FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 20, 2015, 07:45:24 PM

Title: ~ புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி ~
Post by: MysteRy on December 20, 2015, 07:45:24 PM
புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12376033_1520543124909824_8792442926566125369_n.jpg?oh=49ed789ad81fc59a0aef1cf8c1d7e39c&oe=56DDD784)

நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது.
1. பட்டையை மென்மையாக அரைத்துக் கடினமான கட்டிகளுக்குப் பற்றிட கட்டி உடைந்து ஆறும்.
2. மலர் அல்லது மொட்டுகளை வெற்றிலையுடன் மென்று தின்ன மண்டைப் பரு குணமாகும்.
3. வேர்ப் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 50 மி.லி. காலையில் மட்டும் பருகிவரப் பாலியல் நோய்ப் புண்கள், சீழ்கலந்து வெளியேறும் சிறுநீர், சிறுநீர்ப் பாதை அழற்சி ஆகியவை குணமாகும்.
4. மரத்தின் பாலினை மூட்டு வலியுள்ள இடங்களில் தடவிவரக் குணப்படும்.