FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 15, 2015, 10:37:57 PM
-
தலைமுடி வளர என்ன செய்ய வேண்டும்!
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12096054_1504059596558177_6624918990322322136_n.jpg?oh=656923ac52d257dd350f6e03bca98f2f&oe=568BD79D)
நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய் வாங்கி வைத்து கொள்ளுங்கள். கறிவேப்பிலை நிறைய வாங்கி அதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற கூடாது. நெல்லிகாய் பொடி வாங்க வைத்து கொள்ளுங்கள்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் (பெரிய பாத்திரம் வேண்டும்) தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்க்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த உடன் அதில் நெல்லிகாய் பொடி, கறிவேப்பிலை போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு லிட்டர் எண்ணெய் முக்கால் லிட்டராக மாரும் வரை காய்த்து கொண்டே இருக்க வேண்டும். பின்பு அதை எடுத்து வடி கட்டி பாட்லில் ஊற்றி தினமும் தேய்த்து வந்தால் நல்ல முடி வளரும், கறுப்பாகவும் இருக்கும்.