FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on June 02, 2012, 11:23:48 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 026
Post by: Global Angel on June 02, 2012, 11:23:48 PM
நிழல் படம் எண் : 026



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் gab அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F026.jpg&hash=80629c85b8300b8c36d9d4a096d8889f6c75b84c)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Tamil NenjaN on June 03, 2012, 07:41:17 PM
கீற்று நிலவொளியில்
காற்றில் பரவும் ஒரு கீதம்
விடியலைத் தொலைத்த
தனிமையும்
இரவுகளை ரசிக்க முடியாத
கவலையும்
காற்றலையில் தவழ்ந்து வரும்
இவள் கீதம் சுமந்து வரும்

இவள் இரவுகள்…
நட்சத்திரங்களை
தொலைத்துவிட்டன..
முழுமதியும்
இவள் வானில் மட்டும்
முகவரி தொலைந்து
முகாரிக்குள் மறைந்து போனது
சுட்டெரிக்கும் சூரியனாய்
இவளது பகல்கள்…
இளந்தென்றலும்,
இதமான பொழுதுகளும் அங்கில்லை


நம்பிக்கை கொண்டவரிடம்
அன்பையும் பரிவையும் யாசித்தாள் இவள்
புறக்கணிப்புக்களாய் பல்லிளித்து
ஆறுதல் கரங்களுக்குப் பதிலாய்
துயரங்களை அள்ளித் தெளித்தார்கள்

விடியலைத் தொலைத்த
ஒற்றைப் பறவையாய்…
ஆறுதல்
தேடித் தேடித் தனியாக…
இவள் பயணம் தொடர்கிறது

மனதின் காயங்கள்
இசையின் கீதங்களாய்
காற்றில் தவழ்கிறது...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on June 04, 2012, 07:44:17 PM
அமைதி நிலவும்
நள்ளிரவில்
சோகம் மறைத்து
மனதின் வலிகளை
ஸ்ருதியோடு இசை மீட்க
என்னவனே
உன் செவிகளுக்கு எட்டதோ
உன்னவள் படும் பாடு...

உன்னோடு கைகோர்த்து
காதல் இசை மீட்ட வேண்டிய
கரங்கள்
இன்று தனிமையில்
வேதனையோடு தவிக்க
என் வேதனை தாளாமல்
காரிருள் மேகம்
தன் காதலி நிலவினை
கட்டித்தழுவ செல்கிறதோ...

சீறும்  கடல் அலையும்
சலனமில்லாமல்
மௌனம் காக்க
என்னவனே மௌனம் காக்காமல்
வந்துவிடு உன்னவளை சேர

உன் முகம் பார்த்தே
மலர்ந்த என் முகம்
இன்று நிலம் பார்த்து
கண்ணீர்சிந்த
கண்ணீரை அறியாமல்
கலக்கம் புரியாமல்
கல்லாகி போனாயோ....

தவழும் முத்தத்தை
காற்றோடு   தருகையில்
தழுவ அருகில் இல்லை நீ
என்றாயே
இன்று என் முத்தத்தையும்
வேதனைகளையும்
மனதை வருடும் இசையில்
இதயத்தின் துடிப்போடு
அனுப்பிவைக்கிறேன்
உன்னை வந்து சேர..

வேதனைக்கு மருந்தாக
காற்றோடு தவழும்
முத்தத்தை எனக்காக
திருப்பி அனுப்பி விடு..
நாம் சேரும் நாள் வருகையில்
மொத்தத்தையும்
மறக்காமல் தருகிறேன்
என்னவனே
உன்னகே உனக்காக :-[
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: VICKYDASA2 on June 04, 2012, 11:16:14 PM
உன் பாதங்கள் பதிந்த

ஒவ்வொரு இடமும் இப்போது

பூத்துக் கிடக்கிறது ஆனால்

உன் பார்வைகள் பதிந்த

நான் மட்டும்தான் இன்னும்

உனக்காகக் காத்துகிடக்கிறேன்

 

கனவுகளின் கரையோரம்

கடல் அலைகலேன ஓயாமல்

வந்து வந்து செல்கிறது

 உன் ஞாபகங்கள்


 

