FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on October 29, 2012, 01:40:08 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 046
Post by: Global Angel on October 29, 2012, 01:40:08 AM
நிழல் படம் எண் : 046

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Gotham அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.wecreatenyc.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F10%2Fcosmic-dream.jpg&hash=d1dbed474f88bfae611524c8bb9e5a24227dd72d)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on November 01, 2012, 09:00:54 PM
வண்ண வண்ண ஆடை அணிய விலை  இல்லையோ,
வானவில்லை மட்டும் தீட்டிக் கொண்டு
எண்ண முடியா நச்சதிரங்களை  உன் வைற்றில் சுமந்து
மனிதன்  கனவுகள் காணும்  நேரத்தில் ஒளிர செய்கிறாய் ...

வான் மதியின் தளம் நீதானோ
மேக நிறம் கருத்து நிலவை ஒளிர  செய்கிறாய்
சிவப்பு  நிற ஆதவன் மனை நீதானோ
தேக வண்ணம் தேய்ந்து கதிரொளிரச் செய்கிறாய் ...

சூரியன் உன்னை சுற்றி எரிக்கவும்
அதை நெருங்கமுடியாமல்
நிலவை விழுங்கி விட்டாய்
தேயும் நாட்களில் அன்று
அந்நிலைமை மாறச் செய்தாய்.....

வளரும் நாட்களில் இன்று
உன் தேகம் போர்த்திக் கொள்ளவே,
வான் மேகம் வேண்டிப் பெற்றாய்
மாலை, மேகம் விலகும் வேளையிலே
பெண்மை நாணம் கொண்டு சிவந்தாய் ......

என்ன சோகம் கண்டாயோ தெரியவில்லை
கண்கள் ஏதும் இல்லாமல்
பெண்ணைக் காதல் செய்யாமல்
கண்ணீர் என்னும் மழையை  மட்டும் பொழிகிறாய்
இடி இடித்தாலும் கண்ணீர் விடுகிறாய் ....

மின்னல் அடித்ததாலும் கண்ணீர் விடுகிறாய் 
மின்னலும் இடியும் கோவம் தனிந்த பின்பு
 தேம்பியும் கண்ணீர் விடுகிறாய்
பெண் குணம் கொண்டவள் நீ
உன் அழகில் ஆணவம் கொண்டு
வானம் பார்க்கும் பூமி ஆகியும்
கண்டும் காணாதது போல் நடித்துச் சென்றாய்....

கண்ணீராய் விட்டு மனிதனை கெடுக்கிறாய்
கண்ணீர் விடாமால் காய்ந்தும் கெடுக்கிறாய்
வானமே உனக்கு இறக்கம் என்பது இலையா
மனிதனை வதைக்காமல் வாழ்க்கை கொடு  :'(  :'( !!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Dong லீ on November 02, 2012, 11:31:30 AM
மேகமே
வானுக்கும் பூமிக்கும் இடையில்
நீந்துவதும்ஏனோ 
உன் இடையில் சூரியனை
ஏந்தத்தானோ

கைகளுக்கு இடையில் சூரியனை
பொத்தி  வைப்பதும்ஏனோ  

விரல்கள் இடையில்
ஒளியை சிதற விட்டு
வானில் ஒளி ஓவியம்
வரையத்தானோ

நீல வானில் எங்கும் நிறைந்து
வெள்ளை அடிப்பதும் ஏனோ
மனதை கொள்ளை
அடிக்கத்தானோ

குளிர்ந்த தென்றலின்
 தீண்டலில் உனக்கு
வியர்ப்பதும் ஏனோ
மழை நீராய் மாறி
மண்ணில் உறங்க தானோ

தென்றல் சுடுவதும்
சூரியன் குளிர்வதும் ஏனோ
உன் மனதில் காதல்
செய்த மாயம் தானோ 

இடை இடையில்
மறைந்து விடுவதும் ஏனோ
இடைவேளை இல்லாமல்
வெயிலில் நானும்
வேகத்தானோ   


உன்னை பற்றி நான்
 ஏனோ  தானோ
என்று எழுதுவதும்  ஏனோ
நீ இல்லாத தருணங்களில்
 வெயிலில் மண்டை  காய்வதால் தானோ 
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: தமிழன் on November 02, 2012, 01:49:01 PM
மேகமே
உன்னைப்போல் எனக்கு
வானவாசம் வேண்டும்
சிகர சிம்மாசனம் வேண்டும்'

'கீழே இறங்க ஆசைப்படு
தானாக மேலுயர்வாய்'


'மேகமே
உன்னைப் போல
கவலையற்ற சஞ்சாரம் வேண்டும்
எனக்கும் வேண்டும்'

'கடிவாளங்களை தூக்கி எறி
ஒரு திசை இலட்ட்சியத்தை மற
எல்லா திசைகளிலும் நீ
சஞ்சாரம் செய்வாய்'


'மேகமே
உன்னைப் போல
எல்லா இடங்களிலும் நான் இருக்க வேண்டும்

'ஒரு இடத்தில் தங்காதே
எல்ல இடமும் உனதாகும்'


'மேகமே
உன்னைப் போல
ஏழு வர்ண வானவில்
எனக்கும் வேண்டும்'

'கண்ணீர்துளிகளால் நிரம்பி இரு
வான ஒளியின் ஸ்பரிசத்துக்கு
இடம் கொடு
உனக்கும் வானவில் கிடைக்கும்'


'மேகமே
உன்னைப் போல
நானும் மழையாக வேண்டும்'

'உன்னை கேட்பவர்களுக்கு
உன்னை முழுமையாகத் தா
நீயும் மழையாவாய்'

'மேகமே
உன்னைப் போல
உன்னிலிருந்து வெளிவரும் ஒளியாக
நானும் மாற வேண்டும்'

'நீ மகானாக வேண்டுமென்பதல்ல
நல்ல மனிதனாக இரு
நீயும் ஒளியாக மாறுவாய்'
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on November 03, 2012, 12:47:26 AM
உறவுகளின் உரசல்களில்
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களை பற்றவைத்துக்கொண்டது
ஏக்கங்கள் எட்டி நின்று வதைத்தது போய்
கிட்ட வந்து ஆடை தொட்டு இழுத்தது
இடறி விழுந்து எந்திரித்த பொழுதுகளில்
எக்காளமிட்டு சிரித்து மகிழ்ந்தது
பிறள் மனது ...

மனமெங்கும் இருள் சூழ
தனமிங்கு பகையாக
கனமென்று இதயம் துடிக்க
பிணமன்று சொல்ல
பகைமார்பும் எம்பி தணிய
பிடுங்கி எறிந்த கொடியாய்
பேதை உயிருடல் சோர
ஏக்கம் கலந்த பார்வையில்
பல தேக்கம் கலந்து காத்திருந்தபோது

இருள்வானும் எழில்கொள்ள
மருள் கதிரும் உருக்கொள்ள
கருக்கொண்ட மேகம் தனை
கதிர் கொண்டு அணைததுவோ...
நீல வானும் எழில்கோலம் கொள்ள
கதிரவன் கதிர்கரம் கொண்டு
முகில் தனை புறம்தள்ள
ஒளிக்கரம் வானை தழுவுவது போல்
உள்ள இருளும் ஓடி ஒளிவதுபோல்
எங்கோ ஒரு குரல்
எட்டி தழுவியது செவிகளை
விட்டு விலகியது இருள் மட்டுமல்ல
இதயத்தின் இருப்பின்மையின்
உறுதியற்ற நிலைபாடுக்களும்தான்