என் சிந்தனையின் சொந்தக்காரன் அவன்.
என் கற்பனையின் முகவரி அவன்.
என்றும் என் கவிதையின் முதல் வரி அவன்.
முகவரி தந்தவனே என் முகம் மறந்ததென்ன.
என்னை சிந்திக்க வைத்தவனே என்னை பற்றி சிந்திக்க மறந்ததென்ன.
என் கற்பனையை தூண்டியவனே இன்று கனவாகி போனதென்ன.
முதல் வரி நீ இன்றி முழுமை பெறுமோ என் கவி.
என் இதயம் அது இயங்கவில்லை இனியவனே நீ இன்றி.
வந்து விடு என்னவனே. வாழ்வின் எல்லை வரை நீ வேண்டும்.