FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 21, 2015, 05:49:38 PM

Title: ~ சர்க்கரையை கட்டுக்குள் வைக்க... ~
Post by: MysteRy on November 21, 2015, 05:49:38 PM
ஆவாரம்பூ கஷாயம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-n-2hkIyC8As%2FVlAg0E5SdBI%2FAAAAAAAAPyE%2FKvkyEqqtVjg%2Fs1600%2F1.jpg&hash=a25f8f14d35188a2b6fb5b43d5397cbb1cc73539)

ஆவாரம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை சாப்பிடலாம். அல்லது ஆவாரம் பூ, இலை, காய், வேர், பட்டை போன்றவற்றை பொடியாக்கி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் கஷாயமாக வைத்தும் 50 மில்லி அளவு குடிக்கலாம்.
Title: Re: ~ சர்க்கரையை கட்டுக்குள் வைக்க... ~
Post by: MysteRy on November 21, 2015, 05:50:41 PM
சீரகப் பொடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-CvSjzOcWhHE%2FVlAg-kZA1UI%2FAAAAAAAAPyM%2FCiPdoQzqDAA%2Fs320%2F2.jpg&hash=28ce5aca56ceace88f0c4345b1fb54bc7a2c573f)

சீரகம் - 200 கிராம், வெந்தயம் - 200 கிராம், ஓமம் - 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம் இவற்றை தனித்தனியாக பொன்நிறமாக வறுத்து, பொடிசெய்து ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இதை காலை உணவுக்கு முன்பும், இரவும் உணவுக்கு பின்பும் ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை சாப்பிடலாம்.