FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 13, 2015, 05:52:44 PM
-
சென்னா தேங்காய்ப்பால் குழம்பு
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/12369167_1518277045136432_1079412348864886407_n.jpg?oh=4b916b0df36d16831c189160731f1dca&oe=5713176F&__gda__=1458108991_c2025d64b276b249770c8afc3286201a)
தேவையானபொருள்கள் :
வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியாதூள் - 3 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்)
அரைக்க :
கொத்தமல்லித்தழை - சிறிது
தக்காளி - 1
தாளிக்க :
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு -1
வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* கொண்டக்கடலையை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
* தக்காளி, கொத்தமல்லித்தழை இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* தேங்காய் துருவலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும். அடுத்தது அதே தேங்காயுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால், அவித்து வைத்துள்ள சென்னா, மிளகாய்த்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
* மசாலாவாடை போனதும் முதல் தேங்காய்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு ரெடி.