FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on July 14, 2012, 11:28:07 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 032
Post by: Global Angel on July 14, 2012, 11:28:07 PM
நிழல் படம் எண் : 032



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் kungfumaster அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F032.jpg&hash=a75c6463355217e9a557366a6bf8c2879a80ea2c)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: vimal on July 15, 2012, 11:44:52 PM
காதல் என்ற மூன்றெழுத்தில்
இம்மூவுலகமும் அடங்கும்
இதற்கு நான் மட்டும் விதி
விலக்கல்ல,இதோ என் காதல்.... :) :) :)

காதல் கண்களில் தொடங்கி
இதயத்தில் முடிவது என்றார்கள்
நம் காதலுக்கு கண் இணையதளமே,
அது நம்மை இணைத்த தளமே... :D :D :D

இணையதளம் மூலம் இணைந்தாலும்
இணையில்லா இன்பத்துடன், நட்பு
எனும் மூன்று எழுத்திலே தொடங்கியது,
பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள்
பெண்ணே! உன்னுடன் நான் பழக
பழகதான் இனிமையை கண்டேன்,  :) :) :)

நட்பு என்ற மூன்றெழுத்து
இணையதள கண் மூலம்
என் இதயத்தை வந்தடைந்தது
நாளடைவில் நட்பு புளித்து,
நான் நட்பல்ல காதல் என்று
உணர்த்தியது , உனக்கும்தான்... :P :P :P 

காதலில் கலந்த நாம்
முகப்புத்தகத்திலும் முகம் புதைத்தோம்
குறுந்தகடுகளை குறுக்கும் நெடுக்குமாக
குவியலிட்டு,மகிழ்ச்சியை மண்டியிட வைத்து
அன்பை அலைகடலாய் பகிர்ந்தோம்,..
முகப்புத்தகத்திற்கே மூச்சு திணறிவிட்டது
குறுந்தகடுகளின் எண்ணிக்கை தாளாமல்,.. :) :) :)

முகப்புத்தகத்திற்கு மூர்ச்சை அளித்துவிட்டு
பின் புகுந்தோம்,skype எனும் வாய் வழி பேச்சில்
அலைபேசியில் பறந்தது நம் காதல், அலையாய்,
உன்னுடன் பேசிய நாட்களும்,வார்த்தைகளும்
என்றும் என் நினைவலைகளில்
நீங்காமல்!நின்துயிலில், :) :) :)
 
நீ என் அருகில் இல்லாவிட்டாலும்
உன் கரம் பிடித்து,
அந்த செவ்வானையும் ரசித்து,
கடற்கரையில் பாத சுவடுகளை பதித்து,
கடலையும் நம் பாதத்தால் நனைத்து,
காதலில் மூழ்கி திளைப்பது போல
பல நினைவுகள்,.. :P :P :P

என் நினைவுகளை கனவுபோல்
நீ கலைத்தாயடி,
காதல் கண்களில் தொடங்கி இதயத்தில்
முடியும் என்ற எனக்கு , நீ உணர்த்திவிட்டாய்
முடிவது இதயமல்ல கல்லறைதான் என்று! :( :( :(

இப்பொழுது நினைத்து பார்த்தாலும்
இரத்தம் வருகிறது என் கண்ணில்
கல்லாக மாறிய உன் இதயத்தோடு
நீ என்னோடு பேசிய, அந்த கடைசி
இரண்டு நிமிடங்கள்,
எனக்கும் கற்றுக்கொடுத்துவிட்டு
சென்றிருக்கலாம் , எப்படி இதயத்தை
கல்லாக மாற்றுவது என்று ,
நானும் உன் போல் வலியை
உணராமல் இருந்திருப்பேன்!!! :'( :'( :'(

i have no tears, there is only pain :'( :'( :'(
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on July 16, 2012, 01:43:45 AM
என்னவளின் கரம் பிடித்து
ஊரை சுற்றிபார்க்க ஆசை
ஆனால் திருமணம் ஒன்று
நடந்தால் தானே ...உரிமையோடு
வளம் வரம் முடியும் ,

காதல் மயக்கத்தின் காரணம்
தினமும் நித்திரையில்
கனவுகள் நிறைந்தன,
சூரியன் ஓய்வு கொள்ளும் நேரம்
மெதுவாக இருள் சூழ்ந்தது ,

அவள் கரம் பிடித்து கடலோர
உல்லாசம், இது இன்றைய கனவு,..
கோடை காற்று இதமாக வீசியது
என்னவளின் நினைவுகளாய்,.
என் நெஞ்சம் நிறைந்த உருவமாய்,..

