FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 22, 2015, 09:01:50 PM
-
வாழைப்பூ குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F11%2Fnjrlmg%2Fimages%2Fp25a.jpg&hash=17a6f167dad867f349f31a06020745d873e4ac26)
வாழைப்பூவை உரித்து சின்னச்சின்ன முட்டைகளாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவை உரிப்பது இந்தக் குழம்பு வைப்பதில் முக்கியமான ஒரு நடவடிக்கை. உரித்துக்கொண்டே போனால், இளசுக்கும் இளசான வாழைப்பூ கிடைக்கும். வீட்டில் கூட்டம் அதிகம் என்றாலோ, பூ கொஞ்சம்தான் கிடைத்தது என்றாலோ, சிவப்பு நிறத் தோலை மட்டும் நீக்கி, பூ எல்லாவற்றையும் போட்டுக் குழம்பு வைக்கலாம்.
புளிக்குழம்பு வைக்கும் அதே பக்குவம்தான் இதற்கும். கடாயில் சின்னச்சின்னதாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கி, பொன்னிறமாக வந்ததும் தக்காளி, உரித்துவைத்த வாழைப்பூக்களை பிய்த்துப்போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி, புளிக்குழம்பு மசாலாப் பொடியைச் சேர்த்து, புளியைக் கரைத்துவிட்டு, தேவையான உப்பும் போட்டு, கொதிக்கவிட வேண்டும். மீன் குழம்பு மசாலா லேசாகச் சேர்க்கலாம். அது சேர்க்காமலேயே வாழைப்பூக் குழம்பு, மீன் குழம்பு மாதிரி சுவையாகத்தான் இருக்கும். நல்லெண்ணெய் விட்டுத் தாளித்து, இறக்கினால் வீடே மணக்கும்.