FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 28, 2015, 10:56:42 AM
-
மூலநோயை குணப்படுத்தும் ஆகாயத் தாமரை
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-9/943866_1522734834690653_7316616796098156024_n.jpg?oh=b457efee4c222d84f1ec1ab71c9689c1&oe=57006379&__gda__=1460795324_2e922f5733a79bb8631737d50bd55090)
தாவரவியல் பெயர் : Pistia stratiotes
நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலைகளே மருத்துவப் பயனுடையவை. வெப்பு தணித்து தாகங்குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப் புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட விரைவில் புண் ஆறும். ஆசன வாயில் வைத்துக் கட்டினால் வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.
2. 25 மி. லி. இலைச் சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் தொடர்ந்து கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.
3. இலைச்சாறு அரைலிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ஆகியவற்றைக் கலந்து இளம் தீயில் காய்ச்சி, மெழுகுப் பதத்தில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் வீதம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும். (இத ஆகாயத் தாமரைத் தைலம் ஆகும்.)
4. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை பத்து நிமிடம் ஆசனவாயில் காட்ட மூல முளை விழும்