FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on September 09, 2015, 11:48:43 PM
-
கொட்டும் மழையிலே நீ குடைப்பிடிக்க
நான் உன் கை கோர்த்து நடந்துவர
தூவானம் என்மேல் தெறிக்காமல்
உன் கைக்குட்டையால் என் முகத்தைமூடி
உன்மீது சாய்த்துக்கொண்டு
நீ நனைந்தாயே - என்ன சொல்வேன்
உன் அறிவென்பேனா இல்லை என்மேல்
கொண்ட அளவில்லா காதல் என்பேனா??
உன் படிப்பறையில் நீ தனித்திருந்த வேளைதனில்
மெதுவாய் நடந்துவந்து உன்
கண்களை கட்டிக்கொண்டபோது என்
கொலுசு சத்தம் உனக்கு கேட்காமப்போனதென்று
புத்தம் புதிதாக மணி சேர்த்து கொலுசு செய்து
என் கால்களில் அணிவித்து மனம் குளிர்ந்தாயே
எப்படி மறப்பேன் உன் அடாவடியை ??
நீ அறிவாளி என்று நான் பிரமித்த வேளைகளில்
ஓரக் கண்ணால் ஓர் ஆயிரம் மொழிகள் பேசி
என் கூடவே நீ இருந்தால் இந்த பிரபஞ்சத்தையே
வென்றுவிடுவேன் என இறுமாப்புடன் பேசி
என்னைக் கிறங்க வைத்தாயே
அதையும்தான் மறப்பேனா ??
-
கவிதைக்கு ஒரு லைக் . காதல் கவிதைகளில் உங்கள் திறமை மென்மேலும் வளர்கின்ற ரகசியம் என்னவோ ? வாழ்த்துக்கள் .
-
Jii Unga Poem Semma Semma Tharu Maaru Thakali Sooru...Apdi Eh Touching Ji..Best Wishes To U ...
-
உங்களின் கவிதை மழை காதலை கண் முன்னே கொண்டு வருகிறது .வாழ்த்துக்கள் மலரட்டும் உங்களின் கவிதை பூக்கள்
-
நன்றி நண்பர்கள் Gab . Cuber . Joke Giuy . எங்கள் உற்சாகம்
உங்கள் வாழ்த்துகளில் ......
-
jo superb arumaiyana varigal ungal kavithaila enga ellaraiyum kiranga vachittingale ungal kavithai thodara vazhthukkal....
-
Ram late ah poddalum nallave podrukenga. romba nantri
-
நல்லா தான் எழுதி இருக்கீங்க , எனினும்
வெறும் உரைநடை தவிர்த்து கவி நடையும் புகுத்தி
ஆங்காங்கே உள்ள எழுத்துப்பிழைகளையும்
பதிக்கும் முன் படித்துப்பார்த்து பின் பதிக்கவும் !!
வாழ்த்துக்கள் !!
-
kadhal vazhintodum vaarthaigal, ungal kadhal kavidhai ennai sinthika vaithathu enn pasumaiyana ninaivugalai, ungal kavithaigal thodara enn vazhthukal sweetie