FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 29, 2015, 05:23:34 PM
-
இறால் பிரியாணி
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12279094_1514461258851344_223446585754862508_n.jpg?oh=5d42c720166d9e2e35036f20283f308b&oe=56F8C824)
தேவையான பொருட்கள்
சூரிய காந்தி எண்ணை
இறால் – 500 kg
அரிசி (சீராக சம்பா) – 500 kg
பல்லாரி வெங்காயம் – 250 g
தக்காளி – 200 g
இஞ்சி, பூண்டு விழுது – 4 tsp
வத்தல் பொடி – 1 tsp
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
மல்லி தூள் – 1 tsp
கொத்தமல்லி தழை – 150 g
புதினா – 100 g
மிளகாய் – 4
எலுமிச்சை – 1
தயிர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலம்
செய்முறை
முதலில் இராலை தயிர் விட்டு உப்பு போட்டு கொஞ்சம் வத்தல் பொடி கலந்து பிசைந்து வைக்க வேண்டும். பின்னர் கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அடுத்து பல்லாரி, மிளகாய் இவைகளை போட வேண்டும்.
நன்றாக இவற்றை வதக்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை அதில் கலந்து நன்கு சிவப்பு கலர் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை போட்டு வதக்கி, அதில் இறால் கலவையை சேர்த்து, மஞ்சள், வத்தல், கொத்தமல்லி பொடிகளை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் 1 டம்ளர் அரிசிக்கு (சீராக சம்பா) 2 டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து கொத்தமல்லி இழை, புதினா, உப்பு ஆகியவற்றை போட்டு மூடி வைக்க வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பின்னர் திறந்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் அதனை மூடி தம்பில் வைத்து இறக்க வேண்டும். சுவையான, சூடான இறால் பிரியாணியை அனைவருக்கும் பரிமாறலாம். இறால் பிரியாணி செய்ய 20 நிமிடங்கள் ஆகும்.