FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on February 05, 2012, 03:54:12 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 012
Post by: Global Angel on February 05, 2012, 03:54:12 PM
நிழல் படம் எண் : 012


இந்த களத்தின்  நிழல் படத்தை தோழி சுருதி கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F012.gif&hash=1f1a4be1f4bbbcbbec6814e21932f51faa818f0d)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: suthar on February 05, 2012, 07:59:26 PM
வரதட்சனை


வரதட்சனை.......
உனக்கு சமமாகுமா பெண்ணே
வீடு வாகனம்
காசுபணம்
நகைநட்டு
எது குடுத்தாலும் உனக்கு நிகர்
இப்பூஉலகில் ஏது பெண்ணே

உன்னை எண்ணி பார்க்கிறேன்
திருமணம் முடித்ததும்
ஆட்கொள்ளும் கணவனுக்கு
ஆட்டுவிக்கும் நாத்தனாருக்கு
ஆடும் மாமியாருக்கு
ஆட்படுவது மட்டும் நீதான்

ஏனோ தெரியவில்லை
எவ்வளவு கொடுத்தும்
உன்னை மகளாக
பாவிக்கும் மனது
எந்த தாயிடமும் இல்லையே
மருமகளாக பாவிப்பவர்
இருக்கும் வரை
எப்பொழுதும் நீ
ஒரு சுமை பொருள்தான்

 அரசு திட்டம் தீட்டி
சட்டம் வகுத்தாலும்
வரன் பார்க்க வரும்போதே
வரதட்சனை பேசும்
தாய்மார்கள் இருக்கும் வரை
எப்படி ஒழியும் ..........வரதட்சனை?


உங்கள் -சுதர்சன்சுந்தரம்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on February 12, 2012, 01:40:37 AM
உன் மன அறையில்
மண்டி இட்டு மன்றாடுபவள் நான்
இருந்தும்
என் மனம் ஒன்றும்
மலர் அல்ல
எனக்குள்ளும்
எண் அற்ற எதிர் பார்ப்புகள் ..
கரடு முரடானா
காட்டமான கொள்கைகள்

உன்னிடம் தினம்
கனவிலும் நினைவிலும்
ஒவொன்றாக சொல்கிறேன் ..
எதற்கும் உனிடம்
எதிர் வினைகள் இல்லை ...

உன்னை நேசிப்பவள் நான்
உன்னை பூசிபவள் நான்
சில சமயம் தூசிப்பவளும் கூட ..
இருந்தும் என் மன தராசில்
நீதான் நிறை நிலை ...

என் காதல்
ஒரு நாள் உன்னை
கனிய வைக்கலாம்
என்பால் உனக்கு
கருணையும் பிறக்கலாம்

இன்று சொல்கிறேன் கேள்
உன் மனதராசில்
அன்று என் பகுதி தாழ்ந்து
பொன் பொருள் பகுதி
உயர்ந்து
உன் மனதில்
எனக்கான இடம்
நிச்சயிக்க படுகின்றதோ
அன்று ...
நீ கேட்டால்
உயிரையும் தருவாள்
இவள் .... உன்னவள் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on February 13, 2012, 10:14:29 PM
அன்று
சொர்க்கத்தில் நிச்சயிக்கபட்டதாம்
திருமணம்
இன்று ஏனோ
திருமணங்கள்
ரொக்கத்தில் நிச்சயிக்கபடுகின்றது....
 
வழி தவறி வாழ்க்கை
தடம் மாறும் மங்கையருக்கு
விலைமகலென பெயர் சூட்டி
கேவலபடுத்தி
ஒதுக்கி வைக்கும்
உலகிது...
 
திருமண சந்தையில்
ஆண்மகன் உன்னை
மணமுடிக்க ,
வரதட்சணை கொடுத்து
வாங்கும் நிலை ..

நிஜத்தில் விலைபோகும்
விலைமகன் நீதானே
உனக்கு பெயர் மாப்பிள்ளையா??

வறியவன் வீதியில் இருந்து
பிச்சை கேட்க
வந்த மாப்பிள்ளை
வீட்டில் இருந்து பிச்சை கேட்கிறாய்...

மாமியார் என்ற பெண்ணே !!!
உன்னை பெற்றவளும் பெண்தானே...
நீ பெற்றதும் பெண்ணாக இருப்பின்
கொடுமை செய்ய துணிவாயோ??
நீ கொடுத்த
தாய் பாலுக்கு கூலி கேட்பாயோ??

ஏனிந்த பணத்தாசை...
உன் பேராசையால்
மலர்ந்து கருகி போயின
சில அப்பாவி
பெண்களின் இளமை...

மாமியார்  உன்னை
மாமி "யார்" என்று
மருமகள் கேட்காமல்
தாயாய் நினைக்க
தாயாய் மாறிவிடு உன்
மருமகளுக்கும்....

பஞ்சனை சுகத்துக்கும்
அடுப்படியில் அல்லல் படவும்
பணம் கொடுத்து
வாங்க வேண்டுமோ உன்னை
மகளாகவே இருந்துவிடுகிறோம்
கவலை இல்லை
எங்கள் தாய்க்கு மகளாக
இருக்கும் சந்தோசம்
வேறெதிலும் இல்லை ;) ;)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Anu on February 14, 2012, 11:21:57 PM
பண்பில் சிகரமாய்
அன்பில் அன்னையாய்
துன்பத்தில் தோழியாய்
அழகில் தேவதையாய்
இருக்கும் என்னவளை விட்டு
யார் எவரென அறியாத ஒருத்தியை
மணமுடிக்க சொல்வதேனோ 

அன்பை மட்டும் கொடுத்து
வளர்த்த நீங்களா
பணம் பார்த்து
மணம் முடிக்க சொல்கிறீர்

பணத்தில் குறையலாம்
ஆனால் பண்பில் குறைவில்லை
பல மனை கட்ட இடமுண்டு
நீங்கள் பார்த்த பெண்ணிடம்
ஆனால் என் மனதில் இடமில்லை

வற்புறுத்த வேண்டாம்
வரதட்சணைக்காக
வாழவிடுங்கள்
என்னவளோடு