FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on January 13, 2016, 10:06:41 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: Forum on January 13, 2016, 10:06:41 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 087
இந்த களத்தின்இந்த  நிழல் படம் *MyNa*அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  வியாழக்கிழமை (21.01.2016) GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F087.png&hash=e5942dea8004487d6edb1b996d4c946872406c9b)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: ReeNa on January 14, 2016, 04:37:28 AM
என் இதயம் ஒரு கண்ணாடியடி   
உன்  முன்னே  நான்  ஒரு  குழந்தையடி 
நீ  பிரிந்ததால்  நான்  உடைந்தே போனேனடி   
உடைந்தே  போனாலும்  நம் காதல்  எதிரொலிக்குதடி

உன்  நினைவோட  பேச  ஆசையடி   
நீ  இல்லை   என்ற   கவலையடி
கனவோடு  பேசலாம்  என்றே  நினைத்தேனடி
உன்  வார்த்தைகள்  என்னை  தூங்க  விடுவதில்லையடி 

உன்னை  நினைத்து   நித்தம் அழுதேனடி
என்  இதய  துடிப்பை  தேடினேனடி 
உணவே  உண்ணாமல்    இருந்தேனடி
வாழ்வே  மாயம்  என்றே  பாடினேனடி

ஒரு  நொடியில்   அறுத்தே போய்விட்டாயடி
என்  விழிகளைப்  பார்த்து  ஏன்  என்று சொல்லடி 
மரணமே  முடிவென்று   நினைத்தேனடி
பெற்றோரைப்  பார்த்தே  வாழ  முடிவெடுத்தேனடி   

கட்டின  கோட்டைகளை மேகம் கொண்டு  சென்றதடி
உண்மையான  காதலை  புறக்கணித்தாயடி   
எங்கே   இருந்தாலும்  நீ  நன்றாக  வாழவேனுமடி
என்  மகளுக்கு  உன்  பெயர்  வைக்க  மாட்டேனடி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: MyNa on January 14, 2016, 08:30:47 AM
தமிழ் தாய்க்கு வணக்கம்..

இந்தப் படைப்புக்  காதலர்களுக்குச் சமர்ப்பணம்..

வருடங்களும் நாட்களாய்
உருண்டோடின அன்று...
நொடிகளும் யுகமாய்
நகர்கின்றன இன்று...

கடிகார முட்களைப் போல்
இணைந்து நகர வேண்டிய நாம்
இன்று ஏனோ எதிர்முனைக்
காந்த துருவங்களாய்
பிரிந்து வாடுகின்றோம்...

காதலித்தால் ஊன் உறக்கம்
மறந்து போகுமாம்...
ஆனால் நானோ என்னையே மறந்து
உன்னில் தொலைந்து விட்டேன்...

நம் உயிர்  இரு உடலாக
பிரிந்து சஞ்சரித்தாலும்
நம் ஆன்மாவானது
இணைந்திருப்பது ஒரு  கூட்டில்..

ஆம் .. காதல் கூட்டில்...

காதலித்துப் பார்...
காதலைக் காதலாய் காதலித்துப் பார்..
காதல் வலி கூட சுகமான சுமையாய் தெரியும் !!

(மைனா தமிழ் பிரியை)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: பவித்ரா on January 14, 2016, 10:45:45 AM


காதல் உலகத்தையே ஆட்டி  படைக்கும்
அற்புத உணர்வு பூர்வமான வார்த்தை
அதன் பொருள் உணர்ந்து
காதல் கொள்வோர் எத்தனை பேர்...

பார்த்ததும் சிலாகித்து வரும் அந்த உணர்வு
ஏன் தொடர்ந்து நிலைப்பது இல்லை ....
பார்த்ததில் வந்த ஈர்ப்பு
புரிதலில் இல்லையா ...


உன்னை புரிந்து கொள்ள
எனக்கு வருடங்கள் சிலது ஆகுமோ?
அல்லது புரியாமலே போய் விடுவேனோ !
சிறு பிள்ளையாய் நான் மனதுக்குள்
எழுப்பிய ஆசை கோட்டையை,
அவசர பேச்சால் இடித்து விடாதே ...

என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடு  .
என்னை பேச விடு.
தவறு என்னுடையதாகவே
இருக்குமாயின்  என் தவறுகளை திருத்தி எடு  ..
அதை விடுத்து  என்னை
விட்டு விலகாதே....

