FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on November 16, 2015, 03:18:25 AM
-
கொடுமை கொடுமை பெண்ணாகப் பிறத்தல்
அதனிலும் கொடுமை ஆண்களை விரும்புதல்
விரும்பியபோதிலும் புரிந்துணர்வின்மை கொடுமை
பெண்களைக் குற்றம் சாடுதல் அதனிலும் கொடுமை
தங்களின் குறைகளைச் சமாளித்தல் கொடுமை
சமாளித்தபோதிலும் பெண்கள்மேல் குறைகூறல் கொடுமை
இரு கரம் தட்டாமல் சத்தம் வருமா??
உதடுகள் சேராமல் முத்தம் வருமா ??
ஜென்மம் எடுக்கும்போதும் வலி கொடுக்கும்போதும் வலி
காதலில் தோற்றாலும் வலி வென்றாலும் வலி
பெண்களின் வலி யாருக்கு புரியும் ??
நாலா பக்கமும் சுற்றும் வலியை சுமப்பதற்கே பிறந்தவர்கள்,,,,,.
-
oru silar pandra thappukaaga ellarum apdinu solla mudiyathey sweetie...pasanga oru side purinchi unmaiya irukkavangalum undu same pengalum oru side... oruthara oruthar nalla purinchi nadanthukita sila prob vara chance illa..... but pengal eppothum theivam than ithukana reason epdi soldrathunu therila inga :P pengaloda valigalai nalla velipaduthirukinga nice sweetie..
-
அச்சச்சோ .....ராம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இதை
நான் எழுதவில்லை யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு
மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் . பெண்கள் இயற்கையிலேயே
அதிக வலிகளைத் தங்கிக்கொண்டு அமைதியாக வாழ்பவர்கள்
என்று சொல்ல மட்டுமேதான்.
-
பெண்மையின் சிறப்பு தாய்மை!
அது மறுக்க முடியா உண்மை!
வலிகள் இருப்பினும் சிறப்பினை
வாழ்த்துவோம்- கவிதை என்ற பெயரில்
நீ வலிகைளை எழுதியுள்ளாய் அருமை தோழி -சக்தி
-
பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல மிக அருமையாக பெண்களின் வலியினை வெளி படுத்தி உள்ளீர்கள்.ஒரு salute for u.
-
ஆண்கள் படும் கொடுமைகளை சொன்னால் பொது மன்றமே அழும் , இருந்தாலும் கவிதைக்கு என் வாழ்த்துக்கள் ஸ்வீட்டி .
-
நன்றிகள் ராம் சக்தி ஜோக் guy Gab , நல்லவேளை ஐ நா சபைக்கு எடுத்துச்
செல்லாமல் விட்டார்கள் ஆண்கள் .