FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 11, 2015, 09:08:59 PM
-
முகப்பரு வடு நீக்க
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12227128_1510558085908328_6213203790719083382_n.jpg?oh=01cf51b86d566287b6cba3ccc45c7724&oe=56BC3CA1)
முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை; முகத்தின் தோற்றத்தையும் பொலிவுடையதாக மாற்றும் சக்தி உடையது.
எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் மென்மையாக மாறும். எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறையும். திரும்ப பருக்கள் வருவதை தடுக்கும். வென்னீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 20 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி, அவற்றை நீக்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகாக மென்மையாக இருக்கும்.
இயற்கையான இந்த வைத்திய முறையால், வேறு எந்த பக்க விளையும் ஏற்படாது.
வயிறு எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும், அரிய வகை மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது.
முகப்பருவை போக்கவும், கருமையான கூந்தலை பெறவும் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
பொடுகு தொல்லையும் இருக்காது.