேம்படட்டும்....