FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 21, 2015, 11:00:59 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: Forum on November 21, 2015, 11:00:59 PM
நிழல் படம் எண் : 080
இந்த களத்தின்இந்த  நிழல் படம் PAUL WALKERஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F080.jpg&hash=92990fa29340c57bcd0ad77579d818de04aa0377)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: சக்திராகவா on November 23, 2015, 11:31:26 PM
காட்சி பொருளானது காதல்
சாட்சி இன்றி சாகடிக்கப்பட்டும்
கல்லறை தூக்கத்திலும்
காதல் பூக்குமோ!
கற்சிலையாயினும்
கைகள் சேறுமோ!

கதைகளில் கேட்கும் காதல்
சதைகளில் வலி சுமந்ததுவோ!
இருவர் காதல் இறவாதென
இன்றும் கான சான்றிதுவோ!

-சக்தி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: AnonYmous on November 25, 2015, 11:18:52 PM
உன் கரம் பற்றி பறக்க ஆசை பட்டேன் அன்பே
இன்று உன் கரம் தழுவி படுத்துள்ளேன் இங்கே
காரணம் யார் ஆயினும், மாண்டது நாம் ஆயின
இப்பூஉலகில் சேர்ந்து வாழ வழி இல்லாமல் போகலாம் அன்பே
நாம் வாழ ஒரு புது பூமி படைத்து வாழ்ந்திடுவோம் அங்கே
நம் கைகள் பிரிந்திடலாம் இன்று, நம் அன்பு பிரியாது என்றும்
என்னவள் உன்னுடன் நான் என்றும் இருப்பேன் என உறுதி கூறினேன்
அது மரணம் ஆயினும் சரி உன்னை தொடர்ந்து வருவேன்.

என்றும் அன்புடன்,
Anonymous.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: ReeNa on November 26, 2015, 01:54:54 PM
I came into rest
With my love assured   
Eternal bond promised
Fulfilled at heavens door   
Hand in hand we enter in to Life
Life that was taken away
Life that was denied

Two longing soul united in a path
A kiss of life became a kiss of death
When life could not unite
Death came to reside

A silent promise
Made by two hearts   
Promises that began with every breath
Promises fulfilled at the touch of death.

(கவிதை நிகழ்ச்சிக்காக தமிழாக்கம்.... நண்பர்கள் குழுமம்)

பூவுலகில் நம் காதலுக்காக உயிர் துறந்து 
காதலில் மட்டும்  வென்று
நம் பிணைப்பை உறுதிசெய்த நமக்காக
இன்று சொர்க்கவாசல் திறந்திருக்கிறது.

பூவுலகில் நமக்கு மறுக்கப்பட்ட
நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட வாழ்வை
நாம் இருவரும் இங்கே கைகோர்த்து
வாழலாம் வா அன்பே!

வாழும் ஏக்கத்தோடு உலவிய
இரண்டு உள்ளங்கள் ஒன்றிணைந்து
ஒரே பாதையில் பயணிக்கும் தருணமிது.

வாழ்வின் முத்தங்கள் அனைத்தும்
அங்கே சாவை முத்தமிட்டது.
வாழ்க்கை நம்மை இணைக்காத பொழுது
இறப்பு நம்மை இணைத்து வாழ வைக்கிறது.

வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும் வளர்த்த
இரு உள்ளங்களின் ஆசைகள் அனைத்தும்
மரணத்தை தழுவும் தருவாயில் நிறைவேறுகிறது. 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: PaRushNi on November 26, 2015, 02:40:24 PM
இதோ ஒரு தாலாட்டு !

முன்பின் தெரியாத உன்னை
அறிய ஆவலாய் அலைந்தேன்
ஆசைபட்டேன் உன் கரம் பற்றிடவே
கேளும்..உன் தெரு முச்சந்தியை..
எத்தனை முறை வந்தேன் என்று. 8)
கேளும்..உன் தெருவில் உள்ள கடைகளை
காய்ந்து போன கருவேப்பிலை வாங்க வந்தேன்
என்று அதுவும் சொல்லும். :P

அத்தனை அலைச்சலுக்கு பிறகு
என் அரியணையில் நீ ஏறினாய்  ;)
என் இமைபோல் பாதுகாத்தேன்
என் வாழ்கையின் இனிமையே..  :)
நரை விழுந்தது நம் வாழ்வில் இன்று
பிரியும் நேரமும் வந்ததோ ?
என்ன வந்தால் நமக்கென்ன ::)
கண்ணம்மா நீ உறங்கு..பாசாங்கு செய்யாது..
உன் அருகிலே இருந்து நான் தாலாட்டுவேன்.

