FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on December 16, 2012, 05:52:31 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 052
Post by: Global Angel on December 16, 2012, 05:52:31 AM
நிழல் படம் எண் : 052

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Global Angel அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/28769_202798756520999_1831870768_n.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Gotham on December 18, 2012, 11:22:30 AM

சிதைவுண்ட நொடிகளில்
துவண்டு போகும் மனது
பட்டாம்பூச்சியென
சிறகுவிரித்து பறந்த காலங்கள்
நினைவுகளில் ஆங்காங்கே
இன்னும் ஒட்டிக்கொண்டு
தானிருக்கின்றன


கூடப்பறந்த பட்டாம்பூச்சி
எல்லாம் தத்தம் மலர்கண்டு
மலர்ந்துவிட
எனக்கான பூதேடி
சிக்கித் தவிக்கின்றேன்
தனிமையில்
பூங்காவனத்தினில்


கண்டவர் கொண்டிட
கொண்டவர் கொண்டாடிட
முகத்தினிலும் மனத்திலும்
சந்தோஷம் பொங்கும்
தருணங்களிலும்
எங்கோ ஓர் ஓரமாய்
இன்னும் வலிக்கின்றது
ஏக்கத்தில்


தனிமையான பொழுதுகளில்
நடைபயிலும் நேரங்களில்
கண்ணில்பட்ட
ரயில்நிலைய நாற்காலியும்
நானும் ஒன்று தானோ


எத்தனைபேர் இளைப்பாறி
சென்றாலும்
ஒவ்வொருமுறை ரயில்கூவும்
நேரத்திலும் என்போலவே
பூரித்திடுமோ நாற்காலியும்


வந்த ரயிலிலெல்லாம்
தேடித் தொலைந்த கண்கள்
நீ இல்லாத ஏமாற்றத்தை
சிதறுண்ட இதயம்
தாங்கும் முன்
ஆறுதலாய் இதோ
அடுத்த ரயிலுக்கான அறிவிப்பு


காற்று இருக்கும்வரை
காத்திருப்பேன்
உன்வரவுக்காக
நாற்காலியோடு நானும்...!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: தமிழன் on December 18, 2012, 08:24:54 PM

பாறையாக இருந்த மனதை
உன் பார்வையால் வெடி வைத்து அதை
பயிர் நிலமாக பண்படுத்தி அதில்
காதலெனும் விதை விதைத்து
காணாமல் போனவளே
காத்திருக்கிறேன் உனக்காக‌

காதல் செடியாகி கொடியாகி
மொட்டு விட்டு பூவாய் மலர்ந்து
கனியாய் கனிந்து
காத்துக் கிடக்குதடி காதலியே
காத்திருக்கிறேன் காதலியே
கனி பறிக்க வருவாயா

கை நாட்டாய் இருந்த என்னை
காதலெனும் கையொப்பம் இட‌
பழகித் தந்தவளே இன்று
என் தலையெழுத்தே மாறிவிட்டதடி
தரையிலே மீனாக‌
தத்தளிக்குதடி நீ(ர்) இன்றி என் ம‌ன‌ம்

வீதி விள‌க்கு பாதியும்
வின் விள‌க்கு பாதியுமாய்
ஒளிம‌ங்கிய‌ இர‌வில்
பாதையோர‌ இருக்கையில்
ப‌வள‌க்கொடியாய் நீ ப‌ட‌ர‌
கொலுகொம்பாய் நான் அணைக்க‌
பாதையோர‌‌ம‌தை ம‌ற‌ந்து பிற‌ர்
பார்ப்ப‌தையும் ம‌ற‌ந்து
உல‌கை ம‌ற‌ந்து போன‌ அந்த‌ நாட்க‌ள்