நினைவில் நீங்கா சீண்டல்களாய்,..
சிரித்து சிரித்து சிவந்து போன இதழ்கள்,
ஒற்றைகால் நடனமாடும் நாக்கு,
வாடை காற்றால் தாளம் போடும்
அவளது  பற்கள்,

காதல் ராகம் பாடும் உதடு,
தேவதை போல திருமுகம்,
அபிநயம் நிறைந்த அழகுமுகம்,
காதல் சொல்லிடும் கன்னங்கள்,
ஜாடை பேசிடும் இமைகள்,

ஆண்களை கவர்ந்து இழுக்கும்,அவள் முகத்தின் அழகு
சிறப்பதால் செதுக்க படாத அவளின் இடைஅழகு,
 அடர்த்தி நிறைந்த ஆறடி கரும் கூந்தலில்
ஒற்றை பின்னல் ஜடையில்,
சிரித்திடும் செவ்விதழ் ரோஜா,

பிறைநிலவுகள் ஜொலித்திடும் காதணியில்,
வட்டமிட்டு வளைக்கும் பொட்டு,
கோவை பழஇதழ்களின் கொந்தளிப்பு,
என்னிடம் வம்புவழக்கும்வைர விழிகள்,

அவளின் உயிரில் என் உயிரையும்
என் உயிரில் அவள் உயிரையும்
கலந்துவிட உல்லாசமாக வளம் வருகிறது
நினைவு என்னும் பதையில் ..

உள்ளத்தால் ஒன்று சேர்ந்த உயிர் ,
என்றுதான் உடலிலும் கலக்குமோ,....
என் பெரும் மூச்சுகளுடன் ,
ஏதேதோ எண்ணங்கள் என்னுள்ளே,
தொடரும் நினைவுகளாய்...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: EpicFail on July 16, 2012, 02:21:13 AM
கடற்கரையில் உன் பெயர் எழுதவில்லை,
அலை வந்து அழிப்பதை பார்க்க எனக்கு மனமில்லை

சூரியன் பார்க்கிறான் என வெட்க படதே,
சில நிமிடத்தில் மறைவான், தள்ளி நிற்காதே

நம் வீட்டார் மெதுவாக கை நனைக்கட்டும்,
அலைகளில் நாம் கால் நனைப்போம் வா

இலக்கியம் தெரியாத கவிதாயணி நீ,
கண்ணால் மட்டுமே கவி பாடுகிராயே

கடல் என்ன அவ்வளவு ஆழமா,
அது நம் காதலை விட ஆழமா?
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on July 19, 2012, 07:44:21 PM
அந்தி மாலை
அழகான வேளை
தன் தீராத காதலை
தினம் தோறும்
அலை அவள்
கரைகளில் எழுதியவண்ணம்
காலம் காலமாய்
மாலை பொழுதுக்காய்
பகலெல்லாம் சுட்டெரித்து
தன் கோபத்தை ..
தன் கடல் எனும் காதலனை
சேரமுடியாது தவித்த சோகத்தை
அவனுள்ளே முக்குளித்து
முழுவதும் குளிர
எத்தனிக்கும் கதிரவன்
இவற்றை எல்லாம் பார்த்து
வெக்கி சிவந்த பொன்வானம்
சிவந்த செவ்வானம் ....


சிந்தை மயக்க
சிலிர்ப்பு ஊட்டும்
மயக்கும் மாலை பொழுது
எனவனும் நானும்
எழுதபடாத ஓவியங்களாய்
செதுக்கப்பட்டத சித்திரங்களாய்
படிக்கப்படாத காவியங்களாய்
பாரில் தோன்றும்
பலவித இயற்க்கை அழகினை
ரசித்த வண்ணம் ...
கையேடு கை கோர்த்து
கண்ணோடு கண் நோக்கி
கருத்தோடு கலந்து
இயற்க்கை காதலுக்கு
நம் காதல் சளைத்ததல்ல
சவால் விட்ட வண்ணம்
சரசமாடிய தருணங்கள்
அவை அனைத்தும்
கலைந்து போகும் கோலங்கள்...