உடைந்து போவதற்கும்

உடைத்துப் பார்ப்பதற்கும்

விளையாட்டுப் பொருளென

மாறிப்போனதோ இந்த இதயம்


 

அழ நினைத்தும்

கண்ணீர் இல்லாத விழிகள்

உளற நினைத்தும்

வார்த்தைகள் இல்லாத உதடுகள்

இறந்துபோக நினைத்தும் இன்னும்

உன்னை மறக்காத  இதயம்  என

 ஒவ்வொரு நொடியும்

போலியாய் கழிகிறது





கனத்துப்போன

நினைவுகளின் உச்சமாய்

காத்து கிடக்குறேன்

உன் நினைவுகளில்....!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on June 08, 2012, 09:46:43 PM
உனக்கான தவம்....
ஒவொரு கணமும்
இசையுடன்தான்  என் பயணம்
என் கனவுகளுக்கு
என் நினைவுகளுக்கும்
என் உணர்வுகளுக்கும்
ஒரே வடிகால் இசைதான் ...


உன் வாசத்தை சுவாசிக்கும்
என் நாசி ...
உன் நினைவுகளை
இசை கொண்டு மீட்டுகின்றது ...


உன் மீது நான் கொண்ட காதல்
உனக்கு பொய்யாக தெரியலாம் ...
உனக்கான என் தவம்
உபயோகமற்று போகலாம்
என் உள்ளத்து தவம் யாவும்
உனக்கான தேடலாக
இசைகிறேன் தனிமையில் ...
உனக்கு பிடித்த தனிமை
எனக்கும் பிடிக்குது ...
நீ இல்லாத தனிமைகளை
தனிமையிலேயே கழிக்கிறேன்
இசையிலே மிதகின்றேன் ....


ஒவொரு தடவையும்
உன்னால் அறுக்கபட்ட தந்திகள்
ஒவொன்றாக இணைத்து
உனக்கான நினைவுகளை
உணர்வுகளால் இசைகின்றேன் ...
வா வந்துவிடு ....
வாசம்  மறந்த எனக்கு
நேசம் கொடு ...
என் நினைவுகளை உன்னுடன் கலந்துவிடு ..
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on June 08, 2012, 11:17:26 PM
இசை ஒன்று இசை மீட்டும் அழகை
இன்று நான் கண்டேன் ,
என்னவளின் குரல் கேட்டலே மயங்கி போவேன்
அவள்மீட்டும் இசைக்கு சொல்லவா வேண்டும்

எந்த கவிகனும் வாசிக்க முடியாத
 இசை ஸ்வரங்களை ஒரு நொடி
பொழுதில் என்னவளின்   பொன் கரங்களால்
இசை மீட்டுவாள்,

எத்தனை முறை பார்த்தாலும்
கேட்டாலும் சலிக்காத திரைப்படம்,
என்னவளின் அழகு  கரங்கள்
கொண்டு  மீட்டும் இசை ஸ்வரங்கள்,

அவளின் இசைகேட்டு
குயில்களும், குருவிகளும்
கூனிக்குறுகி தோற்றுப்போகும்,
அவள்  மீட்டும் இசையின் அழகைபார்த்து ,

என்னவள் இசைமீட்டும் தருணம்
அவளருகில் நான் இல்லாத நேரம்
அவளின் மனதில்  ஒரு சோகம் என்னவன்
 அருகில் இல்லையே !

இசைக்கருவியுடன்  தனிமையாய்
சூரியன் மறைந்து நிலவு வரும் நேரம்
அழகான மாலைபொழுது
கடற்கரை  ஓரம் அமர்ந்து
 இசை ஸ்வரங்களை மீட்ட ,

அவளின் அழகு கண்டு மயங்கிய நான்
என்னவளின் இசையை கேட்டதும்
அவளின் பாதங்களை தொட்ட கடல்நீரை போல
மாறி அவளின் பொன் பாதத்திற்கு

முத்தத்தால்  நன்றி சொன்னேன் ,
நிலா போல அழகுகொண்ட
என்காதலியை பார்த்ததும்
வான் நிலாவும் விழித்துக்  கொண்டது ,