அதே இர‌வு ம‌றுப‌டியும்
அதே இருக்கைக‌ள் அருக‌ருகே
நானும் இருக்கிறேன்
நீ ம‌ட்டும் இல்லைய‌டி
என் நினைவே என்னை கொல்லுத‌டி
காத்திருக்கிறேன் காத‌லியே
க‌ருணை கொண்டு வ‌ருவாயா

ஒரு க‌ண‌மேனும் உனை பிரியேன்
உன் காத‌லை க‌ன‌விலும் ம‌ற‌வேன்
உறுதிமொழி த‌ந்த‌வ‌ளே இன்று
பிரிய‌ முடியாம‌ல் ம‌ற‌க்க‌ முடியாம‌ல்
த‌விப்ப‌வ‌ன் நான‌டி

இத‌ய‌மிருந்தால் அதில்
க‌டுக‌ள‌வேனும் என் காத‌ல் இருந்தால்
காத்திருக்கிறேன் உன‌க்காக‌ என்
கால‌முடிவுக்குள் வ‌ந்து சேர‌டி
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on December 18, 2012, 11:45:55 PM
வெறுமை நிறைந்த
மனச்சுவர்களில் எல்லாம்
தன்  கொடிய நகங்களால்
கீறிச்செல்கிறது
உன் நினைவலைகள் ...
உதிரமாய் சிந்தும் -என்
உணர்வுச் சிதறல்களை
பொறுக்கி எடுத்து
புசித்து மகிழ்கிறது என் தனிமை ....

உன்னை ,உன் நினைவுகளை சுமந்தே
என் செறிவிழந்து சருகாய் உதிர்கிறேன் .
என்னை தாண்டி செல்லும்
எவரும் நீயாய் இருக்க மாட்டாயா ?
தேடலில் ஆலாய் பறக்றது
சருகாய் உதிர்ந்த மனம் ..

என்னை தீண்டும் தென்றலிலும்
உன்னை தழுவிய விரல்களை
தேடி அலைகிறது காதல் மனம் ...
நீ நடந்த பாதகைளில்
சருகாய் கடந்தேன்
வருவாய் என எண்ணி ..

என்னை கடந்து எவர் போகினும்
உன்னை கடக்க இயலா மனது
ஓர் சாலை ஓரத்தின்
இரட்டை நாற்காலியில்
ஒற்றையாய் காத்திருக்கிறது ...
ஒரு முறை
மழையாய் என்னை அணைத்துவிடு
என் சருகான வாழ்வும்
உனக்காய் முடியட்டும் .

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஆதி on December 21, 2012, 04:48:14 PM
வாகனத் திரள் மிகுந்த‌
இந்த சாலையின் மனிதர்கள் யாரும்
தம் விழிமணிகளை
என் மேல் குவிப்பதே இல்லை
 
மிகை போதையில்
தன்னிலை மறந்து விழுந்து கிடக்கிற‌
ஒரு குடிகாரனை
நெஞ்செழும்புகள் வெளியே தெரிய‌
ஒட்டிய வயிறுடன்
தாங்கவியழா பசியில்
மயங்கிகிடக்கிற பாதைசாரியை
உதாசீன‌ செய்வ‌தை போல‌வே
என்னையும் க‌ட‌க்கிறார்க‌ள்
 
என் காத்திருப்பு
என் த‌த்த‌ளிப்பு
என் த‌னிமை
என் ஏக்க‌ம்
என் வேத‌னை
என் காத‌ல்
எதுவும் எதுவும்
உன்னை போலவே
அவர்களுக்கும் தெரியவில்லை
 
இந்த‌ ம‌ர‌நார்காலியின்
நிற‌மிழ‌ந்த த‌னித்த‌ ச‌ருகைபோல‌வே
வெளிறி கிட‌க்கிறேன் நானும்
 
வெறுமை த‌ன்னுடைய
அனைத்து ராக‌ங்க‌ளையும் இசைத்து
துன்பத்தின் தீபங்களை சுற்றி ஏற்றி
அத‌ன் வெளிச்சத்தின் கூர்வெம்மையின்
வதைவுக்கு என்னை உள்ளாக்குகிற‌து
 
