நிழல் படம் எண் : 050
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Shruthi அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F050.jpg&hash=f294469a465bbdb5fefe72f56831405e4e75691f)
பருவத்தின் இமயமாம் இளமை
இளமையின் இமயமாம் காதல்
காதலின் இமயமாம் இதயம்
இதயத்தின் இமயமாய் என்னவள்
அழகின் ஆதிமூலமே அயர்ந்து போகும்படி
அழகான அனைத்திற்கும்,
சவாலான அன்னமவளை,
அணுஅணுவாய்
அனுபவித்தே காதலித்தேன்.
காதலின் வரையறைகளை மட்டுமின்றி
காதலுக்கான வரையறையையும் தகர்த்தெறியும்படி
தடையின்றி பாய்ந்திடும் காட்டாற்றுவெள்ளமாய்
தளிர்நிறைந்த தாமரைக்கான தடாகமாய்
தடையேதும் துளியுமின்றி தன்னிறைவாய் ,
தெள்ளத்தெளிவாய்த்தான் காதலித்தேன்.
என் உடலுக்கு உறுதுணையான உயிரானவளே !
உன் உயிருக்குயிரான இரு சிறு உயிர்களின் பொருட்டு
உடலோடு ,உயிரையும் உனக்காய் அர்பணிக்க தயாராய் நான்.
தூரமான ஊர் ஒன்றே உனக்கும் எனக்கும் இடையூறு .
பூவிதழ்மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகள் விலகுதல்போல்
உன் மனசோகம் மொத்தம் தீர்க்கவருவேன் ஓர்நாள் .......