  கிறுக்கலுடன்
  -பருஷ்ணி  :)

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: SweeTie on November 26, 2015, 08:30:57 PM
என் தூக்கத்தைத் தொலைத்தேன்
ஏக்கத்தை வளர்த்தேன்
உனைப் பார்த்த முதல் கணத்தில்......
என் நினைவுகளை இழந்தேன்
உன் இதயத்தில் நுழைந்தேன்
என் பெயரை உன் வாய் உச்சரித்தபோது
மெய் சிலிர்த்தேன் உள்ளம் பூரித்தேன்
உன்  ஸ்பரிசத்தை நான்
முதன்முதலில் உணர்ந்த வேளை ....
காதல் என்னும் கங்கை  நம்மை
மடை திரண்ட வெள்ளம்போல் அடித்துச் சென்றாள்

காதலுக்கு ஜாதிகள் உண்டா??
மதங்கள்தானும் உண்டா?
இதயங்கள் மட்டுமே பேசும்
வார்த்தையற்ற  மொழி
இரண்டு இதயங்களை பிணைக்கும்
இனிய அன்புப்  பாலம்
காதல் இல்லையேல் உலகம்  ஏது ?
வண்டுக்கு பூவின்மேல் காதல்
வானுக்கு நிலவின்மேல் காதல்
கடலுக்குக்  கரைமேல் காதல்
இயற்கையை  யார் நிறுத்துவார்??

காற்றும் புகாத இடைவெளிகள் நீளாதா 
என ஏங்கிய நாட்கள் 
திசை அறியாப் பறவைகள் போல்  வானில்
சிறகடித்துப் பறந்த  நொடிகள்
ஓர் உயிர் ஈருடலாய்
ஓற்றைப்  போர்வைக்குள்
குளிர் தென்றலை
அனுபவித்த மகிழ்ச்சி
காதல் உணர்வுகள் அழிவதில்லை

சுற்றத்தை மறந்தோம்
சமூகத்தை வெறுத்தோம்
எங்கள் காதலை வாழவிடுங்கள்
கெஞ்சினோம் கதறினோம் கண்ணீர் விட்டோம்
மூடியகண்களைத  திறக்கவில்லை சமூகம் 
காதல் என்றுமே அழிவதில்லை
உயிர் பிரிந்து கல்லறையில் போனாலும்
நம் காதல்  வாழும்! வாழும்!! வாழும்!!! 
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: StasH on November 27, 2015, 05:28:25 AM
அந்தி மாலை பள்ளி மணியின்
அலறலை கேட்டு
அணை உடைந்த நீரென
பாய்ந்து செல்லும் மழலைகள்...

தாயின் சுண்டு விரல் பற்றிடவே;

பூச்செடி உயரத்தில் ஒரு பூ அவள் !
ஏக்கம் நிறைந்த பார்வையுடன்
நோட்டமிடுகிறாள் 
தாய்- சேய் கரங்களின் பிணைப்பை;

இவள் தாயின் ஸ்பரிசம்
அறிந்ததில்லை இப்பூ !

----------------------------------------------------

காலச்சக்கரத்தின் சுழற்சி...

நம் இருவரின் சந்திப்பு;
எழுதி வைத்தார் போல்
காதல் மலர,
இறுக பற்றி கொண்டாய்
என்னிரு சுண்டு விரல்களையும் இணைத்து ...

காதலின் உச்சத்தில்
கண் அணை உடைந்து
கரம் விரித்து, என் தோளில்
உன் முகம் புதைத்து
இறுக்கி அணைக்க ,

உன் நகம் கொண்டு
என் முதுகை பிளந்து
எனை நீங்கி சென்றாய்
அன்று...

