FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 08, 2015, 09:52:52 PM
-
கட்டி ஒரு மணி நேரத்தில் உடைய
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-9/11952013_1494251280872342_3767739159628409115_n.jpg?oh=453172c4789569e5279da134d332b39b&oe=56A43D10&__gda__=1449172741_f912b1b67a4cec2d39c93a645776af1d)
இது நமது பாரம்பரிய முறை தான். இது ஒரு எளிமையான முறை. கட்டி பழுத்தால் தானாக உடைந்து விடும். உடனே பழுக்க
தேவையான மருந்து
விளகெண்ணை - தேவையான அளவு
சிப்பி சுண்ணாம்பு - தேவையான அளவு
முதலில் விளகெண்ணையை கையில் தடவி கொள்ள வேண்டும். பிறகு சிப்பி சுண்ணாம்பையும் சேர்த்து தேய்க்க வேண்டும். கையை தேய்க்காமல் தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி தேய்க்காமல் கழுவும் போது கையில் விளகெண்ணை + சுண்ணாம்பு பிசுபிசுப்பு இருக்கும். அதை ஒரு கத்தியால் சுரண்டி கட்டியில் வைத்து ஒரு வெற்றிலையை அனலில் காட்டி கட்டியில் வைக்க அது அப்படியே ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு தான் கதை. இந்த மருந்து கட்டியை சூடாக்கி ஒரு மணி நேரத்தில் உடைத்து விடும்.
குறிப்பு : கொழுப்பு கட்டிக்கு இந்த மருந்து பயன் தராது.
அவச காலத்துக்கு இது சிறந்தது. கட்டி அதுவாக உடைவது சிறப்பு.