வாழ்க்கையை காதலோடு
வாழ எனக்கு கற்று கொடு ..
உனது அன்பில் என்னை தோய்த்து எடு ...

எனக்கு வாழ்க்கையில்
கிடைத்த பொக்கிஷம் நீ ..
என்னோடு பழகி பார் ..
அன்பை நிலைத்திட செய்து
வாழ ஒரு சந்தர்ப்பம் கொடு
வாழ்க்கை எவ்வளவு இனிமையானது
என்று அப்போது உணர செய்வேன் ...

எனக்குள் ஒரே  ஆசை தான் 
மனிதன் மரிக்கும் தருவாயில்
அவனது சிறு மூளை கடைசி 3நிமிடம்
அவன் வாழ்கையை முழுவதுமாக
அசைபோட்டு நிற்குமாம்..
அது நிஜம் என்றால்
என் சிறுமூளை உச்சரிக்கும்
 கடைசி வார்த்தை
 உன் பெயராக இருக்கட்டும்
 காதலோடு  ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: JEE on January 14, 2016, 08:45:43 PM
 ஓரிரு காலங்கள் தொடர்ந்த
 முழுமையாகாதஇதயமில்லை
  பல்லாண்டு தொடர்ந்த
முழுமையானஇதயம்


ஓரிரு காலங்கள்
தொடர்ந்தால்இதயம்
பிரியும் போது
தொட்டு  நிற்காது
 தொலைவில்தான்நிற்கும்
 

பல காலங்கள்
தொடர்ந்த இதயம்
சற்றேனும் பார்க்க பிடிக்காமல்
பிரியும்போதுகூட
உடல்உணர்வுதனைஅறியார்   


முழுமையான  இதயம்
நேருக்குநேர்  நின்று       
கண்ணால்  கண்டு      அசைவு
ஒவ்வொன்றுக்கும்கவிதை
ஆயிரம்படைத்தஇதயம்     


 நிலவொளியில்  நிலவிய
 எத்தனைஎத்தனை   
எதிர்ப்புகளை  சந்தித்தஇதயம்       


  தனிமையில்  நிலவிய
 எத்தனை   எத்தனை     
 தவிப்புகளை  தகித்த  இதயம்     


அலைபேசியால்  பல     
எதிரலைகள்  கண்ட இதயம்       


 வானூர்தியில்  அயலகம்
சென்றும் என்றென்றும்   
 அசையாதஇதயம்


சேராதென்பார்சேர்ந்ததில்லயா?   
 ஒட்டாதென்பார் ஒட்டவில்லையா?     


 பார்க்ககூட பிடிக்கவில்லையோயென   
 நோக்குவார் நோக்க முதுகோடு முதுகாக   
  பாராமல்பிரிந்தஇதயம்


பிரிந்தோர்இணையமாட்டார்   
என்பார் பலர் எதிர்பாரார்       
 இணையும் நாளை     
  இனிவரும் நாளில் கண்டு
ஏமாந்துபோவார் அன்று     


 உடைந்ததாக காண்பது நல்லது நம்       
 தூயகாதலின் வளர்ச்சிக்கு     
இதுவொருபடிக்கல்     
நற்சிந்தனை  நலம்  பயக்க       
வாழ்க  காதல்.............................

     


 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: ராம் on January 14, 2016, 11:39:00 PM
என் இதயத்தினுள் குடி இருக்கும்
என் அன்பு காதலியே
உன் குழந்தை தனமான பேச்சினில்
உன்னில் என்னை தொலைத்தேன்
உன் குழந்தை தனமான திட்டல்களில்
உள்ளுக்குள்ளே சந்தோஷத்தில் திளைத்தேன்
அது எனக்கு புரியாமல் இருந்தாலும்
புரிந்தவனை போல காட்டிக்கொண்டேன்.!!!

உனது வருகைக்காக காத்திருந்தேன்
எனக்காக நீயும் காத்திருந்தாய்
உன்னுடன் பேசுகையில்
உன்னில் என்னைத் தொலைத்தேன்
என் மீது நீ கொண்ட சின்னஞ்சிறு
அக்கறையில் மேலும் ஒரு கணம்
உனது அன்பிற்கு ஏங்கினேன்
உன்னை சேரும் நாளுக்காக ஏங்கினேன்
ஏக்கத்தில் தவிக்கும் என்னை
உதறி எறியாதே உயிரே கனவிலும் கூட.!!!