பின்னொரு நாளில்;
பனி மழைச்சாரலில்
ஒரு பக்கம் நீ, மறு பக்கம் நம் பிள்ளை
என் சுண்டு விரல் பற்றி
என்னை சுற்றி சுற்றி வட்..
கனவின் விழிப்பில்
நிறைவு பெறாத வட்டம் !

 மதிப்பிற்குரிய வெட்டியாரே
ஒரு விண்ணப்பம்;
என்னை புதைத்தாலும்
என் கரத்தை மூடிவிடாதீர் !

சுண்டு விரல் தேடி வரும் ஒரு பூ !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: ராம் on November 27, 2015, 02:02:03 PM
நாம் இருவரும் வெவ்வேறு
கல்லறையில் இருக்கலாம்
உயிர் பிரிந்திருக்கலாம்
ஆனால் என்றும் நம் காதலுக்கு
மரணம் கிடையாது
இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்
அதிலும் உன்னையே நேசிக்க வேண்டும்
உன் காதலுக்காக ஏங்க வேண்டும்
உனக்காக உயிர் விட வேண்டும்
என்னவளுடன் வாழும் வாழ்க்கையை
மட்டுமே  நினைத்து கனவு கண்டுகொண்டிருந்த
என் இதயத்திற்கு அவள் இல்லாத
ஒரு வாழ்வு வாழ தெரியவில்லை
வாழவும் இயலாது  கவிதை எழுத
நான் கவிஞன் இல்லை
என் இதயத்தினுள் உள்ள கவலை இது
என் உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ
அதுபோல தான் நீ எனக்கு
நீ இல்லாத இவ்வுலகம் எனக்கு தேவை இல்லை
அது மரணமாயினும் உன்னுடனே…..
இறந்தாலும் உன்னையே நேசிப்பேனடி.....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 080
Post by: gab on November 27, 2015, 05:46:22 PM
கவிஞர்கள் பலரின் கவிதைகளை
செவியுறும் பொழுது
எழாத கவி ஆர்வம்.
பூவுலகை வலம் வந்து
இயற்கையை ரசித்த பொழுது
வராத கற்பனை..

என்னவளாய் உனை நினைக்கையில்
உன் எண்ணங்களின் தழுவலில்
கண்கள் சொக்கிப்போய்,
நம் வாழ்க்கையை முன்னோக்கி
காணும் நோக்கோடு
கனவுலகில் தலை சாய்க்கிறேன்.

என் விழியில் நீ விழுந்த நாள் முதல்
என் கனவுகள் நீயானதன் காரணம்
காதலன்றி வேறென்ன?
உன் காதலை நான் பெற
என் ஒவ்வொரு நொடியையும்
உனக்காக மாற்றினேன்.

என்னருகில் நீ இருக்கையில்
ஒவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வு வசந்தமாய் உணர்கிறது.

உன் கரம் பிடித்த நாள் முதல்
எனக்கு நீ உனக்கு நான் என்று
மனதால் பிரியாது, 
ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து
நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை
கனவு முழுதும் தித்திக்கிறது.

நமக்குள்  பிரிவென்பதை
மரணம் கூட தரக்கூடாதென
உள்ளம் வேண்டுகிறது.

இருவரில் யார் முன் இறப்பினும்
மௌனங்களாய் வார்த்தைகளற்று
நீளும் மனவலியிலும்
வருத்தங்கள் தோய்ந்த 
ஆறாத ரணத்திலும்,
தன் இணையது பிரிந்துவிட்டால்
ஏதுமருந்தாமல் தனித்திருக்கும்
அன்றில்பறவையின் கையறு நிலையை
மற்றவர் அனுபவிக்க நேரிடும்.
 
இவ்வலியை உணர்கையில்,
இருவரும் ஒருசேர  மரணித்து
பிரியாத நிலையை  மறுவுலகிலும்
தொடர வேண்டும் என்ற எண்ணம் மேலிட,
சிந்தனை தடைபட்டு
ஆரம்ப நிலைக்கே மீள்கிறேன்.

எதிர்காலத்திலாவது கவிதை எழுத வேண்டும்
என்ற எண்ணத்தோடு!

இப்படிக்கு,

இறப்பிலும் உன்னை பிரியாத வரம் வேண்டி
நிஜத்தினில் உன்னுடன் வாழ நித்தம்
உனக்காய் காத்திருக்கும் இதயம்.