அலை கரையை காலம் காலமாய்
காதலித்தே சென்றாலும் ..
கதிரவன் ஆழ கடலில்
முக்குளித்து காதல் கொண்டாலும்...
அனைத்தும் சேராத காதல்தான்
கற்பனைக்கு மட்டும்
கவி தந்த காதல் சங்கமங்கள் ..
அது போல் கற்பனைக்கு
கவி தரும் என் காதல்
நினைவலைகள்
உன்னுள் மூழ்கி
உரு தெரியாமல் போன என் நினைவுகள்
ஆழ்ந்து போன அந்த டைடானிக் கப்பல்தான் ...



அழகான காதல் நினைவுகள்
அலங்கார ஆசை நிகழ்வுகள்
அத்தனையும் அமிழ்ந்துபோனாலும்
அனைத்தும் என் நினைவு எனும்
நங்கூரம் போட்டு 
மனம் எனும் ஆழ்கடலில்
நிறுத்தி வைத்திருகின்றேன்
என் நினைவு பொக்கிசங்கள்
திருடபடக்கூடாது என்பதற்காய் ...
நீள வானும் .... நீந்தும் கடலும்
கரை மோதும் அலையும்
இருக்கும் வரை
என் காதலும் வாழும் நினைவுகளாய் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: KungfuMaster on July 19, 2012, 11:28:23 PM
காற்றோடு  கலந்து  வரும்
ஊசித் தூறல்கள் போல
என்  மனதோடு  வந்து செல்கிறது
அவளின்  நினைவுகள் ...

மழை சாரலில்  வந்து போகும்
வானவில்லின்  ஓவியம்  போல
என்  கண்களோடு  பதிந்து போனது
அவளின்  முதல்  சந்திப்பு ...

விரல்கள்  பட்டால்  வெக்கிகொள்ளும்
தொட்டாசிணுங்கி  போல
அவளின்  முதல்  பார்வையில்
சொக்கி  போனது  என்  மனது ...

இயற்கையின்  அழகிற்கு    எத்தனை
கவிதைகள்  போட்டென்ன பயன்
அத்தனை  கவிதைகளும்  தோற்றது
அவளின்  அழகிருக்கு  முன்னால் ...

என்  மனம்  முதன்  முதலாய்
ரசிக்கத் தொடங்கியது
எழுதப்படாதக்  கவிதைகளை
அவளின்  வார்த்தைகள்  மூலமாக ...

வார்த்தைகள்  எல்லாம்  இசையாய்
ஒலிக்கும்  அவள்  உதடுகளில்
என்  பெயரும்  ஒலிக்குமென்று
காத்திருந்த  காலங்கள்  ஏராளம் ....

தன்  கால்களில்  வேகம்கூட்டி
நில்லாமல்  சென்றது
அவளோடு  நான்  உரையாடிய
அழகான  நேரப்போழுதுகள்...

என்  நித்திரைகள்  எல்லாம்
என்னோடு  துணை  வந்தன
அவளோடு  பயமின்றி  பேச
கனவுகளில்  மட்டும் ...

முகம்  பார்க்கும்போதெல்லாம்
என்  விழிகளின்  உள்ளே
தோன்றி  மறைகிறது
அவளின்  முகபாவம் ...

எழுத  எழுத  நீளும்
இந்தக்  கவிதை  போல
அவளின்  நினைவுகளோடு
செல்கிறது  நீண்ட  பயணம் ...

ஆசைகள்  கரைபுரளும்
புதுக்  காதலர்களாய்
அவளோடு  கைகோர்த்து 
நடக்கிறேன் கற்பனையில்...

அவளுடன்  செல்லவேண்டிய
அழகான  காலங்களெல்லாம்
கற்பனையில்   போய்விடுமோ
என்ற  தயக்கம்  என்னுள் ...

ஆம்  இடைவெளி  இல்லாத
அவளுடைய  நினைவுகளால்
என்னுள்  வளர்ந்து   நிற்கிறது
அவளிடம்  சொல்லபடாத  காதல் ...

காலம்  என்  காதலை
அவளிடம்  கொண்டுசெல்லுமென
தினமும்  காத்திருக்கிறேன்
என்  கற்பனைக்  காதலுடன் ...