உன் கரம் கோர்த்து உன்னோடு வாழ
ஆசைபடுகின்றேன் காதலியே
தவறேனும் செய்திருந்தால்
மன்னித்து என்னை எற்றுகொள் உயிரே.!!!

சிறு  சிறு சண்டைகள் காதலின் உவமை
அதனாலே நமக்குள் மிஞ்சியது தனிமை
புரிந்தும் புரியாமலும் நமக்குள் சில வேற்றுமை
ஆயினும் இருந்ததில்லை நமக்குள் வெறுமை
வெறுத்துவிடாதே நீ என்னை முழுவதுமாய்
உன்னை எண்ணியே வாடுவேன் நான் தனிமரமாய்
சண்டை போட்டாவது என்னுடன் பேசிவிடு
இல்லையேல் அடியோடு என்னை சாய்த்துவிடு
வாழ்வோ சாவோ அது உன்னோடு
இலையேல் மடிந்தே போவேன் மண்ணோடு.!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: ! Viper ! on January 14, 2016, 11:43:12 PM
வாழ்வின் ஓர் ஓரத்தில் மேகத்தை எட்டிப் பார்த்த படியே நின்றிருந்தேன்
எப்பொழுது அந்த மேகத்தில் நானும் ஒரு சுதந்திர பறவையாய் சிறகடிக்கப்போகிறேன் என்று

ஒரு நாள் உன்னைச் சந்தித்தேன்  ,, உன்னையே ரசித்தேன் நீயே உயிரெனஇருந்தேன்
வாழ்வின் முடிவில்லா சந்தோசத்தை நீ தந்தாய்
வாழ்வின் அளவில்லா புன்னகை களை நீ தந்தாய்
வாழ்வின் விலைமதிப்பற்றச் செல்வத்தை எல்லாம் நீ தந்தாய்
வாழ்வின் எல்லையில் கிடந்த என்னை வாழ்க்கையின் உச்சத்தில் நிறுத்தி என்னை மெய்சிலிர்க்கவைத்தாய்..

உன்னைக் காதலித்தேன் வேறுயாரும் காதலித்திடாத அளவிற்கு நீ அணிந்திருக்கும் தோடுகளிலிருந்து இருந்து உன்கால் செருப்புவரை
உன்பாவனைகள் அனைத்தும் எனக்கெனமட்டுமே இருந்தது போல் உணர்ந்தேன்
உன் ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கும் பொழுது ,, உலகில் என்னைத் தவிர வேறுயாரும் உன்கண்களுக்குத் தெரியாமல் உலகம் இருண்டு கிடப்பதை இரசித்தேன்
உன் அன்பிற்கு நான் என்னையே அற்பணித்தேன் அன்பே..

ஆனால் இன்றோ நீ என்னைவிட்டுப்  பிரிந்துவிட்டாய்
மேகத்தை விட்டு மழைநீர் பிரிந்தால் எப்படி மழைகளுக்கு வீடு இல்லையோஅதேபோல்
நானும் உன்னைவிட்டுப்  பிரிந்து உயிரற்ற ஜடமாய் நிற்கின்றேன்...ஏங்கிதவிக்கின்றேன்..
அன்று காட்டிய அன்பையும் அக்கறையையும் இன்று வெறுப்பாய் பார்க்கிறாய் ஏனோ பெண்ணே !!

என்னைக் காட்டிலும் வேறொருவன் தகுந்தவன் என இன்று நீ சென்றாய்
ஆனால் உன் காதலுக்குத் தகுந்தவன் நான் மட்டுமே என்று உணர்ந்து வருவாய்
அன்றும் நான் இருப்பேன்.. வேறொருத்திக்கு காதல் கணவனாய்
நீயும் இருப்பாய் அழுதபடியே என்னை இழந்துவிட்டாய் என்று எண்ணி



நண்பர்களே ,, காதலியுங்கள் தடுக்கவில்லை .. ஆனால் பிரிவதற்காக காதலிக்காதீர்கள்
முதல் முறைபார்க்கும் பொழுது இவள்தான் சரியானவள் என்று தோன்றும்
அதுவே சிலவருடங்களில் இவள் சரியானவலா இல்லையா என்று தோன்றும்
இறுதியிலே இவள் நமக்குச் சரியானவள் இல்லை என்று உறுதி ஆகும்
ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் இப்படி தான் தோன்றும் காதலிலே

