நிழல் படம் எண் : 036
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Thavi (thana) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F036.jpg&hash=e5e37095b217ea2fe1e96b34d5915949c2d34d06)
காதல் பருவம் என்பது மலர் மொட்டு போல,
வாசம் வீசியது நம் இருவருக்கு மட்டும்;
நம் திருமணம் பருவம் என்பது
மொட்டு வெடித்த மலர் போல வாசம் (அன்பு )
வீசியது இந்த உலகத்துக்கு. சுதந்திரக்கிளியை
கூண்டுகிளியாய் மாற்றுவது திருமணம்.
திருமணம் எனது இரு இதயம் (மனம் ) இணைந்து
ஒரு புது இதயத்தை உருவாகுவது
பூக்கள் ஒன்று சேர்ந்து வாசம்
அதிகம் தருவது போல
இரு மனங்கள் இணைந்து
இல்லறம் வாசனை தரவேண்டும் !
ஆகையால் பட படத்து பெய்யும் பெருமழையில்
நனைவதை விட (நிச்சய திருமணம் )
சிறு தூரலில் நனைவதையே
நான் விரும்பினேன் (காதல் திருமணம் )
அதனால்தான் அன்பான அமைதியான
உன்னை தேர்ந்தெடுத்தேன் -அன்பே !
விழிகள் என்னும் வாசல் வழியாய் வந்து
இதயத்தில் நுழைந்து இன்ப சுகம் தந்து
மனதோடு மகிழ்ச்சி கலவரம் செய்து
நீயன்றி நானும் இல்லை, உன் நினைவின்றி
உள்ளத்தில் உயிர் இல்லை என - குரல்
கொடுத்தாய் !
இத்தனை வருடங்களை
பூகளின் மொட்டாய் இருந்த
நம் காதல் வாசத்தை மலர
அகிலத்திற்கும் நர்மனம்
வீசும் நாள் இன்று பெரியவர்கள்
முன்னிலையில் ....
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
ஓர் இனிய நன்னாளில்
சொந்த பந்தங்கள் ஒன்று கூடி
நாதஸ்வரங்கள் முழங்க
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
உன் கரம் பிடித்தேன்.
அந்நாள் முதல் இந்நாள் வரை
என் கரம் பற்றியே நீ வலம் வருகிறாய்
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்
நான் தவம் ஏதும் செய்யாமல் கிடைத்த வரம் நீ
ஒரு முழ மல்லிகை பூ
அதை என் கையால் உன் தலையில்
சூடச்சொல்லி நீ ரசிக்கும் அழகே தனி
வேலை முடிந்து இரவில்
எவ்வளவு தாமதமாக வந்தாலும்
உண்ணாமலும் உறங்காமலும்
எனக்காக காத்திருக்கும்
உன் அன்புக்கு ஈடு இணை ஏது
வேலையின் காரணமாக
வெளியில் சென்றால் கூட
ஓயாத உன் அழைப்புகளும்
தீராத உன் ஏக்கங்களும் விரைவில்
என்னை வீட்டில் கொண்டு வந்து சேர்கின்றன
இல்லறத்தை நல்லறமாய் நடத்தும் நீ
என் தாய் தந்தை மீது காட்டும்
அன்பும் அரவணைப்பும்
மேலும் எனை இன்புற செய்கின்றன
எத்தனையோ தருணங்களில்
நம் வாழ்கையில் இடர்பாடுகளை சந்திக்கும்போது
என் தலை கோதி தட்டிக்கொடுக்கும்
உந்தன் அரவணைப்பு தான்
என்னை வழி நடத்தி செல்கிறது
இன்ப துன்பங்களில் இசைந்து கொடுக்கும்
உன்னால் தான் என் வாழ்க்கை
மேலும் வலம் பெற்று கொண்டிருக்கிறது
உறவுகள் பல கடந்து வந்தாலும்
மனைவி எனும்
என் உயிரினும் மேலான
உன் உன்னத உறவை அளித்த
உன்னக்கு என் நன்றி!