நிழல் படம் எண் : 038
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Global Angel அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F038.jpg&hash=26ed7ee0e616d24636b4243d170a9a47128d3529)
என் பாட்டி மனதளவில்
பார்ப்பதற்கு ஒரு குழந்தை
போலவே இருப்பாள்
என் தாத்தா மனம்
அவரின் தலை முடி போல
வெள்ளை நிறமாய் ....
நாங்கள் பேசும்போதும் எங்களை
விட்டுக் கொடுக்க மாற்றார்கள்
பள்ளிக்கு செல்லும் முன்
அவர்களிடம் இருந்து விடை பெரும்
நேரத்தில் ஏதாவது கெடைக்குமா
என்று கேட்டால் போதும்
இந்தாடா என்று ஐந்தோ பத்தோ
எங்கள் கையில் திணிப்பார்கள் ....
மாலை வீடு திரும்பியதும்
எங்களை அருகில் அமர வைத்து
பல கதைகளை சொல்லி
சோறு ஊட்டி சற்று
ஓய்வு பெற சொல்லி
தாளடு பாட்டு பாடி
துங்க வைப்பார்கள் ....
எங்கள் பள்ளிகாலங்களில்
அவர்கள் தீட்டிய ஓவியங்கள்
எங்களின் பவுடர்
தீட்டப்பட்ட முகங்கள்
பள்ளியில்ஒரு நாள்
வாத்தியார் அடித்ததற்கு
அவரின் வீட்டு வாசலுக்கு
என்னை இழுத்துச் சென்று
வீதியே பார்க்கும்வண்ணம்
கத்தினார் என் தாத்தா ....
அம்மா அடித்தாலும்
அப்பா அடித்தாலும்
எங்கள் பாட்டிதான் இருக்கிறாள்
என்ற எண்ணம் தோன்றும்
எப்போதும் என் பாட்டி முகம்
இன்றும் என்னுடன் வரும்
எனது பள்ளியை கடக்கும் போது ....
நாட்கள் நீண்டது வெளியூர்
சென்று படித்தேன்
கோடை விடுமுறைக்கு
இல்லம் திரும்பினேன்
அப்போது என் தாத்தா பாட்டி
தோல் போர்த்திய எலும்பாகத் தெரிந்தார்கள்
அருகில் சென்று தாத்தா பாட்டி
என்றதும் அவர்களின் முகத்தில்
ஆனந்தம் பொங்கி என் கன்னத்தில்
மாறி மாறி முத்தம் தந்தார்கள் .....
மறுநாள் என் பாட்டிக்கு
ரெம்ப உடல்நிலை
மருத்தவமனைக்கு
செல்லும் போது-என்னை
அழைத்து நான் வந்தாலும்
தான் வருவேன் நீ எப்போதும்
சந்தோசமா இரு தாத்தாவை
பார்த்துகொள் என்று கண்நீர்யுடன்
மருவமனைக்கு சென்றும்
பயன் இல்லை இல்லத்தில்
அழுகுரலுடன் என் தாத்தா
என் உறவினர்கள் யாவரும்
என் பாட்டி இறந்து இன்றும்
நீங்காத நினைவுகள் என்னுள் ...
என் அப்பா ராணுவத்தில் இருந்து
வந்து புதிய இல்லம் குடிபோன்ன
பிறகு என்னுடன் வா என்றதற்கும்,
பாட்டி இருந்த வீடு என்றார் ....
அதன் பிறகு இரண்டாண்டுகள்,
இன்று தான் செல்கின்றேன்
நேற்றிரவு அவரும் போய் விட்டதாக
சேதி வந்திருந்தது
வயதான உடம்பு,
நெடுநேரம் இருக்கக் கூடாதுதென்று
நேற்றிரவே எடுத்து
விட்டதாகச் சொன்னார்கள்
மாலை ஒன்றை சாத்திவிட்டு
கண்கள் துடைக்கும் போது
படத்தில் அவரை மறுபடி பார்த்தேன்
அதிலிருந்துகொண்டும் என்னை
வாஞ்சையாகவே பார்த்தார்
மறைந்தாலும் என் மனதில்
இன்றும் அவர்களின் நினைவு
என்னை பின் தொடர்கிறது .......