இதில் தவறில்லை தான் ஆனால் ஒன்று ,, உண்மையான நேசம் கொண்டிருந்தால் குறைகளை காணமல் நிறைவாக இணைந்திருங்கள்
வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்
அன்புக்கு ஈடுஇணை ஏதும் இல்லை
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள்
இதுவோ மனித மனம்.. கரைந்து உருகிவிடும்
அன்பு மட்டுமே போதுமானது .. உங்கவானத்திலும் காதல் மழை பெய்யும்

சிந்திப்பீர் செயல்படுவீர்

FtC Team Viper :)
[/font]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: SweeTie on January 14, 2016, 11:47:54 PM
உன்னைப் பார்த்த முதல் கணத்தில் 
இதயத்தில் இடம் பிடித்தேன்
தேன்  சுவைக்கும் இதழ்களுக்கு
முத்தங்கள்  வாரி வழங்கிட்டாய்
பிரமன் படைப்பின் அதிசயமோ?
ரவி வர்மன் வரைந்த ஓவியமோ?
சிற்பிகள் செதுக்கிய பொற்சிலையோ?
உன் ரசனையின் முடிவில்லா  எல்லைகள்
பூர்வ ஜென்ம பந்தத்தின் பிணைப்பு
பிரிவென்னும் சொல்லுக்கு இடமில்லை

ஊடலில் விளையும்  தாகமிது
புல்லில் விழும் பனித்துளியாய்
சில நொடியில் கரைந்துவிடும்
கூடலில் நொறுங்கும் மோகமிது
ஓடையில் நழுவிடும் மீனினமாய்
கணங்களில் ஓடி மறைந்துவிடும்
போதையில் மிதக்கும் போகமிது
விண்ணை மூடிய கருமுகிலாய்
சட்டென மழையாய் பெய்துவிடும் 

காதலன் இதழ்கள்  இதமாய் உரசிடும்
பட்டும்  படாமலும்
அவளின் மெல்லெனத் தெரியும் பிடரியில்
மனசு மகிழ்ச்சியில் துள்ளிட
கண்டும் காணாமலும்
செல்லமாய்ப்  பொய்க் கோபம் காட்டியே
குறுநகை பூத்து உடன்
ஒட்டியும் ஒட்டாமலும்
அவன் மார்பில் இடம் கொண்டிடும்
காதலில் விளையும் ஊடலின்
முதற்படியோ  இது ??
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: சக்திராகவா on January 15, 2016, 10:14:42 PM
காற்றோடு பேசி
கவிதையாய் வடித்து
கதிரவன் கண்டப்
புழுவென துடித்து!

காதலைச் சொல்ல
காத்திருந்து
கால் நிழல் விட்டு
தனித்திருந்து!

கண்களை கண்டதும்
சொல்லிவிட்டேன்
கைகளை அவளும்
பற்றிவிட்டாள்!

எப்படி போனது
இத்தனை நாட்கள்
புரிதல் குறைந்து
பிரிதல் காண!

கண்ணாடி பிம்பமும்
காரிருள் கறையாய்
கடற்கரை மணலும்
கள்ளியின் முள்ளாய்!

நொடிகள் மட்டுமே
காட்டி வதைக்கும்
கடிகாரம் கேட்குது
பிடிவாதம் ஏனென?

அருமை தெறியவில்லை
அருகிலிருந்தாய்
அழுகை வருகிறது
அணைக்க மறந்தாய்!

காரணம் காண்பது
காதலை கொல்லவோ
காதலோடே பிரிவோம்
கண்இமைப் போல!

பிரிவின் சக்தி..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 087
Post by: KaniyaN PooNKundranaN on January 16, 2016, 05:07:05 PM
பருவம் வந்ததும்

பார்வையில் தொடங்கி

பைத்தியம் ஆகி

சித்தம் களைய வைக்கும்

பொல்லா காதலை துறப்போம்

காதல் இல்லா வாழ்வே இன்ப வாழ்வு

என்றும் இன்பமாக வழ சபதம் கொள்வோம்