FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 20, 2015, 07:33:21 PM
-
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/10302_1520223881608415_6368156254933918852_n.jpg?oh=91fea40e79fc40cf21df1aa98ba33e53&oe=56D96A2D&__gda__=1460866194_51c8f6aaf6dfe458d9d3fb87a8c81c10)
நாக்கில் அரித்தாலும் குடலை சுத்தப்படுத்துவதற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.
நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.
சத்துக்கள்
விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.
எலும்புகள் பலவீனம். கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனை. ஆற்றலை அதிகரித்தல்.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
மூல நோயை குணப்படுத்தும், ஆசன வாயிலில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.
ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.
உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.