நிழல் படம் எண் : 033
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Global Angel அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F033.jpg&hash=20eb4a5be9579f94edf08ad4a84c1199a6443316)
என்னவள் !
பட்டுபோல பளபளக்கும் மேனிக்கு
பட்டு பாவாடை உடுத்தி
என்னை காண வரும் என்னவள்
கலப்படமில்ல தங்கத்தேர் !
என் தேவதைக்கு கால்கள் உண்டு!
பூக்கள் போல பாதம் உண்டு!
காற்றை போல மேன்மை உண்டு!
பறந்து விரிந்த வானம் போல நல்ல மனம் உண்டு !
உன் பாதம் தொட்டு பார்க்க ஆசைப்பட்டு
உதிர்ந்த பூக்கள் உன் பாதம் தொட்டுச்
சொல்லட்டுமே அடுத்த தலை முறையாவது
உன் பாதம் போல நான் பிறக்க வேண்டும் என்று
விழுந்த பூக்களின் மீது பாத்து நட பூவரசி
பாவம் அந்த பாதம் கசங்கி விடும் பூவுரசி
உன்பாதம் படாத உன் பாதின் மென்மை
தொட்டு உயிர் பெற மாட்டேனா எங்கும் பூக்கள் !
பல பழக்கும் மேனியை தொட்ட
தண்ணீர் கூட சிலி சிலிர்த்தது
என்னவளின் பாத அர்ச்சனைக்காக
மலர்கள் கூட மண்டியிடும்!
உன் பாதத்தில் அணிந்த கொலுசு
என் இதயத்தை சுற்றி வளைத்த பிடிப்பு
கொலுசின் சின்னஞ்சிறு சிதறல் ஓலி
என் இதயத்தின் நீங்கா துடிப்பு!
என்னவளின் பாதம் பட்ட இடமெல்லாம்
பால் வார்க்கும், கடல் நீர் கூட
கன்னுன்றன்காமல் காத்துகிடக்கும்
என்னவளின் பாத தரிசனைக்கு அமிர்தமாய் மாற
அவள் வைக்கும் ஒவ்வொரு அடிகளும்
என் இதய கூட்டில் ஒலிக்கும் இதய துடிப்பு
நீ எப்போது என்னிடம் வந்து சேருவாய்
நீ இலையேல் நின்றுவிடும் என் இதய துடிப்பு !
[/b]