தார்ப்பாலையாய்
கரிய புகைச் செறிந்த காற்றுடன்
நீண்டு படுத்திருக்கும் இந்த சாலையின்
வாகனங்களின் இரைச்சல் புயலில்
என் அழுகையின்
என் புலம்பலின்
என் முணுமுணுப்பின்
குர‌ல்க‌ள்
ஒலியிழந்து போகின்றன‌
 
ஒரு வெட்டவெளிப் பொட்டலில்
பூவுக்காய் அலைந்து கொண்டிருக்கும்
வண்னத்துப்பூச்சின் தேடலை
போல ஆகிவிட்டது
உன் வரவுக்காய் காத்திருக்கும்
என் காதல்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: RDX on December 21, 2012, 05:19:54 PM
          என் தனிமையின் இரவுகள்

என் கற்பனைக்கு வடிவம் கொடுத்து
என் கனவுகளிற்கு விடை கொடுத்து
நினைவுகளை மட்டும் என்னிடம்
விட்டு சென்றால். ஒரு நொடி பார்வையில்
ஆயிரம் வார்த்தைகள் பேசும் அவள்
கண்கள் மட்டும் அன்று  ஏன் தான்
பேசாமல் மௌனித்ததோ புரியவில்லை
அவள் கண்களில் பூசியிருந்த  மை
கரைய என் மனம் கலங்கியது அவள்
கன்னத்தில் கை வைத்து ஏன்டா செல்லம்
அழுகின்றாய் என்ற போது மனம்
உருகியது. அவள் கண்ணீரின் அர்த்தம்
மட்டும் புரியமால் கலங்கி நின்றேன்.
அவளும் கடைசியாக தோளில் சாய்ந்து
போலம்பினால். ஒரு விநாடி பொழுதில்
கைகள் நழுவியது. அன்றுதான் மெளனமாக
பிரிந்தோம். ஒரு சில நொடிகள் மட்டும்
பிரிகின்றா போது வலிகள் புரிந்ததில்லை
தனிமை உணர்ந்ததில்லை.இன்று மட்டும்
தனிமையின் உண்மையான ஆழத்தை
உணர்கின்றேன். ஆனாலும் அவள்
நினைவுகளை பகிந்து கொள்ளும் அந்த
இரவு மின்னோளிகள் அந்த அமர்கைகள்
அந்த மௌனமான இரவுகள் பொழுதுகள்
மட்டும் காத்திருகின்றனா நம் வரவிற்காய்.
நானும் அவள் வருக்காக காத்திருக்கின்றேன்.
அவன் நினைவுகள் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் இப்போது கவிதைகளே நன்றியுடன்
RDX
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Rainbow on December 21, 2012, 06:16:30 PM
இந்த மனித சமூகத்திலிருந்து
விலகி அந்நியமாய்
தனிமையின் சமவெளியில்
தவிப்புகளோடு நிற்கிறேன்
 
என்றைக்கேனும் ஒரு நாள்
நீ வரக் கூடும்
என்ற நம்பிக்கையோடு
 
உன் அன்பின் நீரின்றி
உலர துவங்கிவிட்ட என் காடு
தனது இலைகளை எல்லாம்
இந்த மரபெஞ்சில் உள்ள‌
சருகைகளை போல்
ஒன்றொன்றாய் உதிர்க்க‌
துவங்கிவிட்டது
 
என் இதயமும்
என் காட்டின் இலைகளுடன்
ஒரு சருகாய் உதிர்ந்து
மக்கி மண்ணாவதற்குள் வந்துவிடு

உன் குளிர் காலங்களுக்காய்
எரிக்க சுள்ளிகளும்
கொஞ்சம் உலர்ந்த இலைகளுமாவது
மிஞ்சியிருக்கும்