நிழல் படம் எண் : 045
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Stars அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F045.jpg&hash=2775364a4e7e462af3234e5a270538e9246a76a4)
காதல் என்றதும் , அக்தென்னவோ
இளமைக்கு மட்டும் எழுதிவைக்கப்பட்ட
பெரும் சொத்தாய், கருதிடும் சொத்தை சமூகமே !
எங்கள் முதுமைக்காதலின் மகத்துவம் அறிவாயா ?
புதுமைபுதுமையாய் பற்பல புதுமைகளை
புகுத்திடுவதாய் எக்காளமிடும் இக்காலக்காதலர்களே !
இக்காலம் என்றில்லை , இனி எக்க்கலாமானாலும் சரி
முக்காலமும் முயன்றாலும் ,எங்கள் முதுமைக்காதலின்
100 % முதன்மைக்காதலின் மனமகிழ்மகிழ்சியை
முழுதாய் அனுபவித்திடும் ,அனுபவம் அதை
வெறும் 50 % ஆவது அனுபவித்ததாய்,அனுபவிப்பதாய்
அறுதியிட்டு , உறுதியாக அறிவிக்கத்தயாரா ??
மற்றதையெல்லாம் இப்போதைக்கு விட்டுவிட்டு
இதோ, சத்தமில்லாமல் நான் கொடுத்திடும்
இந்த முத்தத்தின் பகிர்வின் பொழுது
அரவம் தீண்டியதும் பரவும் விடமாய்
இரு சித்தம் முழுதும் நித்தமித்தம் மேனிமுழுதும்
படர்ந்திடும், காதல் சூடுகுறையா ரத்தத்தின் சுத்தத்தினை
உங்களின் ஒத்தை (ஒற்றை ) முத்ததிலாவது
உங்களால் பகிர்ந்திட முடியுமா? ?
பார்போற்றிகளாய் தங்களை தானே போற்றிக்கொள்ளும்
இளமைக்காதலர்களே !
இந்த ஒவ்வியத்தை பார்த்தும்
எனக்கு தோன்றுவது
இருவதில் தொடர்ந்த காதல்
அறுபதில் தொடர்கிறது
கஷ்டத்தை மட்டும் வாழ்க்கையை
கொண்டு வாழ்ந்த அவனிடம்
அன்பு செலுத்த அரவணைக்க
கடவுளால் அனுப்பட்ட பெண்
அனைத்தையும் இழந்தவன்
அவளின் அன்பால் மட்டும்
இந்த உலகமே அவன் கையில்
உள்ளது போல வாழ்க்கை பதையில்
நடந்து செல்ல
அவன் செல்லும் பாதையில் உள்ள
முற்களை நீக்கி சுகமான
பயணம் அமைத்து கொடுப்பது அவள்
காட்டில் பூக்கள் கடவுளை
வந்து அடைவது போல
காதலியாய் வந்தவள்
காதலியாய் மாறினால்
அவள்க கவிதை எழுத
கவிதை புத்தகம் அவளாக
வாழ்க்கை என்னும்
கவிதை புத்தகத்தை படித்து
வாழ்வில் நீங்க அன்பை தொராடும்
காதல் ஜோடிகள்கு இதுவே
எடுத்துகட்டு ....