நான் மட்டும் இன்னும் விழிக்கவில்லை
கண்ணே காத்திரு  காலம் கனியட்டும்
உன்மனதளவில் வாழ்க்கை நடத்திய நான்
உன் இடது கைகொண்டு அழைத்து செல்வேன் !
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: gab on June 08, 2012, 11:20:49 PM
ஏகாந்தம் கூட
உன் இசைக்காய் காத்திருகிறது ..
இளவேனில் பறவைகள் கூட
இனிமயான குரல் கேட்க
அலைந்தாடி பறக்கிறது ....
அமைதியாய் கரை மோதும்
நுரை பொங்கும்  அலை கூட
தரை தேடி உன் இசைக்காக
வந்து போகிறது ....
சந்திரன் கூட தன் எந்திரதனம் களைந்து
உன் சுந்தரமான குரல் கேட்க காத்திருக்கின்றான் ...

இரவு கூட கலையாது போய்விடும் ..
இசைகின்ற குயில் கூட பாடாது போய்விடும்...
பாடு ... இசையோடு கலந்து
அந்த இமயமும் கிறங்க பெண்ணே ..
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Dharshini on June 09, 2012, 12:14:53 AM
என்னவனே....
என்
வழிப்பாதைகெல்லாம்
உன்
விழிப்பூக்களால்
விளக்கேற்றியவனே....

என் முகம்
பார்க்கும்
கண்ணாடிமுன்
முத்துப்பல் தெரிய
விரித்துச் சிரிப்பவனே...

உன் ஒரு
நொடிப்பார்வைக்கென
நெடுந்தூரம்
பிரயாணிக்கிறேன்
என்
இதய வானில்...

உன் அன்பில்
சிறுகுறை
கண்டு
கோபிக்கிறேன்
ஆனாலும்
உனக்காகவே
சுவாசிக்கிறேன்...

வழியெல்லாம்
விளக்கேற்றி
வெளிச்சம் தந்தவனே ..
என் விழியோடு
விலகாத
நேசம் தருவாயா?

நிலவு காதலியும் மேக காதலனும்
தன்னை  மறந்து உரசி ஆனந்தமாக
உலாவர...

பறவைகளும் தன் ஜோடியோடு
பாடி வட்டம் இட....

நானோ ஏக்கத்தில
என் விழி நீரை

இசையாக்கி உனக்காக
புது ராகம் இசைக்கிறேன்
 
எனது கண்ணீர் கானம்
உன் இதய செவியில்
எட்டும்  என்ற
ஆவலில் ....
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: vimal on June 09, 2012, 12:46:54 AM
என்னவனுக்காக!
இரவை இல்லமாக கொண்டு
கரு மேகங்கள் சூழ
தனிமையில் தவழ்ந்து
கணக்கில்லா  கவலையுடன்
காற்றுடன் கலந்த இவளின் இசை
எங்கும் எதிரொலிக்கிறது
இன்பத்தின் எதிரியாய்

இவ்விசை மீட்டல்தான்
அந்நிலாவையும் அழைத்து வந்து
நின்றபடி நீங்காப்பார்வயுடன்
நின் தூறல் தூவும் வானுடன்
வட்டமிடச்செய்கிறது
இவளின் சோகம் தாளாமல்

உன் மௌன இசைகண்டு
மரம்கூட உயிரிருந்தும்
மரக்கட்டையாய் மலைத்துநிற்கிறது,
பறவைகள் கூட சத்தமில்லாமல்
பரிதவிக்கிறது,
கடற்கரை பாறை கூட கரைந்து
நீராய் கடலை நிரப்புகிறது,

என்னவனின் வருகைக்காக
ஏக்கத்துடன் ஏங்கி,
எங்கெங்கும் எல்லையில்லா
எல்லையை கடந்து,
காற்றலையில் கண்சிமிட்டுகிறது
இவளின் இசை, அது
சோகத்தின் இன்னிசை,

என்னவனே!
எப்பொழுது என்னில் கலந்து
சோகத்தை விரட்டி
கரு உடையை வண்ணமயமாக்கி
கருமேகத்தை கலைத்து
வானில் வானவில் வட்டமிட
மனதின் காயங்களை  மகிழ்ச்சியாக்கி
விடியலை தொலைத்த இசை
பயணத்தில் என்னை விடுதலை
செய்யப்போகிறாய்! :'